search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Easter"

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
    இயேசுநாதர் நற்போதனைகள் மனிதர்களை வாழவைக்கும் மந்திர சொற்களாக அமைந்தன. இதனைக்கண்டு இயேசுநாதர் மீது பொறாமை கொண்டவர்கள், அவர் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தி கொல்கதா மலையில் சிலுவையில் அறைந்தனர்.

    இந்த நாளை கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக கடை பிடித்து வருகிறார்கள். அதுபோல் இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்தார். இந்த நாள் வெற்றி திருநாளாகவும், மகிழ்ச்சி திருநாளாகவும் ஈஸ்டர் பண்டிகை என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதன்படி நேற்று நாடு முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    திருப்பூர்-அவினாசி ரோட்டில் உள்ள பங்களா பஸ் நிறுத்தத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் நேற்று காலை ஈஸ்டர் பண்டிகையையொட்டி பல்வேறு கட்டங்களாக சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஆயர் வில்சன் குமார் தேவசெய்தி வழங்கினார். ஈஸ்டர் பண்டிகையையொட்டி அதிகாலையில் இருந்தே பலர் ஆலயத்திற்கு வந்து வழிபட்டு சென்றனர்.

    இதுபோல் சபாபதிபுரம் டி.இ.எல்.சி. அருள்நாதர் தேவாலயத்திலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. மேலும், குமார்நகர் புனித சூசையப்பர் ஆலயம் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இந்த ஆராதனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். 
    ஈஸ்டர் திருநாளில் இயேசுவின் உயிர்தெழுதலை கொண்டாடும் நாம். அவர் நமக்கு போதித்த அன்பையும், இரக்கத்தையும் பிறருக்கு அளிப்போம். மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

    உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் திருநாளும் ஒன்று. இந்த திருநாளுக்காக கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலம் அனுஷ்டிப்பார்கள். மக்களுக்காக உயிர் விட்ட இயேசுவின் உயிர்த்தெழுதலை கொண்டாடுவதற்காக காத்திருப்பார்கள். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஒரு வரலாற்று நிகழ்வாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

    ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு கொடுத்ததற்காக, நீதியை நிலைநாட்ட தூண்டியதற்காக, ஏழைகளை வாழவைத்ததற்காக, பாவிகளை மன்னித்ததற்காக, பிணிகளை போக்கியதற்காக, உண்மைகளை பேசியதற்காக இயேசு கொல்லப்பட்டார். அநீதியின், பாவத்தின் சக்திகள் அனைத்தும் சேர்ந்து அவரைக் கொலைக்குட்படுத்தின. ஆனால் இறந்து அடக்கம் செய்யப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தார். இறந்த மூன்றாம் நாள் வெற்றி வீரராய்க் கல்லறையில் இருந்து உயிரோடு வெளியே வந்தார். நம்மோடே இருக்கிறார்.

    உயிர்ப்பின் சாட்சி

    கிறிஸ்து உயிர்ப்பெற்றெழுந்த காட்சியை பார்த்தவர்கள் யாருமில்லை.. உயிர்ப்புக் காட்சியைப் பார்த்த ஒரே சாட்சி இரவு என்று திருச்சபை சொல்கிறது. எனவே தான் பாஸ்கா புகழுரையை குருவானவர் பாடும்போது “ஓ... மெய்யாகவே பாக்கியம் பெற்ற இரவே, கிறிஸ்து பாதாளத்திலிருந்து உயிர்த்தெழுந்த காலமும் நேரமும் அறிய நீ மட்டுமே பேறுபெற்றாய்” என்று அந்த இரவை புகழ்ந்து பாடுகிறார்.

    இயேசுவின் உடல் திருடப்படவில்லை

    இயேசுவின் கல்லறை காலியாக இருந்தது. அவரது உடல் எங்கே? கயவர்கள் அவரது உடல் திருட்டு போய் விட்டு என்று கதை கட்டினார்கள். ஆனால் அவரது உடல் திருடப்படவில்லை. மாறாக உயிர்த்தெழுந்தது. இயேசுவின் உடலை சுற்றியிருந்த துணிகளும் தலையைச் சுற்றியிருந்த துண்டும் கல்லறையில் கிடந்ததாக யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். இயேசுவின் உடலை திருடியிருந்தால் உடலை சுற்றியிருந்த துணிகளையும் திருடியிருப்பார்கள். துணிகளை திருடாவிட்டால் கூட அவற்றை அலங்கோலமாய்ப் போட்டிருப்பார்கள். ஆனால் இங்கு துணிகள் எல்லாம் ஒழுங்கான நிலையில் இருந்ததாக நற்செய்தி கூறுவது அவரது உயிர்ப்பை உறுதியாக்குகிறது.

