search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "daughter"

    • 2 பெண்கள் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த சோமனூர் ரெயில் நிலையம் அருகே 2 பெண்கள் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா காயத்ரி,சப் -இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.அங்கு 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் 15 வயது மதிக்கத்தக்க பெண்ணும் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பிணமாக கிடந்தனர்.உடலை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் இறந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் அடுத்த சாமளாபுரம் பவலந்தான்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது மனைவி தனலட்சுமி (32),மகள் தட்சணா (15) என்பது தெரியவந்தது. சரவணன் சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    இதனால் கணவனிடம் கோபித்துக் கொண்டு தனலட்சுமி மகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற அவர்கள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.தொடர்ந்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் சென்ற தாய்-மகளை கீழே தள்ளி மர்ம நபர்கள் நகையை பறித்தனர்.
    • கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் கற்பக நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 45). அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். இவருக்கு காமாட்சி (34) என்ற மனைவியும், பார்த்தசாரதி (13) என்ற மகனும், தாரணி (10) என்ற மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று முருகன் மதுரையில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு விட்டு மனைவி, மகன், மகளுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    திருமங்கலம் பகுதியில் சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் பின்தொடர்ந்தனர்.நாராயணசாமி நகர் பகுதியில் வந்தபோது திடீரென மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த காமாட்சி கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். நகை பறிப்பின்போது நிலைதடுமாறி முருகன், காமாட்சி, அவரது மகன், மகள், ஆகியோர் மோட்டார் ைசக்கிளில் இருந்து தவறி கீேழு விழுந்தனர்.

    இதில் காமாட்சி, தாரணி படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நகை பறிப்பு, வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரண மாக நடந்து வருகிறது.

    குறிப்பாக திருமங்கலம் 4 வழிச்சாலையில் நாள்தோறும் நகை பறிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், பெண்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டி உள்ளது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடி நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • 15 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாக அவரது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
    • சிறுமி பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மங்கலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாக அவரது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமி பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பெற்ற மகளுக்கு, தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தந்தை உடலுக்கு மயானம் வரை வந்து மகள் இறுதி சடங்கு செய்தார்
    • ஆலங்குடி அருகே நெகிழ்ச்சி சம்பவம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இருசக்கர வாகன மெக்கானிக்கான இவர் நேற்று உடல்நலைக்குறைவால் இறந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை அவர்கள் செய்தனர்.

    இதையடுத்து இறந்த சேகருக்கான மயானக்கரை கொள்ளி வைக்கும் சடங்குகளை செய்வதில் உறவினர்கள் கேள்வி எழுப்பினர். இறுதியில் அவரது மூத்த மகளான ஆனந்தி என்ற பட்டதாரி மகள் தந்தைக்கான காரியங்களை நானே செய்கிறேன் என்று கூறினார். அதன்படி மயானம் வரை சென்ற அவர் தந்தையின் உடலுக்கு தீ மூட்டினார்.

    ஆண்பிள்ளை இல்லாத குறையை தீர்த்து தனது தந்தைக்கு கொள்ளி வைத்த பட்டதாரி பெண் ஆனந்தியை அங்கு வந்த உறவினர்கள் மற்றும் ஊரார்கள் பாராட்டினர்.

    இதற்கிடையே ஆலங்குடி இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் இறந்த சேகர் குடும்பத்திற்கு இறுதி சடங்குகள் செய்வதற்காக ரூ.20 ஆயிரம் வழங்கி உதவி செய்தனர்

    • உற்றார், உறவினர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது.
    • உயிர் தந்த தாயின் தனிமை துயரை துடைத்த மகளின் துணிச்சலான இந்த முடிவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம் :

    கேரளாவில் 59 வயது தாய்க்கு 2-வது திருமணம் செய்து அழகு பார்த்த மகளை பலரும் பாராட்டி வருகிறார்கள். அவர் தனது தாயின் தனிமையை போக்க விரும்பியதாக கூறினார்.

    இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன் (வயது 59). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு. இருவருக்கும் திருமணமான நிலையில், ரதிமேனன் தனிமையில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை உணர்ந்த ரதிமேனனின் மகள் பிரசிதா, கண்டிப்பாக தனது தாயாருக்கு ஒரு துணை வேண்டும் என்று சிந்திக்கத்தொடங்கினார். இதற்காக தனது தாய்க்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்று அவர் முடிவு செய்தார். இதற்காக தகுந்த மணமகனை தேட ஆரம்பித்தார்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த திவாகரன் (63) என்பவர்தான் தனது தாய்க்கு ஏற்ற துணை என்று பிரசிதா முடிவு செய்தார். 2 மகள்களுக்கு தந்தையான திவாகரன் வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

    அவரிடம் தனது தாயின் தனிமை பற்றியும், அவருக்கு ஒரு துணை வேண்டும், அது நீங்களாக இருந்தால் மிகவும் நல்லது என்று உருக்கமாக விளக்கிகூறினார் பிரசிதா.

    இதனை புரிந்து கொண்ட திவாகரன் 2-வது திருமனத்திற்கு சம்மதம் தெரிவித்தார். திவாகரனின் மனநிலை குறித்து அவரது 2 பெண்குழந்தைகளிடமும் பிரசிதா பேசினார். அவர்களும் தந்தையின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

    இதை தொடர்ந்து, தனது தாய் ரதிமேனனின் சம்மதத்தை பெற்ற அவர் திருச்சூர் திருவம்பாடி கோவிலில் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்தார். அதன்படி உற்றார், உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி முடித்தார். உயிர் தந்த தாயின் தனிமை துயரை துடைத்த மகளின் துணிச்சலான இந்த முடிவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

    தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த பிரசிதா கூறியதாவது:-

    எனது அம்மாவுக்கு நாங்கள் 2 பெண் குழந்தைகள். அப்பா உயிரோடு இருக்கும்போதே எங்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நாங்கள் அவரவர் கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் அப்பா திடீரென்று மரணம் அடைந்ததால் அம்மா தனிமையானார். எங்களுக்கும் கணவர், குழந்தைகள் என ஆனதால் அம்மாவை அடிக்கடி நேரில் வந்து பார்க்க முடியவில்லை. அம்மாவின் தனிமை நிலையை போக்க வேண்டும் என்று யோசித்தேன். அதற்காகத்தான் இந்த திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளுடன் ஆசிரியை மாயமாகினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி அருகே உள்ள வக்காணங்குண்டு பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி சுவாதி (25). நர்சிங் பள்ளி ஆசிரியையான இவர் சம்பவத்தன்று மகள் நேசிகாவுடன் (5) மாயமானார். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திக்குளத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகள் லீலாவதி (19). சம்பவத்தன்று வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகே உள்ள வக்காணங்குண்டு பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி சுவாதி (25). நர்சிங் பள்ளி ஆசிரியையான இவர் சம்பவத்தன்று மகள் நேசிகாவுடன் (5) மாயமானார். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திக்குளத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகள் லீலாவதி (19). சம்பவத்தன்று வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 தினங்களுக்கு முன்பு காந்திமதி தனது 5 வயது மகளை அழைத்துக் கொண்டு, கணவர் கதிர்வேலிடம் வெளியில் சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • 2 நாட்களாக அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்காததால், காந்திமதியின் தாய் வெள்ளகோவில் போலீசில் புகார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில், முத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி ஈஸ்வரி ( வயது 43). இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் காந்திமதி (வயது 21) . இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஜூலை 6ந்தேதி காந்திமதி தனது 5 வயது மகளை அழைத்துக் கொண்டு, கணவர் கதிர்வேலிடம் வெளியில் சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. காந்திமதி தனது தாய் ஈஸ்வரியிடம் போன் மூலம் தகவல் கூறியுள்ளார். இதனையடுத்து அவரது போன் சுவிட்ச் ஆப் ஆனது. இதையடுத்து 2 நாட்களாக அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்காததால்,காந்திமதியின் தாய் ஈஸ்வரி வெள்ளகோவில் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் கே.முத்துக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய் மற்றும் மகளை தேடி வருகின்றனர்.

