search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Decoration"

    • சீதளாதேவி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
    • சீதளாதேவி மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் வீதிஉலா நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, ஆக்கூரில் பழமை வாய்ந்த சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் உள்ளது. இவ்வாலயத்தில் திருமண வரம் வேண்டுபவர்களுக்கு திருமணத்தடை நீக்கியும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் தந்தும் பக்தர்கள் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி தருபவளாக ஸ்ரீதளா தேவி மாரியம்மன் விளங்குவதால் ஆக்கூர் சுற்றுவட்டாரப் பகுதியின் பல்வேறு கிராமத்தினர் தங்கள் குல தெய்வமாக பாவித்து வணங்கி வருகின்றனர்.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆடிப்பூர வளையல் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சீதளாதேவி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல வண்ண நிறத்தில் பல்லாயி ரக்கணக்கான வளைய ல்கள் அணிவித்து ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. வழிநெடுகம் பக்தர்கள்தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    • பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து எல்லையம்மனுக்கு 50,001 வளையல்களினால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது .

    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு எல்லையம்மனுக்கு பால், தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    வளையல் அலங்காரம்

    அதனைத் தொடர்ந்து எல்லையம்மனுக்கு 50,001 வளையல்களினால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எல்லை யம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு எல்லையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதமும்,11 வகையான அன்னதானம், வழங்கப்பட்டது.

    இதே போல் கோப்பணம்பாளையம் அங்காளம்மன், அரசாயி அம்மன், மாசாணி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் நன்செய் இடையாறு மகா மாரியம்மன், அழகு நாச்சி யம்மன், வேலூர் மகா மாரியம்மன், பேட்டை புது மாரியம்மன், பகவதி யம்மன், பாண்ட மங்கலம் மாரி யம்மன், பகவதி யம்மன், கொந்தளம் மாரி யம்மன், சேளூர் மாரி யம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பா ளையம் பகவதி அம்மன், ஆனங்கூர்

    மாரியம்மன், செல்லாண்டி யம்மன் , பகவதி அம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன்.

    பகவதி அம்மன் மற்றும்

    பரமத்தி அங்காளம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்க ளில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு வளையல் அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகு திகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • நந்தி பகவானுக்கு பால், தயிர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனடியாக சுவேதாரனேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது இக்கோயிலில் சிவபெருமானின் மூன்றாவது கண்ணில் இருந்து விழுந்த தீப்பொறியிலிருந்து உருவான முக்குளங்கள் உள்ளன இங்கு சிவபெருமான் அகோர மூர்த்தி சுவாமியாக அருள்பாலிக்கிறார் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையாக இக்கோயில் விளங்குகிறது பிரசித்தி பெற்ற இக்கோயிலில் உள்ள நந்தி பகவான் உடலில் காயங்கள் ஏற்பட்டதற்கான வடுக்கள் காணப்படுகின்றன முன்பு ஒரு காலத்தில் மருத்துவா சூரன் என்ற அசுரன் தனது தவ வலிமையால் சிவபெருமானிடம் காட்சி பெற்று சூலாயிரத்தை பெற்றார் அந்த சூலாயுதத்தால் தேவர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினான். அப்போது நந்தி பகவான் சென்று மருத்துவர சூரனிடம் முறையிட்ட போது மருத்துவா சூரன் சூலாயத்தால் நந்தி பகவானையும் தாக்கினார் அந்த சூலாயத்தால் தாக்கப்பட்ட வடுக்கள் தற்போது இக்கோவிலில் உள்ள நந்தி சிலையின் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது பிரசித்தி பெற்ற இந்த நந்தி பகவானுக்கு சனி பிரதோஷத்தை ஒட்டி மஞ்சள் திரவியப்பொடி பால் தயிர் இளநீர் பன்னீர் பஞ்சாமிர்தம் சந்தனம் விபூதி முதலான நறுமண வாசனை திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து சாமுண்டி யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
    • வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவாச்சாரியர் ராஜா, அருள்வாக்கு சித்தர் கலிதீர்த்தான் மற்றும் சிவச்சாரியார்கள் அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து சாமுண்டி யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

    பின், புனிதநீர் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

    தொடர்ந்து, வண்ண மலர்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

    • 501 தட்டுகளில் மீன்வளம் பெருக வேண்டி சீர்வரிசையாக எடுத்து வந்தனர்.
    • பழவகைகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை வனதுர்க்கை அம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதனை தொடர்ந்து, நேற்று இரவு அஸ்த்ரா யாகம் நடைபெற்று.

    பின், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஆறுகாட்டுத்துறை கிராமத்தில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மனுக்கு மஞ்சள், தாலி கயிறு, குங்குமம், வளையல், 50-க்கும் மேற்பட்ட பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய 501 தட்டுகளில் மீன்வளம் பெருக வேண்டி சீர்வரிசை எடுத்து வந்தனர்.

