search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central - State Govt"

    • பயணப்படி மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட உள்ளது.
    • வங்கி கணக்கு மூலம் காப்பீட்டு பாதுகாப்பு பெறுவது உள்ளிட்ட நலத்திட்டங்களை பற்றி விழிப்புணர்வு பயிற்சி வழங்கினார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் தியாகராயர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.ஜி. நட்ராஜ் முன்னிலையில், மத்திய அரசின் கோயம்புத்தூர் மத்திய தொழிலாளர் கல்வி மண்டல அலுவலக அலுவலர் எஸ். சேரன், வெள்ளகோவில் பகுதியில் உள்ள நலவாரிய உறுப்பினர்களுக்கு மத்திய மாநில அரசின் நலத்திட்டங்களான பென்ஷன், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு, வங்கி கணக்கு மூலம் காப்பீட்டு பாதுகாப்பு பெறுவது உள்ளிட்ட நலத்திட்டங்களை பற்றி விழிப்புணர்வு பயிற்சி வழங்கினார்.

    இந்த பயிற்சி இன்று 12ந்தேதி, நாளை மறுநாள் 14 ந்தேதி, மற்றும் 17ந்தேதி ஆகிய தேதிகளில் 4 வகுப்புகளாக நடைபெற உள்ளது.இந்த விழிப்புணர்வு பயிற்சியானது ஒவ்வொரு வகுப்பிலும் 25 உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகை, பயணப்படி மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட உள்ளது.

    ×