search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dispute"

    • செல்வி ஆகியோரை ஆபாசமாக பேசி, தாக்கி, செல்வியின் சேலையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது.
    • மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 54) இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (55) என்பவருக்கும் பொது பாதை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தி அவரது மகன் பெரியசாமி (33) ஆகியோர் பழனி மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோரை ஆபாசமாக பேசி, தாக்கி, செல்வியின் சேலையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனி மகன் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.

    • பூசாரி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஊர்பொதுமக்கள் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாநகர நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வரும் போலீஸ் ஏட்டு முருகனை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.

    சேலம்:

    தாரமங்கலம் அருகே ஓலைப்பட்டி காட்டுவளவு பரியம்பட்டி கிராமத்தில் முனியப்பன் கோவிலில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த கோவில் பூசாரியாக ரமேஷ் (வயது 45) என்பவர் உள்ளார். கோவிலில் நடக்கும் பணிகள் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சேலம் மாநகர போலீஸ் துறையில் பணிபுரியும் போலீஸ் ஏட்டு முருகன் தரப்பினருக்கும், பூசாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் பூசாரி ரமேசை ஆயுதங்களால் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனிடையே பூசாரி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஊர்பொதுமக்கள் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் ஏட்டு முருகன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், மாநகர நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வரும் போலீஸ் ஏட்டு முருகனை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.

    • வீட்டின் வெளியே படுத்திருந்த பாக்கியத்தின் தலையில் குழவிக்கல்லை போட்டார்.
    • மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே அப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30) கூலி தொழிலாளி.

    இவரது மனைவி மாலதி (25).

    இவர்கள் இடையே குடும்பதகராறு ஏற்பட்டது.

    இதனால் மாலதி கணவ ரிடம் கோ பித்து கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தந்தை பாக்கியம் (65) என்பவரின் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று பிரபாகரன் தனது மனைவியை கூப்பிட மாமனார் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது மாலதிக்கும், பிரபாகரனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் பாக்கியம் அவர்கள் இடையே சமாதனம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து மாலதி கணவருடன் செல்ல மறுத்து விட்டார். இதனால் பிரபாகரன் தனியாக வீட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் பிரபாகரன் தனது மாமனார் வீட்டிற்கு வந்தார்.

    அங்கு வீட்டின் வெளியே படுத்தி ருந்த பாக்கியத்தின் தலையில் குழவி கல்லை போட்டார்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபாகரனை கைது செய்தார்.

    மேலும் பாக்கியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
    • கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குபதிவு செய்து அசன்அலியை கைது செய்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அத்திக்கடை அண்ணா தெருவை சேர்ந்தவர் அல்லா பிச்சை (வயது 60). இவரது மகன் அசன்அலி (வயது 37). இந்நிலையில் அல்லா பிச்சை குடிபோதையில் அருகில் குடியிரு ப்பவர்களி டம் தகராறு செய்தார். இதனை அசன்அலி தட்டி கேட்டுள்ளார்.

    அப்போது தந்தை மகன் இடையே தகராறு ஏற்பட்டது. சண்டையில் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டனர்.

    அப்போது அல்லாபிச்சை சுவரில் மோதியுள்ளார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய அல்லாபிச்சையை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அல்லாபிச்சை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது தொடர்பாக அல்லா பிச்சையின் மனைவி ஹபிப்நிஷா கொடுத்த புகாரி பேரில், கொரடாச்சே ரி இன்ஸ்பெ க்டர் சசிகலா வழக்கு பதிவு செய்து மகன் அசன்அலியை கைது செய்தார்.

    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • வீடியோ வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் குமார்நகரை அடுத்த வளையங்காடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 36). தையல் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (45). நண்பர்களான இருவரும் மதியம் முதல் திருப்பூர் காந்திநகர் அருகே மது அருந்தி உள்ளனர். போதை தலைக்கு ஏறிய நிலையில் இரவு இருவரும் டாஸ்மாக் பாரை விட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது பாண்டியன் காளிமுத்துவை பார்த்து "பல் இல்லாத உனக்கு எதற்கு பொண்டாட்டி" என கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    ஆத்திரமடைந்த காளிமுத்து அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து உனக்கு பல் இருப்பதால் தானே இப்படி பேசுகிறாய் உன் பல் அனைத்தையும் உடைத்து விடுகிறேன் என்று கூறிக்கொண்டு பாண்டியன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார். பாண்டியன் கீழே தரையில் படுத்திருந்த நிலையில் காளிமுத்து உருட்டு கட்டையால் தொடர்ந்து பாண்டியன் முகத்தில் ஓங்கி அடித்தார்.

