search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corpse recovery"

    • மாயமான வாலிபர் பிணமாக மீட்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திரா யிருப்பு மாயிருளம்பட்டியை சேர்ந்தர் பொன்ராஜ்(வயது41). இவரது மனைவி பால்பாண்டி யம்மாள். கடந்த 29-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற பொன்ராஜ் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் அந்தப்பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள ஒரு கிணற்றில் பொன்ராஜ் இறந்து கிடப்பதாக அவரது சகோதரர் மதுசூதனன் பால்பாண்டி யம்மாளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது பொன்ராஜ் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்புத்துைற மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பொன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 24-ந் தேதி காலை வெற்றிலை கொடிக்காலுக்கு வேலைக்கு சென்றார். அதன்பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • ராஜா வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்ப தாக பரமத்திவேலூர் போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் நல்லாட்சி (வயது 74), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 24-ந் தேதி காலை வெற்றிலை கொடிக்காலுக்கு வேலைக்கு சென்றார். அதன்பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. காணாமல் போன நல்லாட்சியை அவரது மகன்கள் செந்தில்குமார், பார்த்திபன் ஆகியோர் உறவினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று பரமத்திவேலூரில் இருந்து நன்செய் இடையாறு செல்லும் வழியில் உள்ள வாஞ்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள ராஜா வாய்க்காலில் அடை யாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்ப தாக பரமத்திவேலூர் போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராஜா வாய்க்காலில் மிதந்த ஆண் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி நல்லாட்சி என்பது தெரிய வந்தது.

    கூலி வேலைக்கு சென்ற நல்லாட்சி, வீட்டிற்கு திரும்பு கையில் ராஜா வாய்க்கால் கரையில் நடந்து சென்றார். அப்போது வாய்க்கால் கரையோரத்தில் கீழே விழுந்து கிடந்த தேங்காயை எடுக்க முயன்ற போது, திடீ ரென எதிர்பாராத விதமாக மயங்கி ராஜா வாய்க்காலில் விழுந்துள்ளார். இதில் மேலே வரமுடியாமல் தத்தளித்த நல்லாட்சி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோ தனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தபோலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆவின் பாலகம் முன்பாக, கடந்த 10-ந் தேதி சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
    • அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலைய பகுதியில் முதியவர் உள்பட 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

    முதியவர் பிணம்

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள ஆவின் பாலகம் முன்பாக, கடந்த 10-ந் தேதி சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல், சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ் திரையங்கு முன்பு உள்ள ஆலமரக்காடு டாஸ்மாக் அருகில் நேற்று மாலை சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பள்ளப்பட்டி போலீசார், அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என விசராணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வழக்கு பதிவு
    • கொலையா? விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுக்கத்தூர் அடுத்த மராட்டிய பாளையம் கிராமத்தில் ஏ. புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 40). இவர் வேலூரில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    திருமணம் ஆகாதவர் இந்த நிலையில் இன்று காலை ஊருக்கு அருகே உள்ள விவசாய கிணற்றில் பாலகிருஷ்ணன் உடல் மிதந்து கிடந்தது.

    இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒடுக்கத்தூர் தீயணைப்புத் துறையினருக்கும், போலீசருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து பாலகிருஷ்ணன் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    இது குறித்து ஒடுகத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணன் கொலை செய்து கிணற்றில் வீசினரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொளத்தூர் அருகே பண்ணவாடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
    • ராஜா என்ற வெல்டிங் தொழிலாளி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ணவாடியில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு வந்திருந்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே பண்ணவாடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வ தற்காக, ஈரோடு பழையபா ளையம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற வெல்டிங் தொழிலாளி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ணவாடியில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு வந்திருந்தார்.

    நேற்று திருவிழா முடிந்த நிலையில், பண்ணவாடி பரிசல் துறை பகுதிக்கு சென்ற அவர், காவிரி ஆற்றில் தனது நண்பர்க ளுடன் நீராடினார். மற்ற வர்கள் கரைக்கு வந்த நிலையில், ராஜா நீண்ட நேரம் ஆகியும் கரைக்கு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த அவருடைய நண்பர்கள், மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் தீயணைப்பு படை வீரர்கள், தண்ணீரில் மூழ்கி ராஜாவை தேடினர்.

