search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cycle"

    • நிகழ்ச்சிக்கு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் ஏஞ்சல் விஜய நிர்மலா தலைமை தாங்கினார்.
    • இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு 119 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிளை வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள நாகலா புரம் உமறுப்புலவர் அரசினர் தொழிற் பயிற்சி மையத்தில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    தொழில் பயிற்சி நிலைய முதல்வர் ஏஞ்சல் விஜய நிர்மலா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு 119 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிளை வழங்கினார்.

    நிகழ்சியில் புதூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள், பயிற்றுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுற்றுச்சூழல் உடல்நலம் சார்ந்த பிரசாரத்தோடு 20 ஆயிரம் கி.மீ. தூரத்தை சைக்கிளில் கடந்து சாதனை.
    • சைக்கிளில் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய சாலை விதிகள்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மிதிவண்டி பயணம் உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் நலன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதற்கு பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் தலைமை வகித்தார்.

    பட்டதாரி ஆசிரியர் செல்வசிதம்பரம் வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல் உடல்நலம் சார்ந்த பிரசாரத்தோடு 20 ஆயிரம் கி.மீ. தூரத்தை மிதிவண்டியில் கடந்து சாதனை படைத்துள்ள அரசுப்பள்ளி ஆசிரியர் சுரேஷ் மாணவர்களுக்கு உடல் நலன், சுற்றுச்சூழல் நலன், மிதிவண்டியில் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய சாலை விதிகள் மற்றும் மிதிவண்டி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

    இதில் கல்விக்குழு தலைவர் மெட்ரோ மாலிக், வட்டார வளமைய பயிற்றுனர்கள் ஸ்ரீதர், சுரேஷ், ஆசிரியர்கள் ஆரோக்கிய அந்தோணி ராஜா, அன்பரசு, முத்துலட்சுமி, இந்திரா, அமிர்தம், பெல்சி ராணி, வனிதா, செல்வக்குமார், சங்கீதா, விதைக்கும் கரங்கள் நந்தா ஜீவானந்தம், கலாம் கனவு இயக்க பொருளாளர் கிஷோர் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

    • மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • ரூ. 9 ஆயிரம் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 328 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவவாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 8 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ. 9000 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர்சாமிநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறைதுணை ஆணையரும், பள்ளி செயலாளருமான முத்து ராமன் தலைமை வகித்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் ஜான்சி ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி

    திருவெண்காடுசுவேதாரணேஸ்வரர்அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறைதுணை ஆணையரும், பள்ளி செயலாளருமான முத்து ராமன் தலைமை வகித்தார்.

    சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், சீர்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பஞ்சு.குமார், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் ஜான்சி ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன் வரவேற்றார். இதில் பன்னீர்செல்வம் எம்எல்ஏ கலந்துகொண்டு மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், தொழிற்சங்க பொறுப்பாளர் பன்னீர்செல்வம், முன்னாள் கவுன்சிலர் சி கே பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மூத்த ஆசிரியர் மதிவாணன் நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட பிரிவு சார்பில்,மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
    • போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட பிரிவு சார்பில்,மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி நடைபெற்றது.

    போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட விளை யாட்டு அலுவலர் கோகிலா முன்னிலை வகித்தார்.

    இந்த சைக்கிள் போட்டி கள், 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. ஆகிய பிரிவுகளில் நடந்தது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசு - ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு - ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு பரிசு - ரூ.250/- காசோலையையும் சான்றிதழ்கள் நாளை வழங்கப்படுகின்றன.

    • வீரகேரளம்புதூர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் டயானா ஆனி ராஜம்மாள் தலைமை தாங்கினார்.

    சுரண்டை:

    வீரகேரளம்புதூர் அண்ணா ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் டயானா ஆனி ராஜம்மாள் தலைமை தாங்கினார். ஊத்துமலை ஜமீன்தாரரும், ஒன்றிய கவுன்சிலருமான முரளி ராஜா, பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் டேவிட் லிவிங்ஸ்டன், கீழப்பாவூர் ஒன்றிய சேர்மன் காவேரி, வீரகேரளம்புதூர் பஞ்சாயத்து தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ரவிக்குமார் வரவேற்றார்.

    அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் வீரகேரளம்புதூர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை பழனி நாடார் எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ஹேமா, தர்மராஜ், காங்கிரஸ் மாவட்ட பிரதிநிதி தாயார் தோப்பு ராமர், அண்ணாமலை செட்டியார், நவநீதகிருஷ்ணன், தி.மு.க. கிளைச் செயலாளர் மணி, மாவட்ட ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரஞ்சித் மற்றும் ஆசிரியர்கள் மாரியப்பன், டென்னிசன் உட்பட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் பிரிவு சார்பாக அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது.
    • போட்டியில் பங்கேற்க உள்ள மாணவ மாணவியர் தங்களது சொந்த செலவில் சாதாரண கைப்பிடி கொண்ட இந்தியாவில் தயாரான சைக்கிளை கொண்டு வர வேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் பிரிவு சார்பாக அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது. இதில் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆவின் பாலகத்தில் தொடங்கி கே.ஆர்.தோப்பு வரை சென்று மீண்டும் ஆவின் பாலகம் வரை 15 கி.மீ.தூரமும், 15 வயது, 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஆவின் பாலகம் முதல் அணைமேடு வரை சென்று மீண்டும் ஆவின் பாலகத்துக்கு 20 கி.மீ.தூரமும் போட்டி நடக்கிறது.