    இதில் பலத்த காயமடைந்த பாண்டியனின் 5 பற்கள் உடைந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காளிமுத்துவை தடுத்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காளிமுத்துவை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பான வீடியோ வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விழாவில ஆட்டுக்கறி உள்ளிட்ட அசைவ உணவு பரிமாறப்பட்டது.
    • தடுக்க வந்த சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே வாட்டாத்திக்கோட்டை கொள்ளைக்காடு பகுதியை சேர்ந்த நான்கு நபர்களாக ஒன்று சேர்ந்து, அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மொய் விருந்தோடு, காதணி விழாவும் நடத்தியுள்ளனர்.

    மொய் விருந்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு ஆட்டுக்கறி உள்ளிட்ட அசைவ உணவு பரிமாறப்பட்டது.

    இந்நிலையில், மொய் விருந்தில் சாப்பிட வந்த நெய்வேலியை சேர்ந்த ஆறுமுகம் (வயது26), குமரேசன்,(27), இருவரும் கூடுதலாக ஆட்டுக்கறி கேட்டு தகராறு செய்துள்ளனர்.

    அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்.

    இருப்பினும் ஆறுமுகம், குமரேசன் இருவரும் அங்கிருந்த நாற்காலியை துாக்கி வீசி ரகளை செய்ததாக கூறப்படுகிறது,

    அங்கிருந்த வேலம்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் சமாதானம் செய்ய முயன்றுள்ளர்.

    ஆனால், ஆறுமுகம், குமரேசன் இருவரும் அங்கிருந்த கல்லால் சுரேஷை தாக்கியுள்ளனர்.

    இதை தடுக்க வந்த சிலரையும் கண் மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் சுரேஷின் வலது கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இது குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசில் மொய் விருந்து நடத்தியவர்கள் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில், போலீசார் ஆறுமுகம், குமரேசன், இருவரையும் நேற்று கைது செய்தனர் மொய் விருந்து நிகழ்ச்சியில் இரண்டு வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

    • சந்தோஷ் குடும்பத்திற்கும், பிரகாஷ் குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சந்தோஷ் குடும்பத்தார் 4 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகே பையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ் (வயது 30), பிரகாஷ் (40). இருவரும் உறவினர்கள். இவர்களின் வீடுகளுக்கு நடுவில் முள்வேலி உள்ளது. பிரகாஷ் வீட்டில் வளரும் மாடு முள்வேலியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால் சந்தோஷ் குடும்பத்திற்கும், பிரகாஷ் குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சந்தோஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் குடும்பத்தார் 4 பேர் மீதும், பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ் குடும்பத்தார் 4 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பிரகாஷ், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    • அரிவாளால் வெட்டியதில் பாஸ்கர் அவரது மனைவி சக்திகனி மகன்கள் சத்தியநாராணன், சத்திய கிருஷ்ணன், மகள் சக்திகனி 5 பேரும் படுகாயமடைந்தனர்.
    • புகாரின் பேரில் ஆழ்வார் திருநகரி சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகரை கைது செய்தனர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள நவலெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 60). இவரது மனைவி சக்திகனி (57), இவர்களுக்கு சத்தியநாராயணன் (37), சத்தியகிருஷ்ணன் (28) என்ற 2 மகன்களும், சக்திகனி (30) என்ற மகளும் உள்ளனர்.

    இவர்களுக்கும், பாஸ்கர் மனைவி சக்திகனியின் தம்பிகளுக்கும் இடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு பாஸ்கர் வீட்டிற்கு வந்த சக்திகனியின் தம்பி தனசேகர் (49), அவரது மனைவி சக்திபாமா மற்றொரு தம்பியான குணசேகரன் மனைவி பாக்கியலெட்சுமி, மற்றொரு தம்பியான சக்திவேல் மனைவி தங்கம் ஆகிய 4 பேரும் பாஸ்கர் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டியதில் பாஸ்கர் அவரது மனைவி சக்திகனி மகன்கள் சத்தியநாராணன், சத்திய கிருஷ்ணன், மகள் சக்திகனி 5 பேரும் படுகாயமடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பான புகாரின் பேரில் ஆழ்வார் திருநகரி சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று காலை தனசேகரை கைது செய்தனர்.

