search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confiscation"

    • பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
    • அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் பதுக்கி வைத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் பாராளுமன்ற தேர்தல் சூடு பிடித்து உள்ளது. காங்கிரஸ் பி.ஆர்.எஸ் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று நள்ளிரவு கரீம் நகர் உதவி போலீஸ் கமிஷனர் நரேந்தர் தலைமையிலான போலீசார் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அங்குள்ள அறை ஒன்றில் 500 ரூபாய் நோட்டுகள் மூட்டை மூட்டையாக கட்டி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ரூபாய் நோட்டுகள் எண்ணும் எந்திரம் மூலம் பணத்தை எண்ணினர்.

    அப்போது ரூ.6.65 கோடி இருந்தது தெரியவந்தது. மூட்டைகளில் கட்டப்பட்டு இருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து உதவி கமிஷனர் நரேந்தர் கூறுகையில்:-

    பாராளுமன்ற தேர்தலுக்காக இந்த பணத்தை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் பதுக்கி வைத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

    • தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது.

    செங்கோட்டை:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்சாரி. இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இங்கு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில் ரசாயன பொருட்களை கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவதாகவும், செங்கோட்டையில் தயாரித்து கேரள பெயர்களை அச்சிட்டு லேபிள் ஒட்டி விற்பனைக்கு அனுப்பப்படுவதாகவும் புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது. மேலும் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்காக ரசாயன பொருட்கள் பயன்படுத்தியதும், பல்வேறு பெயர்களை கொண்ட லேபிள்கள் அச்சடிக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 270 லிட்டர் ஐஸ்கிரீம்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • நாட்டுப்படகில் மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • மாத்திரைகள் சந்தை மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    கீழக்கரை:

    ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க சுங்கத்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் துரித நடவடிக்கை எடுத்த போதிலும், அவ்வப்போது கடத்தல் சம்பவங்கள் அரங்கேறத்தான் செய்கிறது.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல் லாணியை அடுத்த பெரிய பட்டினம் புதுமடம் புதுக்குடியிருப்பு கடற்கரை தென் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கடலோர காவல் படையினர் மற்றும் குற்றத்தடுப்பு புலனாய்வு போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் அந்தோணி சகாய சேகர் மற்றும் போலீசார் பெரிய பட்டினம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பதிவு செய்யப்படாத இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் அருகில் இருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் பெரியபட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்த முஹம்மது மீராசா (வயது 42) என்று தெரியவந்தது. மேலும் அந்த படகை சோதனை செய்த போது அதில், சுமார் 12 பண்டல்களில் 6,84,600 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்ததும், அதனை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து முஹம்மது மீராசாவை கைது செய்த போலீசார் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாத்திரைகள் சந்தை மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

    • முதியவர் தனது பையில் துணிகள் மட்டுமே இருப்பதாக கூறி போலீசாருக்கு ஒத்துழைப்பு தர மறுத்தார்.
    • பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மதுபானங்கள் கடத்திச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதை தடுக்க புதிய பஸ் நிலையத்தில் உருளையன்பேட்டை போலீசார் அவ்வப்போது சோதனை நடத்துவது வழக்கம்.

    அதன்படி புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்ல தயாராக இருந்த பஸ்சில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனையிட்டனர். அப்போது முதியவர் ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

    ஆனால் அந்த முதியவர் தனது பையில் துணிகள் மட்டுமே இருப்பதாக கூறி போலீசாருக்கு ஒத்துழைப்பு தர மறுத்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை வலுக்கட்டாயமாக திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அந்த பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி அவரிடம் கேட்ட போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பீம்சிங் (வயது70) என்பதும், புதுவை அண்ணா சாலையில் செல்போன் கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவரிடம் பணத்திற்கு எந்தவித வரவு-செலவு கணக்கும் இல்லை.

    எனவே அது ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    இதுகுறித்து போலீசார், சென்னை வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சென்னையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.70 லட்சத்தையும் கைப்பற்றியதுடன், பீம்சிங்கையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    புதுச்சேரி நூறடிசாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் சமீபத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது வணிக வரித்துறை அதிகாரிகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் நேற்று முன்தினமும் புதுச்சேரியில் 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

    இந்த நிலையில் புதுவையில் தற்போது ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பெண் யானை ஒன்று இந்த தர்காவினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • வனத்துறையினர் யானையை மீட்டு திருச்சியில் உள்ள முகாமிற்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    கடையநல்லூர்:

    மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கடைய நல்லூர் பகுதியில் மக்தூம் ஞானியார் தர்கா உள்ளது.

    இந்த தர்காவில் நூறாண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலுக்கு என்று சொந்தமாக யானை வாங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பெண் யானை ஒன்று இந்த தர்காவினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை வளர்க்க சில ஆண்டுகளாக வனத்துறையிடம் முறையான அனுமதி பெறாமல் தர்காவினர் வளர்த்து வந்ததால், வனத்துறை தெரிவித்த தகவலின்பேரில், சென்னையில் இருந்து யானை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கமிட்டியினர் ஒரு குழுவாக கடையநல்லூர் வந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு யானையை பார்வையிட்டனர்.

    இந்நிலையில் யானையை வளர்க்க தோட்டம், நீச்சல் குளம், தூங்குவதற்கு தேவையான வசதிகள் உள்ளிட்டவை தர்காவில் இல்லை என்று கூறி உடனடியாக இந்த யானையை பறிமுதல் செய்து திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல அந்த குழு உத்தரவு பிறப்பித்தது.

