search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child Health"

    • குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
    • குண்டு பல்பும், டியூப் லைட்டும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தாது.

    குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டிற்கு இன்றைய காலகட்டத்தில் ஏராளமான காரணங்கள் உள்ளன. மக்களிடையே செல்போன் பயன்பாடு தற்போது அதிகமாக உள்ளது. குழந்தைகள் அழும் போது அவர்களை சமாதானம் செய்ய, பெற்றோர்கள் செல்போனை கையில் கொடுத்து அழுகையை நிறுத்துகின்றனர். காலப்போக்கில் குழந்தைகள் செல்போன் இருந்தால் தான் உணவு சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது என அனைத்திற்கும் அடம்பிடிக்க ஆரம்பிக்கின்றனர். கொரோனா கால கட்டத்தில் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது.

    அதில் இருந்து குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். செல்போன்களை அதிக நேரம் உற்றுப்பார்ப்பதால் குழந்தைகளுக்கு தூர பார்வையில் கோளாறுகள் ஏற்படுகிறது. அதேபோல் லேப்டாப்பில் படம் பார்ப்பது, அதிக நேரம் டி.வி. பார்ப்பது போன்ற செயல்களின் காரணமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கண் பார்வை அதிகம் பாதிக்கப்படுகிறது. காலப்போக்கில் பார்வை கோளாறு, மங்கலான பார்வை போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி கண்ணாடி பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது.

    அதிகப்படியான ஒளி தொடர்ச்சியாக கண்களில் படுவதால் கண் நரம்புகளை பாதித்து கண் குறைபாடுகளை உருவாக்குகிறது. அதற்கு நம் அன்றாட வாழ்க்கை முறையில் உள்ள பல காரணங்களை கூறலாம். உணவு முறை, டி.வி., செல்போன் முழு முதல் காரணம் என்றாலும், நாம் அதிகமாக கவனிக்க தவறும் காரணம் எல்.இ.டி. பல்புகள். வீடுகள், வாகனங்களில் அதிகமாக பயன்படுத்தும் எல்.இ.டி. பல்புகள் மற்றும் செல்போன் பிளாஷ் லைட்டுகளிலிருந்து வரும் நீல ஒளி விழித் திரையை குறிப்பாக குழந்தைகளுக்கு உடனடியாக பாதிக்கும்.

    இதர கண் நோய்களையும், தூக்கமின்மையையும் கொடுக்கும். அதனால் பொதுமக்கள் சமூகப் பொறுப்புடன் அலங்காரத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும், அதனை பயன்படுத்துவதை தவிர்த்தல் வருங்கால தலைமுறைக்கு செய்யும் சமூக கடமையாகும். சாதா குண்டு பல்பும், டியூப் லைட்டும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தாது. செல்போனை எவ்வாறு கையாள வேண்டும் என்ற ஒழுங்கு முறை மற்றும் தினசரி உடற்பயிற்சியுடன் கூடிய கண் பயிற்சி குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கற்பித்து, பெற்றோரும் அவர்களுடன் இணைந்து செய்து நடைமுறைப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டால் கண் பார்வையை பல தலைமுறைகளுக்கு காப்பாற்றிக் கொள்ளலாம்.

    அதேபோல் உணவு பழக்க வழக்க முறைகளிலும் மாற்றம் வந்துள்ளது. கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், பிரைடு ரைஸ், பர்கர் போன்ற அரைவேக்காடு உணவுகளால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே குழந்தைகளுக்கு சிறு தானியங்கள், காய்கறிகள், பழ வகைகள் மற்றும் கீரைகள் போன்ற உணவு முறைகளை பழக்கப்படுத்த வேண்டும். அதேபோல் கண்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுத்தும் செல்போன் உள்ளிட்ட பயன்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

    • கோடை காலத்தில் குழந்தைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • கோடை காலத்தில் சாப்பிடும் உணவுகள் விஷத்தன்மையாக மாறிவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன

    வெயிலோடு உறவாடி....

    வெயிலோடு மல்லுக்கட்டி

    ஆட்டம்போட்டோமே....

    இந்த பாடல் வரிகள் கிராமப்புற சிறுவர்களின் வாழ்வியலை அப்படியே படம்பிடித்து காட்டியிருந்தது.

    கோடை விடுமுறை விட்டால்போதும், குழந்தைகள் வீட்டை துறந்து, வெயிலை மறந்து நண்பர்களுடன் காடு....கரையெல்லாம் ஓடியாடி விளையாட சென்றுவிடுவார்கள்.

    வீட்டில் உள்ள பெரியவர்கள், இப்படி வெயிலில் விளையாடுகிறாயே உடம்புக்கு ஏதாவது ஆகிவிடப்போகுது என்பார்கள். அதையெல்லாம் பிள்ளைகள் ஒரு பொருட்டாக கருதியது இல்லை.

    பொதுவாக வெயில் காலத்தில் நமக்கு தெரிந்த நோய் என்பது வியர்க்குரு உள்ளிட்ட தோல் நோய்களும், வயிற்றுப்போக்கு, நீர்க்கடுப்பு போன்ற சில நோய்களும்தான்.

    இதையெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள், 'சூட்டுனால வருது... நல்லெண்ணெய் போடு சரியாகிவிடும் என்பார்கள்'.

    இதைத்தாண்டி, கோடை காலத்தில் சாப்பிடும் உணவுகள் விஷத்தன்மையாக மாறிவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் சூடான, ஈரப்பதமான கால நிலையால் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமி மற்றும் ரசாயான நச்சுக்கள் உண்ணும் உணவு மூலம் உடலுக்குள் புகுந்து, வயிற்று கோளாறுகள், குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

    இது தவிர வெப்பம் மிகுதியால் வரும் கண்நோய்கள். இந்த நோய்கள் வந்தால், ஒருவித வைரஸ் தொற்றால் இமைகளின் வெளிப்புற சவ்வு மற்றும் உள் கண்ணிமை பாதித்து விடும். இதனால் கண்ணில் ஒருவித கூச்ச உணர்வு ஏற்பட்டு கண்கள் சிவந்து நீர் வடியும்.

    அடுத்ததாக கோடையில் வருகின்ற ஒருவித மனச்சோர்வு. இதனால் ஏற்படும் பசியின்மை, எடை இழப்பு , தூங்குவதில் சிரமம் போன்றவை படாய் படுத்தி விடும். மேலும் கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீரிழப்பு என்பது முக்கிய பிரச்சினை.

