search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "construction worker"

    • மாரியப்பன் நேற்று இரவு பணி முடிந்து தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் இருந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று சென்றார்.
    • இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள கிழக்கு காமராஜர்நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது44). கட்டிட தொழிலாளி.

    இவர் நேற்று இரவு பணி முடிந்து தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் இருந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று சென்றார். எட்டயபுரம் ரோடு ஜோதிபுரம் பகுதியில் சென்ற போது பின்னால் வந்த வாகனம் அவரது சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • அவரை நண்பர்கள் தேடிய போது அங்குள்ள விசைத்தறி கூடம் அருகே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்
    • விசைத்தறி கூட உரிமையாளர் முத்துசெல்வத்தை தாக்கியதால் அவர் இறந்தது தெரிந்தது.

    திருப்பூர்:

    விருதுநகரை சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது 35) . இவர் மங்கலம், கோம்பக்காட்டு புதுாரில் பகுதியில் தங்கியிருந்து கட்டட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி, இரு மகன்கள் உள்ளனர்.

    முத்துசெல்வம் கடந்த ஜனவரி 1-ந் தேதி அதிகாலை நேரத்தில் அறையில் இருந்து சென்றவர் நீண்ட நேரமாக காணவில்லை. இதையடுத்து அவரை நண்பர்கள் தேடிய போது அங்குள்ள விசைத்தறி கூடம் அருகே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.இது குறித்து மங்கலம் போலீசார் விசாரித்தனர்.

    இதில் அதிகாலை நேரத்தில் விசைத்தறி கூடம் அருகே முத்து செல்வம் நடந்து சென்ற போது திருடன் என சந்தேகித்து, விசைத்தறி கூட உரிமையாளர் முத்துசெல்வத்தை தாக்கியதால் அவர் இறந்தது தெரிந்தது. இதுதொடர்பாக, துரைபழனிசாமி (45), சவுந்தரராஜன் (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிலரை தேடி வந்தனர்.

    போலீசாரின் தொடர் தேடுதல் வேட்டையில் இச்சிபட்டியை சேர்ந்த மணிகண்டன் (50), கோம்பக்காட்டு புதுாரை சேர்ந்த முருகேசன் (35) ஆகிய இருவரை மங்கலம் போலீசார் கைது செய்தனர்.

    • திருக்குறுங்குடி மேலநம்பி தோப்பை சேர்ந்தவர் ரவி . இவரது வீட்டு கார் செட்டில் கட்டுமான பணி நடந்து வருகிறது.
    • ரவி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வள்ளியூருக்கு சென்று விட்டார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி மேலநம்பி தோப்பை சேர்ந்தவர் ரவி (வயது52). இவரது வீட்டு கார் செட்டில் கட்டுமான பணி நடந்து வருகிறது. கட்டுமான பணியில் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரத்தை சேர்ந்த செல்வலிங்கமும், தொழிலாளர்களும் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரவி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வள்ளியூருக்கு சென்று விட்டார்.

    இதனை கவனித்த செல்வலிங்கம் வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், ரூ. 26 ஆயிரம் ஆகியவற்றை திருடியுள்ளார். மேலும் ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள டி.வி.யையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதுபற்றி ரவி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக கட்டிட தொழிலாளி செல்வலிங்கத்தை தேடி வருகின்றனர்.

    • தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள வர்த்தகரெட்டிபட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. கட்டிட தொழிலாளி.
    • கருப்பசாமிக்கும் அவரது சகோதரிகளுக்குமிடையே சொத்து தகராறு இருந்து வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள வர்த்தகரெட்டிபட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. கட்டிட தொழிலாளி. கருப்பசாமிக்கும் அவரது சகோதரிகளுக்குமிடையே சொத்து தகராறு இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்றும் அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்தவர்கள் கருப்பசாமியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

    இது தொடர்பாக கருப்பசாமி தட்டப்பாறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ் பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ் பெக்டர் முத்துக் கிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தவளக்குப்பத்தில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உடல் கருகி இறந்து போனார்.
    • ஜல்லி போடுவதற்கு முன்பாக அவர் மாடிக்கு சென்று அந்த இடத்தினை பார்வையிட்டுக்கொண்டி ருந்தார்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பத்தில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உடல் கருகி இறந்து போனார்.

    புதுவை-தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் 4 முனை ரோட்டில் முரளி என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டின் முதல்மாடி தளத்துக்கு இன்று காலை ஜல்லி போடும் பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கட்டிட தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அதுபோல் இந்த பணிக்கு புதுவை ஒட்டம் பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பலராமன் (வயது52) என்பவர் வந்திருந்தார்.

    ஜல்லி போடுவதற்கு முன்பாக அவர் மாடிக்கு சென்று அந்த இடத்தினை பார்வையிட்டுக்கொண்டி ருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் பலராமனின் கை உரசியதாக தெரிகிறது.

