search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai star hotel"

    பாராளுமன்றத் தேர்தல் கூட்டணியை இறுதி செய்வதற்காக, சென்னையில் இன்று அதிமுக மற்றும் பாமக கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். #LSPolls #ADMK #PMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மாநில கட்சிகளுடன் கூட்டணியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி தீவிரப்படுத்தி உள்ளது.

    பீகார், மராட்டியம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கூட்டணியை உறுதி செய்துள்ள பா.ஜனதா தலைவர்கள் அடுத்தக்கட்டமாக தென் மாநிலங்களில் தங்களது கவனத்தை திருப்பி உள்ளனர்.

    தென்இந்தியாவை பொறுத்தவரை கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா கட்சிக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய அளவில் எந்த கூட்டணியும் அமையவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமே பா.ஜனதாவுக்கு பலமான கூட்டணி அமைய உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி ஏற்கனவே உருவாகிவிட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூட்டணியை உருவாக்க கடந்த சில வாரங்களாக பா.ஜனதா தலைவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். ஆளும் அ.தி.மு.க. தலைமையில் அந்த கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதற்காக அ.தி.மு.க. - பா.ஜனதா மூத்த தலைவர்கள் ரகசியமாக சந்தித்து பேசி வந்தனர். அ.தி.மு.க- பா.ஜனதா கூட்டணியில் தலா 5 சதவீத வாக்கு வங்கிகளை வைத்துள்ள பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வை சேர்த்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இணைவது தொடர்பாக நேற்று இரவு உறுதி செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி உடன்பாட்டை இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கேற்ப அ.தி.மு.க- பா.ஜனதா தலைவர்கள் இன்று காலை தங்களது நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாற்றி அமைத்தனர்.

    அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. கூட்டணி அறிவிப்பை வெளியிடும் ஏற்பாடுகள் இன்று காலை மும்முரமாக நடந்தன. இதற்காக இன்று காலை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதுபோல 11 மணிக்கு மத்திய மந்திரி பியூஸ்கோயல் சென்னை வருவார் என்று தகவல்கள் வெளியானது. அதன்பின்னர் காலை 10 மணி அளவில் அமித்ஷாவின் தமிழக பயண திட்டம் ரத்து செய்யப்பட்டது.

    ஆனால், தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் மற்று மத்திய மந்திரி பியூஸ் கோயலும் மதியம் 12.15 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் மொத்தம் 9 கட்சிகள் இடம்பெறும் என்று தெரிய வந்துள்ளது. அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை இடம் பெறுகின்றன.



    இதில் முதல்கட்டமாக அதிமுக-பாமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை நந்தனம் அருகே உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று காலை கூட்டணி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் பாமக தலைவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்படும். அதன்பின்னர் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. #LSPolls #ADMK #PMK
    ×