search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child Food"

    • உலர் திராட்சையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • குழந்தைகளுக்கு திராட்சை மிகவும் பிடிக்கும்.

    உலர் பழங்களில் அனைவருக்கும் பிடித்தமானது உலர் திராட்சை. இவை குழந்தைகளுக்கு செய்யும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

    உணவுகளிலிருந்து பெற முடியாத அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உலர்திராட்சை மூலம் குழந்தைகளுக்கு கொடுக்க முடியும். குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுப்பது அவர்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

    உலர் திராட்சையில் அதிக அளவு கலோரி, குளுக்கொஸ் மற்றும் பிரக்டோஸ் கொண்டுள்ளது. இது எடையை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் குழந்தையின் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    குழந்தைக்கு உலர் திராட்சை கொடுப்பதால் நினைவாற்றல் மேம்படும். மூளைக்கு ஊட்டமளிக்கும். செரிமானத்தை ஊக்குவிக்கும்.

    காய்ச்சலின் போது உலர்ந்த திராட்சை ஊறவைத்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம். இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது.

    உலர் திராட்சையை குழந்தைகளுக்கு எப்போது கொடுக்கலாம்?

    குழந்தைகள் உணவை மெல்ல தொடங்கும் போது அல்லது 8 மாத காலத்துக்கு பிறகு உலர் திராட்சையை சாப்பிட கொடுக்கலாம். சிறிய குழந்தைக்கு கொடுக்கும் போது உலர் திராட்சையை ஊறவைத்து கூழ் போல் மசித்து கொடுக்கலாம்.

    நாள் ஒன்றுக்கு 1 டீஸ்பூன் அளவு சாறு கொடுக்கலாம். குழந்தைக்கு உலர் திராட்சை கொடுக்கும் போது ஒவ்வாமை உண்டாகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

    • குழந்தைக்கு ஆரோக்கியமான உணவை கொடுக்க வேண்டும்.
    • குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு பெரிய சவாலானது.

    குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சாதனையாக தான் தெரியும். ஆனால் இப்போது தான் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். நமக்கு ஆரோக்கியமாக இருக்கும் உணவுகள் எல்லாம் குழந்தைக்கும் ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    0-4 மாதம் வரை

    தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். ஏனெனில், தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும். அதிலும் அந்த தாய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்.

    இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.

    4-6 மாதம் வரை

    நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில், கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும்.

    அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒருடேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.

    6-8 மாதம் வரை

    இந்த மாதங்களில் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதே, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள் ஆகிவற்றை கொடுக்கலாம். அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4 அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம்.

    அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.

    8-10 மாதம் வரை

    இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம்.

    10-12 மாதம்

    இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். அளவாக இருக்க வேண்டும். உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். அதாவது 1/3 கப் பால்பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்.

    • ஒருசில உணவுப்பொருட்கள் குழந்தைகளை குஷிப்படுத்தலாம்.
    • சோர்வாக இருக்கும் குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்கலாம்.

    பெரியவர்களை போல குழந்தைகளுக்கும் மனச்சோர்வு ஏற்படும். அத்தகைய மனச்சோர்வை ஒருசில உணவுப்பொருட்களை உட்கொண்டே குறைத்து, குழந்தைகளை குஷிப்படுத்தலாம். அதுபற்றி பார்க்கலாம்.

    1. சாக்லேட் மனச்சோர்வு குறைய சாக்லேட் ஒரு சிறந்த உணவு. ஏனெனில் கோக்கோவில் அதிகமாக ஆன்டி-டிப்ரசன் பொருள் உள்ளது. சாக்லேட் சாப்பிடும்போது மனதிற்கு ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும் இதில் வைட்டமின்-பி இருப்பதால் மூளையை ஆரோக்கியமாகவும் வைக்கும்.

    2. பாதாம் பருப்பு இதில் அதிக அளவில் மக்னீசியம் உள்ளது. உடலில் மக்னீசியமானது குறைவாக இருந்தால் நரம்புகளில் கோளாறு ஏற்பட்டு, இதனால் மனச்சோர்வு வரும். மேலும் காராமணி, பசலைக் கீரை மற்றும் உருளைக் கிழங்கிலும் மக்னீசியம் அதிகமாக உள்ளது.

    3. கடல் உணவு கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றை உண்பதால் உடலானது 'ரிலாக்ஸ்' ஆக இருப்பதோடு, புத்துணர்ச்சியும் பெறும். மேலும் இவற்றை உண்பதால் மனதில் தோன்றும் தேவையில்லாத குழப்பங்களும், எதிர்மறை எண்ணங்களும் நீங்கி, மனச்சோர்வும் கட்டுப்படும்.