    இதனால் மின்சாரம் தாக்கியதில் பலராமன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இப்பகுதியில் உயர்மின்னழுத்த கம்பி குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக செல்வதால் பாதிப்பு இல்லாத வகையில் அதனை மாற்றியமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல முறை மின்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டும், அதனை அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதால் இந்த சம்பவம் நேர்ந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    • தச்சநல்லூர் மேல ஊருடையார்புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). கட்டிட தொழிலாளி.
    • நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேல்முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    தச்சநல்லூர் மேல ஊருடையார்புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). கட்டிட தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி மற்றும் குழந்தைகள் இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேல்முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தச்ச நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அடுத்துள்ள திரளி சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது40), கட்டித் தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு ஹம்சவர்தணி என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று தனது மகளை கல்லூரிக்கு பஸ் ஏற்றி விட்டு சென்ற குமரேசன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் திரளி கவுண்டமா நதி தடுப்பணை அருகே ஆண் பிணம் மிதந்தது. தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    இதுதொடர்பாக போலீ சார் விசாரணை நடத்திய போது தடுப்பணை யில் இறந்து கிடந்தது குமரேசன் என தெரியவந்தது. அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா?என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பெரம்பலூர் அருகே மனைவியிடம் கோபித்து சென்ற கட்டிட தொழிலாளி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார்
    • வெள்ளாற்றில் ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்

    பெரம்பலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அரங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவருக்கு மலர்க்கொடி என்ற மனைவியும், சதீஷ்குமார் (23), விக்னேஷ்வர் (20) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

    இந்நிலையில் செந்தில்குமார் தமது மாமனார் வீட்டில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் சண்டை போட்டுவிட்டு வெளியேறியவர் பின்னர் வீடு திரும்பவில்லை. 2 நாட்களாகியும் அவர் திரும்பாததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் எந்த தகவலும் இல்லை.

    இந்நிலையில் குன்னம் தாலுகா வெள்ளாற்றில் ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து வெள்ளாற்றுக்கு விரைந்து சென்ற மங்களமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பிணமாக மிதந்தவரை மீட்டனர்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் மாயமான செந்தில்குமார் என்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து மங்களமேடு போலீசார் ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விசாரணை நடத்திய காவல் துறையினா் பழனிசாமியை கைது செய்தனா்.
    • நீதிபதி நாகராஜன் தீா்ப்பு வழங்கினாா்.

     தாராபுரம் :

    தாராபுரத்தை அடுத்த மூலனூரைச் சோ்ந்தவா் பழனிசாமி (வயது 53). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 25 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து தாராபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 2020 ஆகஸ்ட் 22 ந் தேதி சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இந்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய காவல் துறையினா் பழனிசாமியை கைது செய்தனா்.

    இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி நாகராஜன் தீா்ப்பு வழங்கினாா். இதில், பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்தாா். திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரைச் சோ்ந்தவா் அப்பாஸ் (29). பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில் அவிநாசி மகளிா் காவல் துறையினா் போக்சோ பிரிவின்கீழ் அப்பாசை 2020 ஆகஸ்ட் 16ந் தேதி கைது செய்தனா்.

    இந்த வழக்கின் மீதான விசாரணை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி நகராஜன் தீா்ப்பு வழங்கினாா். இதில், அப்பாசுக்கு 25 ஆண்டுகள் சிறையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த இரு வழக்கிலும் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலாபானு ஆஜராகினாா்.

    • கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரோட்டோரமாக ஒருவர் இறந்து கிடந்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறாக்குளம் பிரிவு அருகே, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மொபட்டில் சென்ற ஒருவர் ரோட்டோரமாக இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து யார் அவர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டுள்ளனர் .அவரது வாகனத்தில் கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் பொருட்கள் இருந்ததால் கட்டிட தொழிலாளியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • வாலிபர் முதியவருக்கு போன் செய்து தனது உறவினர் ஒருவருக்கு பெண் பார்க்க வேண்டும் என கேட்டு உள்ளார்.
    • பொங்கலூர் லேஅவுட் வாய்க்கால் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது வாலிபர் கல்லை எடுத்து முதியவரை சரமாரியாக தாக்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த அவினாசிபாளையம் பெருந்தொழுவு பகுதியில் வசித்து வருபவர் கருப்பு (வயது 70). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கிளீனர் மற்றும் தோட்டத்து வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று கருப்பு புதிய ஆடை வாங்குவதற்காக திருப்பூர் வந்துள்ளார். அப்போது பழைய பஸ் நிலையம் அருகில் வைத்து 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் முதியவரிடம் அறிமுகமாகியுள்ளார்.பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் போன் நம்பரை பரிமாறிக் கொண்டு நண்பர்கள் ஆகினர்.

    இந்தநிலையில் அந்த வாலிபர் முதியவருக்கு போன் செய்து தனது உறவினர் ஒருவருக்கு பெண் பார்க்க வேண்டும் பெண் ஏதாவது இருக்கிறதா? என கேட்டு உள்ளார். அவரும் எனக்கு தெரிந்த பெண் ஒருவர் இருப்பதாகவும் பார்க்க செல்லலாம் என்று கூறியுள்ளார்.

    இதனையடுத்து அந்த வாலிபர் முதியவரை அழைத்துக் கொண்டு பெண்பார்க்க சென்றுள்ளார். இரவு 8 மணி அளவில் பொங்கலூர் லேஅவுட் வாய்க்கால் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த வாலிபர் கல்லை எடுத்து முதியவரை சரமாரியாக தாக்கினார். இதில் முதியவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

    இதனையடுத்து அந்த வாலிபர் கருப்புவிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கருப்புவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பான புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் முதியவரை தாக்கி பணம் -நகையை பறித்தது தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் (43) என்பதும் கட்டிட தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த நகை, பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து செய்தனர்.

    விழுப்புரத்தில் கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநிலத் தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் மணிகண்டன் ஆர்பாட்டத்தை தொடக்கி வைத்தார். நிர்வாகிகள் ஆறுமுகம், முனுசாமி, கோமதி, சக்திவேல், பழனிச்சாமி, பேச்சியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×