search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Councilors"

    • நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது
    • நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள் சாலைகளில் தங்கும் நிலை உள்ளது. எனவே அவர்களுக்காக பஸ் நிலைய முதல் தளத்தில் ஓய்வறை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    குடிநீர் கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு

    கூட்டத்தில் நெல்லை மாநகராட்சியில் குடிநீர் கட்டணம் 5 சதவீதம் உயர்த்துவதற்கு இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால் இதற்கு பெரும்பாலான கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கட்டண உயர்வு தீர்மானம் ஒத்திவைக்கப்பட்ட.து.

    பின்னர் மேயர் சரவணன் பேசியதாவது:-

    பொங்கல் பண்டிகையை யொட்டி ரேஷன் அட்டைதா ரர்களுக்கு ரூ.1,000 அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். அமைச்சராக பதவி ஏற்றுள்ள தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள் சாலைகளில் தங்கும் நிலை உள்ளது. எனவே அவர்களுக்காக பஸ் நிலைய முதல் தளத்தில் ஓய்வறை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மாநகர பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுவதை யொட்டி குடிநீர் கட்டணம் 5 சதவீதம் உயர்த்துவற்கு இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது.

    ஆனால் பெரும்பாலான கவுன்சிலர்கள், பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிப்ப தால் அதனை ஒத்தி வைக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    28-வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகர் பேசும் போது, ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் எனது வார்டு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் நடைபெற்று வருகிறது.

    அங்கு தூய்மை பணியாளர்கள் வருகை பதிவேடு அறை அமைக்க வேண்டும், பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கூறினார்.

    கவுன்சிலர் ரசூல் மைதீன் பேசும் போது, மேலப்பா ளையம் கன்னிமார் குளத்தில் சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுப்ப தற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கூறினார்.

    கவுன்சிலர் முத்து சுப்பிர மணியன் கூறும்போது, மாநக ராட்சிக்கு சொந்த மான ஏராளமான இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனை மீட்க வேண்டும். குடிநீர் கட்டணத்தை உயர்த்த கூடாது என கோரிக்கை விடுத்தார்.

    32-வது வார்டு கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் பேசும் போது, குலவணிகர்புரம் ரெயில்வே கேட் பணியை தொடங்க வேண்டும். பாளை பஸ் நிலையத்தில் மீண்டும் காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டை அமைக்க வேண்டும் என கூறினார்.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் தச்சை சுப்பிர மணியன், சுதா மூர்த்தி, கிட்டு என்ற ராம கிருஷ்ணன், கருப்ப சாமி கோட்டையப்பன், உலகநாதன், ரவீந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர்.

    கமிஷனர் பேச்சு

    தொடர்ந்து கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி பேசியதாவது:-

    2008-ம் ஆண்டு கலைஞர் ஆட்சி காலத்தில் பாபநாசத்தில் இருந்து மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு வர முயற்சி செய்யப்பட்டது. பின்னர் 2011-ம் ஆண்டு அரியநாயகிபுரத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. 2016-ம் ஆண்டு இதற்காக ரூ.230 கோடி ஒதுக்கப்பட்டது.

    இதில் 10 சதவீத தொகையை மாநகராட்சி செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. 30 சதவீத தொகை வெளிநாடு வங்கி களிடம் இருந்து கடன் பெற முடிவு செய்யப்பட்டது.

    இந்த திட்டம் 2018-ம் ஆண்டு முடிவடைந்திருக்க வேண்டும். சில காரணங் களால் தாமதமாகி உள்ளது. இந்த தாமதத்தால் வட்டியுடன் சேர்த்து தற்போது திட்டத்திற்கு ரூ.332 கோடி தேவைப்படுகிறது.

    மேலும் முதலில் மாநகராட்சி பகுதிக்கு மட்டும் தண்ணீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. தற்போது வி.எம். சத்திரம், கே.டி.சி. நகர் உள்ளிட்ட விரிவாக்க பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதனால் மாநகராட்சி ரூ.332 கோடி ரூபாய் கடனில் உள்ளது. எனவே கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகி உள்ளது.