    4. பால் குழப்பமான மனநிலையில் இருக்கும் குழந்தைகளின் உணவில் பால் அல்லது பால் சம்பந்தமான பொருளான தயிரை அதிகம் சேர்க்கலாம். ஏனெனில் பாலில் அதிகமாக ஒமேகா-3 இருப்பதால், இது உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். தேவையில்லாத எண்ணங்களால் ஏற்படும் மனச்சோர்வும் அகலும்.

    • குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமானது.
    • முதல் 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது.

    குழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.

    குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

    முதல் 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.

    பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.

    திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. பசும்பாலை ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்கவேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திட உணவுக்கு சிறந்தது பசும்பால் தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.

    • உடலில் புரதச்சத்து போதுமான அளவுக்கு இருந்தால் மட்டுமே உடல் உறுதியாகும்.
    • குழந்தைகளுக்கு புரதச்சத்து இன்றியமையாத ஒன்றாகும்.

    சீரான மற்றும் சத்தான உணவுகள் ஒரு குழந்தையின் முழுமையான வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சரியாக சாப்பிடாத குழந்தைகள் தங்களுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை பெற முடியாத சூழல் ஏற்படுகிறது.

    எனவே குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்களை கணிசமாக உட்கொள்வதை உறுதி செய்வது மிகவும் முக்கியம், குறிப்பாக குழந்தைகளுக்கு புரதச்சத்து இன்றியமையாத ஒன்றாகும். உடலில் புரதச்சத்து போதுமான அளவுக்கு இருந்தால் மட்டுமே உடல் உறுதியாகும்.

    குழந்தை பருவத்தில் அதிக புரதங்கள் தேவைப்படுகின்றன. தேசிய அறிவியல் அகாடமிகள் பரிந்துரைப்படி, 1-3 வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 13 கிராம் புரதச்சத்துக்களை பெற வேண்டும், 4-8 வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 19 கிராம் புரதச்சத்துக்களை எடுத்து கொள்ள வேண்டும், 9-13 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 34 கிராம் புரதச்சத்துக்களை பெற வேண்டும் என கூறப்படுகிறது.

    புரதச்சத்துக்கள் நிறைந்த முட்டை, அசைவ உணவுகள், சோயா பீன்ஸ் போன்றவற்றை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். பாதாம், வேர்க்கடலை, சுண்டல், துவரம் பருப்பு, பாசி பருப்பு என பருப்பு வகைகள் அனைத்திலும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. முளைக்கட்டிய பயிர்களில் புரதச்சத்து அதிகளவு உள்ளது. எனவே அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள் தினமும் சிறிதளவு முளைக்கட்டிய பயிர்களை சமைத்து சாப்பிடலாம். பச்சைப் பயிரில் மட்டும் 24 கிராம் அளவுக்குப் புரதம் உள்ளது.

    புரதச்சத்து குழந்தைக்கு அதிகம் தேவை என்பதற்காக கடையில் விற்கும் ஊட்டச்சத்து மாவு வாங்கிக்கொடுக்க வேண்டிய தேவையில்லை. இயற்கையாகவே நாம் கொடுக்கும் உணவில் சிலவற்றை சேர்த்து கொடுத்தாலே போதுமானது. பொட்டுக் கடலை, சுண்டல், பயிறு வகைகள், பச்சைப் பயிறு, பருப்பு வகைகள் சற்று அதிகமாக குழந்தைகளின் உணவில் சேர்த்தாலே போதுமான புரதச்சத்து கிடைத்து விடும்.

    என் குழந்தை ஒழுங்காக சாப்பிட மாட்டேங்குது டாக்டர் என்று பலபேர் வருகின்றனர். அவர்களிடம் கவலைப்படாதீர்கள், குழந்தைக்கு முட்டையும், கீரையும் கொடுங்கள் என்று சொன்னால், இல்ல டாக்டர் ஏதாவது டானிக் கொடுங்கள் என்கின்றனர். இயற்கையாகவே உணவில் சிலவற்றை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தாலே அவர்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளமுடியும். டானிக்கும் வேண்டாம், எந்த ஹெல்த் பவுடரும் வேண்டாம்.

    குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கண்ட இடங்களில் கையைவைக்க அனுமதித்துவிடக் கூடாது.
    தூய்மையான இந்தியாவை உருவாக்குவது ஒவ்வொருவரின் கடமை. அந்த கடமையை அனைவருமே நிறைவேற்றவேண்டும். ஒரே நாளில் இதை நிறைவேற்றிட முடியாது. முதலில் இதை நன்றாக புரிந்துகொண்டு, படிப்படியாக செயல்படுத்த முன்வரவேண்டும். அதன் மூலம் நிச்சயமாக நல்ல மாற்றத்தை உருவாக்கிட முடியும்.

