search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "candidate list"

    • வேட்பாளர் பட்டியலில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் புதுமுகங்களும் இடம்பெறுகின்றனர்.
    • தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் நாளையே வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இதில் கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கி உள்ள தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, பெரம்பலூர், தஞ்சை, தேனி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. சீனியர் எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதுடன் புதுமுகங்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் என்று தெரியவந்துள்ளது.

    இதில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலுவும், மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனும், தென்சென்னையில், தமிழச்சி தங்கபாண்டியனும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

    இதே போல் நீலகிரி தொகுதியில் ஆ.ராசா, தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் எம்.பி.யும் போட்டியிடுகிறார்கள்.

    இதே போல் ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்கள் யார் என்று முடிவாகி விட்டது. வேட்பாளர் பட்டியலில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் புதுமுகங்களும் இடம்பெறுகின்றனர். பெண்களுக்கும் இதில் கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

    21 தொகுதிகளுக்கும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதால் இந்த வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை வெளியிடுகிறார். இதைத் தொடர்ந்து தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் நாளையே வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    இந்த தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய வாக்குறுதிகள் இடம்பெற செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. பெண்களை கவரும் வகையிலான வாக்குறுதிகளும் இதில் இடம்பெற்று உள்ளதாக தெரிகிறது.

    • ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க. எத்தனை தொகுதி போட்டியிடும்? அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை முதல் ஆளாக வெளியிடுவார்.
    • தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முக்கிய தொகுதிகளில் யார்-யாரை நிறுத்துவது என்பதை ஏற்கனவே டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து விட்டனர்.

    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என்பதை ஏற்கனவே அறிந்து இருந்த தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகளின் தலைவர்கள் ஏற்கனவே எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதை 90 சதவீதம் தீர்மானித்து விட்டனர்.

    அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களையும் கடந்த வாரமே தேர்வு செய்து முடித்து விட்டனர்.

    காங்கிரசில் 2 தொகுதிகளில் மட்டுமே இழுபறி உள்ளது. அதுவும் நாளை காலை தீர்க்கப்பட்டு விடும். அதன் பிறகு நாளையே தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியில் மட்டும்தான் தமிழகத்தில் அந்த கட்சி போட்டியிடும் 9 வேட்பாளர்கள் யார்-யார் என்பதை முடிவு செய்வதில் கடும் சவால் நிலவுகிறது. அந்த 9 தொகுதிகளில் 6 தொகுதி வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியிட்டு எம்.பி. ஆனவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    திருநாவுக்கரசர், ஜோதிமணி ஆகிய இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மனுதாக்கல் நிறைவுபெறும் 27-ந்தேதி வரை காங்கிரசில் இழுபறி நீடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. சேருமா? என்பதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதால் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் உள்ளது. ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க. எத்தனை தொகுதி போட்டியிடும்? அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை முதல் ஆளாக வெளியிடுவார்.

    தற்போது அந்த சூழ்நிலை இல்லாத நிலையில் பா.ம.க., தே.மு.தி.க. வந்தால் எந்த தொகுதிகள் கொடுப்பது என்பது பற்றி அ.தி.மு.க.வில் ஒருமித்த கருத்து முடிவாகாத நிலை உள்ளது. என்றாலும் அ.தி.மு.க. வேட்பாளர்களும் 90 சதவீதம் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் தயாராக உள்ளது.

    பா.ம.க., தே.மு.தி.க. தொகுதி பங்கீடு சுமூகமாக தீர்க்கப்பட்டால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலையும் நாளை அல்லது நாளை மறுநாள் எடப்பாடி பழனிசாமி வெளியிட வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.

    பாரதிய ஜனதா கூட்டணியிலும் இதே நிலைதான் நிலவுகிறது. பா.ம.க., தே.மு.தி.க. தலைவர்களுடன் பாரதிய ஜனதா தலைவர்கள் தொடர்ந்து ரகசியமாக பேசி வருவதால் தொகுதி பங்கீடு முடிவாகவில்லை. என்றாலும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முக்கிய தொகுதிகளில் யார்-யாரை நிறுத்துவது என்பதை ஏற்கனவே டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து விட்டனர்.