    இயேசுவின் உயிர்ப்பும் கிறிஸ்தவ மதத்தின் பிறப்பும்:

    எகிப்திய புராணத்தில் பீனிக்ஸ் என்ற ஒரு பறவை வருகின்றது. இந்தப் பறவை உயிரோடு இருக்கிறபோது தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளாது. மாறாக அதன் இனம் பெருகுவது அந்த பறவையின் இறப்பிற்குப் பின் தான். பீனிக்ஸ் பறவை இறந்து மண்ணில் மடிந்து மட்கிப் போகும்போது அது புதைக்கப்பட்ட மண்ணிலிருந்து புதிய பீனிக்ஸ் பறவைகள் உருவாகுமாம். அதுபோல கிறிஸ்தவ மதம் இயேசுவின் காலத்தில் உருவானதல்ல. கிறிஸ்தவ மதம் உருவாகி பெருகியது அவரது உயிர்த்தெழுதலின் பிறகுதான். கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால், கல்லறையோடு அவரது கதை முடிந்திருந்தால் கிறிஸ்தவ மதம் இல்லை. எனவே கிறிஸ்துவின் உயிர்ப்புதான் கிறிஸ்தவ மதத்தின் பிறப்பு.

    உயிர்த்த இயேசுவைப் பார்த்த முதல் பெண் - மதலேன் மரியா:

    யூத முறைப்படி இறந்த உடலை அடக்கம் செய்யும்போது நறுமண பொருட்களால் அவ்வுடல் பூசப்படவேண்டும். இயேசு இறந்தது வெள்ளிக்கிழமை மாலை. ஓய்வு நாள். அதாவது சனிக்கிழமை வெள்ளி மாலையில் ஆரம்பமாகிறது. ஆனால் யூதமுறைப்படி மாலையும், பகலும் சேர்ந்து தான் ஒருநாள். இதைத்தான் தொடக்க நூலில் படைப்பின்போது “மாலையும், காலையும் சேர்ந்து முதல் நாள் ஆயிற்று” (ஆதி.1:5) என்று படிக்கிறோம்.

    எனவே ஓய்வு நாள் ஆரம்பமானதால் இயேசுவின் இறுதிச்சடங்கை சரியாக செய்ய முடியாமல் அவசர, அவசரமாக கல்லறையில் புதைத்து விட்டார்கள். இயேசுவின் மீது அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் வாரத்தின் முதல்நாள் விடியலுக்காக காத்திருந்து அதிகாலையிலே நறுமண பொருட்களுடன் கல்லறைக்குச் சென்றார்கள். அவரது உடலை எடுத்து தகுந்த மரியாதையோடு, பரிமளத்தைலம் பூசி சிறப்பான விதத்தில் மீண்டும் அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக கல்லறை அருகில் வரும்போது தான் காலியான கல்லறையைப் பார்த்து திகைத்துப் போயினர்.

    இயேசுவின் உடல் அங்கே இல்லாததால் மற்றவர்கள் எல்லோரும் போய் விட்டனர். ஆனால் மதலேன் மரியாள் மாத்திரம் எப்படியாவது இயேசுவின் உடலைத் தேடி கண்டுபிடித்து, செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடிக்க வேண்டும் என்று தனிமையில் கல்லறை அருகில் அழுதுகொண்டே இருக்கும்போது தான் உயிர்த்த இயேசுவை முதன்முறையாக பார்க்கின்ற பாக்கியம் மதலேன் மரியாளுக்குக் கிடைத்தது. மனம் திரும்பிய பாவிப்பெண்ணுக்கு கிடைத்த இந்த பேறு, மனந்திரும்பும் ஒவ்வொருவரும் இயேசுவைக் காண்பர் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

    சாட்சிகளை உருவாக்க பல காட்சிகள்:

    உயிர்த்தெழுந்த இயேசு இன்னும் நம்மை சிலுவையில் அறைந்தோ அல்லது கல்லால் எறிந்தோ கொன்று விடுவார்கள் என்று பயந்து தலைமறைவாக இருக்க விரும்பவில்லை. பலருக்கு காட்சி கொடுக்கின்றார். ஆண்களுக்கு, பெண்களுக்கு, சீடர்களுக்கு, வழிப்போக்கர்களுக்கு என்று பல தரப்பட்ட மக்களுக்கு காட்சி கொடுக்கின்றார். இந்தக் காட்சிகள் எதற்காக? கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சிகளை உருவாக்க. உயிர்த்த
    இயேசுவை காட்சியில் கண்டவர்கள் எல்லாம் சாட்சியாக மாறினர்.