    மனிதர்கள் பயன்படுத்தும் இடங்களை மூன்றாக பிரிக்கலாம். அவை: வீடு, பொதுஇடங்கள், அலுவலகங்கள். இதில் வீட்டை பெரும்பாலும் அனைவருமே தூய்மையாகத்தான் வைத்திருக் கிறார்கள். அலுவலகங்களும் பெரும்பாலும் தூய்மையடைந்துவிடுகின்றன. தூய்மையின்மை அதிகம் தென்படுவது பொதுஇடங்களில்தான்.

    வீட்டைவிட்டு வெளியே செல்லும் மக்கள் அனைவரும் பொதுகழிப்பிடங்களை பயன்படுத்துகிறார்கள். அதனை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது பயன்படுத்தும் ஒவ்வொருவரின் கடமையாகும். இதில் மிகுந்த விழிப்புணர்வு அவசியம். விமான நிலையம், ரெயில் நிலையம், திரையரங்கு, பெரிய மால்கள், பூங்காக்கள், சாலையோரம் என்று எல்லா இடங்களிலும் பொது கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தங்கள் பங்குக்கு மக்கள் அதை தூய்மையாக வைத்திருக்க உதவ வேண்டும்.

    பெரும்பாலான தொற்று வியாதிகள் பொது கழிப் பறைகளில் இருந்து உருவாகின்றன. பலரும் பயன்படுத்தும் கழிப்பிடங்களில் தொற்று நோய் கிருமிகள் அதிகமாகவே காணப்படும். இது தவிர்க்க முடியாதது. பயன்படுத்திய பின் தண்ணீரை ‘ப்ளஷ்’ செய்துவிட்டு வரவேண்டியது அவசியம். பின்பு கைகளால் கழிப்பறை கதவை திறக்கும் போது கைகளிலும் விரல்களிலும் கிருமிகள் பரவும். கைகளை சோப்பு போட்டு கழுவி துடைத்து சிறிது நேரம் காயவைத்து தூய்மையாக்கிக்கொள்ளவேண்டும்.

    கழிப்பிடம் தானே என்று கண்ட இடத்தில் துப்புவது கூடாது. கைப்பைகளை வெளியில் வைத்துவிட்டு உள்ளே செல்லவேண்டும். அதற்கு வாய்ப்பில்லாமல் பொது கழிப்பிடத்தின் உள்ளே பையை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்த பையை அப்படியே எடுத்துக்கொண்டு போய் சமையல் அறையிலோ, டைனிங் டேபிளிலோ வைத்துவிடக்கூடாது. தகுந்த முறையில் தூய்மை செய்த பின் தான் அதனை பயன்படுத்தவேண்டும்.

    வெகுதூரம் வெளியில் பயணிக்கும்போது கையோடு சானிடரி டிஷ்யூ, ஹேண்ட் வாஷ் போன்றவைகளை கொண்டு செல்லவேண்டும். அவைகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

    குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கண்ட இடங்களில் கையைவைக்க அனுமதித்துவிடக் கூடாது.

    பராமரிப்பு பணியாளர்கள் சுத்தப்படுத்தினாலும், நம் பங்கிற்கு நாமும் சுத்தத்தை பேண முன்வர வேண்டும்.

    தூய்மையான பாரதத்தில் பொதுகழிப்பிட சுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    குப்பை தொட்டியில் போடவேண்டிய பொருட்களை டாய்லெட்டில் போட்டுவிடக் கூடாது.

    அங்கிருக்கும் தண்ணீர் குழாய் சரியாக மூடப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும்.

    டாய்லெட்டை பயன்படுத்தும் முன்பும், பயன்படுத்திய பின்பும் தண்ணீரால் சுத்தம் செய்யுங்கள்.

    பொதுகழிப்பிடங்களில் உங்கள் ஒவ்வொரு செயல்பாடும் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் அமையட்டும்.
    குழந்தையின் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டியது தாயின் கடமை. குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
    குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மேலும் வளர வளர எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக மாறிவிடுகின்றனர். எனவே அவர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயின் கடமை. இப்போது குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்வோம்.

    0 முதல் 4 மாதங்கள்: பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலிலேயே வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். ஏனெனில் தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளின் உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.

    4 முதல் 6 மாதங்கள்: நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். அதனுடன் தாய்ப்பால் கொடுத்து வருவதும் அவசியம்.

    6 மாதங்கள் 8 வரை: இந்த மாதங்களல் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். அலர்ஜி வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர்த்து மற்றவற்றை கொடுக்கலாம்.

    8 முதல் 10 மாதங்கள்: இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

    10 முதல் 12 மாதங்கள்: இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். 
    ×