search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drowned"

    • மயக்கம் ஏற்பட்டதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் சேர்ந்தவர் பாலாஜி (35) இவரது மனைவி சரஸ்வதி இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றது.

    பாலாஜி வாலாஜா பேட்டையில் அணைக்கட்டு ரோட்டில் உள்ள சிவில் சப்ளை குடோனில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    நேற்று சக்கரை மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு அருகில் இருக்கும் மேம்பாலம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள குட்டை அருகே சென்ற போது திடீரென மயக்கம் ஏற்பட்டதில் அந்த குட்டையில் விழுந்து மூச்சு திணறி இறந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழுப்புரத்தை சேர்ந்தவர்
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த யாசின் என்பவரது மகன் ஹாரிப் (வயது 23).

    இவர் தனது உறவினர்களுடன் செங்கம் அடுத்த குட்டூர் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராமல் நீரில் மூழ்கி உறவினர்களின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

    உறவினர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் செங்கம் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தன். அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.நீண்ட நேரத்துக்கு பின்னர் வாலிபர் உடலை மீட்டனர் செங்கம் போலீசாரிடம் உடலை வனத்துறையினர் ஒப்படைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருக்ன்றனர்.

    • சேலம் மாவட்டம் கொங்கணா புரம் எட்டிக்குட்டைமேடு, இலவம்பாளையம் கிராமம் அருகே மது போதையில் ஏரியில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார்.
    • இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொங்கணா புரம் எட்டிக்குட்டைமேடு, இலவம்பாளையம் கிராமம் அருகே உள்ள நரி பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 32 ). விசைத்தறி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பழனிசாமி நேற்று தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல், செல்வம் ஆகியோருடன் சேர்ந்து வெள்ளாளபுரம் அருகே உள்ள செங்காடு ஏரி பகுதியில் குளிக்க சென்றார். அங்கு சென்ற நண்பர்கள் அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

    மது போதையில் இருந்த அவர்கள், செங்காடு, தென்கரை மதகுப்பகுதியில் தண்ணீரில் குதித்து விளையாடிய போது பழனிசாமி தவறுதலாக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் வெளியே வரவில்லை. இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் எடப்பாடி பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஏரி பகுதியில் பழனிசாமியின் உடலை நவீன கருவிகளைக் கொண்டு தேடினர்.

    இதனை தொடர்ந்து அப்பகுதியில் நேற்று இரவு மழை பெய்ததால் தண்ணீரில் மூழ்கிய பழனிசாமியை தேடும் பணி உடலை மீட்கும் பணியில் தோய்வு ஏற்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை முதல் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் மீண்டும் பழனிசாமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஆழமான பகுதியில் இருந்து பழனிசாமி உயிரிழந்த நிலையில் அவர் உடல் மீட்கப்பட்டது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த கொங்கணாபுரம் போலீசார், அவர் இறப்பு குறித்து அவருடன் வந்த நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மதியம் 3 மணி அளவில் ஊருக்கு அருகில் உள்ள அய்யனார் ஆற்றில் குளித்து கொண்டிருந்தார்.
    • அவரை பரிேசாதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    திருவாரூர்

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மேலகண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மகன் சிவா. கூலித்தொழிலாளி.

    இவருக்கும், திருத்துறைப்பூண்டி தாலுகா ஓவரூரை சேர்ந்த ரகுபதி மகள் சுகந்திக்கும்(வயது22) கடந்த 23-6-2022 அன்று திருமணம் நடைபெற்றது.

    நேற்று மதியம் 3 மணி அளவில் சுகந்தி ஊருக்கு அருகில் உள்ள அய்யனார் ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென நிலைதடுமாறி தண்ணீரில் மூழ்கினார்.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சுகந்தியை மீட்டு மன்னார்குடி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிேசாதனை செய்த டாக்டர்கள் சுகந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 3 மாதமே ஆன நிலையில் ஆற்றில் மூழ்கி புதுப்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கோவில் எதிரே உள்ள காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார் அப்போது அவர் திடீரென நீரில் மூழ்கினார்.
    • ரில் மூழ்கிய பாலசண்முகத்தை மீட்டு உடனடியாக கண பதி பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    கொடுமுடி:

    கோவை மதுக்கரை மார்க்கெட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (53). இவர் மன்னாதம்பாளை யம் குலவிளக்கு அம்மன் கோவிலில் கிடாய் வெட்டி பொங்கல் வைப்பதற்காக பஸ், கார் மூலம் உறவினர்கள், நண்பர்கள் 150 பேர் வந்தனர்.

    இவர்களுடன் இவரது உறவினர் கோவை மதுக்கரை அன்பு நகரை சேர்ந்த பாலசண்முகம் (44) என்பவரும் வந்து இருந்தார்.இவர் கோவில் எதிரே உள்ள காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார் அப்போது அவர் திடீரென நீரில் மூழ்கினார்.