    சீடர்களிடத்தில் இயேசு உண்டாக்கிய மாற்றமும் உயிர்ப்புக்கு சாட்சியாக மாறுகின்றது. படைவீரர்களுக்கு பயந்து ஓடியவர்கள் வீதிக்கு வந்து உயிரைப் பணயம் வைத்து இயேசுவின் உயிர்ப்புக்கு சான்று பகிர்கிறார்கள். இயேசுவின் உயிர்ப்பிற்கு பிறகு சீடர்கள் இயேசுவுக்கு நிகராகவோ, அவரை விட பெரியவராகவோ யாரையும் அவர்கள் கருதவில்லை. இயேசு மட்டுமே அவர்களது மூச்சு. ஊருக்கு அஞ்சியவர்கள் நடுத்தெருவில் நின்று போதித்தார்கள். கிறிஸ்துவை பின்பற்றுகிறவனை அழித்து விடுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்த சவுலுக்கு உயிர்த்த இயேசு காட்சி அளித்து “நீ துன்புறுத்தும் இயேசு நானே” (தி.பணி. 9:5) என்று கூறியவுடன் மனமாற்றம் பெற்று கிறிஸ்துவுக்காக உயிரைக் கொடுக்கவும் துணிந்து கிறிஸ்துவின் உன்னத சாட்சியாக மாறினார்.



    உயிர்த்த கிறிஸ்து கட்டுவோர் விலக்கிய மூலைக்கல்:

    பழைய ஏற்பாட்டில் சூசை எல்லோராலும் வெறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, சிறையில் வீசப்பட்டு, எகிப்தியர்களுக்கு விற்கப்பட்டு “இவன் வேண்டாம்” என்று அப்புறப்படுத்திய சூசையிடம் இறுதியில் யாரை வெறுத்து தள்ளினார்களோ அந்த சூசையிடம் உணவிற்காக கையேந்தி நின்றது போல “இவன் வேண்டாம், இவனை சிலுவையில் அறையும்” என்று எல்லோராலும் வெறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட இயேசு இன்று எல்லோருக்கும் வாழ்வளிக்கும் வள்ளலாக உயிர்த்தெழுந்தது கட்டுவோர் விலக்கிய கல் மூலைக்கல்லாக மாறும் என்ற இறைவார்த்தையை உண்மையென நிரூபித்துக் காட்டுகிறது.

    இறந்தும் வாழும் இயேசு

    இறந்த இயேசு இன்றும் என்றும் வாழ்கிறார். இயேசு இன்று நினைவில் வாழ்பவர் அல்ல, உண்மையாகவே வாழ்கிறார். இறந்தவர்கள் மக்களின் எண்ணத்தில், நினைவில் வாழலாம். தொடர்ந்து கடைபிடிக்கப்படும் தம் போதனைகளின் வழி வாழலாம். ஆனால் இறந்த இயேசுவின் வாழ்வு என்பது எண்ணத்திலும், நினைவிலும், கொள்கையிலும் அவர் வாழ்கிறார் என்பதன்று, அவர் உண்மையில் உயிர் வாழ்கிறார். தொடர்ந்து வாழ்கிறார். இயேசு வெறும் நினைவிலோ, கொள்கையிலோ அல்ல. மாறாக உண்மையிலே உயிர் வாழ்கிறார் என்பதை வலியுறுத்தத்தான் தொடக்கக் கால கிறிஸ்தவர்கள் அவர் உடலோடு உயிர் பெற்றெழுந்தார் என்பதை மீண்டும் மீண்டும் அறுதியிட்டு கூறினர்.

    எனினும் சாவுக்கு முன்னிருந்த இயேசுவின் அதே உடல் அப்படியே இருந்தது எனக் கூற முடியாது. உயிர்த்த இயேசு காலம், இடம் ஆகியவற்றை கடந்து நிற்கிறார். அடைபட்டிருந்த அறைக்குள் அவரால் நுழைய முடிந்தது. யூதேயாவிலும், கலிலேயாவிலும் பலருக்கு ஒரே காலத்தில் காட்சியளிக்க முடிந்தது. இவ்வாறு உயிர்த்த இயேசுவின் உடல் திருத்தூதர் பவுல் கூறுவது போல “அழியாதது, மாண்புரிக்குரியது. வலிமையுள்ளது. ஆவிக்குரியது”- (1 கொரி. 15: 42).