    நமது உடலில் உள்ள நீர்த்தன்மைதான் நமது உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றன. உடலில் ஓடும் ரத்தமும் நீர்தன்மை வாய்ந்ததே. ஆனால் கோடைக்காலத்தில் நாம் அறியாமலேயே வியர்வையின் மூலம் அதிகளவு நீர் மற்றும் உப்புக்களை இழக்கிறோம்.

    பொதுவாக உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவு உட்கொள்ளும் அளவை விட அதிகமாக இருந்தால், அது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது.

    இந்த நீரிழப்பு தன்மை ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால், அவரது வாய் மற்றும் நாக்கு வறட்சியாக மாறும். கடுமையான சோர்வு, பசியின்மை, தலைவலி ஏற்பட்டு விடும். இது தவிர காதுகளுக்கு முன்னால் உள்ள பரோடிட் சுரப்பி பாதிக்கப்படும். இதன் விளைவாக குறிப்பிடத்தக்க வீக்கம், காய்ச்சல் ஏற்படுகிறது. தொடர்ந்து சூடான அனல் காற்றை சுவாசிக்கும்போது, சுவாசப்பாதைகள் சுருங்கி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

    சூரியனில் இருந்து அதிகளவில் வெளிவரும் புற ஊதாக்கதிர்கள் நமது தோல் பகுதியில் ஆபத்தான நோய்களை விளைவிக்கும்.

    இதுபோன்ற கோடைகால நோய்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடிய சாதாரண நோய்தான்.

    அதைவிட மிகவும் ஆபத்தானது 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் வெப்ப பக்கவாதம் தான்.

    இதை மருத்துவர்கள் சன் ஸ்ட்ரோக் என்றும் ஹைபர்தர்மியா என்றும் சொல்கின்றனர்.

    அது என்ன 'ஹீட் ஸ்ட்ரோக்'?

    பொதுவாக ஒருவர் கொளுத்தும் வெயிலில் வேலை செய்யும் போது, தலைவலி , தலைச்சுற்றல் மற்றும் பலவீனங்கள் ஏற்படுகின்றது. இதுதான் ஹீட் ஸ்ட்ரோக்கிற்கு முந்தைய அறிகுறி என்கின்றனர்.

    இந்த நிலைகள் தொடரும்போது, இருதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உள்ளுறுப்புகள செயலிழப்பு, சுயநினைவின்மை ஏற்பட்டு விடும். அப்புறம் என்ன....மரணம்தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு, மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற 23 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுவும் ஹீட் ஸ்ரோக் மூலம் ஏற்பட்ட இழப்பு என்றே கருதப்படுகிறது.

    திடீர் நெஞ்சுவலி போலவே இந்த வெப்ப பக்கவாத நோய் படு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும். நன்றாக பேசிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென்று மயக்கமடைந்து சாய்ந்து விட்டால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டது என்று கூறிவிடுகிறோம். அதுபோலவே இந்த நோயும் ஒன்றாக காணப்படுகிறது. இதனால் ஹார்ட் அட்டாக் எது ஹீட் ஸ்ட்ரோக் எது என்று அடையாளம் காண முடியாமல் போய் விடுகிறது.

    நம் உடலின் உள் வெப்பநிலையும், பி.எச் அளவும், எப்போதும் குறிப்பிட்ட அளவுதான் இருக்க வேண்டும். அப்போதுதான், ரத்தத்திலுள்ள ரசாயனங்கள் அனைத்தும் சரியாக வேலைசெய்யும். ரத்தத்தின் வெப்பம் குறைந்து, குளிர்ந்தநிலைக்குச் சென்றுவிட்டால் ரத்தம் உறையத்தொடங்கி விடும். இது அபாய நிலை.

    நமது உடல் வெப்பநிலையைச் சரியான அளவில் பராமரிக்க, நம் மூளையிலுள்ள ஹைப்போதாலமாஸில் ஒரு தெர்மோஸ்டாட் இருக்கிறது. தேவைப்படும்போது நம் உடலின் வெப்பநிலையைக் குறைத்தும், அதிகப்படுத்தியும் நம் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கும் வேலையை தெர்மாஸ்டாட் செய்கிறது.

    இந்த தெர்மாஸ்டாட் செயலிழந்துபோகும் நிலைக்குத்தான் ஹீட் ஸ்ட்ரோக் என்று கூறுகின்றனர். இதில் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக், மற்றும் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் என்று இரண்டு வகை.

    எந்த செயல்களிலும் ஈடுபடாமல், சாதாரண சுற்றுப்புறச்சூழலில் இருக்கிற வெப்பத்தின் தாக்கத்தால் மட்டும் ஏற்படுவதுதான் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக். இது உடலில் சூரிய ஒளி படுவதால் மட்டுமே உண்டாகும். பெரும்பாலும் இந்த வகை ஸ்ட்ரோக் வயதானவர்களுக்குத்தான் ஏற்படும். ஆனால் இளவயது காரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இதற்கு அவர்கள் வெயிலில் நீண்ட தூரம் ஓடுவது, விளையாடுவது, அந்த நேரங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களை சொல்லலாம்..

    குழந்தைகளை பொறுத்தவரை தெர்மோஸ்டாட் சுரபி வளர்ச்சியடைந்திருக்காது. அதனால் கோடை காலத்தில் குழந்தைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். முதியவர்களுக்கு தெர்மோஸ்டாட் செயலிழந்து போயிருக்கும். இது நல்லநிலையில் இருந்தாலும், வெளிப்புற செயல்பாடுகளின் மூலமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே வெயில் காலத்தில் நாம் வெளியே நடமாடுவதில் கவனம் கட்டாயம் தேவை. இல்லை எனில் சுட்டெரிக்கும் வெயிலால் உயிர் குடிக்கும் நோயான ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் உருவாகிவிடும் அல்லவா?

    இதற்காகத்தான் கோடை காலத்தில் சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். நமது உடலிலிருந்து வெளியேறும் சிறுநீரின் அளவைவிட 500 மி.லி அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதுபற்றி மருத்துவர்கள் மேலும் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.

    • குழந்தைகளை மிகவும் கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.
    • குழந்தைகள் கீழே எது கிடைத்தாலும் எடுத்து வாயில் போட்டு கொள்வார்கள்.

    சில குழந்தைகள் கீழே எது கிடைத்தாலும் எடுத்து வாயில் போட்டு கொள்வார்கள். எனவே குழந்தைகளை மிகவும் கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.

