search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "certificates"

    • விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவ- மாணவியர்கள் கல்லூரி அலுவலகத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பித்து சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம்.
    • கலந்தாய்வி–ன் போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பல அசல் மற்றும் மூன்று நகல்களுடன் கொண்டு வர வேண்டும்.

    குத்தாலம்:

    குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான 3ம் கட்ட கலந்தாய்வு பி.எஸ்.சி., கணிதம், கணினி அறிவியல், பிகாம்., வணிகவியல், பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம் ஆகிய அனைத்து பாடப்பிரிவுகளுக்கு மாணவ, மாணவியர் சேர்க்கை 25-ந்தேதி நடைபெற இருப்பதால் மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்கு சேர விரும்பும் பிளஸ்2 தேர்ச்சி பெற்று இதுவரை இக்கல்லூரிக்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர் கல்லூரி அலுவலகத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பித்து சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம்.

    கலந்தாய்வி–ன் போது 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 உள்ளி–ட்டவற்றை அசல் மற்றும் மூன்று நகல்களுடன் கொண்டு வர வேண்டும்.

    சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அன்றே கல்லூரியில் கட்டணம் ரூ.3350 செலுத்தி கல்லூரியில் சேர்க்கை பெற்றுக் கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் முனைவர் வெ.விஜயேந்திரன் தெரிவித்துள்ளார்.

    • அத்தாட்சி பெற்ற சான்றிதழ்களின் நகழ்களை இணைத்து கூரியர் அல்லது பதிவு தபால் மூலம் ஆகஸ்டு 1-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    • முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி2022-2023-க்கானமாணவ- மாணவிகள்சேர்க்கை தஞ்சாவூர் மருத்துவக்க ல்லூரி சாலையிலுள்ள சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கூட்டுறவு மேலாண்மை பட்டயச்சான்றிதழ், கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் ஆகிய மூன்று சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    இந்த முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில் சேருவதற்கு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று அத்தாட்சி பெற்ற சான்றிதழ்களின் நகழ்களை இணைத்து கூரியர் அல்லது பதிவு தபால் மூலம் ஆகஸ்டு 1-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ண ப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

    முதல்வர், சாமிய ப்பா கூட்டுறவு மேலா ண்மை நிலையம், மருத்து வக்கல்லூரி சாலை, தஞ்சாவூர்-613 007

    இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் பிளஸ்-2 தேர்ச்சியும், 01.08.2022 அன்று 17 வயது பூர்த்தியடை ந்தவராகவும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்ெதாகை பெற்று த்தரப்படும். முன்னாள் இராணுவ த்தினரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்க ப்படும். பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டதாரிகளும் இப்பயிற்சி யை பெறலாம்.விபரங்களை பெறுவத ற்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் தொலைபேசி எண்: 04362- 238253, 237426 தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை தெரிவித்து ள்ளார்.

    • சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றுகளை கலெக்டர் வழங்கினார்
    • தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.

    தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு காணொளி நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சிறுநீரகத்துறை சிறப்பு மருத்துவர்சரவணக்குமார் மற்றும் தனியார் மருத்துவமனையின்இருதய நோய் துறை சிறப்பு மருத்துவர் மனோஜ் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். 

    • சின்னசேலம் தாலுகாவில் சான்றிதழ் பெற முடியாமல் பள்ளி மாணவ- மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
    • விண்ணப்பித்து 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.

    கள்ளகுறிச்சி:

    கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகாவுக்கு உட்பட்ட வடக்கநந்தல் சின்னசேலம் நைனார்பாளையம் உள்ளிட்ட குறு வட்டங்கள் உள்ளன.இந்த குறு வட்டங்களில் உள்ள இந்த குறு வட்டங்கள் மூலமாகவும் சாதி வருமானம் இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் பள்ளி பொதுத் தேர்வு நடந்தது தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டன இந்தநிலையில் உயர்கல்வி படிக்க நினைக்கும் மாணவ-மாணவிகள் சாதி வருமானம் இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் உயர்கல்வி படிக்க தேவைப்படுவதால் 1000 கணக்கான மாணவ மாணவிகள் இ சேவை மூலம் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் விண்ணப்பித்து 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.

    இதுதொடர்பாக தாசில்தாரை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால் அவர்களிடமும் சரியான பதில் இல்லை இதனால் விண்ணப்பித்தும் சான்றிதழ் பெற முடியாமல் மாணவ மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பிக்கும் சான்றிதழ்களை கிடப்பில் போடாமல் தினசரி இ சேவை மையம் மூலம் அனுப்பப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மேல் நடவடிக்கைக்கு அனுப்ப வேண்டும் என மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கூடலூரில் இ-சேவை மைய இணையதளம் முடக்கத்தால் சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    பொதுமக்கள் சாதி, வருமானம், இருப்பிடம், ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு அலுவலகங்களில் இ-சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. கூடலூர் தாலுகாவில் உள்ள பொதுமக்கள் சான்றிதழ்கள் பெறுவதற்காக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகை தருகின்றனர். இதேபோல் ஆதார் புகைப்படம் எடுக்கும் மையமும் இங்கு இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக அரசு இ-சேவை மையத்தில் சான்றிதழ்கள் கிடைப்பதில் காலதாமதம் ஆகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் விளக்கம் கேட்டால் இ-சேவை மைய இணையதள சேவை சரிவர செயல்படாமல் உள்ளது. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி வருகின்றனர். இதை அறியாத பொதுமக்கள் தினமும் வந்து ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர்.

    மேலும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ்கள் கிடைக்காமல் வாரக்கணக்கில் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பொதுத்தேர்வுகள் முடிந்து உயர்கல்வி படிப்பதற்காக மாணவர்கள் சான்றிதழ்கள் பெறுவதற்காக இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் இ-சேவை மைய இணையதள சேவை முடக்கம் காரணமாக சான்றிதழ்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
    ×