search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "education department"

    • மாணவர்களுக்கு மனதை பாதிக்கும் வண்ணம் எந்தவித தண்டனையும் வழங்கக்கூடாது.
    • ஆய்வின்போது செல்போன் பேசிக்கொண்டிருக்கும் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை.

    மாணவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய 77 வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்னரே பள்ளிக்கு வரவேண்டும்.

    மாணவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வது, ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல் என பள்ளியில் எந்த நிகழ்வு நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலரின் நேரடி கவனத்துக்கு கொண்டு வரவேண்டும்.

    பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை விடும்போது முதன்மை கல்வி அலுவலருக்கு செல்போன் மற்றும் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். 10, 12-ம் வகுப்பு ஆசிரியர்கள் சரியாக பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்தியிருக்கிறார்களா? என்பதை தலைமை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும்.

    அரசு பள்ளியில் தீத்தடுப்பு சாதனம் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு அவர்களின் மனதை பாதிக்கும் வண்ணம் எந்தவித தண்டனையும் வழங்கக்கூடாது.

    ஆசிரியர்கள் பள்ளியில் வகுப்பறையில் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். ஆய்வின்போது செல்போன் பேசிக்கொண்டிருக்கும் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியிலும் படிக்கும் மாணவர்களை எக்காரணத்தை கொண்டும் ஆசிரியர்கள் தன்னுடைய சொந்த வேலைக்காக வெளியில் அனுப்பக்கூடாது.

    மாணவர்கள் செல்போனை பள்ளிக்கு கொண்டுவருவதை முழுவதுமாக தவிர்க்கவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்துக்குள் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா நடத்தி முடிக்கப்பட வேண்டும். சினிமா பாட்டு முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    மாணவர்கள் பள்ளிக்கு மோதிரம், செயின் போன்றவைகளை கண்டிப்பாக அணிந்து வரக்கூடாது. மாணவர்கள் அவற்றை அணிந்து கொண்டு வந்தால், பெற்றோரை அழைத்து வரச்சொல்லி விவரத்தை தெரிவிக்க வேண்டும்.

    இது போன்று 77 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    • 11 மாவட்டங்களில் 100 சதவீதம் தனியார் பள்ளிகள் இயங்கியுள்ளன.
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட 92 சதவீதம் பள்ளிகள் இயங்கியுள்ளன.
    • நாமக்கல் மாவட்டத்தில் 32 சதவீதம் பள்ளிகள் மட்டுமே இயங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

    சென்னை :

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணம் விவகாரத்தில், நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் அந்த பள்ளியை சூறையாடினர். இதற்கு கண்டனம் தெரிவித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அதுவரை பள்ளிகள் இயங்காது என்றும் நேற்று அறிவித்தது.

    இதற்கு கல்வித்துறை, சட்ட விதிகளை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தது. அந்த எச்சரிக்கையையும் மீறி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. இதன்படி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்த இந்த வேலைநிறுத்தத்தில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாக்குதலை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை.

    இந்நிலையில் அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்தது ஏன்? என்று 987 தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    முன்னதாக தமிழகம் முழுவதும் உள்ள 11 ஆயிரத்து 335 தனியார் பள்ளிகளில் 10 ஆயிரத்து 348 பள்ளிகள் நேற்று வழக்கம்போல் திறக்கப்பட்டு வகுப்புகள் செயல்பட்டுள்ளன. அதாவது 91 சதவீதம் தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் வழக்கம்போல் இயங்கி இருப்பது கல்வித்துறையின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

    இதில் 11 மாவட்டங்களில் 100 சதவீதம் தனியார் பள்ளிகள் இயங்கியுள்ளன. பள்ளி சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட 92 சதவீதம் பள்ளிகள் இயங்கி இருப்பதாக கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 32 சதவீதம் பள்ளிகள் மட்டுமே இயங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளி கல்வித்துறையின் உத்தரவால் 9-ம் வகுப்பு தேர்வை எழுதி உள்ள மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் முடிவுக்கு வந்த பிறகு இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன.

    ஆன்லைன் வகுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.

    அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் அனைத்து 9-ம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    நடந்து முடிந்துள்ள 9-ம் வகுப்பு தேர்வை எழுதிய மாணவர்கள் அனைவரையும் கணக்கில் எடுத்து அவர்கள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலமாக தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    9-ம் வகுப்பு இறுதி தேர்வை எழுதியுள்ள மாணவர்கள் தேர்வை எப்படி எழுதி உள்ளனர் என்பதை ஆசிரியர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், இறுதி தேர்வு மதிப்பெண்களையும் எக்காரணம் கொண்டும் கணக்கில் எடுக்கக்கூடாது என்றும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு மாணவர் அனைத்து தேர்வுகளையும் எழுதி இருந்தாலே போதும் என்பதை கருத்தில் கொண்டு தேர்ச்சி விவரங்களை வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    9-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பல பள்ளிகளில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இறுதி ஆண்டு தேர்வை சரியாக எழுதாத மாணவ-மாணவிகள் சிலர் பெயில் ஆகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இப்படி தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களும், வெற்றி பெற்றவர்களாக இனி அறிவிக்கப்பட உள்ளனர். பள்ளி கல்வித்துறையின் இந்த உத்தரவால் 9-ம் வகுப்பு தேர்வை எழுதி உள்ள மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பள்ளி கல்வித்துறையின் இந்த உத்தரவால் 9-ம் வகுப்பு இறுதி ஆண்டு தேர்வை சரியாக எழுதாத மாணவ-மாணவிகளும் பாஸ் ஆகி 10-ம் வகுப்புக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களின் பெற்றோர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    கொரோனா பரவல் காரணமாகவும், பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதாலும் பள்ளி கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜூன் மாதம் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
     
    கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலையில்லா பாடநூல்கள் மற்றும் இதர பொருட்களை வழங்க வேண்டும்.

    இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
    1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதிக்குள் ஆண்டு இறுதி தேர்வை நடத்த வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. #PublicExamination
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புகளுக்கான தேர்வுகள் இந்த மாதம் இறுதிக்குள் நிறைவடைகிறது. அதன்பின்னர், பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வு நடைபெற இருக்கின்றன.

    ஏற்கனவே திட்டமிட்டு இருந்த பள்ளி செயல்முறை திட்டத்தின்படி, அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந் தேதி வரை பள்ளிகள் இயங்குவதாக இருந்தது. இதற்கிடையில் இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.

    அதில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு பள்ளி செயல்பாடுகளில் மாற்றம் கொண்டுவரப்படுமா? என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன்பாகவே பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வி துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வுகளை 1.4.2019 முதல் 12.4.2019-க்குள் நடத்தி முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    ஆண்டு இறுதி தேர்வு கால அட்டவணையை மாவட்ட அளவில் அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக உடனே அனுப்பி தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்.

    வேலை நாட்களின் இழப்பினை சனிக்கிழமைகளில் ஈடுசெய்யுமாறும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2018-2019-ம் கல்வியாண்டின் கடைசி வேலைநாள் 12.4.2019 என தெரிவித்துகொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், தொடக்கப்பள்ளிகளை (1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு) பொறுத்தவரையில் 13.4.2019-க்குள் ஆண்டு இறுதி தேர்வை முடிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு அடுத்த மாதம் 13-ந் தேதியுடன் நிறைவடைகிறது. #PublicExamination
    கல்வித்துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக மத்திய அரசு உயர் கல்வி ஆணையம் அமைக்க முயற்சிப்பதாக வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.
    சென்னை :

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாடாளுமன்றத்தில் 1956-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை உருவாக்கவும், கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நோக்கங்களாக வரையறுக்கப்பட்டது கடந்த 60 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்து விட்டு, ‘உயர்கல்வி ஆணையம்’ அமைப்பதற்கு சட்ட முன்வடிவு ஒன்றை பொதுமக்கள் கருத்தறிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    உயர்கல்வித் துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து, தனியாரைச் சார்ந்து இயங்கும் நிலையை ஏற்படுத்தி, உயர்கல்வியை முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகள் பெரிதும் ஆபத்தானவை. கண்டனத்திற்கு உரியது.



    உயர்கல்வி ஆணையம், ஒற்றை ஒழுங்குமுறை ஆணையம் போன்ற அமைப்புகளை உருவாக்கி, மாநில அரசுகளின் அதிகாரத்தை முழுமையாக பறித்துவிட்டு மத்திய அரசே கல்வித் துறையில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்த பா.ஜ.க. அரசு திட்டமிடுகிறது.

    உயர்கல்வித் துறையைத் தனியாரிடம் தாரை வார்க்கும் வகையிலும் மாநில அரசுகளின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையிலும் உயர்கல்வி ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சியைத் தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகளின் பொது அதிகாரப் பட்டியலில் இருந்து கல்வியை மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    கல்வித்துறையில் தமிழகம் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்று சென்னையில் நடந்த செயின்ட் ஜான்ஸ் பள்ளி குழுமங்களின் பொன்விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
    சென்னை:

    செயின்ட் ஜான்ஸ் பள்ளி குழுமங்களின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் பன்வாரிலால் பங்கேற்றார்.

