search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dead body"

    • வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மீனாட்சி கணவர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு ஆற்றின் கரையில் ஒரு ஆண் உடல் மிதப்பதாக மீனாட்சிக்கு தகவல் கிடைத்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர், நாயக்கர் வீதியை சேர்ந்தவர் சின்னகத்தி(56). இவரது மனைவி மீனாட்சி (50). இந்நிலையில் சின்ன கத்தி கடந்த 2 வருடமாக கால் வலியால் அவதி அடைந்து வந்துள்ளார்.

    இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று குணமாகவில்லை என கூறப்படுகிறது.

    கால் வலி காரணமாக தினமும் குடித்துவிட்டு வந்து உயிருடன் இருப்பதை விட இறப்பதே மேல் என்று கூறி வந்துள்ளார். அவரது மனைவி ஆறுதல் கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 13-ந் தேதி மீனாட்சி கணவரிடம் சொல்லிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சின்னகத்தி மட்டும் இருந்தார்.

    மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மீனாட்சி கணவர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கணவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் நேற்று தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு ஆற்றின் கரையில் ஒரு ஆண் உடல் மிதப்பதாக மீனாட்சிக்கு தகவல் கிடைத்தது. அவர் அங்கு சென்று பார்த்தபோது நீரில் மூழ்கி இறந்தது தனது கணவர் சின்ன கத்தி என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாளவாடி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சின்னகத்தி ஆற்றில் குளித்த போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரசு மருத்துவக்கல்லூரி டீன் வழக்கு விசாரணைக்காக மதுரை ஐகோர்ட்டிற்கு சென்று விட்டதால், எச்.ஐ.வி. பாதிப்பால் வி‌ஷம் குடித்து இறந்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. #HIVBlood
    மதுரை:

    எச்.ஐ.வி. பாதிப்பால் வி‌ஷம் குடித்து இறந்த வாலிபரின் உடல் ஐகோர்ட்டு உத்தரவுப்படி இன்று வெளிமாவட்ட டாக்டர்களால் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் வீடியோவில் அதனை பதிவு செய்யும் பணிக்கான ஏற்பாடுகள் முடிவடையாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர் தானமாக வழங்கிய ரத்தம், விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டது. இதனால் அந்த பெண் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளானார்.

    இதனால் மன வேதனை அடைந்த வாலிபர், எலி மருந்து (வி‌ஷம்) குடித்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 30-ந்தேதி பரிதாபமாக இறந்தார்.

    அவரது சாவில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டிய உறவினர்கள், பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும் வெளிமாவட்ட அரசு டாக்டர்களை கொண்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று வாலிபரின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை மதுரை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் ஏற்க மறுத்ததால் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருநெல்வேலி, தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் ஏதாவது ஒன்றின் 2 மருத்துவ நிபுணர்களை கொண்டு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டனர். மேலும் அதனை வீடியோவில் பதிவு செய்யவும் உத்தரவிட்டனர்.

    இதனை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தேனி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த தடயவியல் துறை பேராசிரியர்கள் அருண்குமார், சந்திரசேகர் ஆகியோர் மதுரை வந்தனர். அவர்களுடன் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஜூலியானா, சதாசிவம் ஆகியோரும் பிரேத பரிசோதனை செய்ய தயாரானார்கள்.

    இந்த சூழலில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீன், வழக்கு விசாரணைக்காக மதுரை ஐகோர்ட்டிற்கு சென்று விட்டார். இதன் காரணமாகவும் வீடியோ ஒளிப்பதிவுக்கான பணிகள் முடிவடையாததாலும் பிரேத பரிசோதனை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த சிக்கல் காரணமாக எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளான வாலிபரின் உடல் இன்று பிற்பகலில் பிரேத பரிசோதனை செய்யப்படக்கூடும் என மருத்துவ வட்டாரம் தெரிவித்தது. #HIVBlood

    கும்மிடிபூண்டி அருகே மாயமான பள்ளி மாணவன் எண்ணூர் கடற்கரையில் பிணமாக கிடந்தான். நண்பர்களுடன் குளிக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கும்மிடிபூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த பண்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த ரவி என்பவரின் மகன் செல்வம் என்கிற சாமுவேல்(19). இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே. அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 13-ந்தேதி, பள்ளியில் நடைபெறும் தனி வகுப்பிற்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டுச்சென்ற செல்வம் வீடு திரும்பவில்லை. அன்றைய தினம் அவர் பள்ளிக்கு செல்லவில்லை.