    பின், பழவகைகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, தேன், திரவியம் போன்றவற்றால் அபிஷேகம் நடைபெற்று, வண்ணமலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
    • இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்று, முளைப்பாரி எடுத்து வரப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே மேலக்காவிரி படைவெட்டி மாரியம்மன் கோவிலில் 68-ம் ஆண்டு கோடாபிஷேக அலங்கார உற்சவம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் காவிரியில் இருந்து பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர், அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து, இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்று, முளைப்பாரி எடுத்து வரப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

    • இந்தியாவின் பன்முகத்தன்மை, கலாசாரம், கட்டிடக்கலை, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என அனைத்து அம்சங்களுடன் அழகாக கம்பீரமாக காட்சியளிக்கிறது.
    • பாராளுமன்ற அறைகளுக்கு வெளியே உள்ள உட்புற பகுதிகள் நட்சத்திர ஓட்டல் லாபியை போல காணப்படுகிறது.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடம் ரூ.1250 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். பாராளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கை அருகே கண்ணாடி பேழைக்குள் சோழர் கால செங்கோலையும் நிறுவினார்.

    64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடம் இந்தியாவின் பன்முகத்தன்மை, கலாசாரம், கட்டிடக்கலை, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என அனைத்து அம்சங்களுடன் அழகாக கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் உள் அலங்காரத்துக்கு மட்டும் 200 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஓவியங்கள், சுவர் பேனல்கள், கல் சிற்பங்கள் மற்றும் உலோக சுவரோவியங்கள் உள்பட 5 ஆயிரம் வகை கலைப்பொருட்கள் பாராளுமன்றத்தை அலங்கரிக்கிறது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள அரசியலமைப்பு மண்டபத்தில் இந்தியாவின் ஜனநாயக வளர்ச்சி கண்காட்சிகள் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும் பூமியின் சுழற்சியை விளக்கும் பூகோள பந்தும் உள்ளது. இதன் முக்கோண கூரையில் இருந்து தொங்கும் பூகோள பந்து 'பிரபஞ்சத்துடன் இந்தியா' என்ற கருத்தை குறிக்கிறது. இந்த பூகோள பந்துக்கு பிரெஞ்சு இயற்பியலாளர் லியோன் போக்கால்ட் என்பவரின் பெயரிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் அட்சரேகையில் இந்த பூகோள பந்து ஒரு சுழற்சியை முடிக்க 49 மணி 59 நிமிடம் 18 வினாடிகள் ஆகிறது.

    இதன் மேற்கூரையில் இடம்பெற்றுள்ள 6 தனித்தனி பேனல்கள் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி புதுடெல்லியில் இருந்த இரவு வானத்தின் தோற்றம் மற்றும் வானத்தின் அமைப்பு ஆகியவற்றின் கலை விளக்கத்தை சித்தரிக்கிறது.

    மக்களவை மற்றும் மாநிலங்களவையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஓட்டளிப்பு முறை, நன்கு வடிவமைக்கப்பட்ட ஒலியியல், அதிநவீன ஆடியோ விஷுவல் இடம்பெற்றுள்ளன.

    மகாத்மா காந்தி, சாணக்யா, கார்கி, சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் பித்தளை திருவுருவ சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோனார்க்கில் உள்ள சூரியன் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தேர் சக்கரமும் உள்ளது.

    பொது நுழைவு வாயில்கள் 3 கேலரிகளுக்கு செல்லும் வகையில் உள்ளன. சங்கீத் கேலரி இந்தியாவின் நடனம், பாடல், மற்றும் இசை மரபுகளை வெளிப்படுத்துகிறது. ஸ்தப்தியா கேலரி இந்தியாவின் கட்டிடக்கலை பாரம்பரியத்தை உணர்த்துகிறது. ஷில்ப் கேலரி பல்வேறு மாநிலங்களின் தனித்துவமான கைவினை மரபுகளை காட்சிப்படுத்துகிறது.

    சங்கீத் கேலரிக்கு உஸ்தாத் அம்ஜத் அலிகான், பண்டிட் ஹரிபிரசாத், பிரசாத் சவுராசியா, உஸ்தாத் பிஸ்மில்லா கான், பண்டிட் ரவிசங்கர் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தங்களது இசைக்கருவிகளை வழங்கியுள்ளனர்.

    இங்கு இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கலைப்பொருட்களின் அருகிலும் கியூஆர் கோடு பொறிக்கப்பட்டுள்ளது. இதை செல்போன் மூலம் ஸ்கேன் செய்தால் அந்த கலைப்பொருட்கள் குறித்த தகவல்கலை பார்வையாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.

    இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரத்தை போற்றும் விதமாக புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகளில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பொருட்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டு உள்ளன.

    மக்களவை அறையின் உள்புறம் தேசிய பறவையான மயில் வடிவத்தில் காணப்படுகிறது. மாநிலங்களவை தேசிய மலரான தாமரை வடிவில் காணப்படுகிறது.

    பாராளுமன்றத்தில் உள்ள ஒரு சுவரோவியத்தில் பண்டைய இந்தியாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதில் கடந்த காலத்தின் முக்கிய ராஜ்ஜியங்கள் மற்றும் நகரங்கள் உள்ளன. இன்றைய பாகிஸ்தான் வரை இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வு மற்றும் யுனெஸ்கோவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களும் சுவரோவியமாக உள்ளன.