    ரூ.35.63 கோடியில் முறப்பநாட்டில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் வெற்றி பெற்றால் விரிவாக்க பகுதிகளுக்கு எளிதில் தண்ணீர் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • குருவிகுளம் ஒன்றிய குழு கூட்டம் ம.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
    • அரசு அதிகாரிகளை மிரட்டும் தோரணையில் பேசியதை கண்டித்தும் வெளிநடப்பு செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    குருவிகுளம் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ம.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 11-வது வார்டு கவுன்சிலர் மணிமாலா சுரேஷ், 17-வது வார்டு கவுன்சிலர் ராமலட்சுமி பாண்டியராஜ், 14-வது வார்டு கவுன்சிலர் வீரலட்சுமி செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

    கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. கவுன்சிலர்கள் ஒன்றிய குழு தலைவர் முறைகேடுகள் செய்துள்ளதாகவும், ஒன்றியத்தின் தென் பகுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் ஒன்றிய குழு தலைவர் பகுதிகளில் பணிகள் தேர்வு செய்யப்படுவதாகவும் ஒன்றிய குழு தலைவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், நிதிகள் முறையாக செலவு செய்யப்பட வில்லை என்றும், ஒன்றிய பொறியாளர் ரமேஷ் என்பவர் ஆலோசனையின்படி பணிகள் தேர்வு செய்யப்படுவதாகவும் கவுன்சிலர்களை கலந்து கொள்ளாமலும் விவாத த்திற்கு கொண்டுவராமலும் தீர்மானங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் அரசு அதிகாரிகளை மிரட்டும் தோரணையில் பேசியதை கண்டித்தும் வெளிநடப்பு செய்தனர். மேலும் ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக கூறினர்.

    • ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து முறையாக விசாரணை நடத்த ஒரு குழு ஒன்று அமைக்க வேண்டும்.
    • நான்காவது குடிநீர் திட்ட பணிகளில் விடுபட்ட பகுதிகளை இணைக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று காலை மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டு பகுதியில் உள்ள குறைகளை கோரிக்கையாக பேசினர். அ.தி.மு.க. கவுன்சிலரும் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி பேசியதாவது:- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அ.தி.மு.க. ஊழல் செய்துள்ளது என்பதை ஏற்க முடியாது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து முறையாக விசாரணை நடத்த ஒரு குழு ஒன்று அமைக்க வேண்டும். இந்த குழு விசாரணைக்கு முழுமையாக அ.தி.மு.க. ஒத்துழைப்பு வழங்கும். பாதாள சாக்கடை மற்றும் நான்காவது குடிநீர் திட்ட பணிகளில் விடுபட்ட பகுதிகளை இணைக்க வேண்டும். இதுபோல் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடைகள் அமைக்க இட வசதி இல்லை. இதன் காரணமாக பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மாநகராட்சி சார்பில் ஒரு வரையறை செய்து எந்தெந்த பகுதியில் இடம் உள்ளது என்பது குறித்து தெளிவாக தெரியப்படுத்த வேண்டும். மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தினால் பல்வேறு இடங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே அந்த பகுதிகளில் மின் விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

    அதேபோல் பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூடி தார் சாலை அமைக்க வேண்டும்.மின் விளக்குகள் சரிவர எரியாததால் அதனை சரி செய்ய வேண்டும். அதேபோல் குப்பைகள் அதிக அளவு தேங்கி கிடப்பதால் அதனை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

    ம.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜ் பேசியதாவது:- காண்டிராக்ட் எடுத்தவர்கள் எந்த வேலையையும் சரிவர செய்யாமல் அரைகுறையாக விட்டு சென்றுள்ளனர். குறிப்பாக மாநகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் மட்டும் அதிகப்படியான வேலைகள் நடந்துள்ளது. ஆனால் வடக்கு பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை தோண்டுவதற்கு குழி தோண்டும்போது அனைத்து வீடுகளில் குடிநீர் பைப்பையும் உடைத்து உள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதனை சரி செய்ய வேண்டும்.கவுன்சிலர்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட மேயர் தினேஷ் குமார் அதற்கு பதில் அளித்து பேசினார்.

