என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Difficulty"
- மக்கள் வெளியே சென்று மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் செல்ல சிரமமடைந்து வந்தனர்.
- ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம், கோபாலசமுத்திரம் ஊராட்சியில் எவரெஸ்ட் நகர் உள்ளது.
இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி சாலை மிகவும் மோசமாகி உள்ளதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி அப்பகுதி மக்கள் வெளியே சென்று மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் செல்ல சிரமமடைந்து வந்தனர்.
சாலையை மேம்படுத்திதர வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் கடந்த பத்தாண்டு காலமாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இந்நிலையில் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து எவரெஸ்ட் நகரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமெண்ட் சாலை அமைக்கப்ப ட்டது.
சிமெண்ட் சாலை அமைக்கப்ப ட்டதற்கு பன்னீர்செ ல்வம் எம்.எல்.ஏ., கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி ராஜேந்திரன்ஆகியோருக்கு எவரெஸ்ட் நகரை சேர்ந்த மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- மழை பெய்யும் போது சாலையில் மழைநீர் தேங்கி சாலை குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது.
- பஞ்சு மூட்டைகளை விற்பனைக்காக வெளியே எடுத்து செல்ல முடியாமல் சிரமமடைந்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எருக்கூர் மெயின் ரோட்டிலிருந்து அக்ரஹாரம் மற்றும் மேலத்தெருவு ஆகிய இடங்களுக்கு செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூர மண் சாலை மேம்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாக உள்ளது.
மழை பெய்யும் போது சாலையில் மழைநீர் தேங்கி சாலை குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. இதனால் மழைக்காலங்களில் அச்சாலையை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்த தெருக்களில் சுமார் 150குடும்பத்தினர்கள் வசித்துவருகின்றனர். ஆனால் அங்கு செல்லும் சாலை இதுவரை மன்சாலையாகவே இருந்து வருகிறது.
இதனால் விவசாயிகள் எருக்கூர் கிராமத்திலிருந்து நெல் மூட்டைகள், பஞ்சு மூட்டைகள் மற்றும் வைக்கோல் உள்ளிட்டவைகளை விற்பனைக்காக வெளியே எடுத்துச் செல்லும் போது சிரமம் அடைந்து வருகின்றனர்.
மழை பெய்து விட்டால் இந்த சாலையில் நடந்து செல்ல கூட முடியாத நிலை ஏற்படுகிறது. அவசர காலத்தில் ஆட்டோ மற்றும் 108 ஆம்புலன்ஸ் கூட வந்து செல்வதில் சிரமம் உள்ளது.
எனவே இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் நலன் கருதி மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- புதிய மின்சார இணைப்பு தொடர்பு கிடைக்காமல் பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கஷ்டப்படுகின்றனர்.
- இரவில் விளக்கு வெளிச்சம் இல்லாமல் சிரமப்படுவதோடு போர்வெல் அமைத்தும் குடிநீருக்காக கஷ்டபடுகின்றனர் .
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் சார்பில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் தஞ்சை கோர்ட் சாலையில் உள்ள மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த முத்துக்குமரன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் தாலுகா நீலகிரி ஊராட்சியில் உள்ள கலைஞர் நகரில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
ஏராளமானோர் பல மாதங்களாக வீடுகள் மற்றும் கடைகளுக்கு புதிதாக மின்சார இணைப்பு வேண்டி விண்ணப்பித்து மனு அளித்து காத்திருக்கின்றனர்.
புதிய மின்சார இணைப்பு தொடர்பு கிடைக்காமல் பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயில்வதற்கு இரவில் விளக்கு வெளிச்சம் இல்லாமல் சிரமப்படுவதோடு போர்வெல் அமைத்தும் குடிநீருக்காக கஷ்டபடுகின்றனர் .
எனவே உடனடியாக மின் இணைப்பு வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தூர்வாரும் பணிக்காக அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கியது.
- வாய்கால்கள் தூர்வாரப்படாததால் மழை காலங்களில் தண்ணீர வடிவது சிரமமாக இருந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம்,வேதாரண்யம் நகராட்சியில் ராஜாளி காடு, குமரன்காடு காந்திநகர் மாரியம்மன் கோவில்தெரு, குட்டாச்சிகாடு உள்ளிட்ட 21 வார்டுகளிலும் வாய்கால்கள் தூர்வாரப்படாததால் மழை காலங்களில் தண்ணீர் வடிவது மிகுந்த சிரமாக இருந்தது.
வாய்க்கால்கள் தூர்வாரும் பணிக்காக அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கியது.