    குழந்தைகள் தவறுதலாக ஏதேனும் விழுங்கிவிட்டாலோ அல்லது சாப்பிடும்போது ஏதேனும் உணவுத் தொண்டையில் எக்குத் தப்பாகச் சிக்கிக்கொண்டாலோ, கையை விட்டு எடுக்கவோ, விரலை விட்டு எடுக்கவோ, கண்டிப்பாக முயற்சிக்கக் கூடாது.

    தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டால், அதை எடுப்பதற்கு, 'ஹீம்லிக் மெனுவர்' ( HEIMLICH MANEUVER) என்ற செய்முறை இருக்கிறது.

    இந்த முதல் உதவி சிகிச்சை முறைப்படி தெரிந்தவர்கள், அதை உபயோகித்துப் பொருளை எடுக்கலாம்.

    இல்லையெனில் உடனடியாக மருத்துவமனைக்குப் போய்விட வேண்டும்.

    ஏனென்றால், விழுங்கிய எட்டு நிமிடங்களுக்குள் அந்தப் பொருளை வெளியே எடுக்க வேண்டும். எனவே ஒவ்வொரு நொடியும், தங்க நொடிதான்.

    எட்டு நிமிடங்களுக்குப் பிறகும் ஆக்ஸிஜன் மூளைக்குச் செல்லவில்லை என்றால், விளைவு விபரீதம் ஆகிவிடும்.

    எனவே எதை செய்தாலும் தாமதிக்காமல் செய்வது மிகவும் முக்கியம்.

    • டயப்பர் அணிவது, சில நேரங்களில் குழந்தையின் சருமத்தில் காயங்களை ஏற்படுத்தும்.
    • குழந்தையின் தொடைப்பகுதியில் சருமம் வீக்கமடைந்து, திட்டுகள் போல இருக்கும்.

    பயன்படுத்துவதற்கு எளிதாகவும், வசதியாகவும் இருப்பதால் குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. இதனால் குழந்தைகளுக்கு சரும பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். டயப்பர் உபயோகிப்பதற்கு முன்பு, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிந்துகொண்டால் இந்த பாதிப்புகளை எளிதாகத் தடுக்கலாம்.

    டயப்பர் அணிவது, சில நேரங்களில் குழந்தையின் மென்மையான சருமத்தில் எரிச்சலுடன் கூடிய காயங்களை ஏற்படுத்தும். இது 'டெர்மடிடிஸ்' என்று அழைக்கப்படுகிறது. குழந்தையின் தொடைப்பகுதியில் சருமம் வீக்கமடைந்து, திட்டுகள் போல இருக்கும். தொடைப்பகுதி சிவந்து காணப்படும். அரிப்பு உணர்வு தீவிரமாகும்போது அந்த இடத்தில் சிறு சிறு கொப்புளங்களும் உண்டாகலாம். இவை வந்த பிறகு தடுப்பதை விட, வரும் முன்பு காப்பது நல்லது. இதற்கான தீர்வுகள் என்ன என்று பார்ப்போம்.

    டயப்பரை மாற்றுங்கள்

    பருத்தித் துணி பயன்படுத்தும் போது, சிறுநீர் கழித்தவுடன் ஈரமானதை உணர்ந்து உடனே மாற்றுவோம். ஆனால் டயப்பர் பயன்படுத்தும் போது ஈரத்தை உறிஞ்சிவிடுவதால், நாள் முழுவதும் ஒரே டயப்பரை அணிவிப்பவர்களும் இருக்கிறார்கள். துணிகளையோ, டயப்பரையோ துவைத்துப் பயன்படுத்துவதாக இருந்தால் வெந்நீரில் நன்றாக அலசி, வெயிலில் உலர வைத்து பயன்படுத்துங்கள்.

    உலர்வாக இருக்கட்டும்: டயப்பரைக் கழற்றிய உடன் குழந்தையின் பிறப்புறுப்புகள், பிட்டப்பகுதி, தொடைப்பகுதியில் மிதமான வெந்நீர் கொண்டு துடைத்து விடுங்கள். பிறகு மென்மையான பருத்தித் துணி கொண்டு ஒற்றி எடுத்து, உலர விடுங்கள். இதனால் சருமத்துக்கு தேவையான காற்றோட்டம் உள்ளே செல்லும். சருமம் சுவாசிக்க இயலும்.

    சுத்தம் செய்யுங்கள்: காலை, மாலை இரு வேளைகளிலும் குழந்தைக்கு டயப்பர் அணிவிக்கும் இடங்களில் மிதமான சூடுள்ள நீரில் சுத்தம் செய்யுங்கள். டயப்பர் அணிந்த பகுதியில், சதை மடிப்புகள் உட்பட எல்லா இடங்களிலும் மென்மையாக சுத்தம் செய்யுங்கள். பருத்தித் துணி அணிவித்தாலும் இத்தகைய பராமரிப்புகள் அவசியம் செய்ய வேண்டும்.

    இரவில் டயப்பர் அணிவித்தல்: குழந்தைக்கு இரவு நேரத்தில் டயப்பர் அணிவிப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம் அல்லது ஒரு டயப்பர் மட்டும் பயன்படுத்தலாம். குழந்தை தூங்கும்போது அணிவிக்கலாம். மறுநாள் காலை எழுந்தவுடன் முதலில் அதை மாற்றிவிடலாம். இதனால் டயப்பர் உபயோகிப்பதால் வரும் சரும பிரச்சினைகளைத் தடுக்கலாம்.

    பரிசோதியுங்கள்: குழந்தைகளின் தொடைப்பகுதியை அவ்வப்போது பரிசோதியுங்கள். தோல் சிவத்தல், தடிப்புகள் இருக்கும்போது டயப்பர் பயன்படுத்த வேண்டாம். குழந்தை சிறுநீர், மலம் கழித்தால் உடனே சுத்தம் செய்யுங்கள். டயப்பரை வெளியில் செல்லும்போது மட்டும் பயன்படுத்துங்கள். வீட்டில் இருக்கும்போது பருத்தித் துணிகள் அணிவிப்பது பாதுகாப்பானது.

    • குழந்தைகள் கண்ணாடி அணியும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
    • குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

    இயற்கையை ரசிக்கும் ஓர் அற்புதமான வாய்ப்பு கண்களுக்கு மட்டுமே கிடைத்து இருக்கிறது. ஆனால் இந்த கண்களை பாதுகாப்பதில் நாம் பலரும் இன்று அலட்சியம் காட்டுவதால், பல்வேறு பின்விளைவுகளை சந்திக்கிறோம். முதுமை வயதை அடைவதற்கு முன்பே கண்பார்வை மங்கி போவது, முதுமையில் அணிய வேண்டிய கண் கண்ணாடியை இளமையில் அணிவது உள்பட ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.