    முன்னதாக கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் ரவி , கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை, சாலை உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள், ஒவ்வொரு கூட்டத்தின் போது ஸ்மார்ட் சிட்டி ஊழலையே கோரிக்கையாக வைத்து பேசுகின்றனர். என்ன ஊழல் நடந்தது என்று விசாரியுங்கள். அதற்கு அ.தி.மு.க. முழு ஒத்துழைப்பு அளிக்கும். திரும்ப திரும்ப அதையே பேசி நேரத்தை வீண் அடிக்காதீர்கள். மக்களுக்கான பிரச்சினையை தீர்க்கும் வகையில் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்றனர். இதனால் அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கும், கம்யூனிஸ்டு கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    • கவுன்சிலர்கள் தங்களது தேவை குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்கள் கண்டு கொள்வதில்லை
    • நகராட்சியில் தெருவிளக்குகள் எரிவதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

    ஊட்டி

    ஊட்டி நகரசபை கூட்டம் அதன் தலைவா் வாணீஸ்வரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஆணையா் காந்திராஜன், பொறியாளா் இளங்கோவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது-

    ஜாா்ஜ்: கவுன்சிலா்கள் பெயரை பயன்படுத்தி நகராட்சி அதிகாரிகள் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் பணம் வசூல் செய்கின்றனா். இதை தடுக்க வேண்டும்.

    வனிதா: வளா்ச்சிப் பணிகள் சம்பந்தமாக பொக்லைன் எந்திரம் உள்ளிட்ட விஷயங்களை நகராட்சி நிா்வாகத்திடம் கேட்டால் உடனடியாக கிடைப்பதில்லை.

    ரஜினி: எட்டின்ஸ் சாலையில் அலங்காா் பகுதியிலுள்ள மழை நீா் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதால் தண்ணீா் வீடுகளுக்குள் செல்கிறது. முருகன் நகா் பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.

    தம்பி இஸ்மாயில்: ஹவுஸிங் யூனிட் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது

    அபுதாகீா்: நகராட்சியில் தெருவிளக்குகள் எரிவதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அரசு உயா் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது கவுன்சிலா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    ரவி: எல்க்ஹில் பகுதியில் அண்மையில் பெய்த மழை காரணமாக வீடுகளுக்குள் மண் புகுந்துள்ளது.

    மேரி புளோரினா மாா்ட்டின்: டெண்டா் விடுவது குறித்து கவுன்சிலா்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. ஆனால் நகராட்சி கையேட்டில் எந்த டெண்டரும் வருவதில்லை.

    ரகுபதி: எச்.எம்.டி. பகுதியில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும்.

    செல்வராஜ்: 32-வது வாா்டில் பழுதடைந்து குழாய்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜெயலட்சுமி: குப்பை அள்ள வாகனங்கள் முறையாக வருவதில்லை.

    குமாா்: வி.சி.காலனி பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

    துணைத் தலைவா் ரவிக்குமாா்: புதிதாக கட்டப்படும் குடியிருப்புகளுக்கான அனுமதியை மாவட்ட கலெக்டரிடம் இருந்து பெறப்படும் முறையை மாற்றி நகராட்சி பகுதிக்குள் நகராட்சி நிா்வாகமே அனுமதியளிக்கும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.

    கவுன்சிலர்கள் தங்களது தேவை குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்கள் கண்டு கொள்வதில்லை. மக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்களை அவர்கள் அவமானப்படுத்துகின்றனர் என்று கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி ஆணையாளரிடம் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கவுன்சி லர்களுக்கும் அதிகா ரிகளுக்கும் சரியான ஒருங்கி ணைப்பு இல்லாததால் நகராட்சி வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

    • செ ன்னிமலை நகருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீ ர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் 13 தி.மு.க. கவுன்சிலர்கள், தலைவர் மற்றும் ம.தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் செயல் அலுவலர் அறையில் நேற்று மதியம் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர்.

    சென்னிமலை:

    செ ன்னிமலை நகருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீ ர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக பவானி அருகே காவிரி ஆற்றில்உள்ள கிணறுகளில் தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு குழாய்கள் மூலம் கருமாண்டி செல்லி பாளையம், பெருந்துறை பேரூராட்சி வழியாக கொண்டு வரப்பட்டு சென்னிமலை, ஈங்கூர் ரோ ட்டில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு ஏற்றப்படுகிறது.

