search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Counselling"

    • இன்று 16-ந் தேதி தமிழக அரசின் சிறப்பு திட்டமான பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
    • கிராம மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கீழ்ப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழி யாக வந்த பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு காரை சாலை யோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். இவரை பார்த்ததும் அந்த வழியாக வந்து கொண்டிருந்த கலெக்டர் ஷ்ரவன்குமார், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்தி கேயன் ஆகியோரும் காரில் இருந்து இறங்கி வந்தனர்.

    அவர்களிடம் இன்று 16-ந் தேதி தமிழக அரசின் சிறப்பு திட்டமான பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முடிக்கப்பட்டு உள்ளதா? எங்கெங்கு நடத்தப்படுகிறது என்பது உள்ளிட்ட விவர ங்களை கேட்டறிந்த அமைச்சர் எ.வ.வேலு நிகழ்ச்சியில் தாமும் பங்கேற்ப தாக கூறினார். சில நிமிடங்களுக்கு பின்னர் அவர்கள் அங்கி ருந்து காரில் புறப்பட்டு சென்ற னர். சாலை யோரத்தில் நின்றபடி அரசு அலுவல ர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு கலந்துரை யாடியது அங்கி ருந்த கிராம மக்கள் மற்றும் கட்சி தொண்ட ர்களி டையே நெகிழ்ச்சி யை ஏற்படுத்து வதாக இருந்தது.

    • இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை கடந்த 8ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • மொத்தம் 62 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2022 -23 ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை கடந்த 8ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன.

    முதல் கட்ட கலந்தாய்வில் பெரும்பான்மையான இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் கலை பாடப்பிரிவுகளில் 17 இடங்கள் அறிவியல் பாடப் பிரிவுகளில் 13 இடங்கள் வணிகவியல் பாடப்பிரிவுகள் 32 இடங்கள் என மொத்தம் 62 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. காலியாக உள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கடந்தாய்வு வரும் 27 -ந்தேதி நடைபெற உள்ளது. இது குறித்த குறுஞ்செய்தி தரவரிசை பட்டியலின் படி ஏற்கனவே விண்ணப்பித்திருந்த மாணவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும். எஸ்எம்எஸ். பெறப்பட்ட மாணவர்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

    ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், 6 போட்டோக்கள் கொண்டு வர வேண்டும். மேற்கண்டவாறு கல்லூரி முதல்வர் சோ. கி.கல்யாணி தெரிவித்துள்ளார்.

    • இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • தேர்வுக்கு தயார் செய்யும் விதம் தேர்வுக்கான பாட குறிப்புகள், தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டகலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 தேர்வின் வாயிலாக 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இந்த தேர்வு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி நடக்கிறது. தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை (வியாழக்கிழமை ) காலை 10:30 மணிக்கு தொடங்கி நடத்தப்பட உள்ளது. அன்றைய தினம் தேர்வுக்கு தயார் செய்யும் விதம் தேர்வுக்கான பாட குறிப்புகள், தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

    தொடர்ந்து பயிற்சி வகுப்பானது அனுபவமிக்க சிறப்பு வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுகிறது. பாடக் குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

    தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வி தகுதியை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். போட்டித் தேர்வு எழுதுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரத்தில் கமலாவதி சீனியர் செகன்டரி பள்ளி செயல்பட்டு வருகிறது.
    • மாணவர்களுக்கான மனநல ஆலோசகரை நியமித்து அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவது சிறந்த முன்னுதாரணமாகும்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரத்தில் கமலாவதி சீனியர் செகன்டரி பள்ளி செயல்பட்டு வருகிறது.

    பொன்விழா

    சாகுபுரம் டி.சி.டபுள்யூ. தொழிற்சாலையின் நிறுவனரான சாகு சிரியான்ஸ் பிரசாத் ஜெயின் கிராமப்புற மாணவர்களும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துடன் கூடிய சிறந்த கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமது துணைவியார் கமலாவதி பெயரில் தொடங்கிய இந்த பள்ளியின் 50-வது ஆண்டுவிழா பொன்விழாவாக கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு பள்ளியின் அறங்காவலரும், டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவித் தலைவருமான ஜி.சீனிவாசன் தலைமை தாங்கினார்.தலைமை ஆசிரியர் சுப்புரத்தினா வரவேற்று பேசினார். பள்ளியின் முதல்வர் அனுராதா அறிக்கை வாசித்தார்.