    எனவே பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களும் இன்னும் 2 நாட்களில் தெரிய வாய்ப்பு உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் 39 வேட்பாளர்களும் ஒரே நாளில் அறிவிக்கப்படுவார்கள் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

    இதன் மூலம் தி.மு.க. கூட்டணியிலும், அ.தி.மு.க. கூட்டணியிலும், பாரதிய ஜனதா கூட்டணியிலும் 80 சதவீத வேட்பாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. தொகுதி பங்கீடு நிறைவு பெற்றதும் வேட்பாளர் பட்டியல் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிகிறது.

    வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டால் தமிழக தேர்தல் மேலும் சூடு பிடிக்கும்.

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
    • மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த விட மாட்டேன்

    அண்மையில் ராஜினாமா செய்த தேர்தல் ஆணையர் அருண் கோயலுக்கு சல்யூட் செய்கிறேன் என்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதனால், தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகள் அதற்கு ஆயத்தமாகி வருகின்றன.

    இதில், இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

    இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 42 வேட்பாளர்களையும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.

    இந்நிகழ்வில் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்துவது, கூடுதல் மத்திய படைகளை நிறுத்துவதற்கு டெல்லி தலைவர்களும், அதிகாரிகளும் கொடுத்த அழுத்தத்திற்கு பணியாத அருண் கோயலுக்கு சல்யூட் செய்கிறேன். மக்களவை தேர்தலில் வாக்குகளை கொள்ளையடிக்க பாஜக முயற்சிக்கிறது.

    மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த விட மாட்டேன். பாஜகவை தோற்கடிப்பதில் முழு நாட்டிற்கும் திரிணாமுல் காங்கிரஸ் வழிவகுக்கும்

    தேர்தலுக்கு முன்பு பாஜக சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளது. தேர்தலுக்கு பிறகு 100 ரூபாய் உயர்த்துவார்கள். சிலிண்டர் விலை உயர்வு மூலம் ரூ.70,000 கோடி சம்பாதித்துள்ளனர் என்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.
    • முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் போட்டியிடுகிறார்.

    மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதனால், தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகள் அதற்கு ஆயத்தமாகி வருகின்றன.

    இதில், INDIA கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும் தனித்து போட்டியிடுகிறது.

    இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

    42 வேட்பாளர்களையும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.

    42 பேர் கொண்ட பட்டியலில், மஹூவா மொய்த்ரா, பெர்ஹாம்பூர் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் போட்டியிடுகின்றனர்.

    காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை எதிர்த்து யூசுப் பதான் போட்டியிடுகிறார்.

    • பாஜக நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது.
    • பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகின்றன.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்கள் அமைத்து களத்தில் இறங்கி உள்ளனர். பா.ஜ.கவும் தேர்தல் பணியை தமிழகத்தில் தீவிரப்படுத்தி உள்ளது.

    கடந்த முறையை விட இந்த முறை தங்களது வாக்கு வங்கியை அதிகரிக்க முடிவு செய்துள்ளதுடன், தமிழகத்தில் இருந்து எம்.பி.க்களை தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்துக்கு அனுப்பும் வகையில் தீவிர பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பா.ஜ.க மூத்த நிர்வாகிகளுடனான மத்திய குழு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்றார். மத்திய மந்திரி எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், எச்.ராஜா, கே.டி.ராகவன், ஜி.கே.நாகராஜ், கரு.நாகராஜன் மற்றும் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    நேற்று கோவையில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    குறிப்பாக பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க விலகியதை அடுத்து, தங்கள் கூட்டணியில் எந்தெ ந்த கட்சிகளை சேர்க்கலாம். யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம். தமிழகத்தில் நமக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என பல்வேறு விஷயங்களை தமிழக பா.ஜ.க நிர்வாகிகளிடம் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் கேட்டறிந்தார்.

