search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Councilor"

    • தென்திருப்பேரை பேரூராட்சியில் முற்றிலும் பழுதடைந்து பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத படித்துறைகள் கட்ட வேண்டும்.
    • அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு பணியை விரைவில் சிறந்த முறையில் செய்து கொடுக்க வேண்டியும் கவுன்சிலர் குமரேசன் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தலைவர் மணிமேகலை ஆனந்திடம் மனு வழங்கினார்.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை பேரூராட்சியில் முற்றிலும் பழுதடைந்து பல ஆண்டுகளாக போடப்படாத குண்டும் குழியுமான சாலைகள், புதுப்பிக்கப்படாத படித்துறைகள் மற்றும் புதிய படித்துறைகள் கட்ட வேண்டும். கடந்த 20 வருடங்களாக அடிப்படை கட்டமைப்பு வசதியில் மிகவும் பின்தங்கியுள்ள தென்திருப்பேரை பேரூராட்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு பணியை விரைவில் சிறந்த முறையில் செய்து கொடுக்க வேண்டியும் கவுன்சிலர் குமரேசன் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தலைவர் மணிமேகலை ஆனந்திடம் மனு வழங்கினார்.

    • நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம் தனது சொந்த செலவில் 12 குப்பை சேகரிப்பு தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சி மேலுார் 14-வது வார்டு பகுதிகளில் ரோட்டோரம் குப்பைகளை கொட்டுவதை தடுக்கும் வகையில் அந்த வார்டு நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம் தனது சொந்த செலவில் 12 குப்பை சேகரிப்பு தொட்டிகளை தனது வார்டு பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் நிறுவி பொதுமக்கள் பயன் பாட்டிற்கு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி, செங்கோட்டை ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவா் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனா். 14-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் நகராட்சி பணியா ளா்கள், சுகாதார மேற்பார்வையா ளா்கள் முத்து மாணிக்கம், காளியப்பன் பொதுமக்கள், சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன.
    • இங்கு ஆயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வேலை செய்து வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன.

    இங்கு ஆயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வேலை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இது சுற்றுலா தளமாக இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.

    இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே சாலைகள் மிகவும் ஆபத்தான முறையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் பஸ்கள், மருத்துவ வாகனங்கள் இந்த சாலையில் செல்ல முடியாமல் அடிக்கடி பழுதடைகின்றன. மேலும் இந்த மோசமான சாலையால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மீண்டும் இப்பகுதிக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

    இதனால் அப்பகுதி கவுன்சிலர், சமூக ஆர்வலர்கள் சாலையை சீரமைக்கக்கோரி முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர், வனத்துறையினர் என பல்வேறு தரப்பினருக்கு தொடர்ந்து மனு அளித்த நிலையில், விரைவில் சாலை அமைப்பதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

    இருப்பினும் இந்த சாலையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் தொடர்ந்து அவதியடைகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஊத்து எஸ்டேட்டை சேர்ந்த 11 -வது வார்டு கவுன்சிலர் ஸ்டாலின் தலைமையில் ஊத்து எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுமார் 50 பேர் இணைந்து ஊத்து பகுதியில் இருந்து நாலுமுக்கு நோக்கி சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் உள்ள குண்டு, குழிகளை மணலால் மூடி தற்காலிகமாக சீரமைத்துள்ளனர்.

    கவுன்சிலர் தலைமையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்ட இந்த செயலை அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    • கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்றபின் பல்வேறு கனவுகளுடன் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
    • தனது தினசரி வாழ்வாதாரத்திற்காக சாலையோரம் கடலை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்குட்பட்டது சிலமலை ஊராட்சி. இங்கு 3-வது வார்டு கவுன்சிலராக சுயேட்சை சின்னத்தில் கலாவதி என்பவர் போட்டியிட்டார். அதன்பிறகு தற்போது தி.மு.க ஆதரவு நிலையில் உள்ளார். விவசாய கூலிேவலை பார்த்து வந்த இவர் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்றபின் பல்வேறு கனவுகளுடன் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.

    ஆனால் அவர் நினைத்த எதுவும் நடக்கவில்லை. தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் கூறும் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை நிைறவேற்ற வலியுறுத்தி ஊராட்சியிடம் தெரிவித்தாலும் எதுவும் நடப்பதில்லை என உணர்ந்து கொண்டார். அதன்பின்புதான் தேர்தல் வெற்றி என்பது ஒரு சிலருக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் என்பதையும் மற்றவர்களுக்கு எப்போதும் உள்ளதைபோலவே இருப்பதையும் உணர்ந்து கொண்டார்.

    பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை கூட நிறைவேற்ற முடியாத தன்னால் கவுன்சிலர் ஆனதை நினைத்து ஒருசில சமயங்களில் வேதனையும் அடைந்தார். இந்நிலையில் தனது தினசரி வாழ்வாதாரத்திற்காக சாலையோரம் கடலை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். அவரை பார்த்தால் கவுன்சிலர் என்றே உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அடையாளம் தெரியும். இவரது கணவரும் இதேபோல சாலையோரத்தில் மொச்சை, காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

    கடைக்கோடி மக்களுக்கும் அரசின் சலுகைகள் கிடைக்கவேண்டும் என்பதை நினைத்து செயலாற்றும் இந்த கால கட்டத்தில் ஒரு பெண் கவுன்சிலரின் கோரிக்கை ஏற்கப்படாமல் உள்ளத வேதனையளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • கமுதி யூனியன் கூட்டத்தில் கோரிக்கைகளை வேற்றக்கோரி கவுன்சிலர் உடலில் மண்எண்ணை ஊற்றினார்.
    • கூட்டத்தில் மொத்தம்13 தீர்மானங்கள் நிறைவேற்றிப்பட்டன.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன் கவுன்சில் கூட்டம் சேர்மன் தமிழ்செல்விபோஸ் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மணிமேகலை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், உதவி சேர்மன்.சித்ரா தேவி அய்யனார் முன்னிலை வகித்தனர். மேலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். மொத்தம்13 தீர்மானங்கள் நிறைவேற்றிப்பட்டன.

    அ.தி.மு.க. (ஒ.பி.எஸ்.அணி) பேரையூர் கவுன்சிலர் அன்பரசு, கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி மறைத்து வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை திறந்து தலையில் ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். அப்போது மண்எண்ணை மற்ற கவுன்சிலர்கள் மீதும் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.

    சேர்மன் தமிழ்செல்வி போஸ் 11-வது வார்டு பேரையூர் கவுன்சிலில் நடந்த திட்டப்பணிகளை பட்டியலிட்டார். மேலும் பேரையூரில் ரூ.50 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடப்பணிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.

    அப்ேபாது கவுன்சிலர் அன்பரசு, பிற துறை அதிகாரிகள் யாரும் யூனியன் கூட்டத்திற்கு வருவதில்லை. மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளதை மின்வாரிய அதிகாரி நடவடிக்கை எடுப்பதில்லை என்றார். உடனே மின்வாரிய உதவிப்பொறியாளர் எழுந்து, பழுதடைந்துள்ள மின்கம்பங்களை படிப்படியாக மாற்றி வருகிறோம் என்றார்.

    • அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரது பெயரை எடுத்துள்ளனர்.
    • மாநகராட்சி கவுன்சிலர்களுக்கும் வார்டுகளுக்கு செலவு செய்ய நிதி ஒதுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரும் 42 வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி பேசியதாவது :- திருப்பூர் ஈஸ்வரன் கோவில் முன்பு அமைக்கப்பட்ட நிழற்குடைக்கு அ.தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ., சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரது பெயரை எடுத்துள்ளனர். ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்குவதை போல் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கும் வார்டுகளுக்கு செலவு செய்ய நிதி ஒதுக்க வேண்டும். சென்னை மாநகராட்சியை முன்மாதிரியாக கொண்டு திருப்பூர் மாநகராட்சியிலும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

    மாநகராட்சி பகுதிகளில் உள்ளகோவில், பள்ளி, மருத்துவமனை பகுதிகளில் உள்ள மதுபானக்கூடங்களை அகற்ற மாநகராட்சி முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    ம.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜ் :- குமார் நகர் தொடங்கி காவிரி பாளையம் புதூர் வரை அரசு பேருந்து போதிய அளவில் இல்லை. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் ,வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என பலரும் அன்றாடம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.மாநகராட்சி போதிய பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

