என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » cinema gossip
நீங்கள் தேடியது "Cinema Gossip"
தமிழில் முன்னணி நடிகரான மூன்றெழுத்து நடிகர் தனக்கு திருமணமே வேண்டாம், நான் இப்படியே இருந்து விடுகிறேன் என்று விரக்தியுடன் கூறி வருகிறாராம். #Gossip
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மூன்றெழுத்து நடிகர், அவருடன் நடிக்கும் நடிகைகள் அனைவருடனும் கிசுகிசுக்கப்படுவாராம். பிரியாணி கொடுத்தே நடிகைகளை கரெக்ட் பண்ணிவிடுவாராம் அந்த நடிகர்.
இப்படியே விட்டால் செல்லாது என்று, அவருக்கு திருமணம் செய்து வைக்க நாயகனின் வீட்டார் கடந்த சில வருடங்களாக மணப்பெண் வேட்டை நடத்தி வந்தார்களாம். ஜாதகங்கள் பொருந்தாததால், அவருடைய திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறதாம். ஜாதகம் செட்டானால் அந்த பெண்ணை நடிகருக்கு பிடிக்கவில்லையாம்.
அதற்கு அப்புறமும் பெற்றோர் வற்புறுத்துகிறார்களாம். ஆனால் நடிகரோ, தனக்கு திருமணமே வேண்டாம் என்கிறாராம். தான் திருமணம் செய்துகொள்ளாமல் இப்படியே இருந்து விடுகிறேன், என்னை விட்டு விடுங்கள் என்று விரக்தியுடன் கூறுகிறாராம். நாயகன் திருமணம் செய்து கொண்டாலும் அவரைப் பற்றி வரும் கிசுகிசுக்கள் நிற்காது என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம். #Gossip
வில்லனில் இருந்து நாயகனாக அவதாரம் எடுத்துள்ள நாயகன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நாயகியுடனான முத்தக்காட்சியில் நடிக்க தயங்கினாராம். #Gossip
இதுவரை வில்லனாக நடித்து வந்த நடிகர் சமீபத்தில் உச்ச நடிகரின் ரசிகராக ஒரு படத்தில் நடித்திருந்தாராம். அந்த படத்துக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நாயகன் தற்போது தனது அடுத்த படத்தில் பிசியாக நடித்து வருகிறாராம்.
வேட்டை சம்பந்தப்பட்ட தலைப்புடன் உருவாகும் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுபிக்ஷமான நடிகை நடித்து வருகிறாராம். இந்த படத்தில் கதாநாயகனும், கதாநாயகியும் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறதாம்.
அந்த காட்சியில் நடிக்க நாயகனும், நாயகியும் முதலில் தயங்கினார்களாம். பின்னர் காட்சியின் அவசியத்தை உணர்ந்து உதட்டு முத்தக் காட்சியில் நடித்தார்களாம். #Gossip
முத்தக்காட்சியில் நடிக்க முன்னணி நாயகிகள் பயந்த நிலையில், வளரும் நடிகை துணிந்து நடித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். #Gossip
சமீபத்தில் திரைக்கு வந்த சென்னை படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். சென்னையில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த மக்களின் வாழ்க்கையை காட்டுவது போல அந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்களாம்.
படத்தில் ஆபாச காட்சிகளும், சர்ச்சை வசனங்களும் இருப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு கிளம்பியதாம். அத்துடன் ஒருசில வசனங்கள் அந்த பகுதி மக்களையும் வேதனையடைய செய்ததாம். இதையடுத்து சர்ச்சை காட்சிகளை படக்குழு நீக்கிவிட்டதாம்.
இந்த படத்தில் கதாநாயகியாக முதலில் பேசப்பட்டவர், சமத்தான நடிகையாம். படத்தில் முத்த காட்சியும், கெட்ட வார்த்தை வசனமும் இருக்கிறது என்று கேள்விப்பட்டதும், அவர் நடிக்க மறுத்து விட்டாராம். இதே காரணத்துக்காக தான், பால் நடிகையும் அந்த படத்தில் நடிக்க மறுத்தாராம்.
