என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » chinese student
நீங்கள் தேடியது "Chinese student"
அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் சீன மொழியில் பேச எதிர்ப்பு தெரிவித்த உதவி பேராசிரியை மெகன் நீலி ஆய்வு பட்டப்படிப்புகளுக்கான இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். #DukeProfessor #MeganNeely #ChineseStudent
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் மெகன் நீலி. மேலும் இவர் உயிரி புள்ளியியல் துறையின் ஆய்வு பட்டப்படிப்புகளுக்கான இயக்குனராகவும் இருந்தார்.
இந்த நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் சீனாவை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு மெகன் நீலி சமீபத்தில் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார். அதில் “மாணவர்கள் யாரும் சீன மொழியில் பேச வேண்டாம். ஆங்கிலம் உங்களுக்கு அந்நிய மொழி என்பது எனக்கு புரிகிறது. ஆனால், அதனை மேம்படுத்திக் கொள்ள முயலுங்கள். தேவையற்ற விளைவுகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்” என்று குறிப்பிட்டார். இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மெகன் நீலியின் மின்னஞ்சல் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியது. மெகன் நீலியை இன வெறியர் என பலர் குற்றம் சாட்டினர். மேலும் இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ஆய்வு பட்டப்படிப்புகளுக்கான இயக்குனர் பதவியில் இருந்து மெகன் நீலி நீக்கப்பட்டார்.
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் மெகன் நீலி. மேலும் இவர் உயிரி புள்ளியியல் துறையின் ஆய்வு பட்டப்படிப்புகளுக்கான இயக்குனராகவும் இருந்தார்.
இந்த நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் சீனாவை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு மெகன் நீலி சமீபத்தில் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார். அதில் “மாணவர்கள் யாரும் சீன மொழியில் பேச வேண்டாம். ஆங்கிலம் உங்களுக்கு அந்நிய மொழி என்பது எனக்கு புரிகிறது. ஆனால், அதனை மேம்படுத்திக் கொள்ள முயலுங்கள். தேவையற்ற விளைவுகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்” என்று குறிப்பிட்டார். இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மெகன் நீலியின் மின்னஞ்சல் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியது. மெகன் நீலியை இன வெறியர் என பலர் குற்றம் சாட்டினர். மேலும் இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ஆய்வு பட்டப்படிப்புகளுக்கான இயக்குனர் பதவியில் இருந்து மெகன் நீலி நீக்கப்பட்டார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X