    ஆலோசனைகள்

    தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக தலைவர் டி. கே. ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    சாகுபுரம் கமலாவதி சீனியர் செகன்டரி பள்ளி இன்று பொன்விழா கொண்டாடும் இந்த தருணத்தில் 75-வது சுதந்திர தின விழாவும், சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இங்கு கல்வியுடன் விளையாட்டு, கலை, இலக்கியம், ஒழுக்கம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

    மாணவர்களுக்கான மனநல ஆலோசகரை நியமித்து அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவது சிறந்த முன்னுதாரணமாகும். இதனை அனைத்து பள்ளிகளும் கடைப்பிடித்தால் நன்மையாக இருக்கும்.மாணவர்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே கணினி, செல்போன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இதனை கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பள்ளி டிரஸ்டியும், டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த பொது மேலாளருமான ராமச்சந்திரன், மாணவர்களின் மனநல ஆலோசகர் கணேஷ் ஆகியோரும் பேசினர்.

    விழாவில் கடந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மற்றும் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர். நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    தலைமை ஆசிரியர் ஸ்டீபன் பாலாசிர் நன்றி கூறினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி மதன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • மன தைரியத்தை தர வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
    • திருப்பூரில் 464 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் நீட் தேர்வெழுதிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் மனநல ஆலோசனை வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி நடவடிக்கை எடுத்துள்ளார்.

    இது குறித்து, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறியதாவது:-

    அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளி 'நீட்' ஒருங்கிணைப்பாளர்களுக்கும், பாட கருத்தாளர்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தியுள்ளோம். அன்பான முறையில் வாழ்த்து சொல்லி, மனநிலையை அறிந்து உரிய ஆலோசனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு தேர்வு குறித்த அழுத்தம் தராமல் மன தைரியத்தை தர வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

    மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு குறித்த சில புரிதல்களை ஏற்படுத்த வேண்டும். மன அழுத்தத்திற்கு ஆளாகும் முன் அவர்களை பேணிக்காக்க வேண்டியது அவசியம்.திருப்பூரில் 464 பேர் தேர்வு எழுதியுள்ளனர். தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள இயலவில்லை எனில் நேரில் சென்று கவுன்சிலிங் வழங்க வேண்டும். மன அழுத்தத்தை போக்க தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருக்க அறிவுறுத்தியுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

    • இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடந்தது.
    • 472 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

    திருப்பூர் :

    தொடக்க கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், இடமாறுதல் கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியது.

    முதல் நாளன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி தலைமையில் நடந்தது. முதன்மை கல்வி அதிகாரி, பல்லடம் மாவட்ட கல்வி அதிகாரி, மற்றும் அனைத்து ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் முன்னிலையில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    இதில் மாநில சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் காட்டப்பட்டு விரும்பும் இடங்கள் வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் 472 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால் வெளி மாவட்டத்தில் பணியாற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.  

    முதுகுளத்தூரில் கல்லூரி மாணவி ஒருவர் 18 வயது பூர்த்தியடைந்த உடனே காதலனுடன் சென்ற நிலையில் மாணவிக்கு ‘கவுன்சிலிங்’ வழங்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூரை சேர்ந்த கண்ணன் மகள் தீபிகா (வயது18). இவர் கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவரும், கமுதி அருகே சீமனேந்தலை சேர்ந்தவரும், தற்போது பாம்பனில் வசித்து வரும் ராமன் மகன் வெற்றிவேலும் (21) கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    கடந்த மாதம் 18 வயது தீபிகாவிற்கு பூர்த்தியடைந்ததையடுத்து, ஜூலை முதல் தேதியில் தீபிகா முதுகுளத்தூரில் தனது வீட்டிலிருந்து இரவு வெளியேறி, காதலன் வெற்றிவேல் வீட்டில் தஞ்சமடைந்தார்.