    மாணவிகளுக்கு 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆவின் பாலகத்தில் தொடங்கி ஸ்டீல் பிளாண்ட் வரை சென்று மீண்டும் ஆவின் பாலகம் வரை 10 கி.மீ.தூரமும், 15 வயது, 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு ஆவின் பாலகம் முதல் கே.ஆர்.தோப்பு வரை சென்று மீண்டும் ஆவின் பாலகத்துக்கு 20 கி.மீ.தூரமும் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு ரூ.250-ம் பரிசு வழங்கப்படும். இந்த பரிசுகள் காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழி மூலமாகவோ வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்க உள்ள மாணவ மாணவியர் தங்களது சொந்த செலவில் சாதாரண கைப்பிடி கொண்ட இந்தியாவில் தயாரான சைக்கிளை கொண்டு வர வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்துள்ளது.

    • கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • தனுஷ் குமார் எம்.பி. 398 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும்,

    கூட்டுறவு சங்க தலைவருமான செல்லத்துரை தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், பள்ளி மேலாண்மை குழு டாக்டர் சஞ்சீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜின்னி இவாஞ்சலின் ஜோஸ் வரவேற்று பேசினார். தனுஷ் குமார் எம்.பி. 398 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகளுக்கு தேவையான 9.5 லட்சம் செலவிலான 60 இருக்கைகளை தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். நிகழ்ச்சிகள் தி.மு.க. நகர செயலாளர் அப்பாஸ் உட்பட பள்ளியின் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


    குமாரபாளையத்தில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் பொதுநல அமைப்பின் சார்பில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் முன்பிருந்து அமைப்பின் நிர்வாகி சீனிவாசன் தலைமயில் 17 பேர் சைக்கிளில் சென்றனர்.

     காவேரி நகர், பெரந்தார் காடு, அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, தாலுக்கா அலுவலக சாலை, தம்மண்ணன் சாலை, நகராட்சி அலுவலக காந்தி சிலை முன்பு நிறைவு பெற்றது. 

    ஒவ்வொரு முக்கிய இடங்களில் நின்று, சைக்கிளில் சென்றால் என்னென்ன நன்மைகள் என்பது பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் செயலர் பிரபு, பொருளர் வரதராஜ், செந்தில்குமார், மோகன்ராஜ், பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    கோவில்பட்டியில் விநியோகஸ்தர்கள் எழுச்சி நாளை முன்னிட்டு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் விநியோகஸ்தர்கள் எழுச்சி நாளை முன்னிட்டு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மாபெரும் விழிப்புனர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.  

    பேரணியில் எரிபொருள் உபயோக சிக்கனத்தை வலியுறுத்தியும், பாரம்பரிய வணிகத்தை காக்க வேண்டும், ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்க்க வேண்டும், நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும், தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், 

    அரசின் கொரோனா விதிமுறைகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாரே துண்டு பிரசுரங்களை பாதசாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கிச் சென்றனர்.

    கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணிக்கு, சங்கத் தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் அசோக், பொருளாளர் பாலசுந்தரம், கவுரவ ஆலோசகர்கள் விஜி, அழகுலட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

    பேரணி முக்கிய சாலையான சர்ச் ரோடு, புதுரோடு, எட்டயபுரம் சாலை வழியாக கதிரேசன் கோவில் சாலையில் உள்ள நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகமான கோகுலம் திருமண மண்டபம் வந்தடைந்தது. பின்னர் அங்கு எழுச்சி நாளை நினைவு கூறும் வகையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில், சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தினகரன், ரவிசந்திரன், தினேஷ்பாலாஜி, செல்லகனி, ஜெயமணி, ஜெயபாஸ், கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சங்கத்தின் கவுரவ ஆலோசகர் சீனிவாசன் செய்திருந்தார்.
    செங்கோட்டை அருகே சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் பொருட்டு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே  உள்ள சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு இருந்து சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் பொருட்டு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் முன்னிலை வகித்தார்.

    தென்காசி ஆர்.டி.ஓ. கங்காதேவி மற்றும் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். தி.மு.க. சுற்றுச்சூழல் அணியின் தலைவர் சரவணன் மூலிகை மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார்.

    சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் பற்றி துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் உரையாற்றினார். உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், விவசாயிகள், பசுமைஇலத்தூர் மற்றும் பசுமைவலசை ஆர்வலர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

     மாசு இல்லாத வாகனத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் பொருட்டு கழுநீர்குளம் கிராமத்தை சேர்ந்த சிறுமி அப்னதஸ்ஸின், சிறுவன் ரெஸ்மான்செய்ன் பேட்டரியால் இயங்கும் ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டி சுற்றுச்சூழலின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி இலத்தூர் லட்சுமிஅரிகரா உயர்நிலைப்பள்ளியில் நிறைவுபெற்றது.
    உத்தரபிரதேசம் கன்னோஜ் தொகுதியில் சைக்கிளுக்கு ஓட்டு போட்டால் தாமரை சின்னத்தை காட்டியது என சமாஜ்வாடி கட்சி புகார் செய்துள்ளனர்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அப்போது 2 வாக்குச்சாவடிகளில் சைக்கிள் சின்னத்துக்கு ஓட்டு போட்டால் விவிபாட் கருவியில் தாமரை சின்னத்தை காட்டியதாக புகார் எழுந்தது.

    அதோடு இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் பலருக்கு போலீஸ் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஓட்டு போட்ட பிறகு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அவர்களை கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படு மாநில டி.ஜி.பி.யை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கட்சியினர் கூறினர். இந்த பிரச்சினைகள் தொடர்பாக தேர்தல் அதிகாரியிடமும் புகார் செய்துள்ளனர்.
    ×