search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cv shanmugam"

    ஜெயலலிதா மரணம் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆதரவு தெரிவித்தார். #jayalalithaadeath #jayalalithaa #Jayakumar #CVShanmugam
    சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ‘ஜெயலலிதா மரணம் குறித்து, அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்துகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-

    அமைச்சர் என்ற முறையில் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்து நல்ல விஷயம் தான். அதனை நான் வரவேற்கிறேன். அந்த கருத்தில் விசாரணைக்கு உட்பட்டு நடத்தவேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார். விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்பது தனி. மாநில அமைப்பு இதனை நடத்தலாம்.

    சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்தை, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் விசாரணை ஆணையம் பரிசீலனைக்கு எடுத்து விசாரிக்கட்டும். அதில் தவறு இல்லை.

    ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தை திசை திருப்பவேண்டும் என்பதற்காக சி.வி.சண்முகம் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது சசிகலா குடும்பம் 75 நாட்கள் ஆஸ்பத்திரியில் 5 நட்சத்திர ஓட்டல் போன்று பல அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, சாப்பிட்டதால் தான் ரூ.1¼ கோடி கட்டணம் வந்தது.

    ஜெயலலிதா சாப்பிட்டது கிடையாது. இதுதான் சட்டத்துறை அமைச்சரின் கருத்து. அமைச்சர்களுக்குள் யார் பிளவு ஏற்படுத்த முயன்றாலும் நடக்காது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.



    விசாரணை ஆணையம் அழைத்து கேட்டாலும், ஆஞ்சியோ செய்திருந்தால் ஜெயலலிதா பிழைத்திருப்பார் என்ற கருத்தை சி.வி.சண்முகம் தெரிவிப்பார். சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்தை ஆணைய தலைவர் கருத்தில்கொண்டு விசாரிக்கட்டும். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் போட்ட அறைகளில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் என நாங்கள் யாருமே தங்கவில்லை. சி.வி.சண்முகம் கூறியது போல அங்கு தங்கியது சசிகலா மற்றும் அவருடைய குடும்பம் தான்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஜெயின் கமிஷன் அமைக்கபட்டதால் சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் இல்லையே. அதன்படி பார்த்தால் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்தில் தவறு இல்லை. இதுதொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யும். ஒரு நாள் அதிகாரம் கொடுத்தால் மீனவர் பிரச்சினைகளை தீர்த்துவிடுவேன் என்று சீமான் கூறியிருப்பது 2018-ம் ஆண்டின் தலைசிறந்த ‘ஜோக்’.

    இவ்வாறு அவர் கூறினார். #jayalalithaadeath #jayalalithaa #Jayakumar #CVShanmugam
    அதிமுக சட்ட விதிகள் திருத்தத்தை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். #ADMK #CVShanmugam #KCPalanisamy
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு இணைந்தது. அப்போது, அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

    இந்த திருத்தத்தை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி முடிவெடுக்கும்படி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று தேர்தல் ஆணையத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், கே.சி.பழனிச்சாமி கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லை என்பதால் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.  #ADMK #CVShanmugam #KCPalanisamy

    தமிழர்களுக்காக பாடுபட்டு கொண்டிருக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான் என்று விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். #cvshanmugam #admk
    விழுப்புரம்:

    விழுப்புரம் ஒருங்கிணைந்த வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளை போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி நேற்று இரவு விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான டாக்டர்.லட்சுமணன் எம்.பி., தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.பி.க்கள் ராஜேந்திரன், காமராஜ், ஏழுமலை, மாநில அமைப்பு செயலாளர் மோகன், சக்கரபாணி எம்.எல்.ஏ., திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சரும், அ.தி.மு.க.மாநில அமைப்பு செயலாளருமான சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சரும் மாநில அமைப்பு செயலாளருமான நத்தம்  விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். 

    கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

    இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தவர் ராஜபக்சே. அதற்கு உடந்தையாக இருந்தது தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு. ஆனால் இன்று தி.மு.க.வுடன் வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் கூட்டணி வைத்துள்ளனர். இலங்கையில் நடந்த போருக்கு இந்திய அரசு உதவி செய்ததால்தான் போரில் வெற்றி பெற்றோம் என்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு டெல்லியில் ராஜபக்சே வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார். 

    இதற்கு வைகோ, திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்களா? யாருமே இதைப்பற்றி பேசவில்லை. ஆனால் அன்றைக்கும், இன்றைக்கும் தமிழர்களுக்காக பாடுபட்டு கொண்டிருக்கிற ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே போர் குற்றவாளி என்றாலும் கொலை செய்தவனை விட கொலை செய்ய தூண்டுபவர்தான் குற்றவாளி. 

    தமிழினத்தை அழித்தது, தமிழினத்திற்கு துரோகம் செய்தது  தி.மு.க., எனவே ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு காரணமானவர்களை சர்வதேச குற்றவாளியாக அறிவித்து தண்டனை வழங்கும் வரை அ.தி.மு.க.வின் போராட்டம் நீடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பசுபதி, துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் பேட்டை முருகன், கல்பர்ட் முத்தமிழ்செல்வன், சிந்தாமணி வேலு, கண்டமங்கலம் ராமதாஸ், முன்னாள் ஒன்றிய செயலாளர் வி.ஜி.சுரேஷ்பாபு, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல்,  மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைசெயலாளர்கள் வி.பி.எஸ்.குருநாதன், மந்தக்கரை ஜானகிராமன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணவாளன், தலைமை கழக பேச்சாளர் ராஜகோபால்,  முன்னாள் யூனியன் சேர்மன்கள் பெரும்பாக்கம் இளங்கோவன், விஜயா சுரேஷ்பாபு, விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி இயக்குனரும், ரியல் எஸ்டேட் அதிபருமான வக்கீல் செந்தில், மாவட்ட மருத்துவரணி தலைவர் டாக்டர்.கலைச்செல்வன், கோலியனூர் ஒன்றிய துணை செயலாளர்கள் சீத்தாகலியபெருமாள், பவாணிதமிழ்மணி, இலக்கிய அணி செயலாளர் பெட்மார்ட் கலியமூர்த்தி, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் மரகதபுரம் அழகேசன், மாவட்ட பிரதிநிதி ஜனார்த்தனன், ஒன்றிய இணை செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் அன்பழகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் நகர சபை தலைவரும், அ.தி.மு.க.வின் நகர செயலாளருமான வக்கீல் பாஸ்கரன் நன்றி கூறினார். #cvshanmugam #admk 
    தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தை கண்டித்து உத்தமபாளையத்தில் மருத்துவ சமூக நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #MinisterCVShanmugam

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் புறவழிச்சாலையில் தமிழ்நாடு மருத்துவ சமூக நல சங்கத்தினர் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவர் சமூக நல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் திருமலைராஜ் முன்னிலை வகித்தார்.

    அ.தி.மு.க. கட்சி கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

    நிர்வாகிகள் போஸ், பாலு உள்பட முடி திருத்தும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரும் வரை தங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர். #MinisterCVShanmugam

    ×