search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dead ராஜஸ்தான்"

    ராஜஸ்தானில் பரவி வரும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. #SwineFlu
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. பார்மர், ஜெய்சால்மர், ஜெய்ப்பூர், உதய்பூர் மற்றும் சிட்டோர்கர் ஆகிய பகுதிகளில் நேற்று 5 பேர் பலியாகினர். இதன்மூலம் இந்த ஆண்டின் துவக்கம் முதல் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 112 பேர் உயிரிழந்துள்ளனர்.  

    இதுதவிர நேற்று மட்டும் 79 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஜெய்பூரில் 36 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. பார்மரில் 9 பேர், ஜுன்ஜுனுவில் 4 பேர்,  டவுசா, பிகானர், கங்காநகர் மற்றும் உதய்பூரில் தலா 3 பேர், சிகார், ஜோத்பூர், ஜெய்சால்மர், கோட்டா, நாகவுர், அஜ்மீர் மற்றும் ராஜ்சமந்த் பகுதிகளில் 14 பேர், பில்வாரா, பரான், பரத்பூர் மற்றும் அல்வர் பகுதிகளில் 4 பேரும் பன்றிக்காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஹச்1என்1 வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. #SwineFlu  
    ×