search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dindigul srinivasan"

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நிறுத்த மு.க.ஸ்டாலின் கெஞ்சினார். அது குறித்த ஆடியோ எங்களிடம் உள்ளது என்று அமைச்சர் சீனிவாசன் பேசினார். #dindigulsrinivasan #thiruvarurelection #mkstalin

    பழனி:

    பழனியில் அ.தி.மு.க. சார்பில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடத்த தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் கிடையாது.

    இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு கருணாநிதி தலைமை தாங்கினார். ஆனால் அவரது மகன், மகள், பேரன்கள் என அனைவரும் இந்தி பேசி வருகின்றனர்.

    மு.க.ஸ்டாலின் வடமா நிலத்திற்கு சென்று இந்தியில் பேசுகிறார். எனவே மொழிப் போர் தியாகிகளுக்காக தி.மு.க. கூட்டம் நடத்துவது வேதனையான செயல்.


    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நிறுத்த மு.க.ஸ்டாலின் கெஞ்சினார். அது குறித்த ஆடியோ எங்களிடம் உள்ளது. ஆனால் எங்களை பார்த்து இடைத்தேர்தலை சந்திக்க பயப்படுவதாக பிரசாரம் செய்து வருகின்றார்.

    எப்போது தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயங்காது. பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி இந்த அரசை கலைக்க நினைக்கும் ஸ்டாலின், தினகரனின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.

    உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மக்களை சந்திக்காத மு.க.ஸ்டாலின் தற்போது கிராமம் கிராமமாக கூட்டம் நடத்தி வருகிறார். தரையில் அமர்ந்தாலும், உருண்டு புரண்டாலும் அவரால் முதல்வர் ஆக முடியாது.


    சசிகலாவின் அக்கா மகன் என்ற தகுதியை தவிர தினகரனுக்கு வேறு எந்த தகுதியும் கிடையாது. சசிகலாவால் போயஸ் தோட்டத்திற்குள் புகுந்து பல கோடி சொத்துக்களை கொள்ளையடித்தார். தற்போது அந்த பணத்தை வைத்து அரசியல் நடத்தி வருகிறார். அவரது முதல்வர் கனவு பலிக்காது.

    இவ்வாறு அவர் பேசினார். #dindigulsrinivasan #thiruvarurelection #mkstalin

    கட்சியும் ஆட்சியும் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறியது போல் 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும். யாராலும் தடுக்க முடியாது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். #dindigulsrinivasan

    கொடைரோடு:

    நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இந்த தொகுதி இடைத் தேர்தலுக்காக அ.தி.மு.க சார்பாக அம்மைய நாயக்கனூர் பேரூராட்சியில் உள்ள பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் கொடைரோடு, அம்மையநாயக்கனூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

    திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை தாங்கினார். நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் யாகப்பன், அம்மைய நாயக்கனூர் பேரூர் செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலக்கோட்டை பேரூர் செயலாளர் சேகர் வரவேற்றார்.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பூத் கமிட்டி முகவர்களை ஒவ்வொருவராக சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தமிழக முதல் அமைச்சரை மாற்ற வேண்டும் என கோரினர். அதன் காரணமாக அந்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏவும் நீக்கம் செய்யப்பட்டதால் இந்த தொகுதியில் இடைத் தேர்தலை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கட்சியும் ஆட்சியும் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறியது போல் 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும். யாராலும் தடுக்க முடியாது.

    தற்போது முதல்- அமைச்சர், துணை முதல் -அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறை வேற்றப்பட்டு வருகின்றனர்.

    ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.கவின் தொண்டர்களை தற்போது சந்திப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது. பல்வேறு கூட்டங்களில் பார்த்து இருப்போம், ஆனால் நேரில் ஒவ்வொரு நபர்களையும் குடும்பத்தினரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிலக்கோட்டை தொகுதி எப்போது அ.தி.மு.கவின் கோட்டையாக இருக்கிறது. எப்போது இங்கு இடைத்தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவது உறுதி.

