search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector survey"

    • அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • 40 அரசு பள்ளிகளில் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், வெண்ணத்தூர் ஊராட்சி ஒன்றியம், சம்பை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவர்களின் திறன் மேம்பாட்டை உயர்த்தும் வகையில் மாணவர்கள் குழு அமைத்து செயல்பட்டு வருவதை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டை வெளிக்கொணரும் வகையில் தற்போது 40 அரசு பள்ளிகளில் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிவப்பு, மஞ்சள், ஊதா, பச்சை என 4 வண்ணங்களில் 4 அணிகளாக பிரித்து மாணவ-மாணவிகளின் திறன் மேம்பாட்டை வளர்கும் வகையில் செயல்பட தொடங்கி உள்ளன. 4 அணிகளிலும் உள்ள மாணவ, மாணவர்களின் கல்வித்திறன், விளையாட்டு, பொது அறிவு குறித்தும் திறமைகளை வெளிக்கொண்டு வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மேலும் திறனை மேம்படுத்துவதற்கு ஏதுவான பயிற்சிகள் வழங்குவதே இந்த அணிகள் தொடங்கியதன் நோக்கமாகும். அந்த வகையில் மாவட்டத்தில் 40 பள்ளிகளில் உருவாக்கப்பட்டு ஆசிரியர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் நல்ல முறையில் திட்டத்தை பயன்படுத்தி திறனை மேம்படுத்தி தங்கள் சார்ந்த அணிக்கு முதலிடம் பெற்றுத் தரும் வகையில் திறமையை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ராஜபாளையம், முத்துசாமிபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் அரசின் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஊராட்சி மற்றும் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன்படி விழுப்பனூர் ஊராட்சி கிருஷ்ணன் கோவில் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.32 லட்சம் மதிப்பில் அரசு புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும், பிள்ளை யார்நத்தம் ஊராட்சி அண்ணாநகர் கிராமத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு தொடர்பான பணியையும் ஆய்வு செய்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் வேளா ண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலைக் கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி திருப்பாற்கடல் குளத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2020-21-ன் கீழ், ரூ.107 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை தூர்வாரி உட்புறம் கான்கிரீட் அமைத்து குளத்தை சுற்றிலும் நடை பாதை மற்றும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதையும், மடவார் வளாகத்தில் செயல்பட்டு வரும் நுண் உர செயலாக்க மையத்தில் நகராட்சியில் வார்டு வாரியாக சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் அனைத்தும் அதற்கான எந்திரத்தில் அரவை செய்யப்பட்டு, தொட்டியில் காய வைத்து உரமாக மாற்றப்படும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    படிகாசுவைத்தான்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில், விவசாயிகள் பயிற்சி மைய வளாகத்தில் 5 ஆயிரம் முசுக்கொட்டை மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும் கலெக்டர் ஜெய்சீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் ராஜபாளையம், முத்துசாமிபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் அரசின் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்தார். ராஜபாளையம் அரசு மகப்பேறு அரசு ஆஸ்பத்திரியிலும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், நகர்நல அலுவலர் கவிபிரியா, நகராட்சி மேலாளர் பாபு, சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, ராஜபாளையம் அரசு தலைமை மருத்துவர் மாரியப்பன், சந்திரா, நகராட்சி செயற்பொ றியாளர் தங்கபாண்டியன், உள்ளிட்ட பலர் இருந்தனர்.

    • மானிய உதவியுடன் தொழில் நிறுவனங்களை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • பெண் தொழில்முனைவோரால் தொடங்கப்பட்டுள்ள விசைத்தறிக் கூடத்தையும் பாா்வையிட்டாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பி.எம்.இ.ஜி.பி.) கீழ் 107 பேருக்கு ரூ.4.08 கோடி மானிய உதவியுடன் சுமாா் ரூ.12.30 கோடி முதலீட்டில் தொழில் நிறுவனங்கள் தொடங்கவும், புதிய தொழில் முனைவோா் தொழில் நிறுவன வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 31 பேருக்கு ரூ.10.53 கோடி மானிய உதவியுடன் ரூ.52.65 கோடி முதலீட்டில் தொழில் நிறுவனங்களை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதில் திருப்பூா் மாநகராட்சி மற்றும் பல்லடம் வட்டாரப் பகுதிகளில் ரூ.88.13 லட்சம் மானிய உதவியுடன் ரூ.4.57 கோடி திட்ட மதிப்பீட்டில் பி.எம்.இ.ஜி.பி., நீட்ஸ் திட்டங்களில் வங்கிக் கடன் பெறப்பட்டு தொடங்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களில் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு செய்தாா்.

