search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Company"

    • சென்னிமலை அருகே கம்பெனியில் பூட்டை உடைத்து ஜெனரேட்டர், இரும்பு பொருட்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்த ஈங்கூர் பகுதியில் சிப்காட் தொழில் பேட்டை உள்ளது. இங்கு தங்கவேல் என்பவர் கம்பெனி நடத்தி வருகிறார்.

    கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் இவர் கம்பெனியை நடத்த முடியாமல் மூடிவிட்டார். இந்நிலையில் அங்கு மின்வாரிய பணியாளர் ஒருவர் கணக்கு எடுப்பதற்காக சென்ற பொழுது மெயின் கேட் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அதன் உரிமையாளர் தங்கவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த தங்கவேல் உள்ளே சென்று பார்த்த பொழுது ஜெனரேட்டர் மற்றும் சில இரும்பு பொருட்கள் திருட்டுப் போனது தெரியவந்தது.

    பின்னர் இது குறித்து சென்னிமலை போலீசில் தங்கவேல் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த கம்பெனியை லீசுக்கு நடத்திய திண்டல், செங்கோடம்பாளையம் சக்தி நகரை சேர்ந்த செல்வராஜ் (44) என்பவர் இரும்பு பொருட்களை வாங்கும் வியாபாரி தூத்துக்குடியை அடுத்த நசரேத் பகுதியை சேர்ந்த பட்டு ஜெபசிங் என்பவர் உடன் சேர்ந்து 2 பேரும் ஜெனரேட்டர் உள்பட இரும்பு பொருட்களை திருடி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து செல்வராஜ், பட்டு ஜெபசிங் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பெருந்துறை அருகே பிஸ்கட் கம்பெனியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை குன்னத்தூர் ரோடு பகுதியில் பெருந்துறையை சேர்ந்த ரதீஷ்குமார் (33) என்பவருக்கு சொந்தமான பிஸ்கட் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த பிஸ்கட் கம்பெனியில் பிஸ்கட் பேக்கிங் செய்ய பயன்படும் கவர்கள் மூட்டைகளாக கட்டி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பிஸ்கட் கவர்களில் தீபிடித்து புகை வந்தது. சிறிது நேரத்தில் மளமளவென தீ பற்றி எரியத் தொடங்கியது.

    இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    • கரித்தூள் நிறுவனத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
    • தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து பெரும் சேதத்தை தவிர்த்தனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள போக்குவரத்து நகரில் பாண்டியராஜ் என்பவருக்கு சொந்தமான கரித்தூள் நிறுவனம் உள்ளது.

    இங்கு மரத்துகள்களை துண்டுகளாக மாற்றும் பணி நடைபெறுகிறது. 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றியது.

    இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து பெரும் சேதத்தை தவிர்த்தனர். இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் காப்பாற்றப்பட்டது. சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொண்டியில் பெண்களுக்கு வலை பின்னும் பயிற்சி வழங்கப்பட்டது.
    • வீட்டிலிருந்தபடியே பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி மையத்தில் நபார்டு வங்கியும், கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து நாட்டுப்படகு மீனவர்கள் பயன்படுத்தும் வலைகளான நண்டு வலை, முரல் வலை, செங்கனி வலை, நகரை வலை மற்றும் சலங்கை வலைகளை பின்னும் பயிற்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு நபார்டு வங்கியின் மாவட்ட மேலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். பயிற்சி வகுப்பினை கனரா வங்கியின் முதன்மை மேலாளர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    கனரா வங்கியின் விவசாய அலுவலர் சாமுவேல், அன்பாலயா தொண்டு நிறுவன நிறுவனர் சவேரியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு இயக்குநர் வெள்ளிமலர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    இதையொட்டி 30 பெண்க ளுக்கு 15 நாட்களுக்கு வலை பின்னும் பயிற்சியினை பயிற்றுனர் சந்தியாகு பிச்சை தொடங்கி வைத்தார். அப்போது சொந்தமாக வலை பின்ன கற்றுக்கொள்வதால் சொந்த உபயோகத்திற்கும், மற்ற மீனவர்களுக்கும் வழங்க முடியும். இதனால் வீட்டிலிருந்தபடியே பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சி முடிவில் விற்பனை மேலாளர் சதீஸ்குமார் நன்றி கூறினார்.

    ×