search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cleaning"

    • நவ்வலடி பஞ்சாயத்தில் தூய்மை பாரத இயக்கம் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தில் மருத்துவ முகாம் நடந்தது.
    • நல்வலடி பஞ்சாயத்து அலுவலகத்தில் அதன் தலைவர் ராதிகா சரவணக்குமார் தலைமையில் நடந்தது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள நவ்வலடி பஞ்சாயத்தில் தூய்மை பாரத இயக்கம் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தில் கரைசுத்து நல்வலடி, கரைசுத்து புதூர், கரைசுத்து உவரி, உவரி, முதுமொத்தன்மொழி, திருவம்பலபுரம் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    நல்வலடி பஞ்சாயத்து அலுவலகத்தில் அதன் தலைவர் ராதிகா சரவணக்குமார் தலைமையில் நடந்தது. கிராம பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சையா முன்னிலை வகித்தார். சரவணகுமார் வரவேற்றார்.

    மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திரா, பாண்டிராணி, வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் இசைக்குமார் மற்றும் பஞ்சாயத்து செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

    • சீர்காழி தென்பாதி பகுதிகளில் நெகிழி பை போன்ற குப்பைகளை தூய்மைபணியாளர்கள் எடுத்துசெல்வதில்லை.
    • தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள், மண்வெட்டி, அரிவாள் போன்றவற்றை புதிதாக வாங்கிதர வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற சாதாரணக்கூட்டம் அவைகூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் (பொ) ராஜகோபால், மேலாளர் காதர்கான், நகரமைப்புஆய்வாளர் நாகராஜன், வருவாய்ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற தீர்மானங்களை அலுவலர் ராஜகணேஷ் வாசித்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் பேசியதாவது,

    வேல்முருகன்: சீர்காழி தென்பாதி பகுதிகளில் நெகிழி பை போன்ற குப்பைகளை தூய்மைபணியாளர்கள் எடுத்துசெல்வதில்லை. அதேபோல் சாலைகளில் வாழைமரங்கள், கீற்றுகள் போன்ற குப்பைகள் அகற்றபடாமல் மாதகணக்கில் கிடக்கிறது.

    சாமிநாதன்: ஈசானியத்தெரு எரிவாயு தகண மேடை டெண்டர் விடாமல் ஏன் காலதாமதமாகிறது. முன்பு நடத்தி அனுபவம் உள்ளவருக்கு முன்னுரிமை அளித்து எரிவாயு தகணமேடை நடத்திட வேண்டும்.

    ஆணையர் ராஜகோபால்: எரியாயு தகண மேடை டெண்டர் விரைவில் விடப்படும்.

    ராஜசேகரன்: அரசு மருத்துவமனை கழிவுநீர் பாசன வாய்க்காலில் விடப்படுகிறது என பல முறை கூறியும் நடவடிக்கை இல்லை. தூய்மைபணியாளர்களுக்கு கையுறைகள், மண்வெட்டி, அரிவாள் போன்றவற்றை புதிதாக வாங்கிதர வேண்டும்.

    கிருஷ்ணமூர்த்தி: எனதுவார்டில் புதிதாக மின்விளக்குகள் அமைத்திடவேண்டும்.

    முபாரக் : சீர்காழி மணிகூண்டு பகுதி, பழைய பஸ் நிலையம் பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. தற்காலிகமாக பேட்ஜ் பணியாவது செய்து அதனை நிரப்பவேண்டும்.

    ராஜேஷ்: சீர்காழி நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக அரசு, தனியார் பஸ்கள் பயணிகளை இறக்கவிட்டு செல்வதை தடுத்திட தீர்மானம் கொண்டுவரவேண்டும்.

