search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cumbum Bus Stand"

    கம்பம் பஸ் நிலையத்தில் மனைவியை ஓட ஓட அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கூடலூர் அண்ணா நகர் பேச்சியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் சின்னத்துரை(52). இவரது மனைவி மயில்(45). இவர்களுக்கு திருமணமாகி மகள், மகன் உள்ளனர். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாத காலமாக மயில் கருநாக்கமுத்தன்பட்டியில் உள்ள மகள் தேவயானி உடன் வசித்து வருகிறார். மயில் கேரளாவுக்கு தோட்ட வேலைக்கு சென்று விட்டு கருநாக்கமுத்தன்பட்டிக்கு செல்வதற்காக கம்பம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த சின்னத்துரை மயிலிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால், வெட்ட முயன்றார். மயில் கணவனிடமிருந்து தப்பிக்க அருகே உள்ள கடைக்குள் ஓடி ஒளிய முயன்றார். ஆத்திரமடைந்த சின்னத்துரை கடைக்குள் நுழைந்து மனைவியை வெட்டினார். இதில் அவரது 3 விரல்கள் துண்டானது. படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தனர். #tamilnews

    ×