என் மலர்
நீங்கள் தேடியது "college student dead"
சத்தியமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளும் டிராக்டரும் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சத்தியமங்கலம்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் ரகீம்ஷேட். இவரது மகன் முகமது அனாஸ் (வயது 22).
ஈரோடு பெருந்துறை ரோடு, கே.சி.பி. தோட்டத்தை சேர்ந்தவர் ஷகின் அலி. இவரது மகன் முகமது மசூத் அலி (21). இவர்கள் 2 பேரும் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு மாணவர்கள்.
இவர்கள் நேற்று மோட்டார் சைக்கிளில் கல்லூரியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை முகமது மசூத் அலி ஓட்டினார்.
சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் உள்ள தனியார் மண்டபம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த டிராக்டரும், மோட்டார் சைக்கிளும் மோதின.
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் முகமது அனாஸ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் ரகீம்ஷேட். இவரது மகன் முகமது அனாஸ் (வயது 22).
ஈரோடு பெருந்துறை ரோடு, கே.சி.பி. தோட்டத்தை சேர்ந்தவர் ஷகின் அலி. இவரது மகன் முகமது மசூத் அலி (21). இவர்கள் 2 பேரும் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு மாணவர்கள்.
இவர்கள் நேற்று மோட்டார் சைக்கிளில் கல்லூரியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை முகமது மசூத் அலி ஓட்டினார்.
சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் உள்ள தனியார் மண்டபம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த டிராக்டரும், மோட்டார் சைக்கிளும் மோதின.
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் முகமது அனாஸ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews