search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collection"

    • காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது
    • , சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்காபக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.


    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது.  இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்க ளும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும், பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இறுதியில்(டிசம்பர் மாதம்) இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற இருப்பதால், கடந்த வாரம் 16-ந் தேதி உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது.

    இதில் நூற்றுக்கு மேற்பட்ட கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். வாரம் இரு நாட்கள் என 4 நாட்கள் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. முடிவில், ரூ.2 கோடியே 7 லட்சம் பணமும், 150 கிராம் தங்கம், 1.5 கிலோ வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரனை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, உண்டியலில் கிடைக்க ப்பெற்ற காணிக்கை மற்றும் பணம் உரிய பாதுகாப்புடன் கோவில் நிர்வாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

    • மாதாமாதம் மின்சாரத்தை கணக்கிட்டு வசூல் செய்ய வேண்டும்.
    • மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரெயில் கட்டண சலுகை திரும்ப வழங்க வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி அருகே தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் 11-வது அமைப்பு தின விழா கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வட்ட தலைவர் கோவி.ரெங்கசாமி தலைமை வகித்தார்.

    வட்ட துணைத்தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். வட்ட செயலாளர் செல்லத்துரை விளக்கி பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சமூக நீதியின் அடிப்டையில் சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850 வழங்க வேண்டும், மின் கட்டணம் மாதம் என்பதை தவிர்த்து மாதாமாதம் மின்சாரத்தை கணக்கீட்டு வசூல் செய்ய வேண்டும்,

    இறந்துபோன ஓய்வூதியருக்கு ரூபாய் 1,50,000 குடும்பநல நதி வழங்க வேண்டும்,மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரயில் கட்டண சலுகை திரும்ப வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ராஜமோகன், ஜெகஜோதி, நடராஜன், அன்பழகன், கருணாநிதி உட்பட பலரும் கலந்துக்கொ ண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் அண்ணா துரை நன்றி கூறினார்.

    • ராமேசுவரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 ேகாடி 19 லட்சம் வசூலானது.
    • தை அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சாமி கோவில் தை அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் மற்றும் உபகோவில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன.

    துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

    உண்டியல் வருவாயாக ரூ.1 கோடியே 19 லட்சத்து, 82 ஆயிரத்து, 629 ரொக்கம். தங்கம் 17 கிராம், 200 மில்லி மற்றும் 710 கிராம் வெள்ளி யும் கிடைக்க பெற்றது.

    உண்டியல் எண்ணும் பணியில் உதவி ஆணையர் ஞானசேகரன், மேலாளர் மாரியப்பன், கோவில் பேஷ்கார்கள் அண்ணா துரை, கமலநாதன் பஞ்ச மூர்த்தி, செல்லம் உள்பட பணியாளர்களும், அலு வலர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டு பெரிய கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிடந்த குப்பைகளை சேகரித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மை பணி இன்று காலை 34 தேசிய மாணவர் படை தஞ்சாவூர் சார்பில்

    நடைபெற்றது.

    இதில் தேசிய மாணவர் படை அதிகாரிகள் லெப்டி னைட்கள் சுரேஷ்பாபு, வசந்த், பேரரசன் மற்றும் தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, கரந்தை தமிழ்வேள் உமா மகேஸ்வரனார், பூண்டி புஷ்பம் கல்லூரிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டு பெரிய கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிடந்த குப்பைகளை சேகரித்தனர்.

    பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்தனர்.

    புல் பூண்டுகளை அகற்றி சுத்தப்படுத்தினர். தொடர்ந்து பெரிய கோவிலுக்கு வந்தி ருந்த சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு பிளா ஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • பெருந்தொகையை கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
    • ஆபரேட்டர்கள் மீது சுமத்தியுள்ள நிலுவை தொகையை ரத்து செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் தஞ்சை மாவட்ட தலைவர் சைவ. குமணன், மாவட்ட செயலாளர் முருகு .இளஞ்செழியன், மாவட்ட பொருளாளர் குமரன் ஆகியோர் தலைமையில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை பொது மக்களுக்கு வழங்கிய பின்னர் தற்போது செயல்படாத பாக்ஸ்களுக்கு அவற்றின் கிரைய தொகை என்று கூறி பெருந்தொகையை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இடம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.

    கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நலவாரியம் அமைத்து தர வேண்டும் . நிலுவைத் தொகை என்ற பெயரில் ஆப்பரேட்டர்கள் மீது சுமத்தியுள்ள நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.

    வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதை உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்வில் தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், ஒரத்தநாடு, திருவையாறு , பூதலூர், பாபநாசம், பேராவூரணி, திருவிடைமருதூர் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.
    • பொதுமக்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டு அவை கடிதங்களாக பெறப்பட்டன.

    பல்லடம் :25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.

    தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரி சீராய்வு செய்யப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதன்படி நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகள், கடைகள் உள்ளிட்டவற்றுக்கு 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.பல்வேறு தரப்பினரும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.

