search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cassava"

    • தற்போது சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. வரத்து சரிவாலும், தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்து வருகிறது.
    • இதனால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், தாளவாடி, கடம்பூர் மலைப்பகுதியில் மரவள்ளி கிழங்கு அதிகமாக சாகுபடியாகிறது. ஓராண்டு பயிரான மரவள்ளி கிழங்கில், கடந்த 2 ஆண்டாக மாவு பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பதால் மகசூல் குறைந்து காணப்பட்டது.

    ஆனால் தற்போது மகசூலுடன் வரத்து குறைந்து வருவதாலும், தற்போது அறுவடை சீசன் நிறைவடைந்ததாலும் அரவை மில்களுக்கு ஒரு டன், 12,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர்.

    இது குறித்து, தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:-

    கடந்த 2 ஆண்டாக மரவள்ளி கிழங்கில் மாவு பூச்சி தாக்குதல், அறுவடை தொடங்கும் காலத்தில் விலை இல்லாததால் தற்போது சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. வரத்து சரிவாலும், தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்து வருகிறது.

    கடந்த ஓராண்டுக்கு முன் ஒரு டன் மரவள்ளி கிழங்கு, 8,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, 12,500 ரூபாய் என்ற விலையில் அரவை மில் உரிமையாளர்கள் கொள்முதல் செய்கின்றனர். சிப்ஸ் தயாரிப்பு, பிற உணவு பயன்பாட்டுக்காக பிற மாநில வியாபாரிகள், ஒரு டன்னை, 25,000 ரூபாய் வரையிலான விலையில் கொள்முதல் செய்கின்றனர்.

    அதற்கேற்ப, ஜவ்வரிசி, 90 கிலோ மூட்டை, 4,500 ரூபாயில் இருந்து, 5,300 ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    நவம்பர், மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை மரவள்ளி கிழங்கு அறுவடை சீசனாக உள்ளது. தற்போது சாகுபடி பரப்பு குறைந்ததாலும், தேவை அதிகரிப்பாலும் நடப்பு பருவத்தில் மரவள்ளி கிழங்குக்கு இதே விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×