search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car accident"

    • அதிவேகமாக வந்த கார் உணவு அருந்தி கொண்டிருந்தவர்கள் மீது மோதல்.
    • 68 வயதான டிரைவர் மதுபோதையில் காரை ஓட்டவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது டேல்ஸ்ஃபோர்டு. நகரப் பகுதியில் இருந்து வெகுதூரத்தில் உள்ள இந்த கிராமப் பகுதியான டேல்ஸ்ஃபோர்டில் பிரபல ஹோட்டல் ஒன்று உள்ளது.

    இந்த ஹோட்டலில் சலையோரமாக திறந்த வெளியில் அமர்ந்து உணவருந்தும் இடம் உள்ளது. நேற்று மாலை இந்தப் பகுதியில ஏராளமானோர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.

    அப்போது திடீரென வேகமாக வந்த பி.எம்.டபிள்யூ சொகுசு கார், இந்த பகுதிக்குள் புகுந்தது. இதில் ஒரு பையன், இரண்டு ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த ஏழு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒரு இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். அப்போது, காரை ஓட்டிவந்தது 68 வயது நபர் எனத் தெரியவந்துள்ளது. அவர் மது அருந்தி கார் ஓட்டவில்லை என போலீசார் தெரிவித்தனர். போதைப்பொருள் எடுத்துக் கொண்டாரா என்பதை தெரிந்துகொள்ள அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளதாகன போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காரை வேகமாக ஓட்டி வந்ததுதான் விபத்து காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • விபத்து குறித்த தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் கணேசன் (வயது 54), அயனாவரம் சக்திவேல் (51), திருவண்ணாமலை ஜீவா நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (46) ஆகியோர் சென்னையில் இருந்து பழனிக்கு நேற்று நள்ளிரவு காரில் புறப்பட்டனர். இந்த காரை சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் (45) ஓட்டிவந்தார்.

    இந்த கார் இன்று அதிகாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டினை இழந்த கார், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் இருந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சக்திவேல், கமலக்கண்ணன், ராஜசேகர் ஆகியோர் படுகாயமடைந்து காருக்குள்ளேயே கிடந்தனர். அவ்வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் இறந்த கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புனித யாத்திரை சென்று திரும்பிய போது விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    பித்தோராகர்:

    உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டம் லகான்பூர் அருகே தார்ச்சுலா-லிபுலேக் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று காளி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    உத்தரகாண்டில் உள்ள ஆதி கைலாஷ் கோவிலுக்கு புனித யாத்திரை சென்று திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து பித்தோராகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வர் சிங் கூறும்போது, பெங்களூரைச் சேர்ந்த இருவரும், தெலுங்கானாவைச் சேர்ந்த இருவரும், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் என 6 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். இருள் மற்றும் பாதகமான சூழ்நிலை காரணமாக, உடல்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

    உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். புனித யாத்திரை சென்று திரும்பிய போது விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கார் கட்டுப்பாட்டை இழந்து நெல்லை-குமரி நான்குவழிச்சாலையில் இடது புறத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • விபத்து குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இளங்கடை கோட்டார் பகுதியை சேர்ந்தவர் காதர் (வயது44). இவரது மனைவி பவினா (42). இவர்களுக்கு அப்ரா (21) என்ற மகளும், அப்துல்லாகான் (19) என்ற மகனும் உள்ளனர்.

    இவர்கள் குடும்பத்துடன் நேற்று நெல்லைக்கு காரில் வந்திருந்தனர். பின்னர் இரவில் மீண்டும் அவர்கள் 4 பேரும் காரில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். காரை அப்துல்லாகான் ஓட்டிச்சென்றார். நள்ளிரவு நேரத்தில் நாங்குநேரி டோல்கேட்டை கடந்து தனியார் உணவகம் அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து நெல்லை-குமரி நான்குவழிச்சாலையில் இடது புறத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. கார் சென்ற வேகத்தில் கவிழ்ந்து பின்னர் நேராக மாறியது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் 4 பேரும் இடிபாடுகளில் சிக்கினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக இன்ஸ்பெக்டர் ஆதம் அலி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று இடிபாடுக்குள் சிக்கியவர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் காதர் மற்றும் அவரது மகன், மகள் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பிய நிலையில், பவினா படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதையடுத்து அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பவினாவின் குடும்பத்தினர் கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே பவினா பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் படுகாயமடைந்த தனலட்சுமி, சீதாலட்சுமி ஆகியோரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாடிப்பட்டி:

    மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது55). வங்கியில் கடன் வாங்கி கொடுக்கும் முகவராக இருந்து வந்தார். இவரது குலதெய்வ கோவில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ளது.

    இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்வதற்காக அதிகாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து வாடகை காரில் கருப்பசாமி, அவரது மனைவி தனலட்சுமி (50), மகள் சீதாலட்சுமி (20) ஆகியோர் புறப்பட்டனர்.

    காரை மதுரை தோப்பூரைச் சேர்ந்த பால்பாண்டி (50) என்பவர் ஓட்டி சென்றார். வாடிப்பட்டி அருகே மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் நகரி பகுதியில் சென்றபோது அங்கு சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது.

    இதில் காருக்குள் இருந்த கருப்பசாமி, கார் டிரைவர் பால்பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப் இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஏட்டு சுந்தர பாண்டி விரைந்து வந்தனர். அவர்கள் காருக்குள் சிக்கி இருந்த கருப்பசாமி, பால் பாண்டியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தில் படுகாயமடைந்த தனலட்சுமி, சீதாலட்சுமி ஆகியோரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரை ஓட்டி வந்த மணிகண்டன், அவரது மனைவி, குழந்தைகள், தனம், பிச்சையம்மாள் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
    • விபத்து குறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    கோவை மாவட்டம் திருப்பூரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது37). பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யா பாரதி (32). இவர்களுக்கு விஸ்வாஸ்(8), மேகா ஸ்ரீ(6) ஆகிய குழந்தைகள் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் தங்கள் உறவினர்கள் தனம்(60), பிச்சையம்மாள்(80), அருண் குமார்(45) ஆகியோருடன் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். நேற்று குற்றாலம் சென்றுள்ளனர்.

