என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "chennai salem highway"
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அடுத்த நல்லூரில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை கட்சி கொடி ஏற்றி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது,
சேலம்- சென்னை 8 வழிச்சாலை அமைய உள்ள இடத்தில் பெரும்பாலானது விவசாய நிலங்கள்தான். இந்த விவசாய நிலங்களை அழித்து சாலை அமைப்பதால், விவசாயிகள் தங்கள் சொந்த இடத்திலேயே அகதிகளாக மாறும் நிலையை உருவாக்கும். இந்த 8 வழிச்சாலை திட்டம் யாருக்கானது என்பது தெரியவில்லை. இந்த 8 வழிச்சாலை திட்டத்தை யாரும் கேட்கவில்லை. இதேபோல், தஞ்சாவூரிலும் சாலை அமைக்கப்படவுள்ளது.
இப்படி தமிழகத்தின் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படும். சேலத்திலிருந்து சென்னை செல்ல உள்ள சாலைகளை வேண்டுமானால் அகலப்படுத்தியிருக்கலாம். தமிழகத்திற்கு மக்கள் தண்ணீர்தான் கேட்கிறார்கள். ஆனால், தார் சாலைகள் அல்ல. ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட்டங்கள் மக்களுக்கானது அல்ல. பெரிய முதலாளிகளுக்கானது ஆகும். 130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் நீருக்கும், உணவுக்கும் எந்த திட்டங்களும் இல்லை என்றார்.
உடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகி உமா மகேஷ்வரி உள்ளிட்டோர் இருந்தனர். #seeman #chennaisalemhighway
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்