    உயிர்த்தெழுதலும் திருச்சபையின் அழியாத் தன்மையும்:

    உயிர்த்த இயேசு இனி சாகமாட்டார். அவர் என்றும் வாழ்பவர். திருச்சபையின் தலைவர் இயேசு கிறிஸ்து. திருச்சபையையும், இயேசு வையும் பிரிக்க முடியாது. அழிவில்லாத உயிர்த்த கிறிஸ்து திருச்சபையின் தலைவராக இருக்கும் வரை திருச்சபைக்கு அழிவில்லை. திருச்சபையின் உடலாகிய கிறிஸ்தவர்கள் அழிந்தாலும் அதன் தலையாகிய கிறிஸ்து அழியாதவராக இருக்கிறார். எனவே தான் இயேசுவின் உயிர்ப்பு திருச்சபையின் அழியாத் தன்மையை உறுதிப்படுத்துகிறது.

    இயேசு மண்ணில் விதைக்கப்பட்ட ஒரு ‘வித்து’. வித்து முளைத்து வாழ்வதுபோல் உயிர்த்த கிறிஸ்து இன்றும் உலகில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார். எந்நாளும் உங்களோடு இருப்பேன் என்று கூறிய இயேசு உயிர்த்து இன்று நம்மோடே வாழ்கிறார். நம்மில் வாழ்கிறார்.  குறிப்பாக ஏழை, எளியவரோடும், துன்ப துயரம் அடைந்தோரோடும், கடைநிலையில் இருப்பாரோடும் வாழ்கிறார்.

    வதைக்கப்பட்டோரோடும், நோயுற்றோரோடும், அன்னியராக்கப்பட்டோ ரோடும், அடிமைப்படுத்தப்பட்டோரோடும் வாழ்கிறார். ஈஸ்டர் திருநாளில் இயேசுவின் உயிர்தெழுதலை கொண்டாடும் நாம். அவர் நமக்கு போதித்த அன்பையும், இரக்கத்தையும் பிறருக்கு அளிப்போம். மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.
    புனித வெள்ளியையொட்டி திருப்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    இயேசுவை சிலுவை அறைந்த நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இயேசுவை சிலுவையில் அறைவதற்கு 40 நாட்களுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடை பிடித்து வருகிறார்கள். இந்த தவக்கால உபவாச நாட்களை கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் அனுசரித்து வருகிறார்கள். தவகால உபவாச நாட்களில் அசைவம் சாப்பிடாமல் இருப்பார்கள். யார் மீதும் கோபப்படாமல் அன்பு காட்டுவார்கள். தவக்காலத்தின் போது தான் குருத்தோலை ஞாயிறு, புனித வியாழன் போன்ற விசேஷ நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. தவக்காலத்தில் புனித வெள்ளி முக்கிய தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று திருப்பூரில் உள்ள கத்தோலிக்க, சி.எஸ்.ஐ. உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் புனித வெள்ளி சிறப்பு ஆராதனைகளும், சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றன.

    திருப்பூர் பங்களா பஸ்நிறுத்தம் அருகே உள்ள சி.எஸ்.ஐ.தூய பவுல் ஆலயத்தில் நேற்று காலை புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது, இதை ஆயர் வில்சன்குமார் நடத்தி வைத்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.இதே போல் திருப்பூர் கோர்ட்டு வீதியில் உள்ள டி.இ.எல்.சி.அருள்நாதர் ஆலயத்தில் ஆயர் அசோக்குமார் தலைமையில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதே போல் குமார் நகரில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்திலும் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. இதற்காக சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இந்த சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகளில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனைகள் மற்றும் திருப்பலிகள் மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகளில் திரளானவர் கள் கலந்து கொண்டனர்.
    ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் நடந்த சிலுவைப்பாதை வழிபாட்டில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
    கிறிஸ்தவர்களின் மிக முக்கிய வழிபாடுகளில் ஒன்றாக திகழ்வது சிலுவைப்பாதை வழிபாடு.

    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நிகழ்வு நடந்த தினம் ஆண்டுதோறும் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது.

    இந்த நாளில், ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பு, அந்த சிலுவையை சுமந்து கொண்டு ஜெருசலேம் நகரில் இருந்து கொல்கதா மலைக்கு சென்றதையும் அப்போது அவர் அடைந்த துன்பம், வேதனைகளை நினைவு கூறும் வகையில் சிலுவைப்பாதை வழிபாடு ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, நேற்று புனித வெள்ளியையொட்டி ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் பகல் 11.30 மணிக்கு சிலுவைப்பாதை வழிபாடு தொடங்கியது.