    தொடர்ந்து, சக்திபாமா பாக்கியலெட்சுமி, தங்கம் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

    • பாகூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார். எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.
    • ரவீன்குமார் தனது வீட்டு வாசலில் அமர்ந்து மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார்

    புதுச்சேரி:

    பாகூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார். எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அங்குள்ள சாராயக் கடையில் இருந்த போது அவருக்கும் பாகூர் மூலநாத நகரை சேர்ந்த அஜித் குமார் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    அங்கி ருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று மாலை பிரவீன்குமார் தனது வீட்டு வாசலில் அமர்ந்து மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அஜித் குமார் என்னிடமே தகராறு செய்கிறாயா? எனக் கூறி அங்கு கிடந்த கல்லை எடுத்து பிரவீன் குமாரை தாக்க முயன்றார்.

    ஆனால் பிரவீன்குமார் கீழே குனிந்து கொண்டதால் அந்த தாக்குதலில் இருந்து தப்பினார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத அஜித் குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரவீன் குமாரின் முதுகில் குத்தினார்.

    மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அஜித் குமார் தப்பியோடி விட்டார். இந்த கத்தி குத்தில் காயமடைந்த பிரவீன் குமார் பாகூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி பானுமதி
    • வீட்டு மனை பிரச்சினை தொடர்பாக சொத்து தகராறு உள்ளது.

    புதுச்சேரி:

    கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி பானுமதி  இவருக்கும் இவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த குமார் குடும்பத்தினருக்கும் வீட்டு மனை பிரச்சினை தொடர்பாக சொத்து தகராறு உள்ளது.

    சம்பவத்தன்று பானுமதி அக்பர் நகரில் உள்ள குமரேசன் என்பவர் வீட்டின் எதிரே நடந்து சென்றார். அப்போது பானுமதியை வழிமறித்து குமார், இவரது மகன் தினேஷ், மாரிமுத்து மகன் பிரேம், குமார் மனைவி ரஞ்சிதம் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர்.

    மேலும் இவர்கள் பானுமதியை கையாளும் இரும்பு பைப்பாலும் தாக்கினர். இது குறித்து பானுமதி கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் பானுமதியை தாக்கிய தினேஷ், குமார், பிரேம், ரஞ்சிதம் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • விஜயன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
    • மேலும், செந்தில்வேலை, மாதேஷ் உட்பட 3 பேர் தாக்கினார்கள்.

    கடலூர்:

    கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயன் என்பவ ருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத் தன்று மாதேஷ் வீட்டிற்கு விஜயன் உட்பட 5 பேர் நேரில் சென்று சரமாரியாக தாக்கினார்கள். அப்போது அதனை தடுக்க வந்த அவரது தாய் சந்திராவை கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    மேலும், செந்தில்வேலை, மாதேஷ் உட்பட 3 பேர் தாக்கினார்கள். இதில் காயமடைந்த மாதேஷ், செந்தில்வேல் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற னர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் மாதேஷ் கொடுத்த புகாரின் பேரில் செந்தில்வேல், நடராஜன், கலை, சரவணன், விஜயன் ஆகிய 5 பேரும், செந்தில் வேல் கொடுத்த புகாரின் பேரில் மாதேஷ், குமரன், சந்திரா என மொத்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிகண்டனின் வீட்டு முன்பு மதுபாட்டில் கிடந்தது.
    • அர்ஜுன் போட்டதாக மணிகண்டன் மற்றும் அவரது மனைவியான ஆசிரியை ராஜி ஆகியோர் சந்தேகம் அடைந்தனர்.

    குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன் (28). பெயிண்டர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மணிகண்டன். இந்த நிலையில் மணிகண்டனின் வீட்டு முன்பு மதுபாட்டில் கிடந்தது. இதனை அர்ஜுன் போட்டதாக மணிகண்டன் மற்றும் அவரது மனைவியான ஆசிரியை ராஜி ஆகியோர் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் அர்ஜுனிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர்.

    மேலும் அவர் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றினர். இதில் பலத்த காயம் அடைந்த அர்ஜுன் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் அவரது மனைவி ராஜி ஆகியோரை கைது செய்தனர்.

    ×