    மேலும் நமக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? தேர்தல் அறிக்கையை எப்படி தயாரிப்பது? அதில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற வைக்கலாம் என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் கேட்டார். அவர்களும் பல்வேறு கருத்துக்களை தேசிய அமைப்பு பொதுச்செயலாளரிடம் தெரிவித்தனர்.

    நிர்வாகிகள் கூறிய அனைத்து கருத்துக்களையும் கேட்டு கொண்ட தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் பாராளுமன்ற தேர்தல் பணிகளை துரிதப்படுத்துங்கள் என கூறியதோடு, வெற்றிக்கான சில வழிகளையும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    தொகுதி வாரியாகவும், வார்டு வாரியாகவும் சென்று கட்சியினர் மக்களை நேரில் சந்திக்க வேண்டும். அவர்களிடம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள், செயல்படுத்திய திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்து கூறி வாக்குகளை சேகரியுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

    மக்களிடமும் அவர்களுக்கு ஏதாவது குறைகள் இருக்கிறதா? என்று கேட்டு, அதனை உடனே நிறைவேற்று வதற்கான நடவடிக்கையும் எடுங்கள். அடிக்கடி மக்களை சந்தித்து கொண்டே இருங்கள்.

    வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் மட்டுமின்றி அனைத்து தொகுதிகளிலும் அந்தந்த நிர்வாகிகள் தங்கள் முழு பலத்தையும் இறக்கி தேர்தல் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தாக தெரிகிறது.

    மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் எனவும் நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதிலும் குறிப்பாக பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தமிழகத்தில் போட்டியிடக் கூடிய முக்கிய வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும், தமிழகத்தில் பா.ஜ.கவின் வாக்கு விகிதத்தை அதிகரிக்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    தமிழகத்தில் பா.ஜ.க கோவை, நீலகிரி உள்பட பல்வேறு தொகுதிகளை குறி வைத்து தேர்தல் பணியாற்றி வருகிறது. குறிப்பாக நீலகிரி தொகுதியில், மத்திய மந்திரியாக இருக்க கூடிய எல்.முருகன் போட்டியிட உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில் எல்.முருகனும், நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முகாமிட்டு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருவதுடன், மக்களையும் அடிக்கடி சந்தித்து வருகிறார்.

    இதையெல்லாம் பார்க்கும் போது, அவர் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

    நேற்று நடந்த கூட்டத்தில் பா.ஜ.க தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் விரைவில் முதற்கட்ட வேட்பாளர் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். அந்த பட்டியலில் மத்திய மந்திரி எல்.முருகனின் பெயர் உள்பட இன்னும் சில முக்கிய தலைவர்களின் பெயர்களும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 150 முதல் 170 தொகுதிகளை பலவீனமான தொகுதிகளாக பாரதிய ஜனதா கருதுகிறது.
    • தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது ஓசையின்றி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வந்து விட்டது. தேர்தல் பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கி தீவிரப்படுத்தி உள்ளது.

    வருகிற 22-ந்தேதி அயோத்தி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பிப்ரவரி 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    மே மாதம் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும் என்ற நிலையில் சற்று முன் கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்த தடவை 400 முதல் 450 தொகுதிகளுக்கு குறி வைத்து இருக்கிறது. அதாவது மொத்தம் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார்.

    இதற்காக 543 தொகுதிகளிலும் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாரதிய ஜனதா வேட்பாளர் தேர்வை நடத்தி வருகிறது. 150 முதல் 170 தொகுதிகளை பலவீனமான தொகுதிகளாக பாரதிய ஜனதா கருதுகிறது.

    பாரதீய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக அதாவது பலவீனமாக கருதப்படும் தொகுதிகள் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், ஒடிசா, உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்காளம் ஆகிய 9 மாநிலங்களில் இருப்பதாக கணக்கெடுத்துள்ளனர். தமிழகத்தில் 36, ஆந்திராவில் 25, மராட்டியத்தில் 24, மேற்குவங்காளத்தில் 23, கேரளாவில் 20, உத்தரபிரதேசத்தில் 12, பீகாரில் 12, ஒடிசாவில் 12, தெலுங்கானாவில் 12 என 140 தொகுதிகள் மிக மிக பலவீனமான தொகுதிகளாக கணக்கெடுத்துள்ளனர்.