    இதில், பி.எம்.இ.ஜி.பி. திட்டத்தின் கீழ் ரூ.6.25 லட்சம் மானிய நிதியுதவியுடன் ரூ.25 லட்சம் முதலீட்டில் வித்யாலயம் பகுதியில் தனிநபா் சாா்பில் தொடங்கப்பட்டுள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தையும், நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.44.10 லட்சம் மானியத்துடன், ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் பல்லடம் வட்டத்தில் தனிநபா் சாா்பில் தொடங்கப்பட்டுள்ள பின்னலாடை நிறுவனத்தையும் மாவட்ட கலெக்டர் வினீத் ஆய்வு செய்தாா். அதேபோல, தெற்குபாளையம் பிரிவில் நீட்ஸ் திட்டத்தின்கீழ் ரூ.37.78 லட்சம் மானியத்தில் ரூ.2.33 கோடி மதிப்பீட்டில் பெண் தொழில்முனைவோரால் தொடங்கப்பட்டுள்ள விசைத்தறிக் கூடத்தையும் பாா்வையிட்டாா்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ராமலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அலெக்ஸாண்டா், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் (தொழில்நுட்பம்) கிரீசன், உதவிப் பொறியாளா் தினேஷ்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா். 

    • புத்தக திருவிழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
    • ராமநாதபுரத்தில் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகிற 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை புத்தக திருவிழா நடக்கிறது.

    இதில் 100 அரங்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் ஒரு லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி பட்டறைகள் நாள் தோறும் நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரங்கம் அமைக்கும் பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு செய்தார். அப்போது சுகாதார முறையில் உணவகம், குடி நீர், கழிப்பறை, பார்க்கிங் வசதிகள், உள்ளே வெளியே செல்வதற்கு தனி வழிகள் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

    ஆய்வின் போது கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு உதவி செயற் பொறியாளர் குருதி வேல், முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய குமார், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மதுரை வைகை ஆற்றங்கரை ஓரத்தில் வசிப்பவர்களுக்கு நிவாரண முகாம் வழங்கப்பட்டது.
    • இதனை கலெக்டர் அனீஷ்சேகர் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. வைகை ஆற்றில் வினாடிக்கு 7000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அலுவலகம் தொடங்கப்பட்டு உள்ளது.

    அங்கு இருந்தபடி கலெக்டர் அனீஷ்சேகர் வெள்ள பாதிப்புகளை கவனித்து வருகிறார். வெள்ள பாதிப்பில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோசாகுளம் பள்ளிக்கூடத்தில் மாதிரி தற்காலிக நிவாரண மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கலெக்டர் அனீஷ்சேகர் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • கிளியனூர் ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
    • மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கிளியனூர் ஊராட்சியில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணிக்கு சரியான நேரத்தில் வருகை புரிந்து வருகிறார்களா? என்பதை ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, சிகிச்சை வழங்கும் பிரிவு, மருந்துகள் இருக்கும் அறை, ஆய்வுக்கூடம், ஆகியவற்றை பார்வையிட்டு, ஆய்வு செய்ததுடன், அவ்வப்பொழுது மருந்து, மாத்திரைகள் போதிய அளவு உள்ளதா? என்பதை டாக்டர்கள் உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தியதுடன், மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார்.

    இதையடுத்து பிரசவ வார்டில் ஆய்வு மேற்கொண்டு குழந்தை பிறந்த தாய்மார்களிடம் தாயும், சேயும் நலமாக உள்ளீர்களா? என கேட்டறிந்து, தாயும், சேயும் நலமுடன் இருந்திடும் வகையில் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்குவதுடன், தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கான மாதாந்திர பரிசோதனை சரியான காலகட்டத்தில் மேற்கொள்ள டாக்டர்கள் தக்க அறிவுரைகள் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அதனை தொடர்ந்து, வல்லம் ஊராட்சி ஒன்றியம், நாட்டார்மங்கலம் அங்கன்வாடி மையத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தில் காலி இடத்தில் காய்கறித் தோட்டம் அமைத்திட அறிவுறுத்தியதுடன், தினமும் குழந்தைகளுக்கு சத்தான சுகாதாரத்துடன் கூடிய உணவினை வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) மரு.பொற்கொடி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    புலியடித்தம்பம் ஊராட்சியில் நடைபெற்ற தூய்மைப்பணிகளை கலெக்டர் ஜெயகாந்தன் ஆய்வு செய்தார்.
    காளையார்கோவில்:

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், புலியடித்தம்பம் ஊராட்சியில் தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஊராட்சியில் ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டில் தூய்மை சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா, தண்ணீர் தேக்கி வைத்து உள்ள பாத்திரங்கள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகளை பார்வையிட்டதுடன் சுத்தமில்லாத தண்ணீர் பாத்திரங்களை அப்புறப்படுத்தியதுடன் வீட்டில் உள்ள நபர்களிடம் சுற்றுப்புற தூய்மை குறித்து விளக்கமளித்தார்.