    முன்பு கண் கண்ணாடி அணிவதை ஒரு குறையாக பார்த்தனர். திருமண நிகழ்வுக்குக்கூட பங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு காலத்தில் அது தடையாக இருந்திருக்கிறது. ஆனால் இன்றோ கண்ணாடி அணிவது நாகரிகமாக மாறத் தொடங்கிவிட்டது. இதன் விளைவு சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ஏராளமானோர் கண்ணாடி அணியும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

    இளம் வயதினர்

    தற்போது பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கண் பார்வை பிரச்சினை அதிகரித்து, கண்ணாடி அணியும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு, டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் இளம்வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    நாகரிக வளர்ச்சி எதில் இருக்க வேண்டுமோ? அதில் இல்லாமல், மற்றவற்றில் ஊற்றி வளர்ப்பது, இன்று பெரிய அளவிலான பிரச்சினைகளை இன்றைய தலைமுறை சந்திக்க தொடங்கி இருக்கிறது. அதில் ஒன்றுதான் இளம் வயதிலேயே கண்ணாடி அணிவது. இதுதொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர், மருத்துவர் என்ன சொல்கிறார்கள்? என்பதை பார்க்கலாம்.

    செல்போன், டி.வி.

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவத் துறை தலைவர் விஜய்சோப்ரா:-மக்களிடையே செல்போன் பயன்பாடு தற்போது அதிகமாக உள்ளது. குழந்தைகள் அழும் போது அவர்களை சமாதானம் செய்ய, பெற்றோர்கள் செல்போனை கையில் கொடுத்து அழுகையை நிறுத்துகின்றனர். காலப்போக்கில் குழந்தைகள் செல்போன் இருந்தால் தான் உணவு சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது என அனைத்திற்கும் அடம்பிடிக்க ஆரம்பிக்கின்றனர். கொரோனா கால கட்டத்தில் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது.

    அதில் இருந்து குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். செல்போன்களை அதிக நேரம் உற்றுப்பார்ப்பதால் குழந்தைகளுக்கு தூர பார்வையில் கோளாறுகள் ஏற்படுகிறது. அதேபோல் லேப்டாப்பில் படம் பார்ப்பது, அதிக நேரம் டி.வி. பார்ப்பது போன்ற செயல்களின் காரணமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கண் பார்வை அதிகம் பாதிக்கப்படுகிறது. காலப்போக்கில் பார்வை கோளாறு, மங்கலான பார்வை போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி கண்ணாடி பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. அதேபோல் உணவு பழக்க வழக்க முறைகளிலும் மாற்றம் வந்துள்ளது.

    கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், பிரைடு ரைஸ், பர்கர் போன்ற அரைவேக்காடு உணவுகளால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே குழந்தைகளுக்கு சிறு தானியங்கள், காய்கறிகள், பழ வகைகள் மற்றும் கீரைகள் போன்ற உணவு முறைகளை பழக்கப்படுத்த வேண்டும். அதேபோல் கண்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுத்தும் செல்போன் உள்ளிட்ட பயன்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

    துரித உணவு

    திருப்பத்தூரை அடுத்த கெஜல் நாயக்கன்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அறிவியல் ஆசிரியை ர.நித்யா:-குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டிற்கு இன்றைய காலகட்டத்தில் ஏராளமான காரணங்கள் உள்ளன. அதிகப்படியான ஒளி தொடர்ச்சியாக கண்களில் படுவதால் கண் நரம்புகளை பாதித்து கண் குறைபாடுகளை உருவாக்குகிறது. அதற்கு நம் அன்றாட வாழ்க்கை முறையில் உள்ள பல காரணங்களை கூறலாம். உணவு முறை, டி.வி., செல்போன் முழு முதல் காரணம் என்றாலும், நாம் அதிகமாக கவனிக்க தவறும் காரணம் எல்.இ.டி. பல்புகள். வீடுகள், வாகனங்களில் அதிகமாக பயன்படுத்தும் எல்.இ.டி. பல்புகள் மற்றும் செல்போன் பிளாஷ் லைட்டுகளிலிருந்து வரும் நீல ஒளி விழித் திரையை குறிப்பாக குழந்தைகளுக்கு உடனடியாக பாதிக்கும். இதர கண் நோய்களையும், தூக்கமின்மையையும் கொடுக்கும். அதனால் பொதுமக்கள் சமூகப் பொறுப்புடன் அலங்காரத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும், அதனை பயன்படுத்துவதை தவிர்த்தல் வருங்கால தலைமுறைக்கு செய்யும் சமூக கடமையாகும். சாதா குண்டு பல்பும், டியூப் லைட்டும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தாது. செல்போனை எவ்வாறு கையாள வேண்டும் என்ற ஒழுங்கு முறை மற்றும் தினசரி உடற்பயிற்சியுடன் கூடிய கண் பயிற்சி குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கற்பித்து, பெற்றோரும் அவர்களுடன் இணைந்து செய்து நடைமுறைப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டால் கண் பார்வையை பல தலைமுறைகளுக்கு காப்பாற்றிக் கொள்ளலாம்.

    சத்துவாச்சாரியை சேர்ந்த பசுபதி:-எனது மகன் சிறுவயதில் இருந்தே கண் கண்ணாடி அணிந்து வருகிறான். தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் தேர்வுகள், ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. இதனால் செல்போன், கம்ப்யூட்டரை குழந்தைகள் அதிகம் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் பல குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பெடுத்து படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. எனவே மாணவர்களுக்கு பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளின் நேரத்தை குறைக்க வேண்டும். குழந்தைகளுக்கு துரித உணவுகள் வழங்குவதை பெற்றோர் கைவிட வேண்டும். குழந்தைகளின் நலன் மீது பெற்றோருக்கு அக்கறை வேண்டும். அனைத்து பெற்றோருக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

    பாரம்பரிய உணவு

    செய்யாறு பகுதியை சேர்ந்த முதுகலை ஆசிரியர் எம்.முனுசாமி:-இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் உடல் பராமரிப்பு இன்றி இளம் வயதில் கண்ணாடி அணிவது அதிகரித்து வருகிறது. சரியான விகிதத்தில், காய்கறிகளுடன் சத்தான உணவு சாப்பிட வேண்டும். பாரம்பரிய உணவுகளை இன்றைய தலைமுறை சாப்பிடுவதில்லை, துரித உணவகம், பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்ட தின்பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் செல்போன் மற்றும் டி.வி. பார்ப்பதால் கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி அணிகின்ற நிலை ஏற்படுகிறது. நள்ளிரவு வரை கண்விழித்து செல்போனில் விளையாடுவதும், குறைந்த நேரம் தூக்கம் மேற்கொள்வதாலும் கண்ணில் குறைபாடு ஏற்படுகிறது. சரியான தூக்கம், சத்தான உணவு எடுத்துக் கொண்டால் மட்டுமே கண் குறைபாடு இன்றி கண்ணாடி அணிவதை தவிர்க்க முடியும்.