    அவரது நண்பர்களின் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித பலனும் இல்லை. மாணவர் செல்வம் மாயமானது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று எண்ணூர் கடற்பகுதியில் சுமார் 19 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் பிணம் கரை ஒதுங்கியது. எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கும்மிடிப்பூண்டி அருகே காணாமல் போன பள்ளி மாணவர் செல்வம் என்பது தெரியவந்தது.

    கடந்த 13-ந்தேதி நண்பர்களுடன் சென்னை விம்கோ நகரையொட்டி உள்ள கடற்கரைப் பகுதிக்கு சென்று செல்வம் குளித்து உள்ளார். அப்போது கடல் அலையில் சிக்கி மூழ்கி இருக்கிறார். ஆனால் அவரது நண்பர்கள், உறவினர்களிடம் எந்த தகவலும் தெரிவிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ஸ்ரீமுஷ்ணம் அருகே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது பேரூர்மதுராகுப்பம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சேற்றில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து ஏராளமானோர் அங்கு திரண்டனர். இது குறித்து அவர்கள் சோழத்தரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர்.

    அதில் அந்த வாலிபரின் முதுகு மற்றும் உடலின் சில இடங்களில் காயங்கள் இருந்தன. அந்த வாலிபர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து வாலிபர் அணிந்திருந்த உடைகள் மற்றும் வேறு ஏதாவது பொருள் கிடக்கிறதா? என்று சம்பவ இடத்தை சுற்றிலும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சம்பவ இடத்தின் அருகே சட்டை மற்றும் கைலி ஒன்று கிடந்ததை பார்த்தனர். சட்டை முழுவதும் சேறும் சகதியுமாக இருந்தது. கைலியின் அருகே கிடந்த ஒரு பேப்பரில் மொபைல் நம்பர் எழுதி இருந்தது.

    ஆனால் அதில் கடைசி 2 இலக்க நம்பர் இல்லை. இதனால் அந்த நம்பரை தொடர்பு கொண்டு பேச முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அந்த நம்பரை தொலை தொடர்பு நிறுவனத்திடம் கொடுத்து ஏதாவது விவரம் கிடைக்குமா என்று போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

    வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே சம்பவ இடத்தை சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டார்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வாலிபரை மர்ம மனிதர்கள் அடித்து கொலை செய்து உடலை சேற்றில் வீசி சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வாலிபரை கொலை செய்தது யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சந்தேகபடும்படியாக கிராமத்தில் யாராவது நடமாடினார்களா? என்று பொதுமக்களிடம் போலீசார் விசாரித்தனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே சுடுகாட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் ஊராட்சி தபால்மேடு பகுதியில் சுடுகாடு உள்ளது. இதன் அருகே தகரத்தால் ஆன கொட்டகையில் சுமார் 55 வயது மதிக்கதக்க ஆண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

    பிணமாக கிடந்தவர் அப்பகுதியை சேர்ந்தவர் இல்லை என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மர்ம நபர்கள் அவரை கடத்தி கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    அவரை பற்றிய தகவல் தெரிந்தால் ஸ்ரீபெரும்புதூர் 9498151501, 9498100274 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். #tamilnews

    சத்தியவேடு போலீஸ் நிலையத்தில் இறந்த சென்னை வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதியைச் சேர்ந்த பாஸ்கர்-அனுராதா தம்பதியினர் ஒரு மோட்டார் சைக்கிளில் சத்தியவேடு அருகே உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். சத்தியவேடு அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே நின்றிருந்த 5 மோட்டார் சைக்கிளில் வந்த 12 வாலிபர்களில் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து, அனுராதா அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். பாஸ்கர் மற்றும் பொதுமக்கள் 9 வாலிபர்களை மடக்கிப்பிடித்து, சத்தியவேடு போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர்கள் சென்னை செங்குன்றத்தை சேர்ந்த ராஜி (வயது 24), பிரசாந்த் (20), அபினேஷ் (21), வினோத்குமார் (21), மாதவரத்தை சேர்ந்த விக்னேஷ் (21), கோரிமேடு பகுதியை சேர்ந்த ஆனந்த் (21), போரூரை சேர்ந்த ஜான்சார்லஸ் (21) மற்றும் 17 வயதுடைய 2 பேர் என்பது தெரிய வந்தது. போலீஸ் விசாரணையின்போது ராஜி போலீஸ் நிலையத்திலேயே உயிரிழந்தார்.