    மேலும் 20 தொகுதிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டு 160 தொகுதிகளை அதிக கவனம் செலுத்த வேண்டிய தொகுதிகளாக பாரதிய ஜனதா கருதுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது ஓசையின்றி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

    வடமாநிலங்களில் மகர சங்கராந்தி வரை நல்ல காரியங்கள் எதையும் தொடங்கமாட்டார்கள். 15-ந்தேதி தை மாதம் பிறந்த பிறகுதான் அவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட தொடங்குவார்கள். எனவே பாரதிய ஜனதா முதல் வேட்பாளர் பட்டியலை அடுத்த வாரம் வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    குறிப்பாக 15-ந்தேதி முதல் 22-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் முதல் வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா அதிரடியாக அறிவிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அடுத்த கட்டமாக பிப்ரவரி 14-ந் தேதிக்குள் 2-வது வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா அறிவிக்கும் என்று பீகார் மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    முதல் மற்றும் 2-வது வேட்பாளர் பட்டியலில் 70 முதல் 75 சதவீதம் வரை புதுமுக வேட்பாளர்கள் இடம் பெறுவார்கள் என்றும் பாரதிய ஜனதா வட்டாரத்தில் கூறப்படுகிறது. தமிழகத்திலும் வேட்பாளர் தேர்வு ஓசையின்றி நடப்பதாக கூறப்படுகிறது.

    தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு தெரியாமல் சில பட்டியலை மேலிடம் தயாரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாரதிய ஜனதாவின் 2024-ம் ஆண்டு தேர்தல் வியூகங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

    அமமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவோரின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று காலை டிடிவி தினகரன் வெளியிட்டார். #LSPolls #TTVDhinakaran #AMMK
    சென்னை:

    டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாராளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய கூட்டணி பலம் எதுவுமின்றி எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் மட்டும் சேர்ந்து போட்டியிடுகிறது.

    எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியை விட்டுக் கொடுத்துள்ள அ.ம.மு.க. மற்ற 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அதுபோல 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் டி.டி.வி.தினகரன் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க.வின் முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த 17-ந்தேதி டி.டி.வி. தினகரன் வெளியிட்டார். அதில் 24 பாராளுமன்ற, 9 சட்டசபை இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

    9 சட்டசபை தொகுதியிலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 பேருக்கும் மீண்டும் போட்டியிட டி.டி.வி.தினகரன் வாய்ப்பு அளித்துள்ளார். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) டி.டி.வி. தினகரன் அ.ம.மு.க.வின் 2-ம் கட்ட வேட்பாளர் பட் டியலை வெளியிட்டார்.

    இந்த 2-ம் கட்ட பட்டியலில் தமிழகத்தில் 14 பாராளுமன்ற தொகுதிக்கும், 8 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கும் வேட்பாளர்கள் பெயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

    1. வடசென்னை- சந்தான கிருஷ்ணன் (வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர்)

    2. அரக்கோணம்- பார்த்திபன் (வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்)

    3. வேலூர்- பாண்டு ரங்கன் (முன்னாள் அமைச்சர்)

    4. கிருஷ்ணகிரி- கணேசகுமார் (கிருஷ்ணகிரி மாவட்ட கழக செயலாளர்)

    5. தர்மபுரி- பழனியப்பன் (முன்னாள் அமைச்சர்)

    6. திருவண்ணாமலை- ஞானசேகர் (வேலூர் மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர்)

    7. ஆரணி- செந்தமிழன் (முன்னாள் அமைச்சர்)

    8. கள்ளக்குறிச்சி- கோமுகி மணியன் (விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர்)

    9. திண்டுக்கல்-ஜோதி முருகன் (தாளாளர், சுரபி கல்வி நிறுவனங்கள்)

    10. கடலூர்- கார்த்திக் (கழக பொறியாளர் அணி செயலாளர்)

    11. தேனி-தங்க தமிழ்ச் செல்வன் (கழக கொள்கை பரப்புச் செயலாளர்)

    12. விருதுநகர்-பரமசிவ ஐயப்பன் (கழக அம்மா பேரவை இணைச் செயலாளர்)

    13. தூத்துக்குடி- டாக்டர் புவனேஸ்வரன் (தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக இளைஞர் பாசறை செயலாளர்)

    14. கன்னியாகுமரி- லெட்சுமணன் (புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர்).