    இது குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டு அவை கடிதங்களாக பெறப்பட்டன. சொத்து வரி உயர்வு தொடர்பாக நகராட்சி கூட்டத்திலும் ஆலோசிக்கப்பட்டு, எதிர்ப்புகளுக்கு இடையே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சொத்து வரி உயர்த்துவதற்கான கட்டடங்களின் நீள, அகலம், உயரம் உள்ளிட்டவை அளவீடு செய்யும் பணி நடந்தது. இதையடுத்து, புதிய வார்டுக்கு மாற்றம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. சீராய்வு செய்யப்பட்ட சொத்து வரி வசூல் செய்யும் பணி, கடந்த 2 மாதங்களுக்கு நிறுத்தப்பட்டிருந்தது.தற்போது புதிய உயர்த்தப்பட்ட சொத்து வரி வசூல் செய்யும் பணி துவங்கியுள்ளது. புதிய சொத்து வரி, பெயர் மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளையும் இனி மேற்கொள்ளலாம் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • மதுரை- ராமேசுவரம் சிறப்பு ரெயில் மூலம் ரூ.2 லட்சம் வசூல் கிைடத்தது.
    • ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

    மதுரை

    ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு நேற்று முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இது மதுரையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு, காலை 9.15 மணிக்கு ராமேசுவரம் சென்றது.

    கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி வழியாக சென்ற ரெயிலில் 1140 பேர் பயணம் செய்தனர். இதன் மூலம் 72 ஆயிரத்து 700 ரூபாய் கட்டணம் வசூல் ஆனது.

    மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்ட ரெயில், மாலை 5.15 மணிக்கு மதுரை வந்தது. இதில் 1853 பேர் பயணம் செய்தனர். இதன் மூலம் 1 லட்சத்து 28 ஆயிரத்து 575 ரூபாய் கட்டணம் வசூல் ஆனது.

    மதுரை- ராமேசுவரம் ஆடி அமாவாசை சிறப்பு ரெயிலில் 2993 பேர் பயணம் செய்தனர். இதன் மூலம் ரெயில்வே துறைக்கு ஒரே நாளில் ரூ.2 லட்சம் வருமானம் கிடைத்தது.

    • கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிடில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பதட்டமான சூழல் உருவாகும் சமயத்தில் மட்டும் மாவட்ட கலெக்டர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளூர் மக்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என சுங்கச்சாவடி உறுதி கூறும்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் சுங்கச்சாவடி அமைந்து உள்ளது. திருமங்கலம் நகராட்சியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த சுங்கச்சாவடி உள்ளதால் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஆனால் உள்ளூர் மக்களிடம் ஊழியர்கள் சுங்க கட்டணம் கேட்பதால் இங்கு அடிக்கடி மோதல் ஏற்படும் சூழல்களும் உருவாகி வருகின்றன. பதட்டமான சூழல் உருவாகும் சமயத்தில் மட்டும் மாவட்ட கலெக்டர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளூர் மக்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என சுங்கச்சாவடி உறுதி கூறும்.

    ஆனால் சில நாட்களிலேயே அந்த உறுதி மொழியை காற்றில் பறக்கவிட்டு மீண்டும் சுங்க கட்டணம் கேட்பார்கள்.தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் திருமங்கலம் மற்றும் கப்பலூர் பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் 2 ஆண்டுகளுக்குரிய சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டுமென வக்கீல் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு சுங்க நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஒவ்வொருவருக்கும் ரூ. 30 ஆயிரத்திலிருந்து, ரூ. 3 லட்சம் வரையிலும், கப்பலூர் தொழிற் பேட்டை வாகனங்களுக்கு ரூ. 1கோடி வரையிலும், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து துறைக்கு ரூ‌.28கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வாகன ஓட்டிகளிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி யுள்ளது.

    இதையடுத்து சட்ட விரோதமாக அமைக்க ப்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.இதில் திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதியின் போது கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த தமிழக முதல்வர் உடனடியாக சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றும் வரை திருமங்கலம், கப்பலூர், டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • முகக்கவசம் அணியாத 115 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    • விதிமுறைகளை கடைபிடிக்க தவறியதாக 53 நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு ரூ.8 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் 10 பேர் வீதம் பாதிக்கப்பட்டு வந்தனர்.இந்த நிலையில் கொரோனா பாதிப்பு நேற்று மட்டும் ஒரே நாளில் 49 ஆக அதிகரித்து உள்ளது.

    இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் 182 பேர் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு மதுரை தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சிலர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உட்பட்ட நோயாளிகளில் 26 பேர் நேற்று நோய் குணமாகி வீடு திரும்பினர் .

    மதுரையில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லை யெனில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் அனீஷ் சேகர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தார். ஆனாலும் பொதுமக்களில் சிலர் அலட்சியம் காட்டி வந்தனர்.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களை கண்காணித்து, அபராதம் விதிக்கும் வகையில், வருவாய் துறையினர் அடங்கிய 15 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அவர்கள் மதுரையின் 5 மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் ஜூன் மாதம் 30-ம் தேதி முதல் முகக்கவசம் அணியாதவரிடம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.முதல் நாளில் மட்டும் 62 பேரிடம் ரூ.24 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மதுரை மாவட்ட வருவாய்துறை கண்காணிப்பு குழுவினர் நேற்று முகக்கவசம் அணியாதவரிடம் அபராதம் வசூலித்தனர். அப்போது பொதுமக்களில் 23 பேர் முகக்கவசம் அணியாதது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு ரூ.7000 அபராதம் விதிக்கப்பட்டது.

    அடுத்தபடியாக தனியார் நிறுவனத்தில் முகக்கவசம் மற்றும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க தவறியதாக 53 நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு ரூ.8 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் 53 பேரிடம் ரூ.15 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 நாட்களில் மட்டும் முக கவசம் அணியாத 115 பேரிடம் இருந்து ரூ.40 ஆயிரத்து 100 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    ×