நகராட்சி பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணியை வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம், ஓவர்சியர் குமரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
தூர்வரும் பணி இன்னும் மூன்று வாரத்தில் முடிவடையும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்தார்.
- புகைமூட்டம் ஏற்படுவதால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலதுறை எஸ்பிஜி மிஷின் தெரு அருகில் குப்பை கிடங்கு உள்ளது. பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் தெருக்களில் உள்ள குப்பைகளை சேகரித்து இங்கு கொட்டப்படுகிறது.
இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு புகைமூட்டம் ஏற்படுவதால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் திடீரென தஞ்சை- கும்பகோணம் சாலையில் திருப்பாலைத்துறை மெயின் ரோட்டில் குப்பை கிடங்கை அகற்ற கோரி கோஷங்கள் எழுப்பி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பேரூராட்சி உறுப்பினர்கள் கீர்த்திவாசன், பிரேம்நாத், பைரன், பாலகிருஷ்ணன் உட்பட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், செயல் அலுவலர் குமரேசன், இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவ ர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப ட்டவர்கள் கலைந்து சென்றனர்.
- போக்குவரத்து நெரிவல் காரணமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
- பாதாள சாக்கடை கழிவு நீர் வந்து கொண்டிருப்பதால் அப்குதியில் யாரும் வசிக்க முடியாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஆணையர் மஞ்சுளா முன்னிலை வகித்தனர். உதவி அலுவலர் முருகன் வரவேற்றார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது,
கிருஷ்ணன் தே.மு.தி.க :-
செம்பனார்கோவில் கடைவீதி பகுதிகளில் பள்ளிகள் விடும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அதனால் பள்ளிகள் அருகில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் டாக்டர், செவிலியர்கள் யாரும் இருப்பதில்லை.
சத்தியன் வாய்க்காலில் மயிலாடுதுறை பாதாள சாக்கடை கழிவு நீர் வந்து கொண்டிருப்பதால் அப்குதியில் யாரும் வசிக்க முடியாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.
மழை பெய்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் அபாயம் வருமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் சுகாதார பணியை மேற்கொள்ள வேண்டும்.
சுமதி:-
பிள்ளைபெ ருமாள் நல்லூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும்.
அங்கன்வாடி கட்டடம் கட்ட வேண்டும்.
சங்கரபாணி:-
சேமங்க லம், ஆலவேளி, கருவாழக்கரை, கஞ்சா நகரம் பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் பயிர்கள் சேதமடைந்து வருகிறது.
பூவேந்திரன் வடிகால் வாய்க்கால் தூர்வார வேண்டும், மருதூர் நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்.
சுப்ரமணியன்:-
கஞ்சாநகரம் வாய்க்காலி ல் கல்வெட்டு சேதமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும், கன்னிகோயில் தெற்குதெரு சாலை சீரமைக்க வேண்டும்.
அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்.
மைதிலிமகேந்திரன் அ.தி.மு.க. :-
மேமாத்தூர் கிராமத்தில் காசான்தட்டை சாலை, மேலத்தெரு, வள்ளுவப்புள்ளி சாலை உட்பட பல சாலைகள் சேதமடைந்துள்ளது.
அவற்றை சீரமைக்க வேண்டும். ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பொதுநிதியில் இருந்து வேலை கொடுக்க வேண்டும்.
லட்சுமிபதி:-
திருவிளை யாட்டம் தாமரைகுளம், கலசம்பாடி கிராம சாலைகள், குமாரமங்கலம் சாலை சீரமைக்க வேண்டும்.
எழில்தாஸ்:-
டி.மணல்மேடு கிராமத்தில் காலனித்தெரு பகுதியில் உள்ள குளத்தில் மூன்று புறமும் தடுப்புச்சுவர் அமைக்கப்படடுள்ளது.
ஆனால் வீடுகள் இருக்கும் பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்படாததால் வீடுகள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
தலைவர் நந்தினிஸ்ரீதர்:-
ஆக்கூர், செம்பனார்கோவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒன்றியத்தில் சேதமடைந்த சாலைகள் குறித்து தெரிவித்துள்ளீர்கள் இது குறித்து பொறியாளர்கள் கொண்டு ஆய்வு செய்து புதிய சாலைகள் அமைக்கப்படும் என்றார்.
கொள்ளிடம் கூட்டு குடிநீர் தொழில்நுட்ப அலுவலர் பன்னீர்செல்வம், சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் துணைத் தலைவர் மைனர் பாஸ்கரன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்