    இரவு வெகு நேரத்துக்கு பின்னர் ராஜா பிணமாக மீட்கப்பட்டார். பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    ராஜாவின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ஜனனி என்ற மகளும், ஸ்ரீதர் என்ற மகனும் உள்ளனர். தந்தை நீரில் மூழ்கி இறந்த தகவல் அறிந்ததும் அவர்கள் கதறி துடித்தனர். 2 குழந்தைகளை தவிக்கவிட்டு தந்தை பலியான சம்பவம் அவர்களது உறவினர்களி டையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • யார்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் உள்ள ரெயில் நிலையம் அருகே புது ஓட்டல் தெரு பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கும் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் ரெயில் நிலையம் பகுதியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்ததாகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாகவும் தெரியவந்தது. மேலும் இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அந்த புகாரின் பேரில் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அருப்புக்கோட்டை அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்டது.
    • அவரை மர்ம நபர்கள் கொலை செய்து புதைத்து விட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் நான்கு வழி சாலை பகுதியில் உள்ள கொண்டுசெட்டி ஊரணியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அந்தப்பகுதி மக்கள் அருப்புக்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த ஆண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிணமாக கிடந்தவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. அவரை மர்ம நபர்கள் கொலை செய்து புதைத்து விட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாயனூர் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் மீட்கப்பட்டது
    • இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:


    மாயனூர் பஞ்சாயத்து மேல மாயனூர் காவிரி ஆற்றில், வெங்கமேடு கூட்டு குடிநீர் நீரேற்று நிலையம் பின்புறம், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்து, ரெங்கநாதபுரம் வி.ஏ.ஓ. ஸ்டாலின் பிரபு, மாயனுார் போலீசில் புகார் அளித்தார். அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • புஷ்பா என்கிற குள்ளாகி ( வயது57). இவரது கணவர் மணி ஏற்கனவே இறந்து விட்டதால் புஷ்பா தனது அக்கா சரசு வீட்டில் தங்கிகூலி வேலைக்கு சென்று வந்தார்.
    • இந்நிலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும்போது, புஷ்பா தினமும் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே உள்ள பூசாரிபாளையத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி புஷ்பா என்கிற குள்ளாகி ( வயது 57). இவரது கணவர் மணி ஏற்கனவே இறந்து விட்டதால் புஷ்பா தனது அக்கா சரசு வீட்டில் தங்கிகூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலை யில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும்போது, புஷ்பா தினமும் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது அக்கா சரசு மற்றும் உறவினர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 12-ந் தேதி மீண்டும் புஷ்பா மது அருந்தி உள்ளார். அவரை உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதையடுத்து இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற புஷ்பா, பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பாண்டமங்கலம், வட்டாரக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக பரமத்திவேலூர் போலீசாரு க்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் சடலமாக மிதந்த பெண்ணின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன பூசாரி பாளையத்தை சேர்ந்த புஷ்பா என்பது தெரிய வந்தது.இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • பெரம்பலூர் அருகே மனைவியிடம் கோபித்து சென்ற கட்டிட தொழிலாளி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார்
    • வெள்ளாற்றில் ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்

    பெரம்பலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அரங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவருக்கு மலர்க்கொடி என்ற மனைவியும், சதீஷ்குமார் (23), விக்னேஷ்வர் (20) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

    இந்நிலையில் செந்தில்குமார் தமது மாமனார் வீட்டில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் சண்டை போட்டுவிட்டு வெளியேறியவர் பின்னர் வீடு திரும்பவில்லை. 2 நாட்களாகியும் அவர் திரும்பாததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் எந்த தகவலும் இல்லை.

    இந்நிலையில் குன்னம் தாலுகா வெள்ளாற்றில் ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து வெள்ளாற்றுக்கு விரைந்து சென்ற மங்களமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பிணமாக மிதந்தவரை மீட்டனர்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் மாயமான செந்தில்குமார் என்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து மங்களமேடு போலீசார் ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாயமானவர் வீடு திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த கணியனூர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 47) இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது .

    இந்நிலை யில் கடந்த 17 - ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் பச்சையம்மாள் பிணமாக மிதப்பதாக அப்பகுதி மக்கள் திமிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பச்சையம்மாள் சாவு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×