search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devadanapatti drug abducted"

    தேவதானப்பட்டி அருகே காரில் ரூ.3 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை கடத்தி வந்த கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் காட்ரோடு பிரிவில் தனியார் பள்ளி அருகே நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது மின்னல் வேகத்தில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரனான தகவலை தெரிவித்தனர். இதனையடுத்து காரில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    போலீசார் அவர்களிடம் மேலும் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலையில் இருந்து கம்பத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிய வந்தது. காரில் வந்த விருதுநகர் மாவட்டம் அள்ளம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (வயது35), அஜய் (22) ஆகிய2 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    இவர்கள் இதேபோல் பல ஊர்களுக்கு போதை பொருட்களை சப்ளை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களையும் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட அஜய் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×