    பங்குத்தந்தையும், ஈரோடு வட்டார முதன்மை குருவுமான ஜான் குழந்தை சேவியர் தலைமையில் உதவி பங்குத்தந்தை சுந்தரம் சிலுவைப்பாதை வழிபாட்டினை வழிநடத்தினார். 14 சிலுவை பாடுகளை தியானித்து பிரார்த்தனை நடத்தப்பட்டது.

    கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு, சிலுவை முத்தம் வழிபாடு நடந்தது.

    இன்று (சனிக்கிழமை) இரவு 11 மணிக்கு பாஸ்கா பெருவிழா, கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் புதுப்பித்தல் விழாவும் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு கிறிஸ்து ஏசுவின் உயிர்ப்பு பெருவிழா கொண்டாட்ட திருப்பலியும் நடக்கிறது. இதுபோல் ஈரோட்டில் உள்ள அனைத்து கிறித்தவ தேவாலயங்களிலும் நேற்று புனிதவெள்ளி சிறப்பு நிகழ்வுகள் நடந்தன.
    உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்றைய தினத்தை (ஏப்ரல் 19-ந் தேதி) புனித வெள்ளியாகக் கடைப்பிடிக்கின்றனர்.
    உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்றைய தினத்தை (ஏப்ரல் 19-ந் தேதி) புனித வெள்ளியாகக் கடைப்பிடிக்கின்றனர்.

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இறைமகன் இயேசு சிலுவையில் ரத்தம் சிந்தி உயிர் துறந்ததால் இந்நாள் புனிதமானதாக மாறியது. மாபெரும் மனித உரிமை மீறலாக அரங்கேறிய இயேசுவின் படுகொலை, புனிதமாக மதிக்கப்படுவதற்கு காரணம் இருக்கிறது.

    “அவர் நம் குற்றங்களுக்காக காயமடைந்தார், நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவரது காயங்களால் நாம் குணமடைகின்றோம்” (எசாயா 53:5) என்ற நம்பிக்கையே அது.

    விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில், மக்களின் பாவங்களைப் போக்குவதற்காக பல விலங்குகள் கடவுளுக்குப் பலியாக கொடுக்கப்பட்டன. ஆனால் புதிய ஏற்பாட்டில், மனிதராகத் தோன்றிய ‘இறைமகன்’ தம்மையே பலியாக செலுத்தினார் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை.

    “திருச்சட்டத்தின்படி, ரத்தம் சிந்துதல் இன்றி பாவமன்னிப்பு இல்லை. யூத தலைமைக்குரு, பலியிடப்பட்ட விலங்குகளின் ரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார்” என்று எபிரேயருக்கு எழுதியத் திருமுகத்தில் (9:22-28) வாசிக்கிறோம்.

    கடவுளின் வார்த்தையே மனித உடலெடுத்து, இயேசு கிறிஸ்து என்ற நபராக உலகில் வாழ்ந்தார். மனிதரான இறைவாக்கையே நாம் ‘கடவுளின் ஒரே மகன்’ என்று அழைக்கிறோம். மனிதர்கள் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்வது எப்படி என்பதை இஸ்ரயேலரிடையே தோன்றிய பல இறைவாக்கினர்கள் கற்பித்தனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகிய இஸ்ரயேலர், அவர்களது வார்த்தை களைப் புறக்கணித்து, பாவத்தால் அடிமைத் தனத்துக்கு ஆளாயினர். இஸ்ரயேலரின் புறக்கணிப்பால் வேதனை அடைந்த கடவுள், அவர் களிடையே இறையாட்சியை நிறுவத் தம் ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்.

    “பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர்கள் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்” (எபிரேயர் 1:1&2) என்று எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

    இயேசு செய்த அற்புதங்களும், அவரது போதனைகளும் பாமர மக்களை வெகுவாகக் கவர்ந்ததால், யூத சமயத் தலைவர்கள் அவரை எதிரியாகப் பார்த்தனர். சட்டங்களைக் காரணம் காட்டி ஏழை எளியோரைக் கசக்கிப் பிழிந்த சமயத் தலைவர்களை இயேசு கடுமையாகச் சாடினார்.

    இதனால் வெகுண்டெழுந்த அவர்கள், இயேசுவை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டினர்.

    உலக மக்களைப் பாவத்தின் அடிமைத்தளையில் இருந்து விடுவிப்பதற்காக, தமது உயிரை பலியாகக் கொடுக்கவே இயேசு உலகிற்கு வந்தார்.