    பாராளுமன்ற அறைகளுக்கு வெளியே உள்ள உட்புற பகுதிகள் நட்சத்திர ஓட்டல் லாபியை போல காணப்படுகிறது. மத்திய முற்றம் திறந்த வெளியாக காணப்படுகிறது. அதன் மையத்தில் ஒரு ஆலமரம் உள்ளது. அதை சுற்றி எம்.பி.க்களின் ஓய்வறைகள் மற்றும் நூலகம் உள்ளது.

    பாராளுமன்ற மக்களவையில் 158 கம்பளங்களும், மாநிலங்களவையில் 156 கம்பளங்களும் விரிக்கப்பட்டுள்ளன. இரு அவைகளையும் சேர்த்து 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவை இந்த கம்பளங்கள் அலங்கரிக்கின்றன. இந்த கம்பளங்களை உத்தரபிரதேச மாநிலம் படோஹி மற்றும் மிர்சாபூர் ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த 900 கைவினைஞர்கள் சுமார் 18 மாதங்கள் உழைத்து உருவாக்கியுள்ளனர். இந்த கம்பளங்கள் ஒரு சதுர அங்குலத்துக்கு 120 முடிச்சுகள் போடப்பட்டுள்ளன. மொத்தம் 60 கோடி முடிச்சுகள் போடப்பட்டுள்ளன.

    மக்களவையில் விரிக்கப்பட்டுள்ள கம்பளங்கள் தேசிய பறவையான மயில் வடிவமைப்பிலும், மாநிலங்களைவையில் விரிக்கப்பட்டுள்ள கம்பளங்கள் தேசிய மலரான தாமரையை போன்றும் உள்ளன. இந்த கம்பளங்கள் மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டு 20 முதல் 25 பிம்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவை இந்தியாவின் ஒப்பற்ற கலைத்திறனுக்கு சான்றாக விளங்குகின்றன.

    • மேட்டூர் அடுத்த மேச்சேரியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • சேலம், ஈரோடு, தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வார்கள்.

    மேச்சேரி:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    இங்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் சேலம், ஈரோடு, தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில், வைகாசி மாத அமாவாசை தினமான இன்று, அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    அமாவாசையை முன்னிட்டு பத்ரகாளி அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்ட ப்பட்டது.

    திரளான பக்தர்கள் வந்திருந்து, சாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்த ர்களுக்கு அடிப்படை வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    • பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் பறவை காவடிகள் எடுத்தும், மாவிளக்கு போட்டு வழிபட்டனர்.
    • முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    திருவோணம்:

    திருவோணத்தில் முத்துமாரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

    இதில் 9 ஆம் நாள் திருவிழாவாக முத்துமாரி அம்மனுக்கு இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் பால்குடம் காவடிகள் மற்றும் பறவை காவடிகள் எடுத்தும் மாவிளக்கு போட்டு வழிபட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.

    மேலும் முத்துமாரியம்மனுக்கு சிறப்பான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று 10ஆம் நாள் திருவிழாவாக தேர் திருவிழா நடைபெற்றது.

    • அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார்.
    • 4 வீதிகளை சுற்றுவந்து தேர் மீண்டும் நிலையை அடைந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தாலுகா, நீடூர் சோமநாதர் சுவாமி கோயிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலாலசுந்தரி பத்ரகாளி அம்பாள் கோயிலில் சித்திரை மாத தேர் திருவிழா நடைபெற்றது.

    தொடர்ந்து 27-ஆம் தேதி காப்பு கட்டுதல், மே 2-ஆம் தேதி பால்குடம் ஆகிய உற்சவங்கள் நடைபெற்றது.

    உற்சவத்தின் சிகர விழாவான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தேரில் எழுந்தருளச் செய்யப்ப ட்டார்.

    பின்னர், மகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டு ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர் தேரை இழுத்தனர்.

    முஸ்லிம், கிரிஸ்டன், இந்து வசிக்கும் கோயிலின் நான்கு வீதிகளைச் சுற்றுவந்து மீண்டும் நிலையை அடைந்தது.

    வழியெங்கும் பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு அம்பாளுக்கு மாவிளக்கு தீபமிட்டு வழிபாடு நடத்தினர்.

    மேலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் வீட்டின் முன்பு அம்பாளுக்கு மலர் சாற்றி, தீபாராதனை எடுத்து வழிபட்டனர்.

    இது மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக விளங்கியது.

    இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இவ்விழா நிகழ்ச்சி ஏற்பாடு களை நீடூர் கிராமவாசிகள் செய்திருந்தனர்

    • பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் பகுதி கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது.

    இதனையொட்டி நீடாமங்கலம் மேலராஜவீதி சித்தி விநாயகர் கோவிலில் உள்ள சித்திவிநாயகர், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் உள்ள கலங்காமற்காத்த விநாயகர், ஆக்ஞாகணபதி, நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோவிலில் உள்ள சதுர்வேத விநாயகர், சந்தானராமர் கோவிலில் உள்ள தும்பிக்கையாழ்வார், காசிவிசுவநாதர் கோவிலில் உள்ள விநாயகர், நீடாமங்கலம் லெட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில் உள்ள விநாயகர், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் உள்ள விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×