    • வீட்டில் துணி துவைத்து விட்டு கழிவுநீரை எதிர் வீட்டு முன்பாக ஊற்றியதாக கூறப்படுகிறது.
    • இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.


    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே நடுசெக்காரக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 22).

    இவரும் இவரது தாய் சண்முகசுந்தரியும் இன்று காலை அவர்களது வீட்டில் துணி துவைத்து விட்டு கழிவுநீரை எதிர் வீட்டு முன்பாக ஊற்றியதாக கூறப்படுகிறது.

    இதனைக்கண்ட எதிர்வீட்டை சேர்ந்த டிரைவர் ஆறுமுகநயினார் (40) அவரது மனைவி ஜெயராணி (35) மற்றும் ஆறுமுகநயினாரின் சகோதரிகள் கவுரி, பேச்சிராணி ஆகியோர் ஜெயலட்சுமியின் வீட்டுக்கு சென்று சத்தமிட்டுள்ளனர்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகநயினார் தரப்பினர் ஜெயலட்சுமி, சண்முகசுந்தரியையும் தாக்கியதாகவும், இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக கூறி தாய், மகள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்தி ரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • தாய்-மகள் திடீர் மாயமானார்கள்.
    • சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய்-மகளை தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன்கொல்ல ங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வெண்ணிலா (வயது 37). இவர்களது மகள் நந்தினி (17). சம்பவத்தன்று வீட்டில் இருந்த தாய்-மகள் திடீரென மாயமானார்கள். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து மாரிமுத்து சேத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய்-மகளை தேடி வருகின்றனர்.

    • விபத்தில் தாய் மகள் பலியான சம்பவம் குறித்து டிராக்டர் டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இன்று பிரேத பரிசோதனை முடிந்து இன்று உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த செல்லம்பகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார்(34). இவர் மொடக்குறிச்சி பூந்துறை ரோட்டில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கோமதி (30). இவர்களுக்கு 4 வயதில் சுகுதி என்ற மகள் உள்ளார். நேற்று கோமதி தனது மகளுடன் நரிகாட்டுவலசு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு மொபட்டில் சென்றார். பின்னர் இரவு தாய் வீட்டில் சென்று விட்டு மீண்டும் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    வேலம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் கருப்பு பாரம் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிராக்டரை முந்திச் செல்வதற்காக கோமதி முயன்றார்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிள் வந்ததால் கோமதி நிலைதடுமாறி மகளுடன் கீழே விழுந்தார். இதில் டிராக்டரின் சக்கரம் ஏறி அவர்கள் 2 பேரு ம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து மொட க்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டிராக்டர் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த கோமதி, சுகுதி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    நத்தம் அருகே குடும்ப தகராறில் மகளுடன் தீக்குளித்த தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரவி. இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரோசி (வயது 42). இவர்களது மகள் பிரனீதா (17). பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

    தாய் மகளுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலையிலும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரோசி தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். இதை பார்த்ததும் அவரது மகளும் தாயை கட்டிப்பிடித்தார்.

    இருவரும் பலத்த தீக்காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர். ஆனால் ரோசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியந்தோப்பில் வீடு இடிந்து தாய்-மகள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி விசாரணை நடத்தி வருகிறார்.
    பெரம்பூர்:

    புளியந்தோப்பு கன்னிகாபுரம் நியூ காலனியில் காசியப்பன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருப்பவர் வெங்கடேசன் (வயது 32). இவர் ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு இவர் தனது மனைவி சஞ்சிதா (28), மகள் யுவஸ்ரீ (7), மகன் கிருஷ்ணகுமார் (3) ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று வீட்டின் மேல்பகுதி இடிந்து விழுந்தது. இதில் சஞ்சிதா, யுவஸ்ரீ ஆகியோர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    படுகாயம் அடைந்த வெங்கடேசன், கிருஷ்ணகுமார் ஆகியோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விபத்து குறித்து புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி விசாரணை நடத்தி வருகிறார்.

    ×