    தேனி பாராளுமன்ற தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்தை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார்.



    தங்க தமிழ்ச்செல்வன் கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகி இருந்தார். டி.டி.வி. தினகரனை ஆதரித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவர் மீண்டும் ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் களம் இறக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பட்டது.

    ஆனால் தேனி எம்.பி. தொகுதிக்கு அவர் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை போல தகுதி நீக்கம் செய்யப்பட்ட மேலும் சிலரும் பாராளுமன்ற தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் சட்டசபை இடைத்தேர்தலில் புதுமுகங்களுக்கு டி.டி.வி. தினகரன் வாய்ப்பு அளித்துள்ளார்.

    இன்று அறிவிக்கப்பட்டுள்ள பட்டியல் மூலம் முன்னாள் அமைச்சர்கள் பாண்டுரங்கன், பழனியப்பன், செந்தமிழன் ஆகிய 3 முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள நிறுத்தப்பட்டுள்ளனர். அதுபோல தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வன், பார்த்திபன், பழனியப்பன் ஆகியோர் பாராளுமன்ற தேர்தலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் ஆண்டிப்பட்டி, தர்மபுரி, சோளிங்கர் தொகுதிக்கு புதிய வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். #LSPolls #TTVDhinakaran #AMMK
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் முதல் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. #LSPolls #BJP #NarendraModi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

    மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 11-ந்தேதி நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி வருகிறது.

    இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியாக வெளியிட்டு வருகின்றன. பா.ஜனதாவின் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாக உள்ளன.


    பா.ஜனதாவின் தேர்தல் குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் முதலாவது வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. எதிர்க்கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்கும் வகையில் மோடி ஆலோசனையின்படி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. தற்போதைய பா.ஜனதா எம்.பி.க்கள் மக்களுக்கு செய்த பணிகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையில் பா.ஜனதாவின் முதல் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #LSPolls #BJP #NarendraModi
    கேரளாவில் மொத்த முள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. #parliamentelection #congress #oommenchandy

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மொத்த முள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதியும், பிரேமச்சந்திரன் கட்சிக்கு 1 தொகுதியும், மானி காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்சிகளுக்கு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. தொகுதி பங்கீடு முடிவடைந்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் யார்? என்பதை கண்டறியும் கூட்டம் நடந்து வந்தது.

    கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடிக்க இப்போது பதவியில் இருக்கும் எம்.பி.க் களும், எம்.எல்.ஏ.க்களில் சிலரும் முயற்சி மேற்கொண்டனர்.

    வேட்பாளர் தேர்வு செய்யும் பணியில் மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி ஆகியோர் நேற்று விடிய விடிய ஆலோசனை நடத்தினர்.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியும், மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப் பள்ளி ராமச்சந்திரனும் இடம் பெறுவார்கள் என்று கூறப்பட்டது.


    இதுபற்றி உம்மன்சாண்டியிடம் கேட்டபோது, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. நான் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா? என்பதை கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி முடிவு செய்வார், என்று கூறினார்.

    இதற்கிடையே கேரள காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து மாநில நிர்வாகிகள் எடுத்த முடிவுகள் மேலிட நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

    மாநில நிர்வாகிகள் இன்று பட்டியலுடன் டெல்லி செல்கிறார்கள். அங்கு ராகுல்காந்தியுடன் இறுதி ஆலோசனை நடக்கிறது. இன்று மாலை அல்லது இரவுக்குள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.  #parliamentelection #congress #oommenchandy 

    ×