    தலைவர் துர்காபரமேஸ்வரி: சீர்காழி நகரில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்ல தடைவிதிக்கவும், புறவழிச்சாலை வழியாக பஸ்கள் இயக்கப்படாமல் நடவடிக்கை எடுத்திடவும் கலெக்டர், கோட்டாட்சியர், போக்குவரத்து துறை அதிகாரிகளை அனைத்து உறுப்பினர்களும் நேரில் சென்று வலியுறுத்துவோம். அனைத்து வார்டுகளிலும் வாரம் 1 முறை மெகா தூய்மைபணி நடத்தப்படும். நகரை தூய்மையாக வைத்திருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

    • தேசிய மாணவர் படை மாணவர்கள் பள்ளி வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தினர்.
    • தொடர்ந்து நகரின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் தூய்மை பணி செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் இன்று 34 தேசிய மாணவர் படை தஞ்சாவூர் சார்பில் தூய்மை பணி நடைபெற்றது. சி.ஓ.எல். கர்னல் சஞ்சீவிகுரானா வழிகாட்டுதல் படி சுபேதார் ஒய்.எஸ்.ராவ், சுபேதார் கே.டி.ராவ் மற்றும் ராணுவ வீரர்கள் முன்னிலையில் புனித் சாகர் அபியான் அமைப்பின் கீழ் தேசிய மாணவர் படை மாணவர்கள் பள்ளி வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தினர்பின்னர் பள்ளி முன்பு உள்ள காந்தி சிலையை சுத்தப்படுத்தி சிலைக்கு மாலை அணிவி க்கப்பட்டது. இதனைத் தொ டர்ந்து நகரின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் தூய்மை பணி செய்தனர். தெருவில் கிடந்த குப்பை களை அகற்றினர். தொடர்ந்து தூய்மை பணி முகாம் நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், தேசிய மாணவர் படை அலுவலர்கள் சக்திவேல், சின்னசாமி, அருண் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடந்தது.
    • ஊராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் முகமது உமர்பாரூக் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் தலைவர் ராதிகா பிரபு யூனியன் ஆணையாளர் முத்துக்கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி மலைராஜ் முன்னிலை வகித்தனர்.

    இதில் திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். யூனியன் தலைவர் ராதிகா பிரபு திருப்பாலைக்குடியில் உள்ள மளிகை கடைகள், உணவகங்கள், கறிக்கடைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் இலைகளை கைப்பற்றினர். மீண்டும் பயன்படுத்தினால் சட்டநடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கடை உரிமையாளர்களிடம் கூறினார்.

    ஊர்வலத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளர் (தூய்மை பாரத இயக்கம்) ஆறுமுகம் மற்றும் தூய்மைப்பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ஆனந்தூர் ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் துரத்தி நிஷா தலைமையிலும், சாத்தனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி சுமன் தலைமையிலும் பிளா ஸ்டிக் ஒழிப்பு பேரணி நடந்தது. இதில் ஊராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • வீடு வீடாக சென்று அதிகாரிகள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.
    • வல்லம் பேரூராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தருமாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    வல்லம்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் வல்லம் பேரூராட்சியில் பொதுமக்கள் பங்களிப்போடு சிறப்பு தூய்மை பணி இயக்கம் தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கனகராஜ் தலைமையில் மேற்கொள்ளபட்டது.

    பேரூராட்சி 2-ம் வார்டில் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு இந்த சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது . வீடு வீடாக சென்று அதிகாரிகள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

    இம்முகாமில் வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் , மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் வல்லம் பேரூராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தருமாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • கோடை விடுமுறை முடிந்து 13-ந் தேதி திறப்பு பள்ளி வகுப்பறைகள் தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • இதேபோல் பள்ளி திறப்பை ஒட்டி மாணவ ர்களின் பள்ளி பேக், பள்ளி சீருடை விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் மாணவர்க ளுக்கு கோடை விடுமுறை முடிந்து வரும் 13-ந் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதை யடுத்து பள்ளி வளாகம், வகுப்பறைகளை சுத்தப்படு த்தும் பணி நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து பள்ளிகளை தயார்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

