என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "damaging"
- குடிபோதையில் வாகனங்களை சேதப்படுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஆத்திரம் அடைந்த 3 பேரும் அங்கிருந்த 2 கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பினர்.
மதுரை
மதுரை மதிச்சியம், தெற்கு தெருவை சேர்ந்தவர் தீபக்ஆனந்த் (32). சம்பவத்தன்று நள்ளிரவு இவர் வைகை வடகரை, ஆர்.ஆர். மண்டபம் பகுதிக்கு சென்றார்.
அங்கு குடிபோதையில் இருந்த 3 பேர் தகராறில் ஈடுபட்டனர். அவர்களிடம் தீபக் ஆனந்த், ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று தட்டிக் கேட்டார். ஆத்திரம் அடைந்த 3 பேரும் அங்கிருந்த 2 கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பினர்.
இதுகுறித்து தீபக்ஆனந்த் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில், அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக்குமரன் ஆலோசனை யின்பேரில் மதிச்சியம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் வைகை வடகரை பகுதியில் தகராறில் ஈடுபட்ட கும்பல் பற்றிய விவரம் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மதிச்சியம் மாரியம்மன் கோவில் தெரு முருகன் மகன் அரி சுரேஷ் (24), தெற்குதெரு பிரபாகரன் மகன் ரூபன் குமார் (24), பூலாங்குளம், கணபதி நகர், ஆறுமுகபாண்டி மகன் பிரபு (23) ஆகியோரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்