search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college student missing"

    பெருந்துறை அருகே ஆஸ்டலில் தங்கி படித்த கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு மருத்துவகல்லூரியின் நர்சிங் படித்து வரும் மாணவி ஹாஸ்டலில் இருந்து மாயமான சம்பவம் தொடர்பாக முதல்வர் கொடுத்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், காசிபாளையம் பகுதியை சேர்ந்த  சிவராஜ் என்பவரது மகள் உமாதேவி (வயது 20). இவர் பெருந்துறை, சேனடோரியத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் மூன்றாமாண்டு நர்சிங் படித்து வருகிறார்.

    கல்லூரி வளாகத்தில் உள்ள ஹாஸ்டலிலேயே தங்கி படித்து வரும் இவர் நேற்று முன்தினம் காலை திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டிரெயினிங் சென்று விட்டு மதியம் ஹாஸ்டலுக்கு திரும்பி வந்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்து வார்டன் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் அனுமதி பெறாமல் வெளியே சென்றாராம். அவர் மீண்டும் ஹாஸ்ட லுக்கு வராததால் கல்லூரி முதல்வர் மனோண்மணி பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுகவனம் காணாமல் போன மாணவியை தேடிவருகிறார்.

    நல்லம்பள்ளி அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள பண்ட அள்ளியை சேர்ந்தவர் முனிராஜ். இவர் கர்நாடகாவில் உள்ள ஒரு கல் குவாரியில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சிந்து (வயது19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி அன்று சிந்து கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற சிந்து வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் முனிராஜ் உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கும் தேடியும் சிந்து கிடைக்கவில்லை. 

    இதுகுறித்து முனிராஜ் இண்டூர் போலீசில் எனது மகள் சிந்துவை எர்பைனஅள்ளியை சேர்ந்த அண்ணாதுரை மகன் கலையரசன் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இண்டூர் அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.
    இண்டூர்:

    தருமபுரி மாவட்டம் இண்டூரை அடுத்த பண்ட அள்ளியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகள் சிந்து (வயது 19). இவர் நல்லம்பள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். 

    கடந்த 7-ந் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் பின்னர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது தந்தை முனிராஜ் இண்டூர் போலீஸ் நிலையத்தில் எர்ரபையனஅள்ளியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் கலையரசன் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் கொடுத்தார். 

    புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியையும், கலையரசனையும் தேடி வருகின்றனர்.
    அஞ்சுகிராமம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் மயிலாடி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சத்யா (வயது 21). இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் சத்யாவை பெண் கேட்டு வந்தனர். ஆனால் அவரது பெற்றோர் தற்போது திருமணம் செய்து கொடுக்கவில்லை என கூறிவிட்டனர்.

    பின்னர் கடந்த 22-ந்தேதி சத்யா மட்டும் வீட்டில்  தனியாக இருந்த அவர் திடீரென மாயமானார். வீடு திரும்பிய அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் அவரது அண்ணன் சரவணன் (30) என்பவர் புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது தங்கையை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவரைகுளத்தை சேர்ந்த சிலர் பெண் கேட்டு வந்தனர். ஆனால் நாங்கள் பெண் தர மறுத்துவிட்டோம். இந்த நிலையில் வீட்டில் இருந்த எனது தங்கையை அவர்கள் கடத்திச் சென்று உள்ளனர். எனது தங்கையை அவர்களிடம் இருந்து மீட்டுத் தரும்படி அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

    இதுகுறித்து அஞ்சுகிராமம் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து கடத்திச் செல்லப்பட்ட கல்லூரி மாணவி சத்யாவை தேடி வருகிறார்.

    அஞ்சுகிராம் குலசேகரபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் சங்கீதா (20). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வலைக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் மாயமானார். வீடு திரும்பிய பெற்றோர் வீட்டில் சங்கீதா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அவர் எங்கும் இல்லாததால் இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்.
    பேட்டையில் கல்லூரி மாணவி திடீரென மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    பேட்டை அனவரத வெற்றி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன். அரசு பஸ் டிரைவர். இவரது மகள் வேலம்மாள் என்ற சீதா(வயது21). இவர் பேட்டையில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டைவிட்டு சென்ற வேலம்மாளை காணவில்லை. 

    அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து மாணவி வேலம்மாள் எங்கு சென்றார்? அவரை யாரும் கடத்தி சென்றார்களா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் கல்லூரிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு, நியூ டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். ஜவுளி வியாபாரி. இவரது மகள் நந்தினி(வயது21). ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு ஆங்கிலம் படித்து வந்தார்.

