என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "crop insurance"
- சீர்காழி வட்டாரத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வரலாறு காணாத வகையில் மழை பெய்தது.
- வயல்களில் தண்ணீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட பெயர்களுக்கு ஹெட்ருக்கு ரூ. 13 500 நிவாரணத்தொகை தமிழக அரசு அறிவித்தது.
சீர்காழி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
சீர்காழி வட்டாரத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வரலாறு காணாத வகையில் மழை பெய்தது.
இதனால் சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்காவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் சேதம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
பாதிப்பு குறித்து தமிழகம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வருகை புரிந்து பார்வையிட்டு ஆய்வு செய்து இரண்டு வட்டங்களிலும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கினார்.
வயல்களில் தண்ணீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட பெயர்களுக்கு ஹெட்ருக்கு ரூ. 13 500 நிவாரணத்தொகை தமிழக அரசு அறிவித்தது.
இந்தத் தொகை பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு எந்த வகையிலும் போதாது.
தமிழக முதல்வர் நடப்பு ஆண்டுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்தில் 29 வருவாய் கிராமங்களுக்கும் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் 15 வருவாய் கிராமங்களுக்கும், கொள்ளிடம் ஒன்றியத்தில் 43 வருவாய் கிராமங்களக்கும் பயிர் காப்பீடு வழங்கப்படவுள்ளது சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் 153 வருவாய் கிராமங்களில் 87 வருவாய் கிராமங்களுக்கு மட்டுமே நடப்பு ஆண்டு பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது.
இதனால் மீதமுள்ள 65 வருவாய் கிராம விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர் ஆகையால் மீதமுள்ள 65 கிராமங்களுக்கும் பாரபட்சமின்றி நடப்பாண்டு பயிர் காப்பீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2022-23-ன் கீழ் குத்தகைதாரர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம்.
- பயிர்களையும் மிகக்குறைந்த பிரீமியத்தில் காப்பீடு செய்து அதிகபட்ச காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் பெறலாம்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளி–யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2022-23-ன் கீழ் குத்தகைதாரர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம். நெல், சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை, கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் மிகக்குறைந்த பிரீமியத்தில் காப்பீடு செய்து அதிகபட்ச காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் பெறலாம்.
விவசாயிகள் முன்மொழிவுப்படிவம், விண்ணப்பப்படிவம், பயிர் சாகுபடி அடங்கல் அறிக்கை, ஆதார் அட்டை நகல் மற்றும் குறைந்தபட்ச இருப்பு வைத்துள்ள வங்கிக்கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது அரசு பொது சேவை மையங்கள் ஆகிய இடங்களில் கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 5 சதவீதம் பிரிமியமும், இதர குறுகிய காலப் பயிர்களுக்கு 1.5 சதவீதம் பிரிமியமும் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் அருகில் உள்ள கபிலர்மலை வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறை விரிவாக்க அலுவலகத்தை அணுகலாம். எனவே கபிலர்மலை வட்டார விவசாயிகள், நடப்பு 2022-23-ம் ஆண்டு ரபி பருவத்தில் அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்து உள்ளார்.
- பயிர் காப்பீடு தொகையை பெற்று தரக்கோரி விவசாயிகள் மனு அளித்தனர்.
- கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளில் சிலர் பசுமை விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை பூவலிங்கத்திடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், கடந்த ஆண்டில் பயிர் காப்பீட்டிற்கு தொகை கட்டியும், இழப்பீட்டு தொகை இன்னும் வரவில்லை. அந்த பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை பெற்று தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது."
- சேதாரம் ஏற்படுவதற்கு முன்னரே விவசாயிகள் பயிர் காப்பீடு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய வரும் 21-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இழப்பினை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு சம்பா, தாளடி, பிசான பருவ பயிர்களுக்கான காப்பீடு கடந்த செப்டம்பர் 15-ம் தேதி பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தொடங்கப்பட்டது. இதுவரை 11 லட்சம் விவசாயிகளால் 15.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான அவகாசம் கடந்த நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்தது.
நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்காக நவம்பர் 21-ம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. பயீர் காப்பீடு செய்ய நாளை, நாளை மறுநாள் வங்கிகள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட 27 மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிறு, குறு விவசாயி சான்று பெறவும் விண்ணப்பம் அளித்தனர்.
- வேளாண்மை அலுவலர் மாரியப்பன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஊத்துக்குளி:
ஊத்துக்குளி தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை மற்றும் பயிர் காப்பீடு தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் வருவாய்த்துறையை சேர்ந்த தாசில்தார் தங்கவேல், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்மை உழவர் நலத்துறையை சேர்ந்த வேளாண்மை உதவி இயக்குனர் சசிரேகா, வேளாண்மை அலுவலர் மாரியப்பன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பயிர் காப்பீடு செய்ய தேவையான அடங்கல் மற்றும்பிற ஆவணங்களை விவசாயிகள் பெற்று சோள பயிருக்கு பயிர் காப்பீடு செய்தனர். சிறு, குறு விவசாயி சான்று பெறவும் விண்ணப்பம் அளித்தனர்.
முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் அம்பாயிரநாதன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு சான்றுகளை வழங்கினார்.
- நிலையான வருமானம் கிடைக்கும் வகையிலும் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- காங்கயம் வட்டாரம், நத்தக்காடையூா் பகுதியில் கீழ்பவானி பாசனத்தில் சம்பா நெல் பயிா் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
காங்கயம்:
காங்கயம் பகுதியில் 2ம் போக நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து பயன்பெறுமாறு காங்கயம் வேளாண்மை துறை உதவி இயக்குநா் து.வசந்தாமணி அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
காங்கயம் வட்டாரம், நத்தக்காடையூா் பகுதியில் கீழ்பவானி பாசனத்தில் சம்பா நெல் பயிா் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் செப்டம்பா் மாதத்தில் சாகுபடி செய்யப்படும் சம்பா பருவம் நெல்-2 ம் போக பயிருக்கு சிறப்பு பருவமாக கணக்கிட்டு, எதிா்பாராத இயற்கை இடா்ப்பாடுகளால் இழப்பு ஏற்பட்டால் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கும் வகையிலும் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே நெல் இரண்டாம் போகம் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் உரிய காலத்தில் பயிா் காப்பீடு செய்து மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் பயிா் காப்பீட்டுத் தொகை பெற்று பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்ய உரிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் வாயிலாக உரிய பிரீமியம் தொகை செலுத்தி பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு காங்கயம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் து.வசந்தாமணி 9344541648 என்ற எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதிகாரி தகவல்
- சேதாரம் ஏற்படுவதற்கு முன்னரே விவசாயிகள் பயிர் காப்பீடு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வட்டாரத் தில் நடப்பு சம்பா பட்டத்தில் இதுவரை 1,159-ஹெக்டர் நிலப்பரப்பில் நெல் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. இப்பட்டத்திற்கான பயிர் காப்பீடு கடந்த செப்டம்பர் 16-ந் தேதி முதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் விவசாயிகள் பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் ஆங்காங்கே கன மழை, முதல் மிக கனமழை பெய்து வருகிறது. எனவே பருவமழை மிக அதிகமாக பெய்து சேதாரம் ஏற்படுவதற்கு முன்னரே, விவசாயிகள் பயிர் காப்பீடு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி விவசாயிகள் வருகிற 15-ந்தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நேர பதிவை தவிர்த்து உடனடியாக விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்களை அணுகி புதுப் பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்து கொள்ளு மாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய முன்மொழிவு விண்ணப் பத்துடன் கணினி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் வழங் கும் அடங்கல் சான்று (பசலி 1432) மற்றும் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், உள்ளிட் டவற்றை சமர்பித்து மேற்கண்ட ஆவணங்களின் புல எண். தற்போது பயிர் சாகுபடி செய்துள்ள பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியவை சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளலாம் என காவேரிப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
- சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் கடந்தாண்டு தொடர் மழையால் பாதிக்கப்பட்டது.
- பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவோடு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் கடந்தாண்டு தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கையில் திருவோடு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கம் சீர்காழி ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார்.
கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், சீர்காழி ஒன்றிய தலைவர் சி. கலியமூர்த்தி, கொள்ளிடம் ஒன்றிய தலைவர் கே கலியமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் வீரராஜ் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் சிவராமன், ஏ ஐ டி யூ சி மாவட்ட செயலாளர் ராமன் ஆகியோர் கடந்த 2021- 2022 பயிர் காப்பீடு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து வகைகளுக்கும் உரிய பயிர் காப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நீதி சோழன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஜெய சக்திவேல், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பிரபாகரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் வித்யா தேவி, கட்சி நிர்வாகிகள் பாஸ்கரன், ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
- 2000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
- சம்பா பயிருக்கு காப்பீடு செய்து கொள்ள நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாள்.
பேராவூரணி :
வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இழப்பினை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்ய வேளாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) ராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.
பேராவூரணி வட்டாரத்தில் இதுவரை 2000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
இந்த வட்டாரத்தில் இயல்பான சம்பா சாகுபடி பரப்பு 5,500 ஹெக்டேர் ஆகும்.
சம்பா பயிருக்கு காப்பீடு செய்து கொள்ள நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாள் என்பதால் தற்போது நாற்று விட்டு நடவு மேற்கொள்ள உள்ள விவசாயிகள் தாமதம் இன்றி நவம்பர் 10ஆம் தேதிக்குள் நடவு பணியினை முடித்து பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
நெல் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்குரிய பிரீமியத் தொகை ரூபாய் 539.
இதற்கான காப்பீட்டு தொகை ரூபாய் 35,900 ஆகும்.
கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஆதார் கார்டு நகல், சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி பாஸ் புத்தகத்தின் நகல்களை சமர்பித்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
கடன் பெறா விவசாயிகள் ஏதேனும் ஒரு இ சேவை மையம் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நவம்பர் 15ம் தேதிக்குள் பிரீமியத்தை செலுத்தி காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டில் பயிர் காப்பீடு திட்ட மானதுரிலையன்ஸ் பொது பயிர் காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், பயிர் காப்பீடு செய்யும் போது எந்த கிராமத்தில் நிலம் அமைந்துள்ளதோ, அந்தக் கிராமத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
குடியிருப்பு கிராமத்தை எந்த காரணத்தை முன்னிட்டும் குறிப்பிடக் கூடாது.
பயிர் காப்பீடு செய்தமைக்கான ரசீது மற்றும் இதர ஆவணங்களை பயிர் காப்பீடு தொகை பெரும் வரையில் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
பயிர் காப்பீடு செய்து கொள்ள நவம்பர் 15 கடைசி தேதி என்பதால் இறுதி நாள் வரை காத்திருக்காமல் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
- குறுவைக்கான பயிர் இன்சூரன்ஸ் அறிவிப்பு செய்வதுடன் கால நீட்டிப்பு செய்து பயிர் காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குறுவை காப்பீடு செய்ய 31ஆம் தேதி உடன் கெடு முடிவடைய உள்ள நிலையில் இதுவரை தமிழக அரசு அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.
தரங்கம்பாடி:
மின் கட்டணஉயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் த.மா.கா. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறும்போது:-
மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். குறுவை காப்பீடு செய்ய 31ஆம் தேதி உடன் கெடு முடிவடைய உள்ள நிலையில் இதுவரை தமிழக அரசு அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. குறுவைக்கான பயிர் இன்சூரன்ஸ் அறிவிப்பு செய்வதுடன் கால நீட்டிப்பு செய்து பயிர் காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் சிங்காரவேலன், மாநில இளைஞரணி துணை பொதுச் செயலாளர் கார்த்திக், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், செம்பை வட்டாரத் தலைவர் சார்லஸ் உள்ளிட்ட ஏராளமான கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் குறுவை பருவத்துக்கு பயிர்க்காப்பீடு அறிவிக்கப்படவில்லை.
- குறுவைக்கு தேவையான யூரியா தட்டுப்பாடு என்ற நிலையை தாண்டி முற்றிலும் இல்லை என்கிற நிலைக்கு சென்றுவிட்டது
குத்தாலம்:
குத்தாலம்ஒன்றியம் பெரம்பூரில் மாற்றுக்க ட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அவைத் தலைவர் பி.வி.பாரதி, மாவட்ட துணை செயலாளர் செல்லையன், மாவட்ட மகளிரணி செய லாளர் சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் வரவேற்றார்.
இதில், பெரம்பூர், சேத்தூர், அனந்தநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தி.மு.க மூத்த நிர்வாகி ஜெயபால் தலைமையில் தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் 150 பேர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.அவர்களுக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைத்துக்கொண்ட ஓ.எஸ்.மணியன் பேசுகை யில், தி.மு.க ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்காது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் குறுவை பருவத்து க்கு பயிர்க்காப்பீடுஅறிவிக்க ப்படவில்லை. குறுவைக்கு தேவையான யூரியா தட்டு ப்பாடு என்கிற நிலையை தாண்டி முற்றிலும்இல்லை என்கிற நிலைக்கு சென்றுவி ட்டது என்றார்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் மகேந்திரன், சந்தோஷ்குமார்,ஜனா ர்த்தனன், ஊராட்சிமன்றத் தலைவர் சேத்தூர் மணிக ண்டன் மற்றும் ஆண்டவர், செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஒன்றிய நிர்வா கிகள் பலர் கலந்து கொ ண்டனர்.
- பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னல் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
- குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு இல்லை என்பது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னல் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியது. மழை தொடங்கியவுடன் மின்சாரம் தடைபட்டு பின் நீண்ட நேரம் கழித்து மின்சாரம் மீண்டும் வந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதியடைந்தனர். நேற்று பெய்த மழை தற்போது நடவு செய்யப்பட்டுள்ள குறுவை பயிர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள முன்பட்ட குறுவை பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கி ன்றனர்.
கடந்த ஆண்டு மழையால் குறுவை அறுவடையின் போது விவசாயிகள் இழப்பை சந்தித்தனர். குறுவைக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படாததால் பேரிழப்பு ஏற்பட்டது. மத்திய அரசு காப்பீட்டு நிறுவனம் மாநில அரசின் பங்கு தொகையை உயர்த்தியது காப்பீடு செய்ய இயலாமல் போனதற்கு காரணம் என்று கூறப்பட்டது.ஒரு ஆண்டுக்கு மேலாக முடிவேதும் எடுக்காமல் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு இல்லை என்பது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாது டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்களுக்கு காப்பீடு செய்வது குறித்து இறுதி முடிவை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்ட நிலையில் கல்லணையில் இருந்து காவிரியில் 9,006 கன அடி, வெண்ணாற்றில் 9001 கன அடி, கல்லணை கால்வாயில் 2804 கனஅடி, கொள்ளிடத்தில் 4494 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்