என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "canceled the protest"
- எரியோடு வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
- பேச்சுவார்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையால் கடந்த 2006 ஆம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. அதனை ரத்து செய்ய பரிந்துரை செய்த எரியோடு வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் சக்திவேலன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக பொன்னுதுரை, ரவி, முருகேசன், அசோகன், சோமசுந்தரம், பிரஸ்நேவ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் பயனாளிகளுக்கு வீட்டுமனையை விரைவில் பிரித்து கொடுப்பதாகவும், ஒரு மாத காலத்திற்குள் புதிதாக விண்ணப்பம் அளிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதாக அவர்கள் தெரிவித்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்