    சென்னிமலை பேரூராட்சிக்கு தினமும் 22.50 லட்சம் லிட்டர் தண்ணீர் வரவேண்டும். இதில் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    பல இடங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை என்று வார்டு வாரியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது 22 நாட்கள் ஆகியும் தண்ணீர் வருவதில்லை. இதனால், மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் 13 தி.மு.க. கவுன்சிலர்கள், தலைவர் மற்றும் ம.தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் செயல் அலுவலர் அறையில் நேற்று மதியம் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர். தண்ணீர் விட்டால் மட்டும் தான் வீட்டுக்கு செல்ல முடியும் என கூறி அமர்ந்து கொண்டனர்.

    தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் 15 பேரும் மதிய உணவு உண்ணாமல் மிக பிடிவாதமாக போரா ட்டத்தில் இருந்த நிலையில் மாலை 5 மணி அளவில் அமைச்சர் சாமிநாதனின் பரிந்துறையில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செ ல்வம், தமிழ்நாடு குடிநீ ர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் (பராமரிப்பு பிரிவு) முத்து லிங்கம், உதவி பொறியாளர் புவனேஸ்வரி, பெருந்துறை தாசில்தார் (பொறுப்பு) அமுதா ஆகியோர் டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதேவி அசோக் மற்றும் வார்டு கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள்.

    அப்போது சென்னிமலை பேரூராட்சி பகுதிக்கு மின் தடை மற்றும் குழா ய் உடைப்பு இல்லாத சமயங்களில் தினமும் 18 லட்சம் லிட்டர் குடிநீ ர் வி நியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து மாலை 6.30 மணியளவில் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

    பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களின் உள்ளிருப்பு பேராட்டம் 6½ மணி நேரம் நீடித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

    • 3 வார்டுகளிலும் அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் மறுப்பதாக கூறப்படுகிறது
    • அ.தி.மு.க. கவுன்சிலர்களான 3 பேரும் பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

     அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் 11 வார்டுகளில் தி.மு.க.வும் ஒரு வார்டில் சுயேச்சையும், 3 வார்டுகளில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றது. இதில் 10-வது வார்டில் தேன்மொழி, 14-வது வார்டில் அறிவழகன் 15-வது வார்டில் மருதமுத்து ஆகிய 3 பேரும் அ.தி.மு.க. கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்கள்.

    இந்த 3 வார்டுகளிலும் அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் மறுப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்று காலை பேரூராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்களான 3 பேரும் பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

    • 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • பெரும்பாலான கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் ஒன்றியக்குழு சாதாரணக்கூட்டம், துணைத்தலைவர் புஷ்பராஜ் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் சிவகுருநாதன், சாதிக்பாஷா முன்னிலை வகித்தனர்.ஒன்றிய அலுவலக செலவினங்கள், லிங்கமநாயக்கன்புதூர் முதல் சனுப்பட்டி வரையிலான ரோட்டை 78 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்தல் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் திருமூர்த்திமலை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சீரான வினியோகம் இல்லாததால், ஒன்றியத்துக்குட்பட்ட பெரும்பாலான கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு நடத்தி வினியோகத்தை சீராக்க வேண்டும்.கிராமங்களில் ரோடு மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்காக கவுன்சிலர்கள் வழங்கிய கருத்துரு மீது ஒன்றிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.ஒன்றிய பொது நிதியில், வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய கவுன்சிலர்கள் பேசினர்.

    • அவினாசிபழைய பஸ் நிலையம் பின்புறம் தனியார் தோட்டத்திற்கு மண்ணை விற்றதாக புகார் எழுந்துள்ளது.
    • குடம் வைத்துதான் தண்ணீர் பிடிக்க அனுமதிக்க வேண்டும்.

    அவனாசி :

    அவினாசி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் பொ. தனலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மோகன், செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் மன்ற பொருள் படிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் பேசியதாவது:-

    திருமுருகநாதன்(11- வது வார்டு)

    அவினாசிபழைய பஸ் நிலையம் பின்புறம் தனியார் தோட்டத்திற்கு பேரூராட்சிக்கு சொந்தமான மண்ணை விற்றதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் தரவேண்டும் என்றார். இதே கருத்தை சரவணகுமார்( வார்டு 4), தேவி (10), சாந்தி (12), ஸ்ரீதேவி (18) உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    தலைவர்: மண்கொட்டுவதற்கு இடம் இல்லாததால் அங்கு கொட்டப்பட்டது. தேவைப்படும்போது மண் எடுத்து கொள்ளலாம் என்றார்.