    இன்று அதிகாலை குற்றாலத்தில் இருந்து குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டனர். மணிகண்டன் காரை ஓட்டினார். தென்காசி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரை ஓட்டி வந்த மணிகண்டன், அவரது மனைவி, குழந்தைகள், தனம், பிச்சையம்மாள் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் காரில் இருந்தவர்களை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கருத்தபாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த தனம், பிச்சையம்மாள் ஆகியோர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கணவன்-மனைவி, குழந்தைகளுக்கு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த விபத்து குறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்து நடந்த இடத்தில் காரின் நம்பர் பிளேட் இருந்தது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஈரோடு மாவட்டம், சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 40). டிரைவர். இவர் ஈரோட்டில் இருந்து வேலைக்காக ரெயில் மூலம் ஜோலார்பேட்டைக்கு வந்தார்.

    பக்கிரி தக்கா சாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் நடந்து சென்று கொண்டிருந்த ஞானசேகரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஞானசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் ஞானசேகரன் உயிரிழந்த இடத்தில் விபத்து ஏற்படுத்திய காரின் நம்பர் பிளேட் இருந்துள்ளது.

    இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 எருமை மாடுகளும் இறந்து போனது.
    • விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருத்தணி அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன் (45). இவர் மனைவி ஞானேஸ்வரி(36) மகன்கள் ஹரிகிருஷ்ணன், லோகேஷ் ஆகியோருடன் காரில் சென்னை நோக்கி சென்றார்.

    சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் அடுத்த புதூர் அருகே கார் சென்ற போது சாலையின் குறுக்கே திடீரென 2 எருமை மாடுகள் வந்தன.

    இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென மாடுகள் மீது மோதியது. அதிவேகத்தில் மோதியதால் கார் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த ரகுநாதன், ஞானேஸ்வரி மற்றும் அவர்களது மகன்கள் அரிகிருஷ்ணன், லோகேஷ் ஆகியோர் காயத்துடன் உயிர்த்தப்பினர்.

    மேலும் இந்த விபத்தில் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 எருமை மாடுகளும் இறந்து போனது.

    விபத்து காரணமாக அப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாகபூஷணா அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.
    • நடிகர் நாகபூஷணாவை போலீசார் கைது செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பிரபல கன்னட நடிகர் நாகபூஷணா நேற்று இரவு தனது காரில் உத்தரஹள்ளியில் இருந்து சோணனகுண்டே பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

    பெங்களூரு வசந்தபரா மெயின் ரோட்டில் சென்ற போது வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர நடை பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த கிருஷ்ணா (வயது 58) அவரது மனைவி பிரேமா (48) ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே நடிகர் நாகபூஷணா அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் வழியிலேயே பிரேமா இறந்து விட்டார். கிருஷ்ணா இரு கால்கள் மற்றும் தலையில் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக குமாரசாமி போக்குவரத்து காவல் நிலைய போலீசார் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் காரை ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக நடிகர் நாகபூஷணாவை போலீசார் கைது செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அடுத்த அடி அண்ணாமலை கிராமம், வேடியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் (வயது50). இவர் நேற்று இரவு திருவண்ணா மலை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பாலியப்பட்டு கூட்ரோடு சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் ரத்தினம் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருவண்ணாமலை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தினம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பால் ஊற்றுவதற்காக சாலை ஓரம் சென்று கொண்டிருந்தனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செங்கம்:

    செங்கம் அடுத்த ரோடுகரியமங்கலம் சேர்ந்தவர்கள் பரிதா (வயது 37), சின்னபாப்பா(55), ஜெயமணி (38). இவர்கள் அதே பகுதியில் உள்ள பகுதியில் இன்று காலை பால் ஊற்றுவதற்காக சாலை ஓரம் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக பால் ஊற்ற வந்த 3 பேர் மீது மோதியது. இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக பரிதா மற்றும் ஜெயமணி ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரமேஷ் தன்னுடைய செல்போன் மூலம் விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கூறினார்.
    • விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. கார் கண்ணாடி மட்டும் சேதமானது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சியில் என்ஜினியராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ்.

    இவர் தனது மனைவியுடன் காரில் நேற்று இரவு நாகர்கோவிலில் இருந்து நெய்வேலிக்கு வந்து கொண்டிருந்தார். அந்த கார் இன்று அதிகாலை 3 மணியளவில் விருத்தாசலம் அருகே உள்ள கோ.மங்கலம் பகுதியில் வந்தது.

    அப்போது அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள வாய்க்காலில் பாய்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேசும், அவரது மனைவியும் காப்பாற்ற யாராவது அந்த வழியாக வருகிறார்களா? என்று பார்த்தனர். ஆனால் அந்த நேரத்தில் யாரும் அந்த வழியாக வரவில்லை.

    இதனால் ரமேஷ் தன்னுடைய செல்போன் மூலம் விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கூறினார். மேலும் போன்மேப் மூலம் அவர்கள் வாய்க்காலில் சிக்கி கொண்ட இடத்தை தெரிவித்தார்.

    உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் சிக்கிக்கொண்டு நீரில் மூழ்கிய ரமேசையும், அவரது மனைவியையும் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். பின்னர் விருத்தாசலம் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நீரில் மூழ்கிக்கொண்டிருந்த காரை வெளியில் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. கார் கண்ணாடி மட்டும் சேதமானது.

    ×