    இதை கண்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் சத்தம் போட்டு உள்ளார்கள். உடனே மொடக்குறிச்சி தீயனைப்புத் துறைக்கு தகவல் கொடுத்து உள்ளார்கள். சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்தனர்.

    அவர்கள் நீரில் மூழ்கிய பாலசண்முகத்தை மீட்டு உடனடியாக கணபதி பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பால சண்முகத்தை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே பால சண்முகம் இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலை யம்பாளையம் போலீசார் பாலசண்முகம் உடலை ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமராவதி ஆற்றுப்பாலத்தில் வேனை நிறுத்தினர்.
    • தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாராபுரம் :

    தாளவாடி பகுதிைய சேர்ந்த லிங்கராஜ் மகன் மணிகண்டன் (வயது 24). இவர் கோவையில் உள்ள லேத் பட்டறை ஒன்றில் மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் ஒட்டன்சத்திரம் அப்பியம்பாளையம் சென்று விட்டு தாளவாடிக்கு வேனில் வந்து கொண்டிருந்தார். தாராபுரம் வந்ததும் அங்குள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தில் வேனை நிறுத்தினர்.

    பின்னர் மணிகண்டன் உள்பட 3 ேபர் ஆற்றில் இறங்கி குளித்தனர். இதில் தண்ணீரில் மூழ்கி மணிகண்டன் இறந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • தோட்டப் பகுதியில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தேங்கி நின்ற ஒரு குழியில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.
    • இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள தேவி பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.

    இவர் தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள மகாலிங்கம் என்பவரது தோட்டத்தில் தங்கி கூலிவேலை செய்து வருகிறார். இவரது மகன் ஹரிக்குமார் (வயது 14). இவர் பரமத்தியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாணவர் ஹரிக்குமார் காலையில் அங்கிருந்த தோட்டப்பகுதிக்கு‌ சென்றவர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் தோட்டப் பகுதியில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தேங்கி நின்ற ஒரு குழியில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.

    பின்னர் இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக

    பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் குழியில் தவறி விழுந்து இறந்தது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    வாளையார் அணையில் மூழ்கி கோவை வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் உள்ளது ஏரிமேடு. இந்த பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் கிருஷ்ணகுமார் (வயது 21). இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் பாலக்கட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். உறவினர்களை பார்த்து விட்டு மாலை மீண்டும் கோவைக்கு புறப்பட்டனர்.

    வரும் வழியில் வாளையார் அணையை சுற்றிப்பார்த்தனர். பின்னர் அணையில் இறங்கி 5 பேரும் குளித்தனர். சிறிது நேரம் குளித்த பின்னர் மற்றவர்கள் கரையேறினர். கிருஷ்ணகுமாரை காணவில்லை.

    அதிர்ச்சியடைந்த நண்பர்கள் இது குறித்து அங்கிருந்து பொதுமக்களிடம் கூறினர். பொதுமக்கள் வாளையார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கஞ்சிக்கோடு தீயணைப்பு வீரர்களுடன் அணையில் இறங்கி கிருஷ்ணகுமாரை தேடினர். ஆனால் தீயணைப்பு வீரர்களால் முடியவில்லை.

    இதனையடுத்து பாலக்காடு நீர் மூழ்கி தேடும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து தீவிர தேடுதலுக்கு பின்னர் அணையில் இருந்து கிருஷ்ணகுமாரின் உடலை மீட்டனர். மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து வாளையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போச்சம்பள்ளி அருகே குளிக்க சென்ற தொழிலாளி கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் அருகே உள்ள சென்றாநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த முனிசிங் என்பவரது மகன் நாகராஜ்சிங் என்பவருக்கு சொந்தமான 100 அடி ஆழம் உள்ள விவசாய கிணறு ஒன்று அந்த பகுதியில் உள்ளது. இந்த கிணற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அதே கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகன் கனகராஜ் (வயது 40) என்பவர் வேலைக்கு சென்றுவந்து பின்னர், குளிப்பதற்காக கிணற்றுக்கு சென்றதாக தெரிகிறது. குளிக்கசென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர்.

    மேலும், கிணற்றில் அவர் இல்லாததால் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதை கண்ட அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவர்களது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் போச்சம்பள்ளி தீ அணைப்பு நிலையத்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரவி மற்றும் மோகன், கபிலன், முத்துராஜ், கார்த்திகேயன், வசந்த் ஆகியோர் அடங்கிய வீரர்கள் விரைந்துசென்று பொதுமக்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.

    பின்னர், சடலத்தை கைப்பற்றிய போச்சம்பள்ளி போலீசார் இது கொலையா? அல்லது எதிர்பாராத விபத்தா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி அருகே ஆற்றில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போச்சம்பள்ளி:

    தருமபுரி மாவட்டம் கெத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35) டிரைவர். நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென் பெண்ணை ஆற்றில் குளிப்பதற்கு இவரது நண்பர் துரைசாமி என்பவரும் வந்துள்ளனர். பண்ணந்தூர் செல்லும் சாலையில் உள்ள வாட்டர் டேங்க் அருகே ஆற்றில் இருவரும் குளித்து விட்டு கரைமீது வந்துள்ளனர். தண்ணீர் தாகம் அதிகமாக உள்ளது என்று சிவக்குமாரை அங்கேயை இருக்க சொல்லவிட்டு துரைசாமி மட்டும் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து பார்த்து போது சிவக்குமார் அந்த இடத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    உடனடியாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். உறவினர்கள் இரவு முழுவதும் சிவக்குமாரை தேடி இல்லாததால் இது குறித்து பாரூர் போலிஸில் புகார் கொடுத்தார்கள்.

    அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தென் ஆற்றில் முழுவதும் தேடியதில் இன்று காலை ஆற்றின் ஓரத்தில் சிவக்குமார் தண்ணீரில் பிணமாக மிதப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் போலிசார் அனுப்பி வைத்தார்.
    கரூர் அருகே இன்று அதிகாலை தீர்த்தக்குடம் எடுக்க சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் பரமத்தி அருகே காருடையான்பாளையத்தில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை நொய்யல் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

    இதற்காக பக்தர்கள் மற்றும் காருடையான்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பலர் நொய்யல் காவிரி ஆற்றுக்கு இன்று அதிகாலை சென்றனர். அங்கு அனைவரும் குளித்துவிட்டு, தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலமாக செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது காருடையான் பாளையம் பாரதி நகரை சேர்ந்த பிரபாகரன் (வயது 20), புருஷோத்தமன் (17), பரமத்தி அருகே புதுக்கநல்லி பகுதியை சேர்ந்த நவீன்குமார் (18) ஆகிய 3 பேரும் ஆற்றில் இறங்கி குளித்தனர்.

    எதிர்பாராதவிதமாக மணல் அள்ளுவதற்காக தோண்டப்பட்டிருந்த குழிக்குள் இறங்கியதில் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். நீச்சல் தெரியாததால் 3 பேரும் தங்களை காப்பாற்றும்படி சத்தம் போட்டனர்.

    அதிர்ச்சியடைந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் தத்தளித்த 3 பேரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் முடியவில்லை. இதையடுத்து உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீருக்குள் இறங்கி 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து 3 பேரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்றது. ஆழமான பகுதிக்குள் மூழ்கியதால் 3 பேரின் உடல்களையும் மீட்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் மற்றும் நவீன உபகரணங்கள் உதவியுடன் தண்ணீருக்குள் மூழ்கி உடல்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் புருஷோத்தமன், நவீன்குமார் உடல்கள் மீட்கப்பட்டன. பிரபாகரன் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    சம்பவ இடத்திற்கு வேலாயுதம்பாளையம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும் மீட்கப்பட்ட 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான பிரபாகரன் அப்பகுதியில் உள்ள கிர‌ஷர் ஆலையில் பணியாற்றி வந்தார். புருஷோத்தமன் காகித ஆலை தொழிற்பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். நவீன்குமார் கரூரில் பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    கோவில் திருவிழாவுக்கு தீர்த்தக்குடம் எடுக்க சென்ற போது காவிரி ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் பலியான சம்பவம் அம்மாப்பேட்டை பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    அம்மாப்பேட்டை:

    தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள உடையார் கோவில் கிராமம் காடவராயர் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். கூலித் தொழிலாளி. இவருடைய குழந்தைகள் தாரிகா (வயது 4), சித்தார்த் (2).

    இந்த நிலையில் நேற்று தாரிகாவும், சித்தார்த்தும் வீட்டின் அருகே உள்ள குளக்கரையில் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அவர்கள் இருவரும் திடீரென குளத்தில் இறங்கினர். இதையாரும் கவனிக்கவில்லை. இதனால் குளத்தில் இறங்கிய தாரிகாவும், சித்தார்த்தும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

    இந்த நிலையில் விளையாட சென்ற மகனும், மகளும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமாரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் குளத்துக்கு சென்று பார்த்தனர். கரையில் இருவரையும் காணாததால் சந்தேகத்தின் பேரில் குளத்திற்குள் இறங்கி தேடிப்பார்த்தனர்.

    அப்போது குளத்திற்குள் மூழ்கி உயிரிழந்த தாரிகா மற்றும் சித்தார்த் ஆகியோரின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். குழந்தைகளின் உடல்களை பார்த்து சதீஷ்குமாரின் மனைவி கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க செய்தது. இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×