search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "differently abled"

    • மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • கூடுதல் கலெக்டர் சரவணன் தலைமை தாங்கினார்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உசிலம்பட்டியில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. கூடுதல் கலெக்டர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மகளிர் திட்ட நல அலுவலர் காளிதாஸ் முன்னிலை வகித்தனர்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அய்யப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார். உசிலம்பட்டி கோட்டாட்சியர் சங்கரலிங்கம், வட்டாட்சியர் கருப்பையா, யூனியன் தலைவர் ரஞ்சனி, நகர்மன்றத் தலைவர் சகுந்தலா, ஆணையாளர்கள் பாண்டி, கண்ணன், நகராட்சி ஆணையாளர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது
    • பாளை முருகன் குறிச்சியில் உள்ள பழைய செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக கனிணி பயிற்சி, கைவினைப்பொருட்கள் தயார் செய்யும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் பாளை முருகன் குறிச்சியில் உள்ள பழைய செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக கனிணி பயிற்சி, கைவினைப்பொருட்கள் தயார் செய்யும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் தசைகுறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு நடைபயிற்சி அளிக்கப்படுகிறது.

    சிறப்பு பூங்கா

    இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்காக ரூ.7.6 லட்சம் மதிப்பில் பழைய செஞ்சிலுவை சங்க வளாகத்தில் சிறப்பு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த பூங்காவில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் விளையாடும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த பூங்காவை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், புஷ்பலதா கல்வி குழும தலைவர் புஷ்பலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களளை கலெக்டர் வழங்கினார்.
    • அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து மாற்றுத்திற னாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் மேகநா தரெட்டி தலைமை தாங்கினார்.

    விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். அவர்களின் குறைகளை தீர்ப்பதற்கும்,

    அவர்களுக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் வகையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    இதில், வேலைவாய்ப்பு, சுயதொழில் கடனுதவி, வீட்டுமனை பட்டா, வீடு, உதவித்தொகை, இருசக்கர வாகனம், 3 சக்கர வண்டி, குடும்ப அட்டை, திறன் பயிற்சி, அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உபகரணங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சுமார் 500 மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களுக்கு தீர்வுகாணுமாறு, கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மனு அளித்த கால்களை இழந்த 2 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்ச ர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், நவீன செயற்கை கால்களையும், ஊன்றுகோல் வேண்டி மனு அளித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு நவீன ஊன்றுகோல் மற்றும் மூக்கு கண்ணாடியையும் கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இதில் திட்ட இயக்குநர்கள் திலகவதி, தெய்வேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) ஜெயராணி, வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் முருகவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர்நாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சந்திரசேகர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஷாலினி மற்றும் பல ர் கலந்து கொண்டனர்.

    • விளிம்பு நிலையிலுள்ள மக்களின் உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மாநில உணவு ஆணைய தலைவர் வாசுகி தலைமையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கான அங்கீகார படிவங்கள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்

    நெல்லை:

    விளிம்பு நிலையிலுள்ள மக்களின் உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மாநில உணவு ஆணைய தலைவர் வாசுகி தலைமையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

    இந்த ஆய்வு கூட்டத்தில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட வழங்கல் அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர்கள், கூட்டுறவு துணை பதிவாளர்கள், சமூகநலத்துறை அலுவலர்கள், சத்துணவு திட்ட அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சமூகத்தில் பின் தங்கிய நிலையிலுள்ள திருநங்கைகள், கணவரால் கைவிடப்பட்டோர், கணவரை இழந்தவர்கள், நரிக்குறவர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடும்ப அட்டைகள் வழங்கி அவர்களது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

    நெல்லை மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர், திருநங்கைகள், கணவரால் கைவிடப்பட்டோர், கணவரை இழந்தவர்கள், நரிக்குறவர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடும்ப அட்டைகள் வழங்கும் வழிமுறைகள் குறித்து அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் விளம்பரப் பலகைகள் வைக்க மாநில உணவு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நியாய விலைக் கடைகளுக்கு நேரில் வர இயலாத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கான அங்கீகார படிவங்கள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, மாநில உணவு ஆணைய உறுப்பினர் கணேசன், இணை பதிவாளர் அழகிரி, மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிக்கண்ணு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான கல்வி மற்றும் சேர்க்கை நடைபெறும்.
    • தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறனை மேம்படுத்த பயிற்சி வழங்கப்படும்.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வட்டாரஅலுவலகத்தில் இன்று முதல் 24-9-2022 (சனிக்கிழமை) வரை மாற்றுத்திறனாளிக்கான அனைத்து நலத்திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    இதில் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல்.மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த(UDID CARD) அடையாள அட்டை ஆன்லைனில் பதிவு செய்தல், 10வயத்திற்கு மேற்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு நலவாரியத்தில் பதிவு செய்தல், இளம் மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான கல்வி மற்றும் சேர்க்கை நடைபெறும்.

    தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறனை மேம்படுத்த பயிற்சி வழங்கப்படும்.வருவாய்துறை மற்றும் மாற்றுத்திறனாளிக்கான மாதந்திர உதவி தொகை , மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் ,ஆவின் பாலகம் அமைத்தல் , மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு பள்ளிகள் மற்றும் இல்லங்கள், மாற்றுத்திறனாளிக்கான நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அந்தந்த வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நலஅலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • விருதுநகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வர நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் தலைமை தாங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகரில் புதுவசந்தம் மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு, ராம்கோ சமூக சேவைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு சங்கம், கீதாபவன் அறக்கட்டளை இணைந்து மாற்றுத்திறனா ளிகளுக்கான சுயம்வரம் விழாவை நடத்தியது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    மாற்றுத்திறனாளிகளின் திருமண வாழ்க்கையை கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளிக ளுக்கான சுயம்வரம் விழா தனியார் கூட்டமைப்பு சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகள் சார்பில் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க நல்ல வாய்ப்பாக இந்த விழா அமைந்துள்ளது.

    இதில் தேர்வு செய்யப்படுவோர், சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, திருமணம் நடத்தி வைக்கப்படும்.

    மேலும், மாற்றுத்திற னாளிகள் அனைத்து துறைகளிலும் மற்றவர்களுக்கு இணையாக சாதனை புரிந்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம் மூலமும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி, இந்தியா விலேயே முதன் முறையாக தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக உதயம் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் பிறர் உதவியை எதிர்பார்க்காமல், சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் தாங்களே எளிதாக பயன்படுத்தக் கூடிய வகையில், குறிப்பாக மாற்றுத்திறனாளி பெண்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டும், சிரமத்தினை தவிர்க்கும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு கட்டப்ப ட்ட 100 நவீன கழிப்பறைகள் பயனாளிகளின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனா ளிகளுக்கு தேவையான உதவிகளை செய்யும் பட்சத்தில் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும். மேலும், அனைவரும் மாற்றுத்திறனாளிகளை மற்றவர் என கருதாமல் தங்களில் ஒருவராக பழக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிர்வாக தலைவர் ராமலிங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு சங்க மாநில தலைவர் சிம்மசந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, மாவட்ட நபார்டு வங்கி துணை பொது மேலாளர் ராஜராஜேசுவரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.1கோடி மதிப்பிலான கடனுதவியை இ-சேவை, வணிக வள மையம் தொடக்கங்கியது.
    • ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சின்னஇலந்தைகுளம் கிராமத்தில் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுயஉதவி கூட்டமைப்பு குழு சார்பில் இ-சேவை மையம், வட்டார வணிக வள மையம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து மகளிர் சுய உதவி குழு சார்பில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் உணவு தானிய பொருட்கள் கண்காட்சி அமைக்கப்பட்டுசிறந்த சிறுதானிய உணவிற்கான பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த மையத்தின் மூலம் 8-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுவிற்கு மாவட்ட திட்ட இயக்குனர் காளிதாசன் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு மகளிர் குழு தலைவர் ஹெலன்கீதா தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் வெள்ளைபாண்டி, வட்டார மேலாளர் மகாலெட்சுமி, யூனியன் சேர்மன் பஞ்சு, மகளிர் குழு செயலாளர் மணிமேகலை, பொருளாளர் சகாயகில்டா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர்.

    இதேபோன்று அலங்கா நல்லூர் யூனியன் அலுவ லகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் தொழில் முனைவோர்கள் வாழ்வாதார மேம்பாடு அடையும் பொருட்டு, வட்டார வணிக வள மையம் தொடங்கப்பட்டு இந்த மையத்தின் மூலம் 100 தொழில் முனைவோர்களுக்கு மாவட்ட திட்ட இயக்குனர் காளிதாசன் ரூ.25 லட்சத்திற்கான கடன் தொகையை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர்கள் கதிரவன், பேரூராட்சி பிரேமா, ஊராட்சி மன்ற தலைவர் முருகன், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் முத்துசெல்வி, ராதிகா, கலாராணி, உமாதேவி, தேவி மற்றும் வட்டார இயக்க மேலாண்மை பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    ×