search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cow death"

    • விபத்தில் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 எருமை மாடுகளும் இறந்து போனது.
    • விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருத்தணி அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன் (45). இவர் மனைவி ஞானேஸ்வரி(36) மகன்கள் ஹரிகிருஷ்ணன், லோகேஷ் ஆகியோருடன் காரில் சென்னை நோக்கி சென்றார்.

    சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் அடுத்த புதூர் அருகே கார் சென்ற போது சாலையின் குறுக்கே திடீரென 2 எருமை மாடுகள் வந்தன.

    இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென மாடுகள் மீது மோதியது. அதிவேகத்தில் மோதியதால் கார் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த ரகுநாதன், ஞானேஸ்வரி மற்றும் அவர்களது மகன்கள் அரிகிருஷ்ணன், லோகேஷ் ஆகியோர் காயத்துடன் உயிர்த்தப்பினர்.

    மேலும் இந்த விபத்தில் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 எருமை மாடுகளும் இறந்து போனது.

    விபத்து காரணமாக அப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வடிவேல் 10 பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.
    • அருகில் பொதுமக்கள் யாரும் செல்லதாதல் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

    திருவள்ளூர்:

    பூண்டி, புஷ்பகிரி கோவில் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் 10 பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மாலை பூண்டி பகுதியில் பலத்த மழை பெய்தபோது அவரது 3 மாடுகள் வயல்வெளி பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே சென்றன.

    அந்த நேரத்தில் டிரான்ஸ்பார்மரில் மின்கசிவு ஏற்பட்டதால் 3 பசுமாடுகளும் மின்சாரம் பாய்ந்து இறந்தன. அருகில் பொதுமக்கள் யாரும் செல்லதாதல் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

    • ரெங்கராஜ்பசுமாடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வெங்கனூர்-ஆத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த முகேஷ் என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக அந்த மாடு மீது மோதியது.


    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூரை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 65). விவசாயி. இவர் பசுமாடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வெங்கனூர்-ஆத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த முகேஷ் என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக அந்த மாடு மீது மோதியது. இதில் மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது.

    இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    வேடசந்தூர் அருகே மின்னல் தாக்கியதில் தி.மு.க பிரமுகர் உள்பட 2 பேர் மற்றும் பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி- மின்னலுடன் கனமழை பெய்தது. குஜிலியம்பாறையை சேர்ந்த கணேசன்(வயது38). இவர் பாளையம் பேரூராட்சி ராமகிரி தி.மு.க வார்டு செயலாளராக இருந்தார். நேற்று மாலை தனது தோட்டத்தில் இருந்தபோது திடீரென மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் 100 நாள் வேலைக்கு சென்ற சாமிமுத்தன் பட்டியை சேர்ந்த மரியசெல்வம்(35). மழைக்காக மரத்தின் அடியில் நின்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து எரியோடு போலீசார் விசாரித்து வருகின்றனர். ரங்கநாத புரத்தை சேர்ந்த உமாசங்கர்(40). தோட்டத்தில் கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்றிரவு இரவு பெய்த மழையின்போது மின்னல் தாக்கி சுமார் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பசுமாடு பலியானது. இதேபோல் ஆர்.ஜி.வலசை சேர்ந்த மாலதி என்பவரது பசுமாடும் மின்னல் தாக்கி பலியானது.

    ×