    செயின்ட் ஜான்ஸ் பள்ளிகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை பன்வாரிலால் புரோகித் வழங்கி கவுரவித்தார்.

    முன்னதாக பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

    சுவாமி விவேகானந்தர் கூறியபடி செயின்ட் ஜான்ஸ் கல்வி அறக்கட்டளை கல்வியை மேம்படுத்த தங்களை அர்ப்பணித்து முக்கிய பங்களிப்பு அளித்து வருகிறது. நான் கவர்னராக பொறுப்பு ஏற்று 8 மாதங்கள் ஆகின்றன. இதுவரையிலும் 17 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளேன். கல்வித்துறையில் நமது மாநிலம் பெற்றுள்ள வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. பள்ளிக்கு செல்லாமல் இடையில் நிற்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

    30 முதல் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் இருக்கிறார்கள். சுமார் 45 சதவீத மாணவர்கள் பள்ளி கல்வியை முடித்துவிட்டு மேல் படிப்புகளுக்கு செல்கிறார்கள். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இங்கு ஏராளமான மருத்துவ கல்லூரிகள் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே, தமிழக அரசு கல்வித்துறையை துடிப்புடன் மேம்படுத்திவருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளை ஊக்குவிப்பதிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    பிளஸ் 2 கணக்குப்பதிவியல் திருத்தும் பணியின் போது திருச்சி மாணவி விடைத்தாளில் 6 பக்கத்தை திருத்தாமல் விட்ட பள்ளி ஆசிரியர் யார்? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். #TNHSCResult

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சோனாபுரத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் திவ்யா (வயது 17) . இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 வணிகவியல் பிரிவு படித்தார்.

    பிளஸ் 2 தேர்வை ஆர்வமுடன் எழுதியிருந்த திவ்யா கணக்குப்பதிவியல் பாடத்தில் தனக்கு அதிகமார்க் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் 200-க்கு 124 மதிப்பெண்களே அவருக்கு கிடைத்தது.

    பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல்களை கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்து பார்க்கும் வசதி உள்ளது என்பதால் திவ்யா டவுன் லோடு செய்து பார்த்தார். அப்போது தான் எழுதிய விடைத்தாளில் 6 பக்கங்கள் விடைத்தாள் திருத்திய ஆசிரியரால் திருத்தாமல் விடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து திருச்சி மண்டல அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அங்கு ஊழியர்கள் பிளஸ் 2 விடைத்தேர்வு மறு மதிப்பீட்டிற்கான கால அவகாசம் 6-ந்தேதியோடு முடிந்து விட்டதால் சென்னை தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் முறையிட கூறினர்.


    இதனால் திவ்யா மன உளைச்சல் அடைந்துள்ளார். திருத்தாமல் விடுபட்ட 6 பக்கங்களில் அவருக்கு 60 மதிப் பெண்கள் வரை கிடைக்கும். மேலும் தேர்வுத்தாளில் 12 மதிப் பெண்கள் கொண்ட கேள்விக்கு சரியான விடை அளித்திருந்தும் அதற்கு விடைத்தாள் திருத்திய ஆசிரியர் 6 மதிப்பெண்கள் மட்டுமே அளித்திருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இப்போது மதிப்பெண் குறைந்திருப்பதால் உயர் கல்வி வாய்ப்பில் திவ்யாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு மாணவி ஹர்ஷினி என்பவரின் கணிதப்பாட விடைத்தாளில் 6 மதிப்பெண் வினாவிற்கான விடை திருத்தப்படாமலேயே அருகில் 0 போடப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த தகவல் பரவியதால் மற்ற மாணவ, மாணவிகளும் தங்களுக்கு உரிய மதிப்பெண்கள் குறைந்ததற்கும் விடைத்தாள் சரியாக திருத்தப்படாதது காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மற்ற மாணவ, மாணவிகளும் விடைத்தாள் நகல்களை டவுன்லோடு செய்து பார்த்து வருகின்றனர்.

    இதற்கிடையே மாணவி திவ்யா, மற்றும் ஹர்ஷினியின் விடைத்தாள்கள் எந்த விடைத்தாள் திருத்தும் தேர்வு மையத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அவற்றை திருத்திய பள்ளி ஆசிரியர்கள் யார்? என விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    விடைத்தாளில் உள்ள ஆசிரியர்களின் கையெழுத்து மூலம் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது. #TNHSCResult

    ×