    அதனைத்தொடர்ந்து நேற்று இரவு கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் யானையை மீட்டு திருச்சியில் உள்ள முகாமிற்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    தற்போது 58 வயது கொண்ட இந்த பெண் யானையின் எடை 4.5 டன் ஆகும். இந்த தர்காவிற்கு இது 5-வது யானையாகும். நூற்றாண்டு பழமையான இந்த தர்காவில் இருந்து யானையை வனத்துறையினர் கைப்பற்றி சென்றது அங்குள்ளவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.

    இதனால் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து யானையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதேநேரத்தில் யானை பாகன் நத்கர் பாதுஷா, யானையின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதபடி யானைக்கு பிரியா விடை கொடுத்தார்.

    • மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் வலங்கை மான் இன்ஸ்பெக்டர் சந்தனமேரி, போலீஸ் சந்திரமோகன், சிறப்பு தனிப்படை போலீஸ் அறிவழகன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கும்பகோணத்தில் இருந்து வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.

    மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர், நடத்திய சோதனையில் அவரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கும்பகோணம் அருகே உள்ள அண்ணலக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 31) என்பது தெரியவந்தது.

    பின், போலீசார் அவரிடம் இருந்த புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்து ராஜேஷை கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.

    இதுகுறித்து வலங்கைமான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தியது.

    மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது

    கடலூர்:

    ராமத்தில் உள்ள வெள்ளாற்றில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் அரசு அனுமதியின்றி மணல் எடுப்பதாக புகார் வந்ததை அடுத்து நேற்று நள்ளிரவு ஆவினங்குடி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வெள்ளாற்றில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த தொளார் கிராமத்தை சேர்ந்த பிச்சப்பிள்ளை (வயது 45), ராஜசேகரன் (45), கொடிகளம் கிராமத்தைச் சேர்ந்த அழகரசன் 25, கூடலூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் (33) ஆகிய 4 பேரும் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வரும் பொழுது கையும் கழுவுமாக பிடிபட்டனர். 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்த போலீசார் நான்கு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • கடைகளில் இருந்து மொத்தம் ரூ.1,600 அபராதம் விதிக்கப்பட்டது.
    • பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் நகராட்சி வளாகம் கொண்டு வரப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் கடைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப்பைகள் அரசு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு வழங்கப்படுகிறதா, விற்கப்படுகிறதா என நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் ஆகியோர் அறிவுறுத்தலையின்படி நகராட்சி பணியாளர்கள் உதவியோடு நகரின் பல்வேறு பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்ப ட்டது.

    பல்வேறு கடைகளில் 50 கிலோ நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1600 அபராதம் விதிக்க ப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நெகிழி பைகள நகராட்சி வளாகம் கொண்டு வரப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

    இளநிலை உதவியாளர் பாபு, பணி மேற்பார்வையாளர் கலிய பெருமாள், பரப்புரையாளர் அலெக்ஸாண்டர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 24 மூட்டைகளில் பதுக்கிய போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • இதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா, மது கடத்தல், புகையிலை விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகூரை அடுத்த தெத்தியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை முட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக நாகூர் இன்ஸ்பெ க்டர் சதீஷ்குமார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து தெத்தி ஜம்மியத் நகரில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது முகம்மது சித்திக் என்பவரது வீட்டில் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைத்த பட்டிருந்த குட்கா, பான்மசாலா, கூலிப் உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதனையடுத்து 24 மூட்டைகளில் இருந்த 300 கிலோ மதிப்புள்ள புகையிலை பாக்கெட் முட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் போதை பொருளை கடத்திய முகம்மது சித்தீக் என்பவரை கைது செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய ஒருவரை நாகூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை நாகூர் காவல் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் பார்வையிட்டு போலீசாரை பாராட்டினார்.

    இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்க் சதீஷ்குமார், முதல் நிலை காவலர்கள் மதியழகன், காமேஷ்,உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • தனிப்படை போலீசார் வெளிப்பாளையம் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • மது விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை போலீசார் வெளிப்பாளையம் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் ஏழை பிள்ளையார் கோவில் அருகில் சட்டத்திற்கு புறம்பாக புதுச்சேரி மாநில மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பாண்டித்துரை (வயது 28) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புதுச்சேரி மாநில 570 மது பாட்டில்கள் மற்றும் 140 சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    அதே போல புதிய பஸ் நிலையம் அருகே புதுச்சேரி மாநில மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த சிவன்காளை என்பவரது மனைவி மகேஷ்வரி (40), விஜயகுமார் என்பவரது மனைவி திவ்யா (40) ஆகிய இரண்டு பேரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்த 300 புதுச்சேரி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    நாகையில் புதுச்சேரி மாநில மது பாட்டில்களை கடத்தி வைத்திருந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிறப்பாக செயல்பட்டு சட்டவிரோதமாக மது விற்பனை ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    • திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • 3 பயணிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது

    கே.கே.நகர்,

    மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு, ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணிகள்3 பேரை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் மலேசியாவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இந்த நிலையில் அவர்களை சோதனை செய்தபோது அந்த 3 பயணிகளும் தனது உடலில் மறைத்து, பேஸ்ட் வடிவிலான தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. ரூ.1.85 கோடி மதிப்பிலான 3.01 கிலோ கடத்தல் தங்கத்தை அவர்களிடம் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கத்தை கடத்தி வந்த 3 பயணிகளையும் கைது செய்து அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள பெரங்கியம் கிராமத்தில் இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் அள்ளிச் செல்வதாக ராமநத்தம் போலீசாருக்கு புகார் வந்தது.

    இதையடுத்து ராம நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் நேற்று இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வெள்ளாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்த பெரம்பலூர் மாவட்டம் பெண்ணங்கோனம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கொளஞ்சிவேல் (வயது 50) என்பவரையும், அவரது மாட்டு வண்டியையும் மடக்கிப் பிடித்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

    ×