    ரமணி (17 -வது வார்டு):

    பேரூராட்சியில் பல இடங்களில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனால் மற்றவர்களுக்கு குடிநீர் கிடைககாமல் அவதிக்குள்ளாகின்றனர். மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுபவர்களுக்கு குடிநீர் சப்ளையை துண்டிக்க வேண்டும். 18 வார்டுகளிலும் பெரிய நிறுவனங்கள் உள்பட அனைவரும் டியூப் போட்டு பிடிக்கின்றனர். அத்துடன் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை கழுவுதல் போன்ற செயல்கள் நடைபெறுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து குடம் வைத்துதான் தண்ணீர் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

    தேவி (18வது வார்டு): எங்கள் பகுதியில் சாக்கடை சரிவர எடுக்காமல் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. இது பற்றி பல முறை சொல்லியும் சாக்கடை கால்வாய்சுத்தம் செய்வதில்லை. சொந்த செலவில் எங்கள் பகுதி யை சாக்கடை சுத்தம் செய்து வருகிறோம். இனியாவது ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து தரவேண்டும் என்றார்.

    கருணாம்பாள் (8 -வது வார்டு): வள்ளுவர் வீதியில்உள்ள வேப்பமரத்தின் மீது அடிக்கடி லாரி மோதி மரம் சாய்ந்துவிடும் நிலையில் உள்ளது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்துஅவினாசி பழைய பஸ் நிலையம் பின்புறம் சட்டத்திற்கு புறம்பாக பேரூராட்சி நிர்வாகத்தினர் மண் பயன்படுத்தப்பட்டது பற்றி கேட்டதற்கு ஒரு வாரத்திற்குள் மண்ணை எடுப்பதாக உறுதிகூறியுள்ளனர். அவ்வாறு நடைபெறவில்லை என்றால் பேரூராட்சி மன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக தி.மு.க.,காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி தலைவர் (பொறுப்பு) தனலட்சுமியிடம் மனு கொடுத்தனர்.

    • 54 -வதுவார்டில் தொடர்ந்து குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை விடப்படுகிறது.
    • குறைகளில் கவனம் செலுத்தி பணிகளை விரைவாக முடித்திட வேண்டும்.

    வீரபாண்டி:

    திருப்பூர் 4ம் மண்டலத்துக்கு உட்பட்ட 15 வார்டு மாமன்ற உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் திருப்பூர் பல வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு 4ம் மண்டல தலைவர் இல. பத்மநாதன் தலைமை தாங்கினார்.4-ம் மண்டல உதவி கமிஷனர் செல்வவிநாயகம் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பேசுகையில்:- 54 -வதுவார்டில் தொடர்ந்து குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை விடப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் 50 துப்புரவு பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 16 நபர்கள் மட்டுமே பணியில் இருப்பதால் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் பல்வேறு பகுதியில் குப்பை துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் புதிய கட்டடங்களுக்கு வரிவசூல் செய்யப்படுவதில்லை .விரைவாக வரி வசூல் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

    38-வது வார்டில் தெருவிளக்கு மாதம் இரண்டு முறை பழுதாகி விடுகிறது. அப்பகுதி யில் சாலையோரம் உள்ள மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு சாலையோரம் வீசி செல்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. 39 -வது வார்டு பகுதியில் குடிநீர் மற்றும் சாக்கடை கால்வாய் பணிக்காக புலிகள் தோண்டப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தும் இதுவரை மூடப்படவில்லை. மேலும் குடிநீர் குழாய்களும் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

    57-வது வார்டில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அப்பகுதியில் போடப்பட்டுள்ள வேலையானது சரிவர செய்யப்படவில்லை. இதனால் சாலை மேலும் பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது என்றனர்.

    இதனைத் தொடர்ந்து அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் பல்வேறு குறைகளை தெரிவித்தனர்.

    4-ம் மண்டல தலைவர் இல. பத்மநாதன் பேசுகையில்:- அனைத்து வார்டுகளிலும் தெரிவிக்கப்பட்ட குறைகளை விரைவாக நிவர்த்தி செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த குறைகளில் கவனம் செலுத்தி பணிகளை விரைவாக முடித்திட வேண்டும்என்றார்.

    ×