    ஆகவேதான், “மானிடமகன் (இயேசு) தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (மாற்கு 10:45) என்று தமது வருகையின் நோக்கத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.

    யூத சமயத் தலைவர்கள் தம்மை ரோமானியரிடம் கையளித்து, சிலுவையில் அறைந்து கொல்வார்கள் என்பதையும் இயேசு தமது சீடர்களுக்கு பலமுறை முன்னறிவித்தார் என்பதும் நமக்குத் தெரியும்.

    யூதர்களின் பாஸ்கா விழாவுக்கு முன்பாக இயேசுவைக் கொலை செய்துவிட வேண்டும் என்று சமயத் தலைவர்கள் உறுதியேற்றனர். அவரை இரவோடு இரவாக ரகசியமாகக் கைது செய்து, ஆளுநர் பிலாத்து முன்னிலையில் அரசியல் குற்றவாளியாக நிறுத்தினர்.

    இயேசுவிடம் குற்றம் காணாத பிலாத்து, அவரை விடுவிக்க வழிதேடினான். “இயேசுவை விடுவித்தால், நீர் சீசருக்கு நண்பராக இருக்க முடியாது” என்று யூத சமயத் தலைவர்கள் மிரட்டல் விடுத்தனர். அவர்கள் தந்திரம் நன்றாகவே வேலை செய்தது. இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்ல கையளித்துவிட்டு, தனது கைகளைக் கழுவினான் பிலாத்து.

    இயேசுவின் தோளில் சிலுவை மரத்தை சுமத்தி, அவரை ‘கொல்கொதா’ என்ற இடத்துக்கு இழுத்துச் சென்றார்கள் படைவீரர்கள். அங்கே இரண்டு கள்வர்கள் நடுவில் அவர் சிலுவையில் அறையப்பட்டார்.

    “உன்னை ‘இறைமகன்’ என்று கூறிக்கொண்டாயே, இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கி வா, பார்ப்போம்” என சமயத் தலைவர்கள் கேலி செய்தார்கள். நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை எங்கும் இருள் சூழ்ந்தது. மூன்று மணிக்கு இயேசு, “தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” என்று கூறி உயிர் நீத்தார். அது பாஸ்கா விழாவுக்கான ஆட்டுக்குட்டியைப் பலியிடும் நேரம்.

    அப்போது எருசலேம் கோவிலின் திரை நடுவில் இரண்டாகக் கிழிந்து, மக்களின் பாவப்பரிகாரம் நிறைவேறிவிட்டது, கடவுளுக்கும் மனிதருக்கும் இடையேஇருந்த தடை விலகி விட்டது என்பதைத் தெளிவாக உணர்த்தியது.

    “இறுதியாகத் தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு, அவரை அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்டபோது அவர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்’ வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்’ என்று அவரைப் பிடித்து, வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள்” (மத்தேயு 21:37-39) என்று இயேசு உவமையாகக் கூறியது அவரில் நிறைவேறியது.

    “தந்தையாம் கடவுள் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார்” (யோவான் 5:22) என்று இயேசு கூறினார். கடவுளின் வார்த்தையாகிய இயேசுவே நமது செயல்களுக்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார். அவர் தம்மையே பலியாகக் கையளித்ததால், நமக்கு தண்டனை வழங்கும் கடவுளின் சட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்தன. நாம் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டால், அவர் நமக்கு நிலைவாழ்வுக்கான மீட்பை வழங்குவார்.

    சிலுவையில் அரங்கேறிய இயேசுவின் பலி, நமது பாவக்கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஆயினும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளாமல், அவர் வழியாகக் கிடைத்த நிலைவாழ்வை நாம் உரிமையாக்கி கொள்ள முடியாது.

    “என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு” (யோவான் 10:18) என்று அவர் கூறினார்.

    தாம் சொன்னபடியே இறந்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததால், இயேசு கிறிஸ்துவை ‘இறை மகன்’ என்று நம்பி அறிக்கையிடுகிறோம்.

    டே. ஆக்னல் ஜோஸ், சென்னை.
    இந்த தவகாலங்களில் நாம் எடுத்த தீர்மானத்தின் படி ஒரு புது மனிதனாக, புதிய வாழ்க்கையோடு மரித்த இயேசு உயர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாட தேவன்தாமே கிருபை செய்வாராக ஆமென்.
    இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களுமே இன்றைக்கு எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலை நிலவுகிறது.

