search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Communist Party of India"

    • அடுத்த மாதம், 6 முதல் 9ந் தேதி வரை, கட்சியின் மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற உள்ளது.
    • மாநாட்டு நிறைவாக 9ந் தேதி, மத்திய அரசை கண்டித்து நடக்கவுள்ள பேரணி நடைபெறும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அவிநாசி :

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின், 25வது மாநில மாநாட்டு தயாரிப்பு பேரவை கூட்டம் அவிநாசியிலுள்ள குலாலர் திருமண மண்டபத்தில் நடந்தது.

    மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் ரவி, திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் இசாக், ஒன்றிய செயலாளர் சண்முகம், துணை செயலாளர்கள் கோபால், முத்துசாமி, பொருளாளர் ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் பேசினர்.அடுத்த மாதம், 6 முதல் 9ந் தேதி வரை, கட்சியின் மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற உள்ளது.

    இதில், கட்சியினர் பங்கேற்க வேண்டும். மாநாட்டு நிறைவாக 9ந் தேதி, மத்திய அரசை கண்டித்து நடக்கவுள்ள பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வரும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியில் அவர் சேர்ந்துவிட்டதாக வெளியான தகவல் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். #DivyaSathyaraj
    நடிகர் சத்யராஜ் மகளான திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் ’இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார்.

    எனவே, திவ்யா சத்யராஜ் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையப் போகிறார் என்று செய்திகள் பரவின. இந்நிலையில், அதற்குப் பதில் தரும் வகையில் தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ளார் திவ்யா சத்யராஜ். “நான் மனதளவில் கம்யூனிஸ்ட்.

    கம்யூனிஸம் தான் சமத்துவத்தைக் கட்டமைக்கும், சுரண்டலைத் தடுக்கும். எனக்கு நல்லகண்ணு அய்யாவைப் பற்றி நன்கு தெரியும். ஒரு அரசியல் தலைவர் எவ்வாறு எளிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பவர்.

    சாதிகளற்ற சமூகத்தின் கொள்கைகளுக்காக, எதையும் தியாகம் செய்யக்கூடியவர்.” எனத் தெரிவித்துள்ளார். #DivyaSathyaraj

    ×