    மாநகராட்சி பகுதியில் குடிநீர் 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கிறது. வரி வசூல் அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.எனவே சீரான முறையில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற பணிகள் பல்வேறு இடங்களில் தரமற்ற முறையில் உள்ளது. அதனை கண்காணித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • கூட்டத்தில் 22 பொருட்களுக்கான வரவு செலவு கணக்கு குறித்து விவாதங்கள் நடைபெற்றது.
    • இந்த நிலையில் காமலாபுரம் பகுதி கவுன்சிலர் செல்வி தனது பகுதியில் வாய்க்கால் தூர் வாரியதாக கூறி 15 லட்சம் பணம் எடுத்துள்ளனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு சாதாரண கூட்டம் நேற்று அதிமுக ஒன்றிய குழுத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி, ஒன்றிய துணைச் சேர்மன் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் 22 பொருட்களுக்கான வரவு செலவு கணக்கு குறித்து விவாதங்கள் நடைபெற்றது. மேலும் கவுன்சிலர்களின் வார்டுகளில் பல்வேறு திட்டங்கள் நடைபெறாமல் இருப்பதும், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் காமலாபுரம் பகுதி கவுன்சிலர் செல்வி தனது பகுதியில் வாய்க்கால் தூர் வாரியதாக கூறி 15 லட்சம் பணம் எடுத்துள்ளனர். தூர்வாராமலேயே செலவு செய்ததாக பெயர் பலகை வைத்துள்ளனர். மேலும் 10 ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

    அப்போது கவுன்சிலர் செல்வியின் கணவர் ராஜா திடீரென பல மாதங்களாக கோரிக்கை விடுத்தும் எவ்வித கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை என கோரிக்கை மனுக்களை ஒன்றிய குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முகத்தில் கிழித்து வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • 3வது மண்டல குழு கூட்டம் நல்லூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
    • 10 கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 3வது மண்டல குழு கூட்டம் நல்லூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். உதவி கமிஷனர் வாசுகுமார் முன்னிலை வகித்தார். 3வது மண்டலத்துக்கு உட்பட்ட 10 கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 44- வது வார்டு மாமன்ற உறுப்பினரும் , மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடாவுமான கண்ணப்பன் பேசியதாவது :- 44-வது வார்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் அங்கு போதிய குடிநீர் வசதி இல்லை. எனவே 44-வது வார்டில் கூடுதல் கவனம் செலுத்தி குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.அதேபோல் துப்புரவு பணிகள், சாலை பணிகள் , தெருவிளக்கு பழுது நீக்கம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். மேலும் காய்ச்சல் பரவல் அதிக அளவில் உள்ளது.

    சுகாதார பாதுகாப்பு மற்றும் மருத்துவ பரிசோதனையை உரிய வகையில் மேற்கொள்ள வேண்டும். வார்டு பகுதிகளில் ஏராளமான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் உரிய நிதி ஒதுக்கீடு எதுவும் இதுவரை வரவில்லை என பேசினார். இதேபோல் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை எடுத்துக்கூறி பேசினர்.

    • ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் பொங்கலூர் ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார். ஒன்றிய குழு துணை தலைவர் அபிராமி அசோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

    பழனிசாமி (மாவட்ட கவுன்சிலர்): அலகுமலையில் 4 ஊராட்சிகளுக்கு மேல் உள்ள ஆதிதிராவிட பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சமுதாய நலக்கூடம் கடந்த 2 வருடங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதனை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். செட்டிபாளையத்தில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் திறக்கப்படாமல் உள்ளது. அதனையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜோதிபாசு (இந்திய கம்யூனிஸ்டு): குப்பிச்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அத்திக்கடவு குடிநீர் முறையாக வருவதில்லை. ஒவ்வொரு கூட்டத்திலும் இதுகுறித்து பேசப்படுகிறது. ஆனால் ஒரு தீர்வு என்பது கிடைப்பதில்லை. வேலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடி ஆக்கிரமிப்பை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வக்கீல் எஸ்.குமார் (ஒன்றிய குழு தலைவர்): வேலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடி ஆக்கிரமிப்பு பகுதியை எடுப்பதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து 2 முறை கடிதம் கொடுத்தாகிவிட்டது. இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்திக்கடவு குடிநீர் பிரச்சினை தொடர்ந்து இருந்து வருகிறது. நமது பொங்கலூர் பகுதிக்கு வழங்க வேண்டிய குடிநீரை முழுமையாக வழங்கினாலே அதற்கு ஒரு தீர்வு ஏற்படும். விரைவில் இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி ஒரு நல்ல தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றிய நிர்வாகமும், கிராம ஊராட்சி நிர்வாகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நாம் நல்லதை செய்ய முடியும். ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் இருந்தாலும் பெரும்பாலும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் மக்களுக்கு பல நன்மைகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் எந்த பாகுபாடும் பார்ப்பதே கிடையாது.