    ஆம், தேவ பிள்ளைகளே நாம் இந்த உலகத்தில் எதை பெற்றுக்கொண்டாலும் நம்முடைய வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கி றோம். யோவான்: 14-6-ல் இயேசுவே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே எந்த ஒரு மனிதனும் இந்த மாயமான உலக காரியங்களை விட்டு கடவுளை தேடும் போது, அவனுக்கு புது வாழ்க்கையை பரலோகத்தில் இயேசுவோடு நித்திய, நித்தியமான வாழ்க்கையை பெற முடியும். எரிகோ பட்டணத்தில் சகேயு என்ற மனிதன் வரி வசூல் செய்பவனும், மிகவும் செல்வந்தனாகவும் இருந்தான்.

    அப்போது இயேசு எரிகோ பட்டணத்திற்கு சென்ற போது அவரை எப்படியாவது பார்க்க நினைத்தான். அப்போது சகேயு மிகவும் குள்ளமாக இருந்தபடியால் அங்கிருந்த காட்டத்தி மரத்தின் மீது ஏறி இயேசு வருவதை தேடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் அருகில் வந்த இயேசுவோ, மரத்தின் மேல் இருந்த சகேயுவை பார்த்து, கீழே இறங்கி வா, இன்றைக்கு உன் வீட்டிலே தங்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அங்கிருந்தவர்கள் இவன் எவ்வளவு பாவம் செய்தவன், இவனுடைய வீட்டில் இயேசு தங்க வேண்டும் என்று கூறுகிறாரே என்று முனுமுனுத் தார்கள்.

    அப்போது சகேயு இயேசுவிடம் என் ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்கு கொடுத்து விடுகிறேன். மேலும் நான் யாரிடமாவது அறியாமல் வாங்கினது உண்டானால் அதையும் 4-ந்தவணையாக திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று தன் பாவத்தை உணர்ந்தவனாய், இயேசுவிக்கு தன் மனதிலேயும், வீட்டிலேயும் இடம் கொடுத்தான். என்ன ஒரு மனமாற்றம் பாருங்கள். உடனே இயேசுவும் சகேயுவை பார்த்து, இந்த வீட்டிற்கு ரட்சிப்பு வந்தது என்று சொல்கிறார். இதைப்பார்த்த சகேயுவுக்கு மனதிலே சந்தோஷம் தாங்க முடியவில்லை அன்றிலிருந்து தன் பழைய பாவ வாழ்க்கையை விட்டு விட்டு புது வாழ்க்கை வாழ ஆரம்பித்தான்.இந்த நாட்களில் சகேயுவை போல இயேசுவை காண நாமும் தேடுகிறோமா? அல்லது இந்த பாவ உலகில் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறோமா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

    இயேசு இந்த உலகத்தில் பல்வேறு பாடுகளை பட்டு கல்வாரி சிலுவையிலே மரித்தார். இதை நினைவு கூறும் தினமாக இன்று புனித வெள்ளியாக அனுசரிக்கிறோம். இயேசு சிலுவையில் சொன்ன 7 வார்த்தைகளை பற்றி ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் தியானிக்க இருக்கிறோம். இப்படி இந்த நாளில் மட்டும் தியானித்து விட்டு அதை அப்படியே விட்டு விடாமல் நம்முடைய வாழ்க்கையில் அதை கடைபிடித்து இயேசுவுக்கு கீழ்படிந்த பிள்ளைகளாக நம்முடைய வாழ்க்கையை மாற்றுவோம்.

    எனக்காக அவர் மரித்து விட்டார். நான் இனி தேவனுடைய பிள்ளை என்று இன்றே தீர்மானம் எடுப்போம். இயேசுவை நாம் காண வேண்டும் என்று முழு மனதோடு அவரை தேடி இன்றுமுதல் நம்முடைய புது வாழ்க்கையை தொடங்குவோம். அப்போது நம்முடைய வாழ்விலும் இயேசு வருவார். நம்முடைய வீட்டிலும் தங்குவார். எனவே தேவ பிள்ளைகளே இந்த தவகாலங்களில் நாம் எடுத்த தீர்மானத்தின் படி ஒரு புது மனிதனாக, புதிய வாழ்க்கையோடு மரித்த இயேசு உயர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாட தேவன்தாமே கிருபை செய்வாராக ஆமென்.

    சகோ.ஜாஸ்பர் பிலிப், திருப்பூர்.
    பெரிய வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் பக்தர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.
    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா வருகிற 21-ந் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 14-ந் தேதி குருத்தோலை திருநாள் கொண்டாடப்பட்டது. அன்று முதல் ஈஸ்டர் பெருவிழா வரை புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்த புனித வாரத்தில் பெரிய வியாழன் முக்கிய நாளாக அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முந்தைய நாள் தன்னுடைய 12 சீடர்களுடன் பாஸ்கா விருந்து (கடைசி இரவு உணவு) உண்டார். அப்போது அவர் ஒரு துண்டை எடுத்து தனது இடுப்பில் கட்டிக்கொண்டு 12 சீடர்களின் பாதங்களை தண்ணீரால் கழுவினார்.