    அதிக வெளிச்சம்

    வேலூரைச் சேர்ந்த கண் பரிசோதகரும், ஆப்டிகல்ஸ் கடை உரிமையாளருமான வி.தேசிகன் கூறியதாவது:- தாய், தந்தையருக்கு கண் குறைபாடு இருந்தால் அது பரம்பரையாக குழந்தைக்கும் வரும். அவர்கள் பரிசோதனை செய்து கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும். பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் 9 மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டு கண்ணாடியை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு இரண்டு ஆண்டுகள் வரை பார்வை மாறாது. மற்றவர்கள் பரிசோதனை செய்து கண்ணாடியை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் வகுப்பறையில் கரும்பலகையில் எழுதுவதை படிக்க முடியும். பாடங்களில் கவனம் செலுத்த முடியும். குழந்தைகள் செல்போனில் அதிக வெளிச்சத்துடன் பார்ப்பதால் அவர்களுடைய கண்கள் பாதிப்படைகிறது. மேலும் பல குழந்தைகள் வீட்டில் உள்ள கார்ட்டூன் சேனல்களை திரும்ப திரும்ப பார்க்கின்றனர். தொடர்ந்து டி.வி. பார்ப்பதாலும், செல்போனில் விளையாடுவதாலும் முட்டை, கீரை, காய்கறிகள் போன்ற உணவுகளை உண்ணாததாலும் குழந்தைகளின் கண்கள் இளம் வயதிலேயே பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே கண்ணாடி அணியும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    பாதுகாப்போம்

    ஒரு குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், இருட்டில் பார்க்க முடியாமல் எப்படி திணறுகிறோம். அப்படி இருக்கும் போது கடவுள் நமக்கு அளித்த சிறப்பு பரிசான கண்களை நாம் சரியான முறையில் பாதுகாப்போம். அலட்சியம் காட்டாமல் விழிப்புணர்வோடு இருப்போம்.

    கண்களை பாதுகாக்க 'டிப்ஸ்'

    * வெளிச்சம் குறைந்த இடத்தில் படிப்பதை தவிர்க்க வேண்டும். பச்சை நிற காய்கறி வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

    * கண்களுக்கு அதிக அழுத்தம் தரக்கூடிய செயல்களில் ஈடுபடுவதை கைவிடவேண்டும்.

    * கண்களில் ஏதாவது சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும், உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் பார்வை இழப்பை தவிர்க்க முடியும்.

    * இரவு படுக்கைக்கு செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு டி.வி., செல்போன், கணினி ஆகியவற்றை தவிர்க்க பழக வேண்டும். மாசு, தூசிகளினால் கண்கள் பாதிப்படையாமல் இருக்க, வெளியே சென்று வீடு திரும்பியதும் கண்களை தூய நீரில் கழுவ வேண்டும்.

    * கண்கள் தொடர்பான பயிற்சியை அவ்வப்போது மேற்கொள்வது அவசியம்.

    • டைப் 1 நீரிழிவு நோய், சிறு வயது குழந்தைகளுக்கு, பெரும்பாலும் நான்கு வயதை கடந்த பின்னர் ஏற்படுகிறது
    • கீழ்க்கண்ட மாற்று சிகிச்சை முறைகளின் சாத்தியகூறுகள் குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசிக்கலாம்.

    பிறக்கும்போது குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் இருக்கும் நிலை, 'நியோநேட்டல் டயாபட்டீஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது மரபணு காரணங்களால் ஏற்படுகிறது. இன்சுலின் மற்றும் கிளைபன்கிளைமைட் போன்ற மருந்துகளால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். இது சில குழந்தைகளுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படுத்தினாலும் ஒரு சில குழந்தைகளுக்கு ஒரு வயது பூர்த்தியாகும் முன் தானாகவே குணமாகி விடுகிறது.

    டைப் 1 நீரிழிவு நோய், சிறு வயது குழந்தைகளுக்கு, பெரும்பாலும் நான்கு வயதை கடந்த பின்னர் ஏற்படுகிறது. இவர்களுக்கு வாழ்நாள் முழுக்க இன்சுலின் ஊசி செலுத்திக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. இருப்பினும் கீழ்க்கண்ட மாற்று சிகிச்சை முறைகளின் சாத்தியகூறுகள் குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசிக்கலாம்.

    1) 'இன்சுலின் பம்ப்' உட்செலுத்திக்கொள்வது: இதன் மூலம் தினமும் மூன்று அல்லது நான்கு முறை இன்சுலின் போட வேண்டிய நிலையை மாற்றலாம்.

    2) கணைய மாற்று அறுவை சிகிச்சை: டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு நிரந்தர தீர்வாக கருதப்படுகிறது. எனினும் இதற்கு ஆகும் செலவு அதிகம் என்பதால் வசதி இல்லாதவர்களால் இந்த சிகிச்சை மேற்கொள்ள முடிவதில்லை.

    3) ஐலட்ஸ் செல் மாற்று அறுவை சிகிச்சை: இந்த முறை சிகிச்சையும் நீரிழிவு நோயாளிகளுக்கு நிரந்தர தீர்வாக கருதப்படுகிறது. இது கணைய ஐலட்ஸ் செல்களை உறுப்பு கொடையாளிகளிடமிருந்து பெற்று கல்லீரலில் உள்ள போர்டல் தமனியில் செலுத்தப்படுகிறது.

    4) ஸ்டெம் செல் சிகிச்சை (குருத்தணு சிகிச்சை): டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதில் மனித ஸ்டெம் செல்கள் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களாக மாற்றப்பட்டு, இன்சுலின் அதிகமாக சுரந்து, அதன் மூலம் ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

    5) செயற்கை கணையம் (ஆர்டிபிசியல் பேன்க்கிரியாஸ்): இதில் இன்சுலின் பம்ப் மற்றும் குளுக்கோஸ் மானிட்டரைக் கொண்ட ஒரு மூடிய லூப் அமைப்பு, ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய செயலியுடன் இணைந்து செயலாற்றுகிறது.

