search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car search"

    • திண்டிவனம் பகுதியில் காரில் ஆடு திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 20 ஆடுகள் 38 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கார் பறி முதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த சாரம் லேபை அருகே ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் அய்யப்பன், போலீசார் செந்தில், சங்கர், பூபாலன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்து க்கிடமாக வந்த ஒரு காரை மடக்கிய போது அதிலி ருந்து நபர்கள் தப்ப ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் ஆடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் திண்டி வனம் நத்தமேடு பகுதியை சேர்ந்த குமார் (வயது 25), சத்யராஜ் (26), சுதாகர் (22), கமல் (34) ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தீபாவளி பண்டிகைக்காக வியாபாரம் செய்வதற்கா கவும், கடைகளில் விற்பனை செய்வதற்காகவும் ஆடு திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 20 ஆடுகள் 38 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கார் பறி முதல் செய்யப்பட்டது. ஆடு திருடியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    ×