    ஒன்றிய குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்ட வேலைகள் அனைத்தும் உடனுக்குடன் செய்து தரப்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்படவுள்ள ஒன்றிய அலுவலகத்திற்கான பூமி பூஜை விரைவில் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார். முடிவில் வட்டார வளர்ச்சி அதிகாரி மகேஸ்வரன் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், பாலுசாமி, லோகு பிரசாந்த், சுப்பிரமணி, பிரியா புருஷோத்தமன், மலர்விழி ராமசாமி, மோகனப்பிரியா, குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தீர்மானத்தை மாநகராட்சி கூட்டத்தில் கடுமையாக எதிர்ப்பது என தீர்மானிக்கப்பட்டது.
    • அதிமுக ஆட்சி காலத்தில் தான் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில், திருப்பூர் மாநகராட்சியின் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கிப் பேசினார். அவைத்தலைவர் பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் , புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பூர் பழைய பேருந்து நிலையத்துக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் வைப்பதாக கொண்டு வரப்படுகின்ற தீர்மானத்தை மாநகராட்சி கூட்டத்தில் கடுமையாக எதிர்ப்பது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஏற்கனவே கே.என்.பி., அவர்களின் பெயரில் இருக்கின்ற இந்த பேருந்து நிலையத்தினை, புதிதாக கட்டுவதற்கு அதிமுக. ஆட்சிக் காலத்தில் தான் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. அப்படி இருக்கையில், இந்த பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயர் வைப்பது எந்தவிதத்திலும் பொருத்தமானதாக இல்லை. தியாகி திருப்பூர் குமரன் பெயரைத்தான் வைக்க வேண்டும். தி.மு.க. கருணாநிதி பெயரை வைத்தால் அ.தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு பெயர் மாற்றி வைக்கப்படும் என்றார். கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சியின் எதிர்க்கட்சிக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர் கண்ணப்பன் உள்ளிட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

    • ஜெயலலிதா படம் வைக்க அ.தி.மு.க. கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மாநகராட்சி கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் புகைபடங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளது.

    சிவகாசி

    சிவகாசி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நடந்தது. இதில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கவுன்சிலர்கள் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகவும், தினசரி பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கே வந்து வாறுகால் இல்லாமல் உள்ளது. தண்ணீர் வர வில்லை, சாலை வசதி இல்லை என்ற அடிப்படை வசதிகள் குறித்து எங்களிடம் முறையிட்டு வருகின்றனர் என்றனர்.

    மேலும் இதை மாமன்ற கூட்டத்தில் பலமுறை அறிவித்தும் அதிகாரிகள் தொடர்ந்து அந்த பணிகளை செய்வதில் அலட்சியம் காட்டி வருவதாகவும் குற்றம் சாட்டினர். இது குறித்து அனைவரின் குறைகளும் நிவர்த்தி செய்து அடிப்படை வசதிகள் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று மேயர் சங்கீதா இன்பம் தெரிவித்தார்.

    மாநகராட்சி கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் புகைபடங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர் கரைமுருகன், தலைவர்கள் படங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் முன்னாள் முதல்வர்கள் வரிசையில் ஜெயலலிதாவின் புகைப்ப டம் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    • இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல்படி 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.
    • மொத்தம் 7518 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.

    பல்லடம் :

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள ஊரக,நகர,உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி பல்லடம் ஒன்றியத்தில் 1வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஜூன்.20-ந்தேதி துவங்கியது.

    இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல்படி தி.மு.க. கூட்டணி சார்பில் ஈஸ்வரமகாலிங்கம் (காங்கிரஸ்), குமாரவேல்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேட்சை வேட்பாளர்களாக சதீஸ்குமார்( சாலை உருளை),சின்னசாமி( தண்ணீர் குழாய்),ராஜ்(மறை திருக்கி),,ஜெயபிரகாஷ்( தீப்பெட்டி) உள்ளிட்ட 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2,ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். இந்தநிலையில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.தேவராயன்பாளையம்,அரசு துவக்கப்பள்ளி, கோம்பக்காட்டுபுதூர் ஆர்.சி. துவக்கப்பள்ளி, பெத்தாம்பூச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, இச்சிப்பட்டி அரசு துவக்கப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 11 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.தேர்தலில் 2425 ஆண் வாக்காளர்களும், 2316 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 4741 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

    இது 63.06 சதவீதம் ஆகும். இந்த தேர்தல் பணியில் வாக்குச்சாவடி மையத்தில் 48 ஊழியர்கள், மற்றும் 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். தேர்தல் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் அகமது, உதவி அலுவலர் அய்யாசாமி, பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பார்வையிட்டனர்.

    ×