    6) பயோனிக் பேன்க்ரியாஸ்: இதில் பொருத்தப்படும் செயற்கை கணைய இயந்திரம், ரத்தத்தின் சர்க்கரை அளவை கண்காணித்து ஏற்ற தாழ்வுகளை சரிசெய்கிறது.

    • காய்ச்சல் உடல் உறுப்பு பாதுகாப்புக்கான அறிகுறியாகவும் இருக்கும்.
    • லேசான காய்ச்சல் என்றால் அதற்கு மருந்து மாத்திரைகளே தேவையில்லை.

    என்ன... உடல் இப்படி அனலாய் கொதிக்கிறது? பாராசிட்மால் மாதிரியான காய்ச்சல் மாத்திரையை 2 அல்லது 3 மணி நேர இடைவெளியில் போட்டால் போதும்.

    நான்கைந்து நேரம் சாப்பிட்டால் போதும் காய்ச்சல் காணாமல் போய்விடும் என்ற நம்பிக்கை பொதுவாக பெற்றோர்கள் மத்தியில் இருக்கிறது.

    எனவே தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றாலே மாத்திரைகளை தயக்கம் இல்லாமல் கொடுக்கிறார்கள்.

    மிகவும் சின்ன குழந்தைகளாக இருந்தால் சொட்டு மருந்து அல்லது 'சிரப்' வடிவில் இருக்கும் இதே காய்ச்சல் மருந்துகளை கொடுக்கிறார்கள்.

    சர்வ சாதாரணமாக கொடுக்கும் இந்த மாத்திரை, மருந்துகளால் குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய ஆபத்துக்கள் காத்திருக்கிறது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    அதிகப்படியான காய்ச்சல் மாத்திரைகளை சாப்பிட்டதால் பல குழந்தைகள் ஆபத்தான கட்டம் வரை சென்று மீண்டு இருப்பதாக குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரித்து உள்ளார்கள்.

    சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளில் 44 குழந்தைகள் இந்த மாதிரி மருந்து பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இந்த குழந்தைகள் பிறந்து 4 மாதம் முதல் 17 வயது உடையவர்கள்.

    அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அளவுக்கு அதிகமான காய்ச்சல் மாத்திரைகளால் உடலில் விஷத்தன்மை ஏறியும், கல்லீரல் பாதிக்கப்பட்டும் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளார்கள். அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 4 பேர் மிக தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று மீண்டு இருக்கிறார்கள்.

    இது தொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது:-

    வைரஸ் தொற்றுகளின் போது காய்ச்சல் அதிகமாக இருக்கும் முதல் 3 முதல் 4 நாட்களுக்கு காய்ச்சலின் அளவு அதிகமாகத்தான் இருக்கும் அதன் பிறகு 6 அல்லது 7 நாட்களில் சீராகி விடும்.

    ஆனால் இந்த கால கட்டத்தில் பயத்தின் காரணமாக அதிக அளவு மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

    குழந்தைகளுக்கு 105 டிகிரி காய்ச்சல் வரை வரும். உடனே மாத்திரைகளை அடிக்கடி கொடுக்கிறார்கள். ஏனெனில் வலிப்பு, மயக்கம் வந்துவிடலாம் என்று பயப்படுவதே இதற்கு காரணம்.

    இவ்வாறு அதிக அளவில் மாத்திரை கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம், கல்லீரலில் வீக்கம் போன்ற பாதிப்புகள் உருவாகி இருந்ததை பார்க்க முடிந்தது.

    இந்த மாதிரி பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 99 சதவீதம் பேர் தானாக உட்கொள்ளவில்லை. பெற்றோர்கள் தான் தவறாக கொடுத்து இருக்கிறார்கள்.

    காய்ச்சல் பல காரணங்களுக்காக வெளிப்படலாம். ஆனால் மருத்துவர்களை பார்த்து அதற்கான காரணத்தை கண்டுபிடிக்காமல் காய்ச்சல்தானே என்று மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள்.

    உண்மையான நோயை கண்டு பிடித்து அதற்குரிய மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து காய்ச்சல் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் மருந்துகள் மூலம் நச்சத்தன்மையும் உருவாக்கி வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத்தான் மருந்தின் நச்சுத்தன்மை ஏற்படுகிறது.

    உடல் நிலையை பரிசோதித்து மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவுக்குத்தான் மாத்திரைகளை கொடுக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் அளவை தாண்டும் போதுதான் சிக்கல் உருவாகிறது.

    காய்ச்சல் பரிசோதிக்கும் கருவியை வீடுகளில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். காய்ச்சலை பரிசோதித்து லேசான காய்ச்சல் என்றால் அதற்கு மருந்து மாத்திரைகளே தேவையில்லை. தானாகவே சரியாகி விடும். மேலும் பரிந்துரைத்த அளவை விட கூடுதலாக கொடுக்காதீர்கள். அதிகபட்சமாக தினசரி 4 முறைக்கு மேல் கொடுக்கவும் கூடாது.

    சொட்டு மருந்து அடர்த்தியானது. ஒரு சொட்டில் 5 மில்லி சிரப்புக்குரிய வீரியம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மருத்துவரின் ஆலோசனை கட்டாயம்.

    காய்ச்சல் உடல் உறுப்பு பாதுகாப்புக்கான அறிகுறியாகவும் இருக்கும். எனவே அதற்கு ஏற்றவாறு மருத்து மாத்திரைகளை கையாள்வதே நல்லது என்றார்கள்.

    டாக்டர்கள் பரிந்துரைக்கும் அளவு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    குறைந்த கால இடை வெளியில் அதிக டோஸ் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள கூடாது. மாத்திரை கொடுப்பதற்கு முன்பு காய்ச்சலை பரிசோதித்து கொள்ள வேண்டும்.

    100 டிகிரி காய்ச்சல் தாண்டினால்தான் மருந்து தேவைப்படும். பாராசிட்மால் சொட்டு மருந்து மிகவும் அடர்த்தியானது. அதனுடன் சிரப்பை கலந்து குடிப்பது தவறு.

    பாராசிட்மால் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது கல்லீரலை செயலிழக்க செய்யவும் வாய்ப்பு உண்டு என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    சாதாரண காய்ச்சல் தானே குறிப்பிட்ட மாத்திரைகளை வங்கி கொடுத்தால் போதும் என்று குழந்தைகளுக்கு ஆபத்தை வரவழைக்காதீர்கள் என்று மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகள் தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.
    • குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வைக்க வேண்டும்.