    மேலும் தூய்மை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:- ஒவ்வொருவரும் தூய்மையை கடைப்பிடித்தால்தான் சுற்றுப்புறச் சுழல் தூய்மையாக இருக்கும். அதன்மூலம் நோய்கள் பரவாமல் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதற்கு பொதுமக்களாகிய உங்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும். ஒவ்வொருவரும் தங்களது கடமையாக எண்ணி வீட்டின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பயன்பாடற்ற பொருட்களை தேக்கி வைக்க கூடாது. காரணம் தற்போது மழைக்காலம் என்பதால் தேவையற்ற பொருட்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்களை உருவாக்கும் லார்வா புழுக்கள் எளிதாக உருவாகின்றன. அதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வழிவகை செய்கின்றது. அது 500 மீட்டர் தூரம் வரை பறந்து சென்று நோய்களை பரப்பும் சக்தி கொண்டதாகும். அதிலும் பகல் நேரத்தில்தான் டெங்கு கொசு அதிக அளவில் தாக்கும் சக்தி கொண்டதாக இருக்கின்றன.

    தினமும் கைகளை சோப் மூலம் நன்கு கழுவிட வேண்டும். இதன்மூலம் கைகளில் கிருமிகள் தொற்றுவதை எளிதாக தடுத்திடலாம். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஒவ்வொரு வீதிகளிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று நீர்த்தேக்க தொட்டி சுத்தமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. வீடுகளில் கொசு புழு உற்பத்தியுடன் தண்ணீர் தேக்கி வைத்துள்ள 6 வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், வருங்காலங்களில் தவறுகள் செய்யும் வீட்டின் உரிமையாளர்கள் மீது கூடுதல் அபராத நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கப்பட்டது. ஆய்வின் போது காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ தாயுமானவன், சந்திரா, காளையார்கோவில் தாசில்தார் பாலகுரு உள்பட சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
    தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தார்.
    தேனி:

    தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி, போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். பழனிசெட்டிபட்டி சூர்யாநகரில் வீடு, வீடாக சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    வீடுகளில் தண்ணீர் சேமித்து வைத்துள்ள பாத்திரங்கள், சிமெண்டு தொட்டிகள், குடங்கள், குளிர்சாதன பெட்டிகள், ஆட்டுக்கல், கழிவுநீர் வாய்க்கால் போன்றவற்றில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழுக்களின் உற்பத்தி உள்ளதா? என்பதை பார்வையிட்டார். தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், தொட்டிகளை நன்கு மூடி வைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரைகள் வழங்கினார். புதிதாக கட்டுமான பணிகள் நடந்து வரும் கட்டிடங்களுக்கும் கலெக்டர் சென்று, அங்கு சேமித்து வைத்துள்ள தண்ணீரில் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகிறதா? என்பதை ஆய்வு செய்தார்.

