search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMS campus"

    9-வது நாளான இன்று தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #JactoGeo #Strike
    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ந்தேதி முதல் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

    9-வது நாளான இன்று தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் காலை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திரண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் தலைமை தாங்கினார்.

    9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோ‌ஷங்களை எழுப்பினார்கள். பின்னர் ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் கூறியதாவது:-

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை முதல்-அமைச்சர் அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இதில் அவர்கள் கவுரவம் பார்க்கிறார்கள். பள்ளி கல்வித்துறை செயலாளர் இப்போராட்டத்தை திசை திருப்பி வருகிறார்.

    நிதி இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார்தான் சொல்கிறார். ஆனால் அதுபற்றி நிதி அமைச்சர் வாய் திறக்கவில்லை. இன்று மாலை ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று நடந்த போராட்டத்தில் 200 பேர் கலந்து கொண்டனர். போராட்டம் தொடங்கியபோது அதிகளவில் பங்கேற்றனர். தற்போது ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் போராட்டத்துக்கு குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். #JactoGeo #Strike
    ×