    டாக்டர் உமாசங்கர், (இணை பேராசிரியர், குழந்தைகள் நலத்துறை, கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி):-

    தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு தண்ணீர் அதிகமாக கொடுக்க வேண்டும். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது குழந்தைகளுக்கு 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே இளநீர், நுங்கு அதிகமாக கொடுக்கலாம். பொதுவாக குழந்தைகள் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். ஆனால் பெற்றோர்தான் அவர்களை கட்டாயப்படுத்தி தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வைக்க வேண்டும்.

    மேலும் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரைதான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே இந்த நேரத்தில் குழந்தைகளை விளையாட விடுவதை தவிர்க்கலாம். எக்காரணத்தை கொண்டும் குளிர்சாதன பெட்டியில் (பிரிட்ஜ்) வைத்த அதிக குளிர்ந்த தண்ணீரை குடிக்க கொடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக மண் பானை தண்ணீரை பயன்படுத்தலாம். அதிக வெயில் காரணமாக குழந்தைகளுக்கு சிறுநீர் கடுப்பு, வயிற்றுப்போக்கு, சின்னம்மை ஆகிய நோய் அதிகளவில் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அதிகளவில் தண்ணீர் குடித்தால் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு இல்லை.

    மெடிக்கல் எமர்ஜென்சி

    டாக்டர் நம்பிராஜன், (இதயவியல் துறை தலைவர், அரசு ஆஸ்பத்திரி):-

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது சருமத்தில் ஒருவித வறட்சி ஏற்படும். இதன் தாக்கம் அதிகரிக்கும்போது தோல், சிவப்பாக மாறி மயக்கம், சோர்வு, குமட்டல், வாந்தி, தலைவலி, மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதுதான் ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறி. இந்த நேரத்தில் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் செல்லும்.

    இதுபோன்று ஏற்பட்டால் அது மெடிக்கல் எமர்ஜென்சி ஆகும். இந்த நேரத்தில் உடனடியாக அந்த நபரை நிழலில் அமர வைத்து ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட நபருக்கு தண்ணீர் உள்பட எதுவும் குடிக்க கொடுக்கக்கூடாது.

    மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது நமது உடலில் தண்ணீர் தேவை அதிகரிக்கிறது. அதை நாம் குடிக்காமல் இருக்கும்போது, ரத்தத்தில் உள்ள செல் சுருங்கும். இதனால் இதயத்துடிப்பு வழக்கத்துக்கு மாறாக அதிகமாக துடிக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகிறது. இதுதான் மாரடைப்புக்கு காரணம் ஆகும்.

    தண்ணீர் முக்கியம்

    இது தவிர சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு இந்த ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இதுபோன்ற நோய் இருப்பவர்கள் அதிக வெயிலில் வெளியே செல்லக்கூடாது.

    வெயில் நேரத்தில் அதிகளவில் உடற்பயிற்சி செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் இதயத்துடிப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த வெயிலுக்கு உடலுக்கு தண்ணீர்தான் முக்கியம். அதை தவறாமல் குடித்தால் எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தரமான டயப்பர்களை முறையாகப் பயன்படுத்தலாம்.
    • பெற்றோருக்கு சிரமங்கள் தவிர்க்கப்படுகின்றன.

    டயப்பர் அணிவிக்காமல் இன்றைய சூழ்நிலையில் சமாளிக்க முடிவதில்லை என்கிறார்கள் சிலர்... டயப்பர் அணிவிக்கக்கூடாது என்கிறார்கள் சிலர்... வாங்க பார்க்கலாம்...

    பிறந்த குழந்தைகளுக்கு சரியான அளவுள்ள மற்றும் தரமான டயப்பர்களை முறையாகப் பயன்படுத்தலாம். தற்போது கிடைக்கும் டயப்பர்கள் சிறுநீர் மற்றும் கழிவுகளை நன்கு உறிஞ்சும் திறன் உடையவையாக இருக்கின்றன.

    மேலும் ஈரத்தால் ஏற்படும் அவதிகளைத் தவிர்த்து, குழந்தைகள் சிரமமின்றி நன்கு உறங்குவதற்கு இந்த டயப்பர்கள் நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமில்லை. குழந்தைக்கு ஒருமுறை டயப்பர் அணிவித்தால் அதை அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மாற்றத் தேவையில்லை.

    பெற்றோருக்கும் அடிக்கடி துணி மாற்றுவது, துவைப்பது போன்ற சிரமங்கள் இதனால் தவிர்க்கப்படுகின்றன.

    தரமான, நல்ல மெட்டீரியலில் செய்யப்பட்ட டயப்பர்களை குழந்தை தூங்கும்போதும், பயணத்தின்போதும் மற்றும் தவிர்க்க இயலாத நேரத்திலும் பயன்படுத்தலாம். ஆனால் ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கு ஒருமுறையும் டயப்பரை மாற்ற வேண்டியது அவசியம்.

    • மூச்சுவிட சிரமப்படும் குழந்தைகளுக்கு தான் தீவிர சிகிச்சைகள் தேவைப்படுகிறது.
    • குழந்தைகள்தான் இந்த வைரஸ்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    இந்த கோடை காலம் குழந்தைக்கு புது பிரச்சினைகளை உருவாக்குகிறது. அதாவது அடினோ வைரஸ், இன்புளூயன்சா, பாவி இன்புளூயன்சா போன்ற வைரஸ் தொற்றுகள் அதிக அளவில் பரப்பி வருகின்றன. அதிலும் குறிப்பாக குழந்தைகள்தான் இந்த வைரஸ்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பெரியவர்களையும், இணை நோய் உள்ளவர்களையும் போட்டு தாக்கி வரும் நிலையில் இணை நோய் உள்ளவர்களையும் போட்டு தாக்கி வரும் நிலையில் இது குழந்தைகளை கஷ்டப்படுத்துகிறது.

    பெரும்பாலும் குழந்தைகள் மூச்சுவிட சிரமப்படுதல், தொண்டை வலி, கண்களில் கண்ணீர் பொங்கி வடிதல் போன்ற அறிகுறிகளாலேயே ஆஸ்பத்திரிகளுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கடந்த 2 மற்றும் 3-வது அலைகளில் ஏற்பட்டதைவிட குறைந்த எண்ணிக்கையிலேயே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

    ஆனால் மூச்சுவிட சிரமப்படும் குழந்தைகளுக்கு தான் தீவிர சிகிச்சைகள் தேவைப்படுகிறது. மூச்சுவிட சிரமப்படுதல், மிக குறைந்த அளவில் சாப்பிடுவது, ஆக்சிஜன் அளவு குறைவு ஆகிய அறிகுறிகள் இருக்கும் குழந்தைகளை மட்டுமே ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க பரிந்துரைப்பதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். ஆனால் நேற்றைய நிலவரப்படி சென்னையில் உள்ள பிரபலமான குழந்தைகள் நல மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. பெரும்பாலான குழந்தைகளை பரிசோதித்ததில் கொரோனா தொற்று இல்லை. ஆனால் கோடை விருந்தாக இந்த சாதாரண வைரஸ்கள் தான் குழந்தைகளை கஷ்டப்படுத்துவதாக கூறினார்கள்.