    பள்ளி வளாகத்தில் படர்ந்திருக்கும் மரம், செடி கொடிகள் அகற்றப்பட்டு வருகிறது. வகுப்பறையில் கிருமி நாசினி தெளிக்க ப்பட்டு வருகிறது. மாணவ ர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் தூய்மை ப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    மாணவர்கள் குடிநீர் வசதிக்காக நீர்த்தேக்க தொட்டியில் மருந்து தெளித்து அதை சுத்த மாக்கும் பணி நடை பெறுகிறது. அந்தந்த பள்ளி களில் அந்தந்த தலைமை யாசிரியர்கள் மேற்பா ர்வையில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல் பள்ளி திறப்பை ஒட்டி மாணவ ர்களின் பள்ளி பேக், பள்ளி சீருடை விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    • பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் தூய்மைப்பணிமேற்கொள்ளப்பட உள்ளது.
    • தன்னார்வலர்கள்இந்த சேவை பணியில் ஈடுபடுத்திக்கொள்ளலாம்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாநகராட்சி பகுதியை தூய்மை மாநகராட்சியாகமாற்றும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. என்குப்பை-என் பொறுப்பு-என் நகரம்-எனது பெருமை என்பதற்கேற்ப குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனதரம் பிரித்து வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்குமாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாளை (சனிக்கிழமை) வடக்கு உழவர் சந்தை,தென்னம்பாளையம் தினசரி மற்றும் வார சந்தை பகுதியில்காலை பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் தூய்மைப்பணிமேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள், தன்னார்வலர்கள்இந்த சேவை பணியில் ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்றுஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    • தூய்மைபணி விழிப்புணர்வு பிரசாரத்தில் தூய்மை உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார்

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூராட்சியில் ''எனது குப்பை, எனது பொறுப்பு'' என்ற தூய்மைபணி விழிப்புணர்வு பிரசாரத்தில் தூய்மை உறுதிமொழி எடுக்கப்பட்டது. வாடிப்பட்டி பஸ்நிலையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார்.

    போலீஸ்இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, சுகாதாரஆய்வாளர் பொன்.முத்துகுமார் முன்னிலை வகித்தனர்.

    செயல் அலுவலர் சண்முகம் வரவேற்றார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, ேபரூராட்சிதுணைத் தலைவர் கார்த்திக், முன்னாள்கவுன்சிலர்செல்வராஜ், பிரகாஷ், திரவியம், இளநிலை உதவியாளர்கள் ஆறுமுகம், கார்த்திக் உள்பட தூய்மைபணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர். சுகாதாரபணி மேற்பார்வையாளர் திலிபன்சக்ரவர்த்தி நன்றிகூறினார்.

    • திருப்பூரில் தூய்மைப்பணி இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாநகர குழு உறுப்பினர் பொம்முதுரை உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் தூய்மைப்பணி இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளருமான முத்துக்கண்ணன் துவக்கி வைத்தார்.

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஞானசேகரன், மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் சிஐடியு. மாவட்ட தலைவருமான கே.உன்னிகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகர குழுச் செயலாளர் ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர் சுந்தரம், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பி. பாலன், மாநகர குழு உறுப்பினர் பொம்முதுரை உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

    நலமான வாழ்வின் மூலமே ஒருவனின் வாழ்வு சிறக்க முடியும். அவ்வாறான நல வாழ்விற்கு வழியமைப்பதே சுகாதாரம் ஆகும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுகாதாரமே பிரதானம்.
    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுகாதாரமே பிரதானம். எப்போதும் நாம் சுத்தமாக இருந்தால் ஒரு நோயும் நம்மை தீண்டாது. ஆரோக்கியம் என்பது மனிதனின் கருவறை தொடக்கம் முதல் கல்லறை வரை பயணிக்கிறது. இடையில் தொய்வு ஏற்பட்டால் நோய் எனும் அரக்கன் நம்மை தொற்றிக்கொண்டு இறங்க மறுக்கும். நலமான வாழ்வின் மூலமே ஒருவனின் வாழ்வு சிறக்க முடியும். அவ்வாறான நல வாழ்விற்கு வழியமைப்பதே சுகாதாரம் ஆகும்.

    சுகாதாரம் அல்லது சுத்தம் என்பது நலம் மற்றும் நலமான வாழ்வு கருதி ஒரு சமூகத்தால் பேணப்படும் பழக்க வழக்கங்களாகும். ஆரம்ப கால மக்கள் இயற்கையோடு தொடர்பு கொண்டு வாழ்ந்ததால் அவர்களின் வாழ்வில் சுகாதாரம் என்பது உயிரினும் மேலாகக் கருதப்பட்டது.ஆனால் இன்றைய நவீன காலகட்டக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது அதிகரித்து வரும் மக்கள்தொகை, வளங்களின் குறைபாடு, பொருளாதார நெருக்கடிகள் என்பவற்றின் விளைவால் சிறந்த சுகாதாரமானது குறைந்து கொண்டே வருகின்றது. இதற்கு காரணம் இன்றைய கால மனிதர்கள் செயற்கையின் பால் அடிபணிந்ததே முக்கிய காரணமாகும்.