    பின்னர் அவர் “நான் செய்தது போல் நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” என்று தனது சீடர்களிடம் கூறினார். அதன் நினைவாக இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் 12 பக்தர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று மாலை நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் ஆயர்கள், பங்கு அருட்பணியாளர்கள் இயேசுவின் 12 சீடர்களை குறிக்கும் வகையில் 12 பேரின் பாதங்களை கழுவுகிறார்கள்.

    மேலும் பாஸ்கா விருந்து அன்று இயேசு கிறிஸ்து அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி “இது என் உடல். இதை வாங்கி உண்ணுங்கள்” என்றும், திராட்சை ரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்து “இது என் ரத்தம். இதை வாங்கி குடியுங்கள்” என்றும் கூறி சீடர்களிடம் கொடுத்தார்.

    இதனால் இயேசு கிறிஸ்து நற்கருணையை ஏற்படுத்திய புனித நாளாக பெரிய வியாழன் கருதப்படுகிறது. எனவே இன்று பாதம் கழுவும் சடங்கு முடிந்த பின்பு ஆலயங்களில் நள்ளிரவு வரை நற்கருணை ஆராதனை நடைபெறும். பெரிய வியாழனான இன்று மாலை நடைபெறும் திருப்பலியில் ‘உன்னதங்களிலே’ என்ற பாடல் பாடப்படும் போது ஆலய மணிகள் ஒலிக்கப்படும். அதன் பிறகு ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி வரை ஆலய மணிகளோ அல்லது இசைக்கருவிகளோ ஒலிக்காது. மீண்டும் இயேசுவின் உயிர்ப்பின் போதுதான் அவை ஒலிக்கும்.
    பெரிய வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் பக்தர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி வருகிற 18-ந்தேதி நடக்கிறது.
    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா வருகிற 21-ந் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 14-ந் தேதி குருத்தோலை திருநாள் கொண்டாடப்பட்டது. அன்று முதல் ஈஸ்டர் பெருவிழா வரை புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்த புனித வாரத்தில் பெரிய வியாழன் முக்கிய நாளாக அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முந்தைய நாள் தன்னுடைய 12 சீடர்களுடன் பாஸ்கா விருந்து (கடைசி இரவு உணவு) உண்டார். அப்போது அவர் ஒரு துண்டை எடுத்து தனது இடுப்பில் கட்டிக்கொண்டு 12 சீடர்களின் பாதங்களை தண்ணீரால் கழுவினார்.

    பின்னர் அவர் “நான் செய்தது போல் நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” என்று தனது சீடர்களிடம் கூறினார். அதன் நினைவாக வருகிற 18-ந் தேதி பெரிய வியாழன் அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் 12 பக்தர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் ஆயர்கள், பங்கு அருட்பணியாளர்கள் இயேசுவின் 12 சீடர்களை குறிக்கும் வகையில் 12 பேரின் பாதங்களை கழுவுகிறார்கள்.

    மேலும் பாஸ்கா விருந்து அன்று இயேசு கிறிஸ்து அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி “இது என் உடல். இதை வாங்கி உண்ணுங்கள்” என்றும், திராட்சை ரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்து “இது என் ரத்தம். இதை வாங்கி குடியுங்கள்” என்றும் கூறி சீடர்களிடம் கொடுத்தார்.

    இதனால் இயேசு கிறிஸ்து நற்கருணையை ஏற்படுத்திய புனித நாளாக பெரிய வியாழன் கருதப்படுகிறது. எனவே அன்று பாதம் கழுவும் சடங்கு முடிந்த பின்பு ஆலயங்களில் நள்ளிரவு வரை நற்கருணை ஆராதனை நடைபெறும். பெரிய வியாழன் அன்று மாலை நடைபெறும் திருப்பலியில் ‘உன்னதங்களிலே’ என்ற பாடல் பாடப்படும் போது ஆலய மணிகள் ஒலிக்கப்படும். அதன் பிறகு ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி வரை ஆலய மணிகளோ அல்லது இசைக்கருவிகளோ ஒலிக்காது. மீண்டும் இயேசுவின் உயிர்ப்பின் போதுதான் அவை ஒலிக்கும்.
    ×