search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "catching work"

    • போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறான மாடுகளை பிடிக்கும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் வீடு மற்றும் தோட்டங்களில் கட்டி வைத்து வளர்க்க வேண்டும்.

    உடன்குடி:

    உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறான மாடுகளை பிடிக்கும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று பிடித்த ஒரு மாட்டை குலசேகரன்பட்டினத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைப்பதற்காக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இப்பணி தொடர்ந்து நடைபெறும். அதனால் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் வீடு மற்றும் தோட்டங்களில் கட்டி வைத்து வளர்க்க வேண்டும் அல்லது அடைத்து வைத்து வளர்க்க வேண்டும் என்று உடன்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பாபு தெரிவித்தார்.

    ×