    பின்னர் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் கொட்டக்குடி ஆற்றின் நீர்வரத்து, பொட்டல்களம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள், போ.மீனாட்சிபுரம் பேரூராட்சியில் பொது கழிப்பறை, அணைக்கட்டு வாய்க்காலில் பாலம் அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு பணிகள் மேற்கொண்டார். குரங்கணி மலைக்கிராமத்தில் பொது கழிப்பறை அமைக்கும் பணி, கொட்டக்குடி கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டுஉறைவிட பள்ளியின் செயல்பாடுகள், மாணவர்களின் கற்றல் திறன், அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் போடிமெட்டு மலைப்பாதையில் பார்வையிட்டு, பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ள இடங் களை பார்வையிட்டார். ஒவ்வொரு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போதும், அந்தந்த பகுதி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    ஆய்வின்போது, ‘போ.மீனாட்சிபுரம் பேரூராட்சி செல்வராஜ் நகரில் பொது கழிப்பறை சேதம் அடைந்து உள்ளதால் அதனை உடனே சீரமைத்து ஒரு மாத காலத்துக்குள் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அணைக்கட்டு வாய்க்காலில் பாலம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். குரங்கணி கிராமத்தில் ஒரு மாத காலத்துக்குள் பொது கழிப்பறையை கட்டிக் கொடுக்க வேண்டும். மேலும், அங்கு பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் அமைத்து பொதுமக்களுக்கு தங்குதடையின்றி தொலைதொடர்பு இணைப்பு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். போடிமெட்டு மலைப்பாதையில் பாறைகள் சரிந்து விழும் நிலையில் உள்ள பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்’ என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வில், உத்தமபாளையம் உதவி கலெக்டர் வைத்தியநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அபிதாஹனீப், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஹரி, போடி தாசில்தார் ஆர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
    விழுப்புரம் நகராட்சி பகுதியில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #Dengue
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை சார்பில் டெங்கு கொசு ஒழிப்பிற்கென பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பானாம்பட்டு சாலை, ஊரல்கரைமேடு, குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு உள்ளதா? எனவும் பழைய டயர்கள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், ஆட்டு உரல்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதா? என்று மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும், மாணவ- மாணவிகளுக்கும் டெங்கு காய்ச்சல் குறித்தும் டெங்கு கொசு ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதோடு, பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக பராமரித்தாலே டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் குமாரவேல், தாசில்தார் சையத்மெகமூத், நகராட்சி ஆணையர் லட்சுமி, நகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் ராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.
    எட்டயபுரம் அருகே உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகளை உதவி கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    எட்டயபுரம்:

    விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் புதிய பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் 2-ம் கட்டமாக நேற்று நடைபெற்றது. கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா எட்டயபுரத்தில் உள்ள 11 வாக்குச்சாவடிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

    இதேபோல் எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தாசில்தார் வதனாள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். 
    வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை இந்த பணிகள் நடக்கிறது. இந்த காலத்தில் செப்டம்பர் மாதம் 9, 23-ந்தேதிகளிலும், அக்டோபர் மாதம் 7, 14-ந்தேதிகளிலும் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் நேற்று கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரூர் கோட்டைமேடு அரசு உயர்நிலைப்பள்ளி, தாந்தோன்றிமலை அரசு கல்லூரி, கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி என மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1,031 வாக்குசாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்ப்பு, நீக்கல், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது.

    இதில் கரூர் காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டமேடு உயர்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமினை கலெக்டர் அன்பழகன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது வாக்காளரிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு? இளம் வயதினர் ஆர்வத்துடன் வருகை தருகிறார்களா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள அனைவரும் தங்கள் பெயர்களை புதிய வாக்காளராக பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பங்களை அளிக்கலாம். இது போல் இறந்தவர்களின் பெயரை நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கும் சில படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் அக்டோபர் மாதத்தில் நடக்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று கூறினார். இந்த ஆய்வின்போது கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, கரூர் தாசில்தார் ஈஸ்வரன் உள்பட பலர் உடனிருந்தனர். 
    பரமக்குடி யூனியனில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யூனியனுக்கு உட்பட்ட கிராமங்களில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக அவர் கமுதக்குடி கிராமத்தில் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்தார்.

    அதைத்தொடர்ந்து வெங்காளூர் மற்றும் சங்கன்கோட்டை கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து அங்குள்ள குழந்தைகளின் வயதுக்கேற்ற வளர்்ச்சி மற்றும் சரியான எடை குறித்தும், சராசரி அளவை விட மிக குறைவான எடையளவு உள்ள குழந்தைகளை கண்டறியும்பட்சத்தில் உடனடியாக சிறப்பு கவனம் செலுத்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் அந்த கிராமங்களில் உள்ள ஊராட்சி சேவை மைய கட்டிடங்கள், சமுதாய கூட கட்டிடங்களை ஆய்வு செய்து அதிலுள்ள பழுதுகளை உடனடியாக சரிசெய்ய கேட்டுக்கொண்ட அவர், கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி, பள்ளி குழந்தைகள் மழைக்காலங்களில் சென்றுவர வசதியாக ஒரு பாலம் கட்ட வேண்டும் எனவும் மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கும் கோரிக்கை வைத்தனர்.

    அதை கேட்டறிந்த கலெக்டர் நடராஜன் சாலையைப் பொறுத்தவரை சங்கன்கோட்டையில் இருந்து நண்டுபட்டி சாலை அமைக்க ரூ.1.21 கோடி மதிப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்டு 2 சாலைகளுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் சாலை அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    அதேபோல குடிநீரை பொறுத்தவரை நிலத்தடிநீர் உப்பாக உள்ளபடியால் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பள்ளி குழந்தைகள் செல்வதற்கான பாலம் தொடர்பாக திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்குமாறும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 
    ×