search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cudalore"

    • தமிழ்நாட்டில் குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • 600 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஊட்டி:

    கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தினமும் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் சரக்கு லாரிகள் ஏராளமாக இயக்கப்படுகிறது. இவற்றில் தடை செய்யப்பட்ட பொருட்களும் கடத்தப்படுவதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தது. தமிழ்நாட்டில் குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் கூடலூர் தொரப்பள்ளி சோதனைசாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது காய்கறி மூட்டைகள் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று கூடலூர் நகரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது காய்கறி மூட்டைகளுக்கு இடையே வேறு சில மூட்டைகளும் இருப்பது தெரியவந்தது. கைது இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளை திறந்து பார்த்தனர்.

    அதில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 600 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சத்து 30 ஆயிரம் என்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே வெள்ளேரியை சேர்ந்த சாஜர் (வயது 38) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அதில் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்க முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சாஜரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

    ×