    அந்த வகையில் மனிதனின் நலமான வாழ்விற்கு அத்தியாவசியமான ஒன்றுதான் உணவாகும். நாம் உண்ணும் உணவு உடல் ஆரோக்கியத்தை நிர்ணயம் செய்கிறது. எனவே ஆரோக்கியமான முறையில் உணவு தயாரிப்பது இன்றியமையாதது. மேலும் நலமான வாழ்விற்கு தூக்கமும், ஓய்வும் மிக, மிக அவசியம். அன்றைய காலத்தில் இரவு விளக்கு வைக்கும் முன் உணவருந்தி விட்டு முன்னிரவில் தூங்குங்கள் காலையில் கோழி கூவிட எழுந்து விடுங்கள், அதுவே ஆரோக்கிய வாழ்வாகும் என அக்கால மக்கள் கூறுவார்கள். இது நலமான வாழ்க்கைக்கு அவர்கள் கூறிய வழிமுறைகளாகும்.

    மேலும் நலமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். இன்னொரு காரணி கழிவு வெளியேற்றமாகும். உணவு உண்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் கழிவு நீக்கம். இதை இரண்டும் சம அளவில் இருக்க வேண்டும். இவற்றில் ஒன்று குறைந்து மற்றொன்று கூடினாலோ ஆரோக்கியத்திற்கு வேட்டு வைப்பதாகும்.

    ஆரோக்கியமான வாழ்வுக்கு முக்கியமாக உணவு அருந்தும் முன்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கைகளை சுத்தப்படுத்தாமல் உணவு உண்பதால் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்கு கீழுள்ள சுமார் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் மூலம் இறந்து போவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    கைகளை சுத்தமாக கழுவுவதன் மூலம் உயிர் கொல்லி நோய்கள் பரவுவதையும் தடுக்கலாம். சுகாதாரத்தை பயன்படுத்தி பின்பு காயத்திற்கு மருந்து போடுவதற்கு முன், பின், தும்மல் வந்த பின்பு, இருமல் வந்த பின்பு, உணவு சாப்பிடும் முன்பு, பின், குப்பைகளை கொட்டிய பின்பு, விலங்குகளை தொட்டபின்பு கைகளை சுத்தமாக கழுவவேண்டும்.

    அடுத்து சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துவதாகும். சுத்தமான நீரினைப் பயன்படுத்துவதன் மூலம் அசுத்தமான நீரினால் கிருமிகள் பெருகி காலரா, வயிற்றுப்போக்கு பரவுவது கட்டுப்படுத்தப் படும். அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதால் ஆண்டுக்கு உலகம் முழுவதும் 170 கோடிபேர் வயிற்றுப் போக்கினால் அவதிப்படுகிறார்கள். மூன்றாவது அம்சம் சுத்தமான உணவை உண்ணுதல் ஆகும். அடுத்து உடற்பயிற்சியாகும். காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்து, சூரிய ஒளியில் படும் படி அமர்ந்தால், சுகவாழ்வு கிடைக்கும்.

    இந்தியாவில் பெருகி வரும் சுகாதார சீர் கேட்டினால் நாம் நினைத்தே பார்த்திராத அளவுக்கு விதவிதமான நோய்கள் பரவி வருகின்றன. பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், டெங்கு, மூளைக்காய்ச்சல், சிக்குன் குனியா என்று பல விதமான நோய்கள் படையெடுத்துள்ளன. இவற்றை தவிர, என்னவென்றே கண்டுபிடிக்க முடியாத சில காய்ச்சல்களுக்கு மர்ம காய்ச்சல் என்று மருத்துவ உலகம் பெயரிட்டு விடுகிறது.

    எனவே ஆரோக்கிய வாழ்வுக்கு சுத்தமாக இருக்க பழகிக்கொள்ளுங்கள். சுத்தமான உடைகளை அணியுங்கள். வீட்டை சுத்தமாக வைத்து இருங்கள். வீட்டை சுற்றி சுற்றுப்புறத்தையும் குப்பை தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். சுகாதாரம் தொடர்பானவற்றை கடை பிடித்தால் நீங்கள் மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. நோய் எனும் அரக்கன் இருக்கும் இடம் தெரியாமல் ஓடிவிடுவான்.
    ×