    இதுகுறித்து தீபிகாவின் தாய் அமுதா தனது மகளை காணவில்லை என முதுகுளத்தூர் போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து முதுகுளத்தூர் போலீசார் காதல் ஜோடிகள் தீபிகா -வெற்றிவேலை கண்டுபிடித்து, முதுகுளத்தூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கீதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    கல்லூரி மாணவி தீபிகாவிற்கு 18 வயது முடிந்து சில வாரங்களே ஆனநிலையில், அவருக்கு ராமநாதபுரம் சமூக நலத்துறை அதிகாரிகள் ‘கவுன்சிலிங்’ வழங்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    மேலும் இருவரும் மேஜரான நிலையில் இருப்பதால் கவுன்சிலிங் முடிந்தபிறகு இருவரின் விருப்பபடி செல்லவும் உத்தரவிட்டார்.
    வருகிற 28-ந்தேதி எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மாணவர் சேர்க்கை செயலாளர் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 2900 ஆகும். இதில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 455 போக 2445 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

    இதுதவிர 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் போக 783 இடங்கள் இருக்கின்றன.

    மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 127 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவற்றை சேர்த்து 3355 எம்.பி.பி.எஸ். இடங்கள் முதல்கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ- மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.

    இன ஒதுக்கீட்டின்படியும், நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் முறையேயும் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். 720-க்கு 96 மதிப்பெண் பெற்று இருந்தாலே தகுதி உடையவராக கருதப்படுகிறது.

    ஆனால் அரசு மருத்துவக் கல்லூரிகளிலோ, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிப்பதற்கு நீட் தேர்வில் 400-க்கு மேல் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். ஓ.பி.சி., பி.சி., எஸ்.சி., எஸ்.டி. என்ற இன ஒதுக்கீட்டின்படி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் சலுகை வழங்கப்படுவதால் அந்த வரம்பிற்கு உட்பட்ட கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.

    கடந்த ஆண்டை விட இந்த வருடம் நீட் தேர்வில் அதிகளவு மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களை விட தேர்ச்சி விகிதம் குறைவு என்றாலும் இந்த வருடம் போட்டி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நாளை மறுநாள் (11-ந்தேதி) முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப் படிவம் விற்பனை செய்யப்படுகிறது.

    இதுதவிர மருத்துவக் கல்வி வெப்சைட்டில் இருந்தும் பதிவிறக்கும் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 19-ந்தேதி மாலை 5.15 மணிக்குள் சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு கிடைக்கும்படி சமர்ப்பிக்க வேண்டும்.

    விண்ணப்ப படிவத்துடன் வழங்கப்படும் விபர குறிப்புகளில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதனை முழுமையாக படித்து படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    அதனை பின்பற்றாத விண்ணப்பதாரர்கள் படிவங்கள் நிராகரிக்கப்படும் என்று மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

    2018-19ம் ஆண்டு மருத்துவ படிப்பதற்கான மாணவர் சேர்க்கை குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் 11-தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பம் பெறுவதற்கு 19-ந்தேதி கடைசி நாளாகும். கடந்த ஆண்டை போல எப்படியும் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வரும் என்று எதிர் பார்க்கிறோம்.

    விண்ணப்ப படிவங்கள் வந்தபிறகுதான் மாணவர்கள் பெற்ற மதிப்பெண், ஜாதி அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும். இப்போதே தோராயமாக கட்-ஆப் மதிப்பெண்களை கூற இயலாது.

    மொத்தம் பெறப்பட்டுள்ள மாணவர்களின் மதிப்பெண், மற்றும் இன ஒதுக்கீட்டை பின்பற்றி ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும். வருகிற 28-ந்தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    தற்போது உள்ள நிலவரப்படி 3355 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும். மதுரை, நெல்லை, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் கூடுதலாக 250 எம்.பி.பி.எஸ். இடங்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த இடங்கள் கிடைத்தால் 2-வது கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MBBS
    அகில இந்திய பொது பிரிவு, மாற்றுத்திறனாளி, புதுவை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வரும் 26-ந்தேதி, புதுவை நிர்வாக பிரிவு கட்டிடத்தில் காலை 8 மணிக்கு ஜிப்மர் கலந்தாய்வு தொடங்குகிறது. #Jipmer
    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் 150, காரைக்கால் ஜப்மர் கிளையில் 50 என மொத்தம் 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

    ஜிப்மர் எம்.பி.பி.எஸ். இடங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு, கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் நடந்தது. ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் தேர்வினை எழுதினர்.

    புதுவையில் 1,795 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஜிப்மர் இணையதளத்தில் www.jipmer.puducherry.gov.in வெளியிடப்பட்டது.