    அ.தி.மு.க வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் களப்பணி சிறப்பாக செய்ய வேண்டும். எதிர் கட்சியினர் என்ன குறைகளை சொல்லினாலும் மக்களுக்கு அது பொய் என தெரியும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானவைகளை வழங்கி வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னாள் ஆவின் தலைவர் திவான்பாட்ஷா, அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர்கள் குருவையா, குணசேகரன், சங்கையா, சேசுராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். #dindigulsrinivasan

    ஜெயலலிதாவைவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயங்கரமாக ஆட்சி செய்கிறார் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று கோடைவிழா-மலர்கண்காட்சி தொடங்கியது. வருகிற 16-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த கோடைவிழா-மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஏற்காடு கலையரங்கத்தில் நடந்த தொடக்க விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எல்லோரும் எளிதில் அணுகும் முதல்வராக உள்ளார். அமைச்சராக இருந்ததை விட முதல்வரான பிறகு அவர் மிக எளிமையாக இருக்கிறார். முதல்வர் பொறுப்பு என்பது மிகவும் கடுமையானது. அந்த சூழலிலும் அவர் சிறப்பாக செயல்படுகிறார்.

    தமிழகத்தில் இன்றைக்கு சாலையில் நடந்து செல்லும் யார், யாரோ? முதல்-அமைச்சர் கனவு காண்கிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர், எப்போது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கலையும்? நாம் முதல்-அமைச்சர் ஆகிவிடலாம்? என்று கனவு காண்கிறார். தகுதியில்லாமல் அவர் தரக்குறைவாக செயல்படுகிறார். அவரது கனவு ஒருபோதும் நிறைவேறாது.

    முதல்- அமைச்சர் பதவி என்பது இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே கிடைக்கும். கடினமாக உழைக்க வேண்டும். மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். இந்த 2 வி‌ஷயங்களும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பதை காணமுடிகிறது. அவரது ஸ்டைல் வித்தியாசமானது. இதனால் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்.

    ‘‘என்னையா இது.. அம்மா ஆட்சியை விட பயங்கரமாக போய்கிட்டு இருக்கு’’.. எங்கு பார்த்தாலும், டி.வி.யை பார்த்தாலும் முதல்-அமைச்சர் தமிழகத்தில் அதை செய்தார், இதை செய்தார் என கேட்க முடிகிறது.

    காலையில் 10 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு முதல்-அமைச்சர் கோட்டைக்கு வந்ததும், 10 இலாகாக்கள் அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்துகிறார். நான் புதிய அமைச்சராக இருப்பதால் இது எனக்கு புரிவதில்லை.

    அவர், ஏற்கனவே அம்மா காலத்தில் அமைச்சராக இருந்ததால் நல்ல டிரெயினிங் கொடுத்து மிக சிறப்பாக செதுக்கி செதுக்கி இருக்கிறார்கள். எனக்கு பிறகும் அ.தி.மு.க. 100 ஆண்டுகள் இருக்கும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே கூறி இருந்தார். அது எடப்பாடி பழனிசாமியை மனதில் வைத்து தான் அவர் சொல்லி உள்ளார்.

    மத்திய அரசுக்கு ‘ஜால்ரா‘ போடுவதாக எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். மக்களுக்கு தேவையான திட்டங்களையும், சலுகைகளையும் மத்திய அரசிடம் கேட்டு பெறுவது ‘ஜால்ராவா‘?. நல்ல வி‌ஷயங்களை மக்களுக்கு அவர் செய்து வருகிறார்.

    இன்றைக்கு தி.மு.க.செயல் தலைவருடன் இருக்கும் 9 கட்சி தலைவர்களும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் உருவாக்கி ஆளாக்கப்பட்டவர்கள். அதை மறந்துவிட்டு தற்போது அ.தி.மு.க. அரசை குறை கூறுகிறார்கள். ஆனால் அவர்களால் தேர்தல் வந்தால் கவுன்சிலர் கூட ஆக முடியாதது.

    ஹஜ் பயணிகளுக்கு சலுகை ரத்து, முத்தலாக் பிரச்சினை என இதர பிரச்சினைகளிலும் இஸ்லாமிய மக்களின் நன்மைக்காக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க.வினர் குரல் கொடுத்தனர் என்பதை மறந்து விடக்கூடாது.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை 32 மாவட்டங்களிலும் வெற்றிகரமாக நடத்தி அந்தந்த மாவட்ட வளர்ச்சிக்கு என்ன திட்டங்கள் தேவை? என கண்டறிந்து அவற்றை தொடங்கி வைத்த பெருமை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையே சேரும். மக்களுக்கு தேவையான திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. இதனால் இந்த அரசை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. 

    இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். #tamilnews

    ×