    நந்தினி காலையில் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வருவது வழக்கம். இதே போன்று நந்தினி கடந்த 18-ந் தேதி(திங்கட்கிழமை) காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    ஆனால் மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் நந்தினியை பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து நந்தினியின் தந்தை தங்கராஜ் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மகளை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தேனி அருகே வீட்டை விட்டு சென்ற கல்லூரி மாணவி மாயமானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    தேனி அருகே சின்னமனூர் சீலையம்பட்டி கந்தசாமி செட்டியார் தெருவை சேர்ந்தவர் மணிமுத்து. இவரது மகள் சந்தியா (வயது17). இவர் தேனியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் சி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று சந்தியா தம்பியுடன் கம்ப்யூட்டர் பழுது பார்க்க செல்வதாக வீட்டில் கூறி உள்ளார். வெகுநேரமாகியும் சந்தியா வீடு திரும்பாததால் அவரது தந்தை மணிமுத்து அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் மணிமுத்து சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி சந்தியாவை போலீசார் தேடி வருகின்றனர்.
    தருமபுரியில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், ஏ.பள்ளிப்பட்டியை அடுத்த புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் நிஷா (வயது19). இவர் தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 7-ந்தேதி அன்று நிஷா கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் தந்தை ரமேஷ் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

    இது குறித்து அவரது தாய் செல்வி ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் மாயமான நிஷாவை தேடி வருகின்றனர்.
    வில்லியனூரில் விடுமுறையில் வீட்டுக்கு வந்த கல்லூரி மாணவி மாயமானார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் வி.மணவெளி கணபதிநகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர். 2 வீலர் ஒர்க்‌ஷாப் வைத்துள்ளார்.

    இவரது மகள் சண்முக பிரியா (வயது 20). இவர் சென்னை தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் குடியரசு தின விடுமுறையில் வீட்டுக்கு வந்த சண்முக பிரியா நேற்று முன்தினம் மாலை தாயாரிடம் வயிறு வலிப்பதாக கூறி உள்ளார். இதனால் அவரது தாய் மாத்திரை வாங்க மருந்து கடைக்கு சென்றார்.

    மாத்திரை வாங்கி விட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது, சண்முகபிரியாவை காணவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட அனைத்து இடங்களில் தேடியும் எங்கும் சண்முகபிரியாவை காணவில்லை.

    இதுகுறித்து சங்கர் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஏட்டு கிருபாகரன் வழக்கு பதிவு செய்து சண்முகபிரியாவை தேடி வருகிறார்.
    கல்லூரி சென்ற மகள் மாயமாகி விட்டதாக போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.

    விருதுநகர்:

    விருதுநகர் முத்தால் நகரைச் சேர்ந்தவர் மாரிக்கனி. இவரது மகள் பெத்து மணி (வயது 20).

    இவர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கண்ணன். இவருடன் பெத்துமாரி அடிக்கடி பேசியுள்ளார்.

    இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இந்த நிலையில் கண்ணன் குடும்பத்தினர் மதுரைக்கு மாறி விட்டனர். அதன் பின்னர் பெத்துமாரி செல்போன் மூலம் கண்ணனிடம் பேசி வந்தாராம்.

    இந்த நிலையில் மாரிக்கனியை பாம்பு கடித்ததால் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளனர். அவரது மனைவி மீனாட்சியும் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அப்போது தனியாக வீட்டில் இருந்த பெத்துமாரி கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்க வில்லை.

    இது குறித்து பாண்டியன் நகர் போலீசில் மீனாட்சி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெத்துமாரியை தேடி வருகின்றனர்.

    அரூர் அருகே கல்லூரி மாணவர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஹரிதாஸ். இவரது மகன் வேடன் (வயது 23). இவர் அரூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை சென்ற அவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை. 
    உடனே பதறிபோன அவரது பெற்றோர் பல இடங்களில் வேடனை தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது. 

    இந்த சம்பவம் குறித்து அண்ணன் கிளிண்டன் என்பவர் அரூர் போலீசாரிடம் புகார் தெரிவித்ததார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லையில் கல்லூரிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
    நெல்லை:

    நெல்லை டவுன் கோட்டையடி தெருவை சேர்ந்தவர் முருகன், தொழிலாளி. இவரது மகள் சுக்லாதேவி (வயது18). இவர் பாளையில் உள்ள தனியார் பயிற்சி கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து வந்தார். 

    கடந்த 23-ந்தேதி பயிற்சி கல்லூரிக்கு சென்ற சுக்லாதேவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல்கள் கிடைக்க வில்லை. 

    இதைத்தொடர்ந்து அவரது தாயார் பார்வதி (48), நெல்லை டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி சுக்லா தேவியை தேடி வருகிறார்கள்.
    ×