search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "edappadi govt"

    எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கியது. #SupremeCourt #OPanneerSelvam
    புதுடெல்லி:

    அ.தி.மு.க. பிளவுபட்ட போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டது.

    அப்போது சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். என்றாலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.


    பின்னர் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. இந்த நிலையில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த மனுவை நீதிபதிகள் விசாரித்து தள்ளுபடி செய்தனர். இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணையை தொடங்கியது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #SupremeCourt #OPanneerSelvam
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்ட செயல் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி அரசு மீது துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    வேலூர், மே.26-

    தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் எம்.எல்.ஏ. காட்பாடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த அரசு காட்டுமிராண்டித்தனமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களில் வேலூர்:

    தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் எம்.எல்.ஏ. காட்பாடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த அரசு காட்டுமிராண்டித்தனமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களில் 13 பேரை இதுவரை சுட்டுக்கொன்றுள்ளது. இதனை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியென கூறுகிறார். மக்கள் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டனர் என்றும் அதனால் துப்பாக்கிசூடு சம்பவம் நடந்ததாகவும் தெரிவிக்கிறார். இவ்வளவு பெரிய கலவரம் நடப்பதை ஏன் உளவுத்துறை முன்கூட்டியே அரசுக்கு தெரியப்படுத்தவில்லை.

    ஆனால் இப்போது இதெல்லாம் எதிர்க்கட்சிகளின் சதி என்று கூறுவது பொய்யான ஒன்றாகும். உடனடியாக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும், இந்த அரசும் மக்களின் சாவிற்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும்.

    முதல்- அமைச்சரும், அமைச்சர்களும் ஏன் பாதிக்கப்பட்ட, கொல்லப்பட்ட மக்களின் உறவினர்களை சந்திக்கவில்லை. இவற்றிற்கெல்லாம் முதல்- அமைச்சர் தான் காரணம். இது திட்டமிட்ட செயல்.

    மக்களைபார்த்து முட்டியிலும், வானத்தை நோக்கியும் சுடாமல் வாகனத்தின்மீது ஏறி போலீசார் படுத்துக்கொண்டு சுட்டனர். இது தீவிரவாதிகளை சுடுவதற்காக பயிற்சி கொடுக்கப்பட்ட போலீஸ் பிரிவு. அதனை அனுமதிக்கவேண்டுமென்றால் உள்துறை செயலாளர் அனுமதிக்கவேண்டும். இல்லையென்றால் முதல்-அமைச்சர் இதற்கு அனுமதிக்கவேண்டும். அதன்படி இவற்றையெல்லாம் அனுமதித்தது தமிழக முதல்-அமைச்சர்தான்.

    தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து அரசு நியமித்துள்ள ஒருநபர் விசாரணை கமி‌ஷன் மூலம் நியாயம் கிடைக்காது. இது கண்துடைப்பு. தமிழக ஆளுனர் நடவடிக்கை எடுக்காமல் அறிக்கை மட்டும் வெளியிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring13 பேரை இதுவரை சுட்டுக்கொன்றுள்ளது. இதனை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியென கூறுகிறார். மக்கள் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டனர் என்றும் அதனால் துப்பாக்கிசூடு சம்பவம் நடந்ததாகவும் தெரிவிக்கிறார். இவ்வளவு பெரிய கலவரம் நடப்பதை ஏன் உளவுத்துறை முன்கூட்டியே அரசுக்கு தெரியப்படுத்தவில்லை.

    ஆனால் இப்போது இதெல்லாம் எதிர்க்கட்சிகளின் சதி என்று கூறுவது பொய்யான ஒன்றாகும். உடனடியாக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும், இந்த அரசும் மக்களின் சாவிற்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும்.

    முதல்- அமைச் சரும், அமைச்சர்களும் ஏன் பாதிக்கப்பட்ட, கொல்லப்பட்ட மக்களின் உறவினர்களை சந்திக்கவில்லை. இவற்றிற்கெல்லாம் முதல்- அமைச்சர் தான் காரணம். இது திட்டமிட்ட செயல்.

    மக்களைபார்த்து முட்டி யிலும், வானத்தை நோக்கியும் சுடாமல் வாகனத்தின்மீது ஏறி போலீசார் படுத்துக்கொண்டு சுட்டனர். இது தீவிரவாதிகளை சுடுவதற்காக பயிற்சி கொடுக்கப்பட்ட போலீஸ் பிரிவு. அதனை அனுமதிக்கவேண்டுமென்றால் உள்துறை செயலாளர் அனுமதிக்கவேண்டும். இல்லையென்றால் முதல்-அமைச்சர் இதற்கு அனுமதிக்கவேண்டும். அதன்படி இவற்றையெல்லாம் அனுமதித்தது தமிழக முதல்-அமைச்சர்தான்.

    தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து அரசு நியமித்துள்ள ஒருநபர் விசாரணைகமி‌ஷன் மூலம் நியாயம் கிடைக்காது. இது கண்துடைப்பு. தமிழக ஆளுனர் நடவடிக்கை எடுக்காமல் அறிக்கை மட்டும் வெளியிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×