search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drowning"

    கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் மூழ்கி தலைமை ஆசிரியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டையைச் சேர்ந்தவர் முரளிபாபு (வயது57). இவர் பாதிரிவேட்டில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

    நேற்று பள்ளிக்கு செல்லாத இவர், போந்தவாக்கம் கிராமத்தில் வயல்வெளியில் உள்ள தரை கிணறு ஒன்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் மூழ்கிய தலைமை ஆசிரியர் முரளிபாபு பரிதாபமாக இறந்தார்.

    நாகையில் கடலில் மூழ்கி ஆந்திர சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் லாலுகார்டன் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் நேற்று நாகை அடுத்த நாகூர் தர்காவுக்கு வழிபாட்டுக்காக வந்திருந்தார்.

    இந்த நிலையில் இஸ்மாயில் குடும்பத்தினர் மதியம் கடற்கரையில் உள்ள சில்லடி தர்காவுக்கு சென்று விட்டு கடலில் குளித்துள்ளனர்.

    அப்போது கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் அலையில் இஸ்மாயில் மகன் சபீர் (15) மூழ்கினார். இதில் அதிர்ச்சி அடைந்த இஸ்மாயில் மற்றும் அவரது குடும்பத்தினர் சத்தம் போட்டு கதறி அழுதனர். இதற்கிடையே கடல் அலையில் சபீர் மூழ்கி பலியான நிலையில் கரையில் உடல் ஒதுங்கியது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் நாகை கடற்கரை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சபீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முத்துப்பேட்டை அருகே ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அருகே உள்ள கற்பகநாகர் குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ராஜமாள் (வயது 65).

    இவர் நேற்று அப்பகுதியில் உள்ள வளவனார் ஆற்றில் குளிக்க சென்றார். ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது தடுமாறி ஆழத்திற்கு சென்று மூழ்கி இறந்தார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் ராஜமாள்ளை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை அருகே குட்டையில் மூழ்கி மாணவர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    திருப்பூர் காங்கேயம் ரோடு, சின்ன செம்மேடு பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் வசந்த குமார்(வயது 14). பெற்றோரை இழந்த இவர் கோவையை அடுத்த கோவில் பாளையத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார்.

    நேற்று விடுதியில் இருந்து வெளியே சென்ற வசந்தகுமார் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் அவரது நண்பர்கள் அப்ப குதியில் தேடிப் பார்த்தனர். அப்போது கவுசிகா நதியையொட்டிய குட்டையில் மூழ்கிய நிலையில் வசந்த குமார் மிதந்தார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சத்தம் போட்டனர். அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து வசந்தகுமாரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    தகவலின்பேரில் கோவில் பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசரணை நடத்தினர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நதியில் தண்ணீர் அதிகமாக ஓடியது. மேலும் அப்பகுதியில் சகதியும் அதிகமாக இருந்துள்ளது.

    மாணவர் வசந்தகுமார் குட்டையில் இறங்கிய போது எதிர்பாராதவிதமாக சகதியில் சிக்கி இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வில்லியனூரில் கோவில் குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி நீரில் மூழ்கி பலியானார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது80). நேற்று மதியம் இவர் திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சாமிதரிசனம் செய்வதற்கு முன்பு கோவில் குளத்தில் படிக்கட்டில் இறங்கி கால் கழுவ சென்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக கோவிந்தம்மாள் குளத்தில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கிய கோவிந்தம்மாள் சிறிது நேரத்தில் குளத்தில் பிணமாக மிதந்தார். அப்போது கோவிலுக்கு வந்த பக்தர்கள் குளத்தில் கோவிந்தம்மாள் பிணமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலயய்ன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் செலவராஜ், ஆகியோர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆனைமலை அருகே திருமணம் ஆகி 1 வருடத்தில் ஆற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொள்ளாச்சி:

    ஆனைமலை அருகே உள்ள சின்னப்பன் பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (24). மில் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முருகானந்தம் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் தேடி வந்தனர். அவர் தனது நண்பர்களுடன் மது அருந்தியதை சிலர் பார்த்தாக கூறினார்கள். 

    இந்த நிலையில் சுந்தரபுரியில் உள்ள ஆழியாறில் முருகானந்தம் பிணமாக மிதந்தார். அவரது உடலை ஆனைமலை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் ஆற்றில் மூழ்கி இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வைகை ஆற்றில் நண்பர்களுடன் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

    மதுரை:

    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் நீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கடந்த வாரம் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டுச் சென்றது.

    தண்ணீர் வரத்து வந்ததையடுத்து மதுரை நகரில் இளைஞர்கள், மாணவர்கள் ஆபத்தை உணராமல் ஆற்றில் குளிக்கச் சென்றனர். இதில் நீச்சல் தெரியாமலும், ஆழமான பகுதிக்கு சிக்கியும் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தொடர்ந்து ஆபத்தான முறையில் ஆற்றில் பொதுமக்கள் இறங்குவதும், குளிப்பதும் நடந்து வருகிறது.

