search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coconuts"

    • மழை, பனி காரணமாக கறிவேப்பிலை விலையும் உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோ 22 முதல் 24 ரூபாய் விற்ற தேங்காய் தற்போது 28 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    திருப்பூர் : 

    சபரிமலை சீசன் என்பதால் தேங்காய் விற்பனை ஜோராகியுள்ளது. தேங்காய்க்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ 22 முதல் 24 ரூபாய் விற்ற தேங்காய் தற்போது 28 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    வழக்கமாக சின்னரகம் ரூ.8 முதல் ரூ.10-க்கும் நடுத்தரம் ரூ. 14 முதல் 16 ரூபாய்க்கும், பெரிய தேங்காய் 18 முதல் 24 ரூபாய்க்கும் விற்கப்படும். தேங்காய்க்கு கிராக்கி நிலவுவதால் சின்னரகம் 11 ரூபாய், நடுத்தரம் 15 முதல் 18 ரூபாய், பெரியது 22 முதல் 26 ரூபாயாக மாறியுள்ளது.

    மழை, பனி காரணமாக கறிவேப்பிலை விலையும் உயர்ந்துள்ளது. கிலோ 25 முதல் 40 ரூபாய் இருந்த கறிவேப்பிலை கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கட்டு 8 முதல் 10 ரூபாய்க்கு விற்கப்படும். தற்போது ஒரு கட்டு 15 முதல் 20 ரூபாய்க்கு விற்கிறது.  

    • உயர் ரக தென்னை நடவு செய்த விவசாயிகள் முற்றிலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
    • உயர் ரகத் தென்னை தோல்வியை தழுவியது என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பல நர்சரிகள் மீண்டும் தென்னங்கன்று விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்

    திருப்பூர் :

    பசுமை புரட்சிக்கு பின் உயர்ரக தென்னை ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில் இனிப்பு சுவை மற்றும் காய்ப்பு திறன் அதிகம் என்பதால் பல விவசாயிகள் உயர் ரக தென்னை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டினர்.

    துவக்கத்தில் நன்றாகத்தான் இருந்தது. காலநிலை மாற்றம் காரணமாக தென்னையிலும் பூச்சி தாக்குதல் அதிகரித்தது. வீரியமிக்க பூச்சிக்கொல்லிகள் தெளித்தும் அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. பாரம்பரிய நாட்டுத் தென்னை மரங்கள் பூச்சி தாக்குதலை சமாளித்து நிற்கின்றன.ஆனால் உயர் ரக தென்னை மரங்கள் காய்ப்பு திறனை இழந்து விட்டது. பல்லாண்டு பயிரான தென்னையை வளர்த்த விவசாயிகள், அழிக்கவும் மனமில்லாமல் பராமரிக்கவும் முடியாமல் தவிக்கின்றனர். இதனால் உயர் ரக தென்னை நடவு செய்த விவசாயிகள் முற்றிலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    உயர் ரகத் தென்னை தோல்வியை தழுவியது என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பல நர்சரிகள் மீண்டும் தென்னங்கன்று விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பாவி விவசாயிகள் இவற்றை வாங்கி ஏமாறுவது தொடர் கதையாக உள்ளது.எனவே அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து உயர் ரகத் தென்னங்கன்று உற்பத்திக்கு மற்றும் விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

    • வாய்க்காலின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் விவசாய விளை பொருட்களை சாகுபடி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
    • நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு நிலங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் ஆக்கிரமி ப்பாளர்களிடமிருந்து மீட்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் நிரம்பி வழியும். கடந்தாண்டு வடகிழக்கு பருவ மழையின் போது வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.

    இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் அந்தியூர் பகுதியில் பெய்த கனத்த மழை காரணமாக மீண்டும் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறிக் கொண்டி–ருக்கிறது.அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் சுமார் 3 ஆயிரம் மேற்பட்ட விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    விவசாயிகளின் கோரி–க்கையை ஏற்று தமிழ்நாடு அரசு, அணை–யில் இருந்து ஆண்டு தோறும் புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் தண்ணீர் திறந்து விடுகிறது.

    இதில் வாய்க்கால் பாசன த்திற்காக வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 3 வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்படுகின்றன. இதன்மூலம் விவசாயிகள் பயன் பெற்ற வருகின்றனர். வாய்க்கால் பாசனப் பகுதியில் உள்ள புறம்போக்கு இடங்கள், நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

    வாய்க்காலின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் அப்பகுதியில் உள்ளோர், விவசாய விளை பொருட்களை சாகுபடி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இது சம்பந்தமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், வரட்டுப்ப–ள்ளம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் வாய்க்கால்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்து எல்லைக்கல் நட்டனர்.

    எச்சரிக்கை

    மேலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தவர்க–ளுக்கு, சாகுபடி செய்யக்கூ–டாது என எச்சரிக்கையும் விடப்பட்டது. ஏற்கனவே சாகுபடி செய்திருந்தவர்கள் அறுவடை செய்த பின்பு, மீண்டும் சாகுபடி செய்யக்கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டிப்புடன் எச்சரிக்கை விடுத்தனர்.

    ஆனால், வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் வட்டக்காடு பகுதியில் உள்ள முதல் வாய்க்கால் பகுதியில் உள்ள புறம்போக்கு இடங்களில் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த நபர்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    பொதுப்பணித்துறை அதிகாரிகளின் எச்சரி–க்கையும் மீறி அப்பகுதியில் உள்ள நபர்கள் அப்பகுதியை ஆக்கிரமித்து சாகுபடி செய்து வருகின்றனர்.

    வட்டக்காடு பகுதியில் உள்ள வாய்க்கால்களின் இரண்டு புறங்களிலும் ஆக்கிரமிப்பாளர்கள், தொடர்ந்து பொதுப்ப ணித்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையை பொருட்ப–டுத்தாமல் வாழை, சோளம் உள்ளிட்ட விளை பொருட்கள் சாகுபடி செய்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது,

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் எல்லைக்கல் நட்டதற்குப் பிறகும் அப்பகுதியை சேர்ந்த சிலர் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதிகளில் சாகுபடி செய்து வருகின்றனர்.

    நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு நிலங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் ஆக்கிரமி ப்பாளர்களிடமிருந்து மீட்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இல்லையேல், வாய்க்கால் புறம்போக்கு பகுதியை பயன்படுத்தி வந்த நபர்களிடமிருந்து, எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தினார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக வாடகை வசூல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கபிலர்மலை வட்டாரத்தில் 3 கிராமங்களுக்கு தென்னங்கன்றுகளை மானிய விலையில் வழங்கப்பட்டது.
    • ஒரு குடும்பத்திற்கு 3 கன்றுகள் மட்டும் வழங்கப்படும்.

    பரமத்திவேலூர்:

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் திட்டத்தின் கீழ் கபிலர்மலை வட்டாரம் பிலிக்கல்பாளையம், இருக்கூர், அ.குன்னத்தூர் ஆகிய 3 கிராமங்களுக்கு தென்னங்கன்றுகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணுடன் வந்து பதிவு செய்து கொள்ளுமாறு கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    ஒரு குடும்பத்திற்கு 3 கன்றுகள் மட்டும் வழங்கப்படும். தென்னங் கன்றுகள் பெற தேவையான ஆவணங்கள் சிட்டா, ஆதார், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்யுமாறு கபிலர்மலை வட்டார வேளாண்மை நலத்துறை இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    ×