அதன் பிறகே குளிர்ச்சியான நடிகையை ஒப்பந்தம் செய்தார்களாம். குளிர்ச்சியான நடிகை துணிச்சலுடன் அப்படிப்பட்ட வசனங்களை பேசி நடித்து இருக்கிறாராம். நடிகையின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறதாம். அதே நேரத்தில் விமர்சனங்களும் வருகிறதாம். #Gossip
தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் தனது அடுத்த படத்திற்கான கதை எழுத வெளிநாடு செல்ல ஆசைப்பட்ட நிலையில், இயக்குநரின் ஆசையை தயாரிப்பாளர் நிறைவேற்றவில்லையாம். #Gossip
பிரம்மாண்ட இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, இரண்டு முறை பிரபல நாயகனை வைத்து படம் இயக்கிவிட்ட அந்த இயக்குநர் மீண்டும் அதே நாயகனை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறாராம்.
அந்த இயக்குநர் இயக்கிய கடைசி படம் அரசியல் கருத்துக்களால் சர்ச்சைக்குள்ளாகி வெற்றி பெற்ற நிலையில், சில விமர்சனங்களும் எழுந்ததாம்.
பழைய படங்களில் இருந்து காட்சிகளை சுடுவதில் இயக்குநர் கெட்டிக்காரர் என்று ரசிகர்கள் அவரை கிண்டல் செய்தார்களாம். என்னதான் பழைய படங்களின் காட்சிகளை சுட்டாலும், ஹிட் கொடுத்துவிடுகிறாரே என்று ரசிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அவர் மீது ஒரு நம்பிக்கை இருக்கிறதாம்.
இந்த நிலையில், இயக்குநர் தனது அடுத்த படத்திற்கான திரைக்கதையை எழுத வெளிநாடு செல்ல வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கேட்டாராம். ஆனால் தயாரிப்பாளரோ, வெளிநாடு வேண்டாம், தனக்கு சொந்தமான கடற்கரை வீட்டில் தங்கி கதை எழுதும்படி கூறிவிட்டாராம். இதனால் இயக்குநருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம். #Gossip
தனது கனவு நிறைவேறிவிட்ட ஆசையில், அடுத்த ரவுண்டுக்கு தயாராகி இருக்கும் முன்னணி நடிகை சம்பள விஷயத்தில் அந்தர் பல்டி அடித்துள்ளாராம். #Gossip
தமிழ் திரையுலகில் பிரபலமான நாயகிகளில் ஒருவரான மூன்றெழுத்து நடிகை நடித்த காதல் படம், சமீபத்தில் ரிலீசாகியதாம். அந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறதாம். இதனால் குஷியாக இருக்கும் மூன்றெழுத்து நடிகை முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், உச்ச நடிகருடன் நடிக்க வேண்டும் என்ற நடிகையின் கனவு நிறைவேறிவிட்டது, அடுத்து என்ன பிளான் என்று நிருபர்கள் கேள்வி கேட்க, இன்னொரு ரவுண்டு போகலாம் என்று நினைப்பதாக நடிகை கூறினாராம்.
அந்த ஆசையில், தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளாராம். மேலும் முன்னணி நாயகர்களுக்கு போன் செய்தும் இதுபற்றி கூறி வருகிறாராம். சம்பள விஷயத்தில் நடிகையின் இந்த அந்தர் பல்டி மற்ற நடிகைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள். #Gossip
தமிழில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை ஒருவர் நம்பர் 1 நடிகையின் இடத்தை பிடித்தே தீருவேன் என்று சபதம் செய்திருக்கிறராம். #Gossip
தமிழ் சினிமாவில் நாயகர்களுக்கு சமமாக வலம் வருகிறாராம் கோலமாவு நடிகை. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை, அதில் வெற்றியும் பெற்று வருகிறாராம்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்தை நடிகை தக்கவைத்துக் கொண்டிருக்கிறாராம். இந்த நடிகைக்கும், மோகினியான மூன்றெழுத்து நடிகைக்கும் ஆரம்பத்தில் இருந்தே தொழில் போட்டி இருக்கிறதாம். இந்த நிலையில், இருவரும் ஒரு ‘பார்ட்டி’யில் சந்தித்துக் கொண்டார்களாம். அதில் இருவரும் மனம் விட்டு பேசி தோழிகளாக மாறிவிட்டார்களாம்.