    மதுரை அவனியாபுரம், வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் நவீன் (10). மாணவனான இவன் நேற்று நண்பர்களுடன் அண்ணாநகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தான்.

    அப்போது நவீனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதில் தண்ணீரில் மூழ்கிய அவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நவீன் பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கொடிவேரி அணையில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டி.என்.பாளையம்:

    கோபி செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். இவரது மகன் லூர்து ஆண்ட்ரூஸ்.

    லூர்து ஆண்ட்ரூஸ் மற்றும் அவரது நண்பர்கள் நேற்று மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா சென்றனர். ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையை பார்க்க வந்தனர்.

    அணையில் தண்ணீர் கொட்டியபடி பாய்ந்து சென்று கொண்டிருந்ததை கண்ட அவர்களுக்கு அதில் குளிக்க ஆர்வம் ஏற்பட்டது. இதனால் கொடிவேரி அணையில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது லூர்து ஆண்ட்ரூஸ் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்.

    அவரது நண்பர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

    இது பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு அவரது உடலை பார்த்து அழுதபடி உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரைத் தெருவை சேர்ந்த குட்டார் என்பவரின் மகன் முருகேசன் (வயது45) கூடைப்பின்னும் தொழிலாளி.

    இவர் நேற்று மாலை முருகேசன் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற முருகேசன் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை கண்டு அருகில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் சீர்காழி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கிய முருகேசனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின்னர் இரவு நேரமானதால் முருகேசனை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக முருகேசன் உடலை தீயணைப்பு படையினர் அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் தேடினர். அப்போது கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் முருகேசன் உடல் கிடப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி கொள்ளிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ஆற்றில் மூழ்கி பலியான முருகேசனுக்கு அரசாயி (40) என்ற மனைவியும், கலைச்செல்வி (24) என்ற மகளும், சதீஷ்(22) என்ற மகனும் உள்ளனர். 

    கடலூர் சில்வர் பீச் கடலில் குளித்த பெண் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள உண்ணாமலை செட்டிச்சாவடி பனங்காட்டுகாலனியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் கடலூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள வாகன பராமரிப்பு நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பவானி(வயது 24). இவர்களுக்கு கவுதம்(2) என்ற மகன் உள்ளான். 3 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் கடலூர் சில்வர் பீச்சுக்கு வந்தனர். 

    பவானி, கடலில் குளித்தார். அப்போது எழுந்த ராட்சத அலை, பவானியை கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த குணசேகரன், ஓடிச்சென்று பவானியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே பவானி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் பெய்து வரும் கன மழையினால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை உள்ளிட்ட கிராமங்களில் நேற்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இரவு இடைவிடாது கன மழை பெய்ததால் பேரிஜம் ஏரி, கொழுவம்பட்டியில் உள்ள கோணலாறு ஏரியில் நீர் வரத்து அதிகரித்தது.

    இந்த தண்ணீர் அதிக அளவு பெருக்கெடுத்து ஓடி அமராவதி ஆற்றில் கலக்கிறது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் இங்கு பயிரிடப்பட்டுள்ள கேரட் உள்ளிட்ட செடிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இடைவிடாது பெய்த கன மழையினால் மேல்மலை கிராமங்களில் பல இடங்களில் மின் கம்பிகள், மின்சார வயர்கள் அறுந்து விழுந்தது. மேலும் மரங்களும் முறிந்து விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருவதாலும் மின்சாரம் இல்லாததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மதகடிப்பட்டு அருகே விவசாய கிணற்றில் குளித்த பிளஸ்-2 மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.

    திருபுவனை:

    திருபுவனை அருகே மதகடிப்பட்டு அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன். இவர், தமிழக போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகன் தணிகைவேலன் (வயது 17). இவர், பி.எஸ்.பாளைத்தில் உள்ளஅரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும் தணிகைவேலன் தனது நண்பர்களுடன் மதகடிப்பட்டையொட்டி தமிழக பகுதியான எல்.ஆர். பாளையத்தில் முருகையன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளிக்க சென்றார்.

    இந்த நிலையில் நண்பர்கள் அனைவரும் குளித்து விட்டு கிணற்றில் இருந்து வெளியேறிய நிலையில் தணிகைவேலன் மட்டும் வெளியே வர வில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அவரது நண்பர்கள் அங்குள்ள விவசாயிகளிடம் தெரிவித்தனர். விவசாயிகள் கிணற்றில் இறங்கி தேடியும் தணிகைவேலனை மீட்க முடியவில்லை.

    இதையடுத்து இதுபற்றி வளவனூர் போலீசாருக்கும், விழுப்புரம் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தீவிர தேடுதல் வேட்டையில் தணிகைவேலனை பிணமாக மீட்டனர்.

    இதைத்தொடர்ந்து வளவனூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×