    அகில இந்திய ஒதுக்கீட்டில், மாணவர் அன்கடலா அனிரூத் பாபு 99.9987799 சதவீத மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் அகில்தம்பி 99.9986570 மதிப்பெண் எடுத்து 2-ம் இடமும், பிரிராக்திரிபாதி 99.9975598 மதிப்பெண் எடுத்து 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

    அகில இந்திய பொது பிரிவு, மாற்றுத்திறனாளி, புதுவை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வரும் 26-ந்தேதி, புதுவை நிர்வாக பிரிவு கட்டிடத்தில் காலை 8 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது.

    அகில இந்திய ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு 27-ந்தேதி கவுன்சிலிங் நடக்கிறது.

    புதுவை பொதுபிரிவு ஓ.பி.சி., எஸ்.சி., என்.ஆர்.ஐ. அல்லது ஓ.சி.ஐ. மாணவர் களுக்கு 28-ந்தேதி கவுன்சிலிங் நடக்கிறது.

    ஜிப்மர் நுழைவு தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களுடைய மதிப்பெண் பற்றிய விபரங்களை www.jipmer.puducherry.gov.in அல்லது www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் வரும் 12-ந்தேதி காலை 11 மணியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். #Jipmer
    நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 3355 எம்.பி.பி.எஸ் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. #NEET #NEET2018
    சென்னை:

    எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (நீட்) முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மாணவி கீர்த்தனா 720க்கு 676 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 12-வது இடம் வகித்தார். சென்னை கே.கே.நகரை சேர்ந்த அந்த மாணவி தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    தொழில் மற்றும் கல்வி வளர்ச்சியில் பின் தங்கிய பல மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். பீகார், ராஜஸ்தான், அரியானா, குஜராத், பஞ்சாப், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை விட தமிழகம் நீட் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கியுள்ளது.

    நீட் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற 11-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 19-ந்தேதி கடைசி நாளாகும் தரவரிசை பட்டியல் 28-ந்தேதி வெளியிடப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி தொடங்கி 5-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2900 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருக்கின்றன. அதில் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடான 455 இடங்கள் போக மீதமுள்ள 2445 எம்.பி.பி.எஸ் இடங்கள் நீட் தேர்வு கட்-ஆப் மார்க் மற்றும் இன ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. இதுதவிர 10 தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 783 மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 127 இடங்கள் என மொத்தம் 3355 எம்.பி.பி.எஸ் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.


    இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவக் குழு செயலாளர் டாக்டர் செல்வராஜன் கூறியதாவது:-

    அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2900 மொத்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு போக மீதமுள்ள 2445 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழக இடங்களும் முதல் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

    ஒரு சில தனியார் மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் கேட்டு இந்திய மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பித்துள்ளன.

    மதுரை, நெல்லை அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 100 இடங்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரிகளில் 50 இடங்களும் கூடுதலாக அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். 250 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைத்தால் இந்த வருடம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூடுதல் வாய்ப்பாக அமையும்.

    கடந்த ஆண்டு இரட்டை குடியுரிமையுடன் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களால் பிரச்சனை எழுந்து. இந்த ஆண்டு அதுபோன்ற நிலை உருவாகாது. மருத்துவ படிப்பிற்கான வழிகாட்டுதல் கையேட்டில் அதுபற்றி தெளிவான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    அதையும் மீறி முறைகேடாக மாணவர் சேர்க்கை பெற முயன்றால் கடும் நடவடிககை எடுக்கப்படும்.

    மருத்துவ படிப்பில் சேரக்கக்கூடிய மாணவர்கள் 2 மாநிலத்தில் கூட விண்ணப்பிக்கலாம். உதாரணத்திற்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் புலம் பெயர்ந்து இருந்தால் கர்நாடகாவிலும், தமிழகத்திலும் விண்ணப்பிக்கலாம்.

    ஆனால் கர்நாடகவில் மட்டும் தான் குடியுரிமை சான்றிதழை விண்ணப்பிக்க முடியும். தமிழகத்தில் குடியுரிமை சான்று முறைகேடாக பெற்று விண்ணப்பித்து இருந்தால் அது தவறாகும்.

    இதுபோன்ற தவறுகளை கடந்த வருடம் விண்ணப்பித்தவர்கள் செய்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு இரட்டை குடியுரிமையுடன் விண்ணப்பித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.   #NEET #NEET2018
    ×