    அரசு பொது சுகாதாரத் துறை ஆய்வகத் தரவுகள் படி கடந்த 2 மற்றும் 3-வது அலையை ஒப்பிடும் போது மிக குறைவான அளவே தொற்றுகள் பதிவாகி உள்ளது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஆல்பா, டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ்கள் வீரியத்துடன் இருந்ததால் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இப்போது ஒமைக்ரான் வைரஸ் குடும்பத்தின் உட்பிரிவுகள்தான் பரவி வருகிறது. இவை குழந்தைகளை தாக்கினாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது ஆறுதலான விசயம். மேலும் இது வீரியம் குறைந்த வைரஸ் என்ற முடிவுக்கும் வரமுடிவதாக துணை இயக்குனர் ராஜூ கூறினார். மேலும் அவர் கூறும்போது, இணை நோய் பாதிப்பு உடையவர்கள், வயது முதிர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

    • கோடை காலத்தில் வெப்ப தாக்கம் பள்ளிக் குழந்தைகளை பாதிக்கும்.
    • தோல் நோய்களும் தோன்றும்.

    கோடை காலத்தில் வெப்ப தாக்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இளைஞர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளை பாதிக்கும். அவர்கள் விளையாடும்போது வெளியேறும் வியர்வையின் அளவு வழக்கத்தைவிட அதிகரிக்கும். நாவறட்சி ஏற்படும். சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். உடல் சோர்வு, தலை வலி, காய்ச்சல், வாந்தி, வயிற்று போக்கு, அம்மை நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தோல் நோய்களும் தோன்றும்.

    வியர்வை அதிகமாக வெளியேறும்போது தண்ணீரால் கழுவாமல் விட்டுவிட்டால் நமைச்சல் உண்டாகி அது கொப்பளங்களாக மாறிவிடக்கூடும். ஆதலால் வெயிலில் விளையாடும் குழந்தைகள் இருமுறை குளிப்பது நல்லது.

    வியர்வை அதிகமாக வெளியேறும்போது உடலில் உள்ள உப்புச்சத்தின் அளவு குறைய தொடங்கிவிடும். வியர்வையாக வெளியேறும் நீரை ஈடு செய்ய வெறுமனே தண்ணீர் மட்டும் பருகுவது கூடாது. அதனுடன் உப்புச்சத்தின் அளவையும் ஈடு செய்ய வேண்டும். அதற்கு தண்ணீருடன் உப்பையும் சேர்த்து அருந்த வேண்டும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதனுடன் உப்பு சேர்த்தும் குடித்து வரலாம். அது உடலில் இருந்து வெளியேறிய நீரையும், உப்புச்சத்தையும் ஈடுகட்டும்.

    கோடை காலத்தில் சிறு குழந்தைகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு வியர்வை வெளியேற்றம் அதிகமாகும்போது சோர்வு அதிகம் ஏற்படும். தாகம் எடுத்தாலும் விளையாட்டிலேயே முழு கவனமாய் இருப்பார்கள். அதனால் அவ்வப்போது தண்ணீருடன் சிறிது உப்பு கலந்து, அவர்களுக்கு பருக கொடுக்கலாம். தண்ணீரை நன்கு காய்ச்சி கொடுப்பது நல்லது. குழந்தைகள் காற்றோட்டமான சூழலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

    காற்றோட்டம் குறைவாக இருந்தால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனை கருத்தில் கொண்டு குழந்தை பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    கோடை காலம் முடியும் வரையில் அவ்வப்போது எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. அதிலும் எண்ணெய்யை காய்ச்சி, ஆறவைத்து உடலெங்கும் தேய்த்து குளிப்பாட்டி வரலாம். மஞ்சளை அரைத்து உடலில் தேய்த்து வருவதும் நோய்த்தொற்றில் இருந்து காக்கும்.

    • செயற்கை குளிர்பானங்கள் அறவே தவிர்க்கவும்.
    • தினமும் 2 முறை குளிக்க வேண்டும்.

    கோடை காலத்தில் குழந்தைகளை பராமரிப்பது குறித்து கடலூர் முதுநகர் எஸ்.டி. மருத்துவமனை டாக்டர் முகுந்தன் கூறியதாவது:-

    கோடைகாலத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்கு முதல் வழி தண்ணீர். 10 கிலோ எடையுள்ள குழந்தை தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் பருகவேண்டும் என்ற கணக்கில், குழந்தைகளுக்கு எடைக்கு ஏற்றவாறு தண்ணீர் அடிக்கடி பருக கொடுக்கவேண்டும். நீங்கள் வாங்கும் பழங்கள், காய்கறிகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதற்கு முன்பு 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு கழுவி கொடுங்கள். குழந்தைகளுக்கு எல்லா வகையான பழங்களும் கொடுக்கலாம். செயற்கை குளிர்பானங்கள் அறவே தவிர்க்கவும். மோர், இளநீர், எலுமிச்சை சாறு முதலியவற்றில், ஏதாவது ஒன்றை தினமும் குழந்தைகளுக்கு கொடுங்கள்.

    கோடை காலத்தில் குழந்தைகளுக்கு மாமிச உணவுகள் (சிக்கன், மட்டன்) வாரம் ஒருமுறை மட்டும் கொடுத்தால் போதுமானது. அடிக்கடி கொடுத்தால் குழந்தைகளுக்கு அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். குழந்தைகளுக்கு ஓட்டல், துரித உணவகங்களில் இருந்து உணவு வகைகளை வாங்கி தருவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். தினமும் 2 முறை குளிக்க வேண்டும்.

    வெளியில் விளையாடி விட்டு வரும் குழந்தைகளின் கை, கால்களை சோப்பு போட்டு கழுவி விடுங்கள்.குழந்தைகளுக்கு இயற்கையை ரசிக்க கற்றுக் கொடுங்கள்.

    செயற்கை பொருட்களை (ஸ்மார்ட்போன், டி.வி.) முற்றிலும் தவிர்க்கவேண்டும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அனைத்து தடுப்பூசிகளையும் மருத்துவர் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×