    பிடிபட்ட 8 பேரும் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பதும், உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இதுபோன்று வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 8 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோர்ட்டு உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ராஜின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    விசாரணை முடியும் வரை பரத்ராஜாவின் உடலை தற்போதைய நிலையிலேயே பாதுகாப்பாக வைக்க கோர்ட்டு உத்தரவுப்படி பரத்ராஜா உடலை பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
    நெல்லை:

    தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்தவர் பரத் என்ற பரத்ராஜா (வயது 34). இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பாளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 17-ந்தேதி பரத்ராஜா, தனது சகோதரர் திருமணத்துக்காக பரோலில் வீட்டுக்கு சென்றார்.

    இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி தூத்துக்குடி கலவரம் தொடர்பாக, வீடு வீடாக சோதனை செய்த போலீசார் பரத்ராஜா வீட்டிலும் சோதனை செய்து அவரை கைது செய்தனர். அப்போது தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் வைத்து பரத்ராஜாவை போலீசார் அடித்ததாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து பரத் ராஜாவை தூத்துக்குடி கலவர வழக்கிலும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி பரத்ராஜாவின் பரோல் முடிந்ததால் அவரை மீண்டும் பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    கடந்த 30-ந்தேதி பரத் ராஜா பாளை சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். மேலும் அவரது உடலை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி அங்கு பிரேத பரிசோதனை முடித்து உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் அவரது உறவினர்கள், பரத்ராஜா போலீசார் தாக்கியதால் பலியாகி விட்டார் என்றும், அதனால் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியதுபோல இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி அவரது உடலை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். கடந்த 7 நாட்களாக அவரது உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ளது.

    இந்த நிலையில் அவரது சகோதரர் செல்வசவுந்தர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் தனது சகோதரர் பரத்ராஜா மரணத்தில் மர்மம் உள்ளது. அவரது உடலில் பலத்த காயங்கள் உள்ளது. எனவே தடய அறிவியல் துறை பேராசிரியர்கள் தலைமையில் மறு பிரேத பரிசோதனை நடத்தி கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இதை விசாரித்த நீதிபதிகள், “விசாரணை முடியும் வரை பரத்ராஜாவின் உடலை தற்போதைய நிலையிலேயே பாதுகாப்பாக வைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி பரத்ராஜா உடலை பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதைத்தொடர்ந்து நெல்லை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் உள்ள குளிர்பதன பெட்டியில் பரத்ராஜாவின் உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் செல்வசவுந்தர் நேற்று தூத்துக்குடியில் விசாரணை நடத்திய தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

    அதில், “தனது சகோதரர் பரத்ராஜா பரோலில் வந்துள்ளார் என்பதையே போலீசார் ஏற்க மறுத்து அவரை கைது செய்து, சரமாரியாக அடித்து உதைத்து, நடக்க முடியாத நிலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்க உத்தரவிட்டும் போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்காமல் பாளை சிறையில் அடைத்து விட்டனர். எனவே பரத்ராஜாவின் மரணத்துக்கு தூத்துக்குடி தென்பாகம் போலீசாரும், பாளை சிறை காவலர்களுமே காரணம் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலின், தமிழரசன் ஆகிய 2 பேரின் உடலை வாங்க உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22ந் தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். அப்போது போலீசார் தடுத்ததால் மோதல் உண்டானது.

    அப்போது ஏற்பட்ட கலவரம் காரணமாக போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100- க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன.

    இதில் சண்முகம் (38), செல்வசேகர் (42), கார்த்திக் (20), கந்தையா (58), காளியப்பன் (22), ஸ்னோலின் (17), தமிழரசன் (42) ஆகிய 7 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

    இந்த நிலையில் 7 பேரின் உடல்களையும் டெல்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர் அல்லது திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தலைமையில் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா தலைமையில், தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர்கள் மனோகரன், சுடலைமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர், நீதித்துறை நடுவர்கள் முன்னிலையில் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்தனர்.

    உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி இந்த பிரேத பரிசோதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் மதியம் 12.45 மணிக்கு தொடங்கி நேற்று அதிகாலை 2 மணி வரை 7 பேரின் உடல்களும் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மீதமுள்ள 6 பேரின் உடல்க‌ளும் கோர்ட்டு உத்தரவுப்படி பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

    பிரேத பரிசோதனை முடிந்த சண்முகம், கார்த்திக், செல்வசேகர் ஆகிய 3 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நேற்று காலை காளியப்பன், கந்தையா ஆகியோரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஸ்னோலின், தமிழரசன் ஆகியோரது உடல்களை பெற அவர்களது உறவினர்கள் மறுத்து விட்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக அகற்ற வேண்டும், இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி உள்ள‌னர்.

    ஸ்னோலின், தமிழரசன் உடலை அவர்களது உறவினர்கள் இன்றும் வாங்கவில்லை. அவர்களின் உறவினர்கள் யாரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வரவில்லை. இதையடுத்து அவர்களிடம் கலெக்டர் சந்தீப்நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மற்றும் அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை 2 பேரின் உடல்களையும் வாங்கப்போவதில்லை என 2 பேரின் உறவினர்கள் உறுதியாக தெரிவித்து விட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் மறுபிரேத பரிசோதனை முடிந்த நிலையில் ஸ்னோலின், தமிழரசன் ஆகிய 2 பேரின் உடல்களும் பிணவறையில் பாதுகாக்கப்படுகிறது.

    மேலும் பிரேத பரிசோதனை செய்யப்படாத அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி, மணிராஜ், ரஞ்சித்குமார், ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஒரு வாரத்துக்கு பிறகு பிரேத பரிசோதனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    திருச்சி அருகே அரசு ஆஸ்பத்திரியில் இறந்தவர் உடலை சலவைத்தொழிலாளி பிரேத பரிசோதனை செய்வது போன்ற வீடியோ வைரலாக பரவியது குறித்து மருத்துவத்துறை அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.
    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் கைலி அணிந்தவாறு ஒருவர் பிரேத பரிசோதனை செய்வதும், பின்னர் உடலை ஊசியால் தைப்பது போன்ற காட்சிகள் செல்போன்களில் வீடியோவாக பரவியது. இந்த காட்சியை பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    டாக்டர் செய்ய வேண்டிய பிண பரிசோதனையை கைலி அணிந்து செய்யும் நபர் யார் என்று விசாரித்தனர். விசாரணையில் அவர் துறையூர் அரசு மருத்துவமனையில், 3 மாத ஒப்பந்த கால அடிப்படையில் சலவை தொழிலாளியாக வேலைபார்த்து வரும் துறையூர் அருகே உள்ள வாலீஸ்புரத்தை சேர்ந்த வீரமணி என்பது தெரிய வந்தது.

    டாக்டரின் ஆலோசனையின் பேரில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலை தைக்கவும், துணியால் சுற்றி பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்கும் துறையூர் ஆஸ்பத்திரியில் பெரியசாமி, மதியழகன் என 2 பணியாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் சலவை தொழிலாளி வீரமணி பல மாதங்களாக பிரேத பரிசோதனை போன்ற வேலையை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுபற்றி பொதுமக்கள் கூறும் போது, இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போல் சிகிச்சைகளில் அலட்சியம் காட்டக்கூடாது. அரசு மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்து பணியாற்ற வேண்டும். சிகிச்சைக்கான நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.

    பிரேத பரிசோதனை செய்யும் போது டாக்டர் ஒருவரும், மருந்தாளுனர் மற்றும் துப்புரவு பணியாளர் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் பிரேத பரிசோதனை கூடத்தில் சம்பந்தமில்லாத நபர் கைலி அணிந்து கொண்டு பிரேத பரிசோதனை செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே சம்பந்தப்பட்ட நபர் மீதும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாகமும் மருத்துவ துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவம் குறித்து திருச்சி மருத்துவத் துறை இயக்குனர் சம்ஷாத் பேகம் விசாரணை நடத்தி வருகிறார். அவர் கூறும் போது, இறந்தவர் உடலை சலவை தொழிலாளி பிரேத பரிசோதனை செய்யும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பற்றி விசாரணை நடத்த உள்ளேன். விசாரணை முடிந்ததும் அதற்கான அறிக்கையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்பேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்வார்கள் என்றார். விசாரணையில் பிரேத பரிசோதனை செய்தது சலவை தொழிலாளி என்பது தெரிய வந்தால் துறையூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
    ×