என்றாலும், 2 பேரிடையேயும் சத்தமே இல்லாமல் தொழில் போட்டி இருந்து வருகிறதாம். நம்பர் 1 நடிகையின் நட்சத்திர அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போவது, மூன்றெழுத்து நடிகைக்கு பிடிக்கவில்லையாம்.
நம்பர் 1 இடத்தை எப்படியாவது பிடித்தே தீருவேன் என்று மூன்றெழுத்து நடிகை சபதம் எடுத்து இருக்கிறாராம். நடிகையின் சபதம் நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். #Gossip
குறைவான ஆடைகளை உடுத்தி கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு மத்தியில், நிர்வாணமாக நடித்து கவர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு நடிகை ஒருவர் சென்றிருக்கிறாராம். #Gossip
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த வேலையில்லாத நடிகை, தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். இதுவரை நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த அவர், தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் கவனம் செலுத்துகிறாராம்.
சமீபத்தில் நாயகி நடிக்கும் டிரஸ் சம்பந்தப்பட்ட படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானதாம். அந்த போஸ்டரை பார்த்து பலரும் நாயகியை பாராட்டினார்களாம். அதேநேரத்தில் ஒருசிலர் நாயகியின் கவர்ச்சி பற்றி விமர்சித்தார்களாம்.
இப்படி இருக்க இந்த படத்தில் நாயகியை ஒரு கும்பல் காட்டு பங்களா ஒன்றில் நிர்வாணமாக அடைத்து விடுவதாகவும், அந்த அறைக்குள் கிடைத்த பழைய துணிகளை சேகரித்து, நடிகை தனது உடலை மறைத்துக் கொள்வது போலவும் படமாக்குகிறார்களாம்.
இந்த பழைய உடையுடன் தான் நடிகை சமீபத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்தாராம். அந்த காட்டு பங்களாவில் இருந்து நடிகை எப்படி தப்புகிறார் என்பதே படத்தின் முக்கிய காட்சியாக உருவாகுகிறதாம். குறைவான ஆடைகளை உடுத்தி நடிகைகள் கவர்ச்சியாக நடித்து வரும் நிலையில், நடிகை கவர்ச்சியில் அடுத்த லெவலுக்கு சென்றிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். #Gossip
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்துவிட்ட அந்த நாயகிக்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லை. #Gossip
கால்பந்தாட்டம் சம்பந்தப்பட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் இரண்டாவது நாயகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து ஆம்பள் ஆம்பள் என ஆட்டம் போட்ட அந்த நடிகைக்கு கைவசம் படம் ஏதும் இல்லையாம்.
ரிலீசுக்கு மட்டும் ஒரு படம் தயாராக இருக்கிறதாம். சமீபத்தில் தான் நாயகிக்கு திருமணம் நடந்ததாம். திருமணத்திற்கு பிறகும் சினிமாவை விட்டு பிரிய மனமில்லாத நாயகிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லையாம். அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வந்தாராம்.
மேலும் தனக்கு நெருக்கமான நடிகர்களின் பட வாய்ப்பையும் கேட்டு வந்த நடிகை படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் வெறுப்புக் கனலை கக்குகிறாராம். இதனால் அவரும் வெறுப்பாகி, மற்றவர்களையும் வெறுப்புக்குள்ளாக்குகிறாராம். இது நடிகையின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துமே என்று கிசுகிசுக்கிறார்கள். #Gossip
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஒருவர் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ஓவராக சீன் போடுவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். #Gossip
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஐஸ் நடிகையின் கைவசம் சிலபல படங்கள் உள்ளதாம். சிறிய கதாபாத்திரம் என்றாலும் நடிக்க ஒப்புக் கொள்கிறாராம். அவரது நடிப்பில் இந்த ஆண்டு படங்கள் ஏதும் வெளியாகவில்லை. விரைவில் நடன நாயகனுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள நடனத்தை மையப்படுத்திய படம் ஒன்று ரிலீசாக இருக்கிறதாம்.
அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் நாயகி ஓவராக சீன் போடுகிறாராம். நான் தான் என்ற ஒரு பந்தா நாயகியிடம் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
சினிமாவில் பல நடிகர், நடிகைகள் அமைதியாக மற்றவர்களை நல்லமுறையில் நடத்தும் நிலையில், நாயகியின் இந்த போக்கு சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதாம். #Gossip
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் பலருடன் நடித்த அந்த நடிகை திருமணத்திற்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில், அவரை தயாரிப்பாளர்கள் யாரும் தேடி வரவில்லை என்று வருத்தத்தில் இருக்கிறாராம். #Gossip
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் முதல் பிரபலமான நாயகர்கள் வரை பலருடன் நடித்த அந்த நடிகை கடைசியாக வம்பு நடிகருக்கு ஜோடியாக நடித்த ஏ படம் தோல்வியடைந்ததாம்.
அதன்பிறகு வில்லனாக ரீ-என்ட்ரி கொடுத்த சாமி நடிகருக்கு ஜோடியாக நடித்திருக்கிறாராம். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறதாம். இதற்கிடையே நடிகை தான் காதலித்த வெளிநாட்டு விளையாட்டு வீரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டாராம். திருமணத்திற்கு பிறகு நடிகை திரும்பவும் நடிக்க வந்திருக்கிறார்.
தன்னை தேடி நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த அந்த நடிகைக்கோ ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஒரு பட அதிபர் கூட தன்னை தேடி வரவில்லை என்று மிகுந்த மன வருத்தத்துடன் இருக்கிறாராம் நடிகை. #Gossip
தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான அந்த நடிகை தற்போது பாலிவுட்டில் தீவிர கவனம் செலுத்தி வருவதால், தமிழ் இயக்குநரின் விருப்பத்தை நிராகரித்துவிட்டாராம். #Gossip
ஒல்லி நடிகரின் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஐரின் நடிகைக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால், அவ்வப்போது தமிழில் தலைக்காட்டி வந்தார்.
பின்னர் தெலுங்கில் பிசியாக நடித்து வந்தாராம். அங்கும் வாய்ப்புகள் குறைய, பாலிவுட்டுக்கு சென்ற நாயகிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். கைவசம் பல படங்களை வைத்திருக்கும் நாயகி பாலிவுட்டில் சீரான அளவில் படங்கள் வருவதால் அங்கு மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறாராம்.
இந்த நிலையில், தமிழ் இயக்குநர் ஒருவர் நாயகியிடம் கதை சொல்ல அணுகியிருக்கிறாராம். ஆனால் கதையை கேட்கவே தயாராக இல்லாத நாயகி, இயக்குநரின் ஆசையை நிராகரித்துவிட்டாராம். இதையடுத்து இயக்குநர் வேற நாயகியை தேடி வருகிறாராம்.
இருந்தாலும் நாயகிக்கு இவ்வுளவு இருக்கக் கூடாது என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம். #Gossip
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வராவிட்டாலும், தான் நடித்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நின்ற அந்த நாயகி தற்போது படு கவர்ச்சிக்கும் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறாராம். #Gossip
மும்பையை சேர்ந்த பூனம் நடிகை, கோழியின் ஆண் இனத்தை குறிக்கும் பெயர் கொண்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாராம். அந்த படம் போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், நாயகி அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி, பின்னர் சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போனாராம்.
பின்னர் ஜெயம் நாயகனின் ரோமியோ படத்தில் இரண்டாவது நாயகியாக ரீ-என்ட்ரி கொடுத்து, பின்னர் ஒருசில படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.
இதுவரை குடும்பப் பாங்கான கதாபாத்திரம் மற்றும் சற்றே கவர்ச்சியான வேடங்களில் நடித்து வந்த நாயகி, தற்போது படுகவர்ச்சிக்கும் தயாராகி விட்டாராம். அதுமட்டுமில்லாமல் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடவும் தான் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறாராம்.
நல்லாத்தான போயிட்டு இருக்கு. இப்போது தான் படவாய்ப்பு அடுத்தடுத்து வருகிறது. அதை கெடுக்கும் வகையில் நாயகி ஏன் இப்